Monday 16 September 2019

39வது திருமண நாள்



10-9-2019

அருட்பேராற்றலின் கருணையினாலும் 
குருவின் திருவருளாலும் 
பெற்றோர்களின் ஆசிகளினாலும் 
இந்த 39ம் திருமண ஆண்டு 
எங்களுக்கு சாதனை ஆண்டாகத் திகழ 
அமைய வேண்டுகின்றோம் !

எங்கள் மீது என்றும் அன்பும் கருணையும் கொண்டு 
வாழ்த்திவரும் உடன் பிறந்தோர்,
உறவினர்கள், நண்பர்கள் மற்றும் 
மனவளக்கலை அன்பர்கள் அனைவருக்கும் 
நன்றி மலர்கள் !
வாழ்க வளமுடன்!





TO SEE THE OLD POSTS CLICK   here

Thursday 5 September 2019

HAPPY BIRTHDAY AMMA & SEKAR

நான் பிறப்பதற்கு முன்பிருந்தே என்னை நேசித்து, தன்  இறுதி நாள் வரை என்னை அன்பால் குளிப்பாட்டிய என் அன்னை அபயாம்பாள் அவர்களுக்கு இன்று 106வது பிறந்த தினம்.

அம்மாவிடமிருந்து நான் கற்றுக்கொண்டவை, அவர்கள் எனக்கு சொல்லிக்கொடுத்தது - ஒரு சிறந்த ஆசிரியராக இருந்தார்கள்.
இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படுவது நல்ல பொருத்தம்!


அம்மா பற்றிய முன்றைய பதிவகள் படிக்க இங்கே சொடுக்கவும்

1997 - getting blessings from Amma 


சேகர் ( என் சகோதரர் சுவாமிநாதனின் மூத்த மகன் ) நான் சிறுவனாக இருந்தபோது வந்த புது வரவு. அவன் பிறந்த செய்தி கேட்டதும் , நான் குழந்தையைப் பார்க்க தலை தெறிக்க ஓடியது இன்னும் ஞாபகமுள்ளது.
மலரும் நினைவுகளில் சொல்வதற்கு ஏராளமாய் உள்ளது. இன்று சேகர் இருந்திருந்தால் 60வது வயது துவங்கியிருக்கும். பணியில் நிறைவு ஆண்டாக இருந்திருக்கும்.


தெய்வத்திரு சந்திரசேகரன்  1960-2009


சேகருக்கு பேரன் பிறந்திருக்கின்றான். அவனே மறுபடியும் எங்களுடன்  இருக்க வந்திருப்பதாகவே இந்த கொள்ளு தாத்தா எண்ணுகிறேன்/உணர்கிறேன்..

தெய்வங்களாக நின்று வழிநடத்திக்கொண்டிருக்கும் அம்மாவுக்கும், சேகருக்கும் எங்கள்  குடும்பத்தினர் அனைவர் சார்பிலும் இதயபூர்வ அஞ்சலி !

வாழ்க அம்மா புகழ்!
வாழ்க சேகர் புகழ்!