Monday 27 June 2016

GOING TO US...

Mala is before me...











     LEAVING  FOR  WASHINGTON D C ON 
29-6-16  MORNING

WILL BE THERE FOR 2-3 MONTHS...






Sunday 12 June 2016

திருக்குறள் - வாலி

குறளும், காவியக் கவிஞரின் வசனகவிதைப் பொருளும்


அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

அக்கரங்களின்
ஆரம்ப மாவது
அகர உயிர்;

அஃதே போல்
அனைத்திற்கும்
ஆதியா யிருந்து
ஆக்கவல்ல...

அக்கரங்களில்
ஆரம்ப மாவது
அகில உயிர்!


துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.

மழை - ஒரு
மகத்தான சொல்;
மற்றவர்க்கும் - அதன்
மகத்துவம் சொல் !

உலகோர் -
உண்ணும்...

ஆகாரத்திற்கு அதுவே
ஆதார மாகும்; அங்ஙனம்
ஆதார மான அதுவே
ஆகார மாகும் !

நீருணவு;
சோறுணவு; என -
ஈருணவாய் இருப்பது மழை !

அதை -
ஏத்திப் பிழை;
ஏத்தாதிருப்பது பிழை !


அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.

இல்லறம் - என
இயம்பப் பெறும் -

வாழ்க்கை
வயலில்....

அன்பும் அறனும் விதைநெல்;
பண்பும் பயனும் விளைநெல் !

உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்.

உள்ளதை
உள்ளபடி - தன்
உள்ளத்திற்கு
உரைப்போ ரெலாம் -
உலகத்தார்
உள்ளங்களின் -
உள்ளே போய்
உட்காரலாம் !


Friday 10 June 2016

மாத்தி யோசி

கோபமூட்டும் குழந்தைகளை சமாளிக்கும் 'மாத்தி யோசி' டெக்னிக் இப்படிதான்!



" நாம செய்யாதன்னா அதைதான் செய்வாங்க‌ . இதை செய்ன்னு சொன்னா செய்யமாட்டாங்க‌. இதே வேலையா போச்சு..." ன்னு அலுத்துக்குற மம்மி டாடீஸ்... இதோ இனிமே மாத்தி யோச்சிச்சு குழந்தைகளை டீல் பண்ற‌ டெக்னிக் வந்தாச்சு...! 

சூழ்நிலை 1

ரெண்டு குழந்தைங்க இருந்தா வீடே ஹரி படம் மாதிரி சண்டை, அடிதடி எல்லாம் நடக்கும். 
இப்போ அப்படி ரெண்டு குழந்தைங்க கார்ல போகும் போது சண்டை போட்டால்...? 

சாதாரணமாக யோசிக்கும் மம்மி டாடி :  

" என்னங்க இவனுங்க ரெண்டு பேரும் ஜாக்கிச்சான் மருமகனுங்க மாதிரி சண்டைப் போட்டுட்டே இருக்கானுங்க . ஒரு ஓரமா வண்டிய நிறுத்துங்க. இவனுங்கள இறக்கி விட்டுட்டு நாம போவோம்."  


மாத்தி யோசிக்கும் மம்மி டாடி : 


" பசங்களா... கார ஓரமா அப்பாவ நிறுத்தச் சொல்லுறேன். நீங்க எப்போ அமைதியா ஒத்துமையா இருக்கீங்களோ... அப்போ நாம கிளம்பலாம்." 

இதை ஊர் போற வரைக்கும் சொல்லிட்டே இருக்காதீங்க. பசங்க,  காமெடி பண்றோம்ன்னு நினைச்சுப்பாங்க. ஒரு தடவை மட்டும் முயற்சி பண்ணிப் பாருங்க . அடுத்த டோல்கேட் வரும்போது 'வானத்தைபோல' பிரதர்ஸ் மாதிரி மாறிடுவாங்க .
சூழ்நிலை 2 

குழந்தைகள் குறைவான மதிப்பெண்கள் வாங்கும் போது...


