Wednesday 31 August 2016

MALA's SPEECH on WIFE APPRECIATION

உன்னைக் கரம் பிடித்தேன் ...வாழ்க்கை ஒளி மயமானதடி 
இந்த மலரின் பெயர்தான் மாலா....
மாலா is மாலா is மாலா

சரியாக பத்தாண்டுக்கு முன் ஸ்ரீலங்காவில் கொழும்பு நகரில் 30-8-2006ல்
நடைபெற்ற மனைவி நல வேட்பு விழாவில் மாலா ஆற்றிய உரை பல அன்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க இங்கு இணைக்கப்பட்டுள்ளது.

இதன் வீடியோ CD பலரிடமிருந்தாலும் US  Troy அருள்நிதி சுப்பிரமணியன் அவர்கள் you tubeல் பதிவிறக்கம் செய்து உதவியுள்ளார். அவருக்கு நன்றி.

you tube link கீழே தரப்பட்டுள்ளது. கண்டு, கேட்டு  மகிழலாம்.





Tuesday 30 August 2016

WIFE APPRECIATION DAY Wishes...





பெற்றோரைப் பிறந்தகத்தைப் பிறந்த ஊரை விட்டுப்
பிரிந்து வந்து, பெருநோக்கில் கடமையறம் ஆற்றப்,
பற்றற்ற துறவியெனக் குடும்பத்தொண்டேற்றுப்
பண்பாட்டின் அடிப்படையில் எனைப் பதியாய்க் கொண்டுஎன்
நற்றவத்தால் என் வாழ்க்கைத் துணையாகிப் பெண்மை
நல நோக்கில் அன்போடு கருணை இவை கொண்டு
மற்றவர்க்கும் தொண்டாற்றும் மாண்புமிக்க எந்தன்
மனைவியை நான் மதிக்கின்றேன் வாழ்த்தி மகிழ்கின்றேன்.


அறிவுத் திருக்கோவில்களில்  நடைபெறும் மனைவி நல வேட்பு விழாக்கள்  சிறப்பாக நடைபெற வாழ்த்துகின்றோம்.

அருட் தம்பதியர்  அனைவரும் வாழ்வின் எல்லா வளங்களும் நிறைவாகப் பெற்று நீடூழி வாழ்க!

வாழ்க வளமுடன்!

Monday 15 August 2016

மகரிஷி அவர்களின் நகைச்சுவை


இந்த ஆண்டு நாங்கள் US வந்துவிட்டபடியால் மகரிஷி பிறந்தநாளுக்கு ஆழியார் செல்லமுடியாமல் போய்விட்டது. நேற்று இரு தினங்களும் நியூயார்க், கனெக்டிகட்  போன்ற இடங்களுக்கு சென்று விட்டதில் இந்த பதிவு தாமதமாகி விட்டது.

மகரிஷி அவர்களின் நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தும் கீழ்கண்ட பகுதியை அவர் பிறந்தநாளில்  மறுபடியும் வெளியிடுகின்றேன்.

( இப்பகுதி நான் அருட்குரல் மாதப் பத்திரிகையில் எழுதிய தொடரில் வந்தது)

ஏழாம் சுவை - நகைