காலத்தால் எழுதப்பட்ட
ஆழமான கவிதை
படைத்தவனே
மீண்டும் புரட்டிப் பார்த்த
அதிமுக்கிய தொகுப்பு
பள்ளங்களின் உயரங்களை
பக்குவமாய் எடுத்துரைத்தவர்
ஆழங்களின் அழகை
உயரத்திற்கு கொண்டுவந்தவர்
மரணம் முற்றுப்புள்ளி அல்ல
என மரணத்தையே மரணிக்கச் செய்தவர்
இந்நேரம் எந்த பால்வீதியில்
என்ன எழுதிக் கொண்டிருக்கிறாரோ..?
கவிக்கோ அப்துல் ரகுமான்

No comments:
Post a Comment