சாதாரணமாக யோசிக்கும் மம்மி டாடி:    

" உனக்கு கணக்கு வராதா.... இல்ல தெரியாம கேக்குறேன், உனக்கு கணக்கு வராதா... ? நானெல்லாம் அந்த காலத்துல டியூஷன் இல்லாம 100 க்கு 100 வாங்குவேன் .உனக்கு என்ன குறை ?"  


மாத்தி யோசிக்கும் மம்மி டாடி : 

" நீ மத்த எல்லா சப்ஜெக்ட்லயும் நல்ல மார்க் வாங்குற . கணக்குலேயும்  நீ முயற்சி பண்ணா வாங்க முடியும்.  உனக்கு ஏன் கஷ்டமா இருக்கு ? என்ன பண்ணா உன்னால நல்ல மார்க் வாங்க முடியும்ன்னு சொல்லும்மா ...!"

இப்படி கேளுங்க . 


சூழ்நிலை  3 

குழந்தை சாப்பிடும் போது கீழே போடும், சில நேரத்துல நம்மக்கு வெச்ச குழம்பையும் கொட்டும். 


சாதாரணமாக யோசிக்கும் மம்மி டாடி :   

" கொட்டிட்டியா... ? கொஞ்சம் நேரம் நான் உக்காந்தா உனக்கு பொறுக்காதே . உங்க அப்பா மாதிரியே எனக்கு ஏதாவது வேலை வைக்கணும் . உனக்கு சிந்துன்னு பேர் வெச்சேன். சதா சிந்திட்டே இருக்க. போ... துணி எடுத்துட்டு வா . என்ன பண்ணுறது எல்லாம் என் தலை எழுத்து ...!" 

மாத்தி யோசிக்கும் மம்மி டாடி : 

" ஆஹா .. சரி பரவாயில்ல...உன் மேல ஒண்ணும் எதுவும் கொட்டிடலேயே...? அம்மாக்கு கொஞ்சம் அந்த துணி எடுத்துட்டு வர்றியா... நான் துடைச்சிடுறேன்...!"

- இப்படி சொல்லுங்க எந்த குழந்தையா இருந்தாலும் அடுத்த தடவ சிந்தாம இருக்கணும்னு நினைக்கும்.


சூழ்நிலை  4 

குழந்தைங்க, பெத்தவங்கள எதிர்த்து பேசும் போது...

சாதாரணமாக யோசிக்கும் மம்மி டாடி :  

"என்ன தைரியம் இருந்தா என்ன எதிர்த்து பேசுவ...?" - இப்படி சொல்லி அடிக்க கையை ஓங்குவது. 

" அய்யயோ... என்ன எதிர்த்து பேசிட்டான்" னு ஊரையே கூப்பிடறது. 

"என்ன எதிர்த்து பேசிட்டல்ல... இனிமே என்கூட பேசாத...!" -  இப்படி சொல்லுறது எல்லாமே தப்பு .

மாத்தி யோசிக்கும் மம்மி டாடி : 

" நீ என்கிட்ட என்ன சொன்னாலும் அது சரியான விஷயமா இருந்தா மம்மி செய்வேன் . அதுவும் என்கிட்ட அமைதியா ஆசையா சொன்னா மட்டும்தான் .சத்தம் போட்டு , மிரட்டி பேசுனா எதையும் செய்யமாட்டேன்..."
இதை நீங்க குழந்தைங்ககிட்ட சொல்லும் போது சமுதாயத்துல குரலை உயர்த்தி பேசக்கூடாதுன்னு உணருவான் .                                                                                                                                                                               - கி.சிந்தூரி

நன்றி  -  விகடன் 

WEEKEND WISDOM

வாழ்க்கையை மகிழ்ச்சியாக கொண்டு செல்ல 25 வழிகள்!



