Thursday 6 October 2016

நயாகரா நீர்வீழ்ச்சி - 5 ( டெஸ்லா - 2 )

தாமஸ் ஆல்வா எடிசன் 


டெஸ்லா  பற்றி மேலும் தெரிந்து கொள்வதற்கு முன் எடிசன் பற்றி கொஞ்சம் ஞாபகப் படுத்திக்க கொள்ளலாம்.

உலக வரலாற்றில் அதிக கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர் தாமஸ் ஆல்வா எடிசன்  - கிட்டத்தட்ட 1300 கண்டுபிடிப்புகள். அவற்றில்  1093 க்கு  காப்புரிமை 
( Patent Rights ) பெற்றவர.

8 வயதில் பள்ளியில் சேர்க்கப்பட்ட அவரை  ஆசிரியர் திட்டியதால் மூன்றே மாதங்களில் அவரை பள்ளியைவிட்டு நிறுத்திய அம்மா, தானே பாடம் சொல்லித்தந்தார். பாடங்களோடு, பைபிள், நல்ல நூல்களைப் படிக்குமாறு அப்பா கூறினார். ஒவ்வொரு புத்தகம் படித்து முடித்த போதும் 10 சென்ட் அளித்து உற்சாகப்படுத்தினார்.

 பார்க்கும் எதையும்   சோதித்து அறியும் ஆர்வம் சிறு வயதில் இருந்தே அவருக்கு உண்டு. கோழி அடைகாத்து குஞ்சு பொரிப்பதைப் பார்த்த சிறுவன் எடிசன் தானும் முட்டைகள் மேல் அமர்ந்து சோதனை செய்து பார்த்தி ருக்கிறான்.

ரயில் நிலையத்தில் தந்தி இயக்குபவராகப் பணியாற்றிய போது, ரயில் பெட்டியையே அச்சகமாக மாற்றி ‘வீக்லி ஹெரால்டு’ வாரப் பத்திரிகையை அச்சிட்டு வெளியிட்டார். அங்கு சோதனைக் கூடம் அமைத்து கண்டுபிடிப்புகளைத் தொடங்கினார்.

ஒருமுறை அங்கு அவர் வைத்திருந்த பாஸ்பரஸ் எரிந்து ரயில் பெட்டியில் தீப்பற்றியது. ரயில்வே அதிகாரி ஆத்தி ரமடைந்து அறைந்ததில் அவரது ஒரு பக்கக் காது கேட்காமல் போனது.

அறிவியல், கணிதம் என்று எதையும் முறையாக கற்காத  மென்லோ பார்க் பகுதியில் 1876-ல் ஆராய்ச்சிக்கூடம் அமைத்தார். மின்சார பல்பு, எலக்ட்ரிக் ஜெனரேட்டர், டெலிகிராப் சிஸ்டம், எலக்ட்ரிக் ஃபேன், ரேடியோ வால்வ், மெகா போன், மோட்டார், மின்சார இருப்புப் பாதை, தொலைபேசி ஸ்பீக்கர், ஒலிபெருக்கி, கிராமஃபோன், மூவி கேமரா, ராணுவ சாதனங்கள் ஆகியவை இவரது கண்டுபிடிப்புகளில் குறிப்பிடத்தக்கவை.

ஒரு சாதனையை நிகழ்த்திய பிறகு, அதற்கான பாராட்டுகளைப் பெற அவர் அங்கே இருக்கமாட்டார். அடுத்த கண்டுபிடிப்புக்காக ஆராய்ச்சிக் கூடத்துக்குள் போயிருப்பார். இதுபற்றி கேட்டால், ‘நேற்றைய கண்டு பிடிப்பு பற்றி பேசி இன்றைய நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை’ என்பார்.

எடிசன் 84 வயதில் மறைந்தார். அவரது உடலை அடக்கம் செய்யும்போது, அமெரிக்க அதிபர் ஹெர்பர்ட் ஹூவர் உத்தரவின் பேரில், அமெரிக்கா முழுவதும் மின் விளக்குகள் ஒரு நிமிடம் அணைக்கப்பட்டன.

மேற்சொன்னவை அனைத்தும் நமக்குத் தெரியும்  

                      - தெரியாத எடிசனின் மறுபக்கம் பற்றியும் பார்க்கலாம்.

ஒரு மேடையில் தாமஸ் ஆல்வா எடிசன் சொன்னது -

 “வியாபாரத்திலும், தொழிற்துறையிலும் திருடாதவர்கள் யாரும் இல்லை,

 நான் திருடியிருக்கிறேன். 

மற்றெல்லோரையும் விட எனக்கு எப்படித் திருடுவது என்று தெரியும்?”

எடிசனிடம்  ஏமாந்தவர்தான் நம் டெஸ்லா.

அவரைப் பற்றி விரிவாக இப்போது பார்க்கலாம்.



Tuesday 4 October 2016

BHEL அறிவுத்திருக்கோவில் ஆண்டு தினம்

இன்று அறிவு  திருக்கோவில் எட்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது.