1. இன்றுதான் நம் வாழ்க்கையின் கடைசி நாள் என்பதைப் போல ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியாக கழிக்க வேண்டும். கொடிய வியாதியால் பாதிக்கப்பட்டு பிழைத்தவர், விபத்தில் சிக்கிப் பிழைத்தவர், நெருங்கிய ஒருவரை இழந்தவர்... இவர்களை பாருங்கள்! வாழ்க்கையை அவர்கள் பார்க்கும் விதமே, 'பாசிடிவ்'வாக இருக்கும்.
"அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்!" என்று எதையும் தள்ளிப் போட மாட்டார்கள். எங்கேயாவது போக வேண்டுமா... ஒரு நண்பரை பார்க்க வேண்டுமா... ? உடனே, செய்து விடுவார்கள். அவர்களிடம், 'பிறகு' என்ற வார்த்தையே இருக்காது.

2. நமக்கு நடக்கும் நல்ல விஷயங்களை ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதுங்கள். பேச ஆரம்பிக்கும்போது, உங்கள் அருமை குழந்தை என்ன என்ன வார்த்தைகள் பேசினாள் என்பதையும் எழுதி வையுங்கள். அவற்றையெல்லாம் எழுதி வைக்காவிட்டால், பிறகு ஞாபகம் இருக்காது. பிரச்னைகளை எழுத ஆரம்பியுங்கள்; தீர்வு கிடைக்கும்.

3. உங்கள் வாழ்க்கையை பற்றி உங்கள் பேரக் குழந்தைகளிடம் என்ன நினைவுக் கூற விரும்புகிறீர்கள்? எப்படி உங்களை மற்றவர்கள் நினைவு கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? உங்கள் குழந்தையின் பள்ளி ஆண்டு விழாவை தவிர்த்து, ஆபீஸ் மீட்டிங்தான் முக்கியம் என்று செல்வதும்...  பெட்ஷீட் வாரா வாரம் மாற்றப்பட வேண்டும், தரை சுத்தமாக இருக்க வேண்டும் என்பதும்தான் மற்றவற்றை விட முக்கியம் என்பதுபோன்று நீங்கள் நடந்துகொண்டதுதான் அவர்களின் நினைவில் நிற்க வேண்டுமா...?
4. சின்ன, சின்ன தவறுகளை பெரிதுபடுத்தாதீர்கள். ஓவர் டேக் செய்ய, உங்களை அனுமதிக்காத டிரைவரின் மீது ஏன் கோபம்? புன்சிரிப்பு செய்யுங்கள்; உங்கள் மீது அவருக்கு கோபமாக இருந்தால் அது அவர் பிரச்னை. ரயிலை தவற விட்டு விட்டீர்களா? போகட்டுமே! அதற்கு ஏன் டென்ஷன், ஸ்டேஷனில் ஒரு காபி குடித்துவிட்டு, அடுத்த ரயிலில் போகலாமே!

5. பிடிக்காத வேலை, கஷ்டமான வேலை என்றால் ஏன் தள்ளிப் போடுகிறீர்கள்? தள்ளிப் போடுவது, நம் சக்தியைத்தான் விழுங்குகிறது; வீணாக்குகிறது. கூடவே, 'இந்த வேலையை இன்னும் பண்ணவில்லையே...' என்ற கவலை வேறு. எனவே அந்த வேலையை உடனே செய்து முடிப்பதே நல்லது.

6. புது விஷயங்களில் ஆர்வம் காட்டுங்கள். ஞாயிற்றுக்கிழமை என்றால் நிறைய தூங்கி லேட்டாகதான் எழ வேண்டுமா? சீக்கிரம் எழுந்து, அருகே உள்ள பூங்காவில் காலை ப்ரேக் ஃபாஸ்ட்டை ஏன் சாப்பிடக் கூடாது? மற்றவர்கள் வருவதற்கு முன் திரும்பி விடலாம். அன்றைய நாள் நீண்டதாக இருக்கும். மத்தியானம் எப்போதும் தூங்காதவரா? ஒரு,"ஞாயிறு' நன்றாக தூங்குங்கள்.

7. அடுத்த வீட்டுக்காரர் புது கார், புது ஸ்டீரியோ சிஸ்டம் வாங்கினால் என்ன? நன்றாக கவனித்துப் பாருங்கள். அவர் சனி, ஞாயிற்றுக் கிழமையிலும் ஆபீசுக்கு போக வேண்டியிருக்கும். உங்களை மாதிரி குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக அவர் இருக்கிறாரா...? உங்களை மாதிரி, நண்பர்களை அவர் சந்திக்கிறாரா? இருக்காது.
8. அணியாத டிரஸ், வெளியே எடுக்காத கிச்சன் பாத்திரங்கள், பயன்படுத்தாத படுக்கை,  பொம்மைகள், புத்தகங்கள், மரச்சாமான்கள் இவற்றை தர்ம ஸ்தாபனத்திற்கோ, ஏழை, எளியவருக்கோ தானமாக கொடுத்து விடுங்கள்! நிறைய மகிழ்ச்சி கிடைக்கும்; வீட்டிலும் நிறைய இடம் மிஞ்சும்.

9. 'நோ' சொல்ல கற்றுக் கொள்ளுங்கள். ஏற்கனவே மிகவும், 'பிசி'யாக இருக்கிறீர்கள் என்றால், இன்னும் அதிக வேலை என்றால், 'நோ' சொல்லுங்கள். உங்களுக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்கிக் கொள்ள வேண்டும்.

10. சில ஆண்டுகள் தொடர்ந்து ஓடினால், மெஷினுக்கும் ரிப்பேர் பார்க்க வேண்டும்; அதே போலத்தான் மனித உறவுகளும். காதலித்தவரை திருமணம் செய்து கொள்கிறீர்கள், முன் மாதிரி இன்னும் காதலிக்கிறீர்களா? கணவர், மனைவி, பார்ட்னர் எல்லா உறவுக்கும் ரிப்பேர் தேவை; நேரம் ஒதுக்குங்கள்.

11. நண்பர்களுக்கு கொடுக்கும் நேரத்தில், கொஞ்சம் உங்கள் குடும்பத்தினருக்கும் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு உங்கள் நேரம் கண்டிப்பாக தேவை.

12. உங்கள் குடும்பத்தினர், பார்ட்னர், நண்பர்கள் இவர்களிடம் நீங்கள் விரும்பும், பாராட்டும் நல்ல குணங்களைப் பற்றி சொல்லுங்கள். நன்றாக ஒரு விஷயத்தை செய்தால், அவர்களை வாய்விட்டு பாராட்டுங்கள்; நல்ல டானிக் போன்று அது உதவும். நீங்கள் செய்யும் பல காரியங்களை  அவர்களும் பாராட்டக் கூடும்.

13. எல்லா பிரச்னைகளையும் உங்கள் மீது போட்டு விடுகின்றனரா உங்கள் நண்பர்கள்? அது தவறு. அதற்கு, இனி மேலும் இடம் கொடுக்காதீர்கள். அவர்கள் பிரச்னைகள் உங்களையும் பாதிக்க ஆரம்பித்தால், கொஞ்சம் ஒதுங்குங்கள். தங்கள் பிரச்னையை சந்திக்க, தீர்த்துக் கொள்ள அவர்கள் ஆரம்பித்துக் கொள்ளட்டும்.

14. நண்பர்கள், தூரத்து உறவினர்கள் - இவர்களுடன், "டச்' விட்டு போய் விட்டதா? பரவாயில்லை... இன்று துவங்குங்கள்... போனில் பேசலாம், இ-மெயில் அனுப்பலாம், லெட்டர் எழுதலாம். அவர்கள் நிச்சயம் சந்தோஷப்படுவர்.