இந்த நல்ல நாளில் இத் திருக்கோவிலின் வளர்ச்சிக்காக 
அயராது  தொண்டாற்றிவரும் அத்துணை அருட் தொண்டர்களின் 
பாதம் பணிந்து 
வாழ்த்தி வணங்குகின்றேன்,
வாழ்க வளமுடன்!

To see earlier posts click here 


Saturday 1 October 2016

நயாகரா நீர்வீழ்ச்சி - 5 ( டெஸ்லா - 1 )

நிகோலா  டெஸ்லா  @ நயாகரா 

ராபர்ட் மோஸஸ் மின் நிலையம் மியூசியம் பார்ப்பதற்கு முன் உலகத்தார்க்கு தெரியாமல் மறைக்கப்பட்ட நிகோலா டெஸ்லா என்ற மாமனிதரை, இன்று நாம் பயன்படுத்தும் AC  மின்சாரத்தை உற்பத்தி செய்யும் ஜெனரேட்டரை வடிவமைத்தவரைப் பற்றி தெரிந்து கொள்வது மிக அவசியம்.

ரேடியோவைக் கண்டுபிடித்தவர் யார் எனக் கேட்டால் மார்க்கோனி என்போம்.
உண்மையில் கண்டு பிடித்தது டெஸ்லாத்தான்.  மார்க்கோனி ரேடியோவைக் 'கண்டுபிடிப்பதற்கு' இரண்டாண்டுகளுக்கு முன்னரே டெஸ்லா ரேடியோவைப் பற்றி ஒரு உரையை நிகழ்த்தியிருந்தார்.1892ம் ஆண்டின் ஆரம்பப் பகுதிகளிலே டெஸ்லா வானொலிக்கான அடிப்படைக் கருவிகளைக் கண்டுபிடித்து, அவற்றைப் பொருத்தி, வானொலியை உருவாக்கியிருந்தார். அதற்குரிய வரைபடங்களையும் அவர் தயாரித்திருந்தார். அத்துடன் அவற்றை அமெரிக்கக் காப்புரிமை நிலையத்தில் (Patent Office) பதிவும் செய்திருந்தார். டெஸ்லாவின் கண்டு பிடிப்பு, லேப் அனைத்தும். தீக்கு இரையானது. தீ வைத்தவர் யார் தெரியுமா?  எடிசன் தான் என்றும் சொல்கிறார்கள். ( எடிசன் - டெஸ்லா சண்டை பற்றி விரிவாக அடுத்த பகுதியில் )

ஆனால், டெஸ்லாவின் அதே வரைபடங்களின் அடிப்படையை வைத்துக் கொண்டு, மார்க்கோனி 1895ம் ஆண்டில் வானொலியைக் கண்டுபிடித்ததாக உலகம் முழுவதும் அறிவித்தார். இதை எதிர்த்து டெஸ்லா அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கொன்றைப் பதிவு செய்தார். ஆனால், டெஸ்லாவின் வழக்கு ஏதோ ஒரு காரணத்திற்காகத் தள்ளுபடி செய்யப்படது. 

ஆனால் 1904 ஆம் வருடம் அரசியல் செல்வாக்கு பெற்றவரும்,எடிசனின் பிரியத்திற்கு உரியவருமான மார்க்கோனி தான் ரேடியோவைக் கண்டுபிடித்தார் என்று அமெரிக்கா அறிவித்தது. அதற்காக அவர் நோபல் பரிசும் பெற்றார்.


இவர் வேறு என்னென்ன கண்டு பிடித்தார் என்பதை தெரிந்து கொள்ளும் முன் 
நயாகராவுக்கும், டெஸ்லாவிற்கும் என்ன சம்பந்தம் என்று தெரிந்து கொள்ளலாம்.

இன்றும் உலகிலேயே அதிக அளவு நீர் மின்சாரம் ( Hydro electrical power )  அமெரிக்கா, கனடா இடையே ஓடும் நயகாரா அருவியின் மூலம் கிடைக்கிறது. 


நீரில் இருந்து மின்சாரம் எடுக்கும் வித்தையை உலகிற்க்கு சொல்லி கொடுத்தவரே டெஸ்லா தான். அதுவும் உலகின் முதல் நீர் மின் உற்பத்தி நிலையத்தை நயாகராவில் தன்  நண்பர் ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸ் உதவியுடன் 1881ல் அமைத்து மின்புரட்சியை துவக்கியவர்.

டெஸ்லாவைப் பற்றி நான் B E  ( எலெக்ட்ரிக்கல் ) படிக்கும்போது ஓரளவு தெரிந்து வைத்திருந்தாலும் நயாகராவில் அவர் சிலையைக் கண்டபோது 
என் ப்ரொபசர் பாலசுந்தரம் தாமஸ் ஆல்வா எடிசனைப் பற்றியும் அவருடன் இருந்த டெஸ்லா பற்றியும் இருவருக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் பற்றியும் சொன்னது கொஞ்சம் ஞாபகம் வந்தது.

டெஸ்லா பற்றி தெரிந்து கொள்ளலாமா...