15. உங்கள் மனதுக்கு பசுமை நல்லது. தோட்டத்திலிருந்து புதுப் பூக்களை பறித்து வையுங்கள். விடியற்காலையில் எழுந்து மார்கெட்டிற்கு சென்று, குறைந்த விலையில் காய்கறி பழங்களை வாங்கி வாருங்கள். தொட்டிகளில் செடி வளர்ப்பது கூட, வீட்டில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

16. நிறைய அலைகள், கடல் மணல், வெறும் கால்கள் இவை எல்லாம் உடலுக்கும், உள்ளத்திற்கும், மகிழ்ச்சி அளிப்பவை. கடற்கரைக்குச் செல்லுங்கள்; முடியாதவர்கள், நதிக்கரை செல்லுங்கள். இயற்கை மிகவும் சிறப்பானது.
17. ஏதாவது புதியதாக உருவாக்குங்களேன்... சித்திரம் வரைவது, தைப்பது, கேக் செய்வது, தோட்டத்தில் செடி வளர்ப்பது எதுவாக இருந்தாலும் பரவாயில்லை.

18. வீட்டுக்கு வெளியே சென்று, நிறைய சுத்தமான காற்றை சுவாசியுங்கள். நுரையீரலின் அடித்தளத்திலிருந்து நிறைய காற்றை உட்கொள்ளுங்கள். பழைய காற்றெல்லாம் போவதை சுகமாக உணர்வீர்கள்.

19. வாக்கிங் செல்லுங்கள் - மெதுவான, ஆனால், நிச்சயம் பயனுள்ள எக்சர்சைஸ். உடலுக்கும், உள்ளத்திற்கும் நல்லது. ரெகுலராக வாக்கிங் செல்வதால் தினமும் நன்றாக இருப்பதை உணருவீர்கள்.

20. நல்ல, பழைய - புதிய நகைச்சுவை வீடியோக்கள், திரைப்படங்களை வீட்டில் போட்டு பார்த்து, குடும்பம் முழுவதும் நிறைய சிரித்து மகிழுங்கள்.

21. வீட்டில் பர்னிச்சர், பொருட்களை இடம் மாற்றி வையுங்கள்; அந்த மாதிரி வீட்டை மாற்றி அமைப்பதே ஒரு நல்ல ஹாலிடேதான்!

22. நல்ல மகிழ்ச்சியான விஷயத்தை விரும்பி, காத்திருந்து அனுபவியுங்கள். விடுமுறையில் ஒரு சுற்றுலாப் பயணம்; வெளியே சென்று சாப்பிடுவது போல!

23. உங்கள் வீட்டுக்கு, டின்னருக்கு நண்பர்களை கூப்பிடுங்கள். சாப்பிடும் அறையை சுத்தம் செய்து அலங்காரம் செய்யுங்கள். விசேஷ மெனு தயாரித்து, அதற்காக பொருட்கள் வாங்குவதும், டின்னரை தயாரிப்பதுமே மகிழ்ச்சியான 'சுமை'. வருபவர்களும் மகிழ்ந்து பாராட்டுவர். அன்று இரவு எல்லாருக்கும் மகிழ்ச்சி கண்டிப்பாக இருக்கும்.

24. சிரியுங்கள். சிரிப்பு ஒரு தொற்று வியாதி! அனைவருக்கும் பிடிக்கும்.

25. யாராவது ஒருவருடைய வாழ்க்கையை மகிழ்ச்சியாக ஆக்குங்கள். சமயம் கிடைக்கும்போது ஏதாவது நல்ல, தர்ம காரியத்திற்கு உங்கள் நேரத்தை செலவழியுங்கள். குழாயில் தண்ணீர் வரவில்லை, குழந்தையை ஸ்கூலுக்கு அழைத்துப் போக ஆட்டோக்காரர் வரவில்லை, பணிப்பெண் வரவில்லை, பஸ் கிடைக்கவில்லை என்று வாழ்க்கையில் பல கஷ்டங்கள்; இவற்றையெல்லாம் மீறி மகிழ்ச்சியாக இருப்போம்.
- வே.கிருஷ்ணவேணி                                                                                  நன்றி - விகடன் 

Friday 3 June 2016

நான் யார்.....2

நான் யார்?- ஆதி சங்கரர் அருளிய ஸ்லோகங்கள்!


உலகத்தில் மக்களிடையே பேதங்கள் நிலவிய சூழ்நிலையில், காலடி க்ஷேத்திரத்தில் சிவபெருமானின் அம்சமாக அவதரித்தவர் மகான் ஆதிசங்கரர். தாயின் அனுமதியுடன் சந்நியாசம் பெற்ற ஆதிசங்கரர், அனைத்து ஜீவன்களிலும் இருக்கும் பிரம்மம் ஒன்றே என்னும் அத்வைத சித்தாந்தத்தை போதித்தவர்.

அவர் போதித்த அத்வைத சித்தாந்தத்துக்கு அவர் பொருத்தமானவரா என்பதை சோதிக்க விரும்புவதுபோல், ஒரு சம்பவம் காசி க்ஷேத்திரத்தில் நடைபெற்றது. ஒருமுறை ஆதிசங்கரர் கங்கையில் நீராடிவிட்டு சீடர்களுடன் திரும்பும்போது, எதிரில் தாழ்த்தப்பட்டவராகக் கருதப்படும் ஒருவர், நான்கு நாய்களுடன் வந்தார். அப்போதுதான் கங்கையில் நீராடிவிட்டு வந்த ஆதிசங்கரர், அவரை வழியைவிட்டு விலகிப் போகச்சொல்கிறார்.
எதிரில் வந்தவர், 'நீர் விலகிப் போகச் சொல்வது யாரை? இந்த உடலையா அல்லது இந்த உடலுக்குள் இருக்கும் ஆத்மாவையா? எதை விலகிப் போகச் சொல்கிறீகள்? மண் பாத்திரத்தில் இருந்தாலும், தங்கக் குடத்தில் இருந்தாலும் தண்ணீர் தண்ணீர்தானே? அது தன் இயல்பில் இருந்து மாறுவது இல்லையே. அதுபோலவே மனிதர்களோ, விலங்குகளோ, தாவரங்களோ அனைத்திலும் இருப்பது ஒன்றேயான அந்தப் பிரம்மம்தானே? அப்படி இருக்கும்போது, என்னுடைய உடலில் இருக்கும் அதே பிரம்மம்தானே தங்களுடைய உடலிலும் இருக்கிறது. நமக்குள் எந்த வேறுபாடும் இல்லையே. என்னை ஏன் விலகிப் போகச் சொல்கிறீர்கள்?'' எனக் கேட்டார்.
ஆதிசங்கரருக்கு அப்போதுதான் புரிந்தது, தன்னுடைய மனப்பக்குவத்தை சோதிப்பதற்காக இறைவன் நிகழ்த்திய லீலை அது என்பது. உடனே, அவரை நமஸ்கரித்து அருமையான ஸ்தோத்திரம் ஒன்றைப் பாடினார். ஐந்து ஸ்லோகங்கள்கொண்ட அதுதான் மனீஷா பஞ்சகம். அந்தப் பஞ்சகத்தில் இருந்து சில பகுதிகள் இங்கே...
விழிப்பிலும், கனவிலும், உறக்கத்திலும் எந்தத் தூய உணர்வு தெளிவாக வெளிப்படுகிறதோ, எது பிரம்மா முதல் எறும்பு வரை அனைத்து உடல்களிலும் பிரபஞ்சத்தின் சாட்சியாக ஊடுருவியுள்ளதோ அதுதான் நான். நான் காணப்படும் பொருள் அல்ல என்று எவருக்கு உறுதியான ஞானம் இருக்கிறதோ, அவர் சமுதாயத்தால் தாழ்த்தப்பட்டவரோ அல்லது உயர்த்தப்பட்டவரோ யாராக இருந்தாலும் அவரே என் குரு என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
நான் பிரம்மம். இந்தப் பிரபஞ்சமும் பிரம்மம். தூய உணர்வுதான் இந்தப் பிரபஞ்சமாக விரிந்துள்ளது. சத்வம், ரஜஸ், தமஸ் மற்றும் அறியாமையினால் நான் பொருட்களைப் பிரம்மம் அல்லாததாகக் கருதுகிறேன். பேரானந்தமான, அழிவில்லாத, தூயவடிவமான பிரம்மம்தான் எங்கும் நிறைந்துள்ளது என்று யாருக்கு உறுதியான ஞானம் உள்ளதோ, அவர் சமுதாயத்தால் தாழ்த்தப்பட்டவரோ அல்லது உயர்வாக கருதப்படுபவரோ அவரே என் குரு என்பதில் நான் உறுதியான நம்பிக்கையுடன் இருக்கிறேன்.
எந்தப் பேரானந்தக் கடலின் சிறு துளியினாலேயே இந்திரன் போன்ற தேவர்கள் திருப்தி அடைகிறார்களோ, முற்றிலும் அமைதியான மனதை அடைந்து முனிவர்கள் நிறைவு பெறுகிறார்களோ, அந்த அழிவற்ற பேரானந்தக் கடலில் ஒன்றுபட்டவரே பிரம்மத்தை உணர்ந்தவர் ஆவார். அவரே பிரம்மமும் ஆவார். அவர் யாராக இருந்தாலும் சரி, இந்திரனால் பூஜிக்கப்பட வேண்டிய பாதங்களை உடையவர் என்பதும், அவரே என்னுடைய குரு என்பதும் என்னுடைய உறுதியான நம்பிக்கை.
நன்றி - விகடன் 

Thursday 2 June 2016

MIDWEEK INSPIRATION

MOST POSITIVE VIRTUES FOR A GREAT LIFE

1. Have a firm handshake.
2. Look people in the eye.
3. Don't expect life to be fair.
4. Remember that 80 per cent of the success in any job is based on your
ability to deal with people.
5. If in a fight, hit first and hit hard.
6. Keep secrets.
7. Never give up on anybody. Miracles happen everyday.
8. Always accept an outstretched hand.
9. Be brave. Even if you're not, pretend to be. No one can tell the
difference.
10. Wave at the children on a school bus.
11. Avoid sarcastic remarks.
12. Choose your life's mate carefully. From this one decision will come 90
per cent of all your happiness or misery.
13. Make it a habit to do nice things for people who will never find out.
14. Lend only those books you never care to see again.
15. Never deprive someone of hope; it might be all that they have.
16. When playing games with children, let them win.
17. Give people a second chance, but not a third.
18. Be romantic.
19. Become the most positive and enthusiastic person you know.
20. Loosen up. Relax. Except for rare life-and-death matters, nothing is as
important as it first seems.
21. Don't allow the phone to interrupt important moments. It's there for
our convenience, not the caller's.
22. Be a good loser.
23. Be a good winner.
24. Think twice before burdening a friend with a secret.
25. When someone hugs you, let them be the first to let go.
26. Be modest. A lot was accomplished before you were born.
27. Keep it simple.
28. Beware of the person who has nothing to lose.
29. Don't burn bridges. You'll be surprised how many times you have to
cross the same river.
30. Live your life so that your epitaph could read, No Regrets
31. Be bold and courageous. When you look back on life, you'll regret the
things you didn't do more than the ones you did.
32. Never waste an opportunity to tell someone you love them.
33. Remember no one makes it alone. Have a grateful heart and be quick to
acknowledge those who helped you.
34. Take charge of your attitude. Don't let someone else choose it for you.
35. Visit friends and relatives when they are in hospital; you need only
stay a few minutes.
36. Begin each day with some of your favourite quotes. if you don't have,
find some.
37. Once in a while, take the scenic route.
38. Send a lot of cards. Sign them, 'Someone who thinks you're terrific.'
39. Answer the phone with enthusiasm and energy in your voice.
40. Keep a note pad and pencil on your bed-side table. Million-dollar ideas
sometimes strike at 3 a.m.
41. Show respect for everyone who works for a living, regardless of how
trivial their job.
42. Send your loved ones flowers. Think of a reason later.
43. Make someone's day by paying the toll for the person in the car behind
you.
44. Become someone's hero.
45. Marry only for love.
46. Count your blessings.
47. Compliment the meal when you're a guest in someone's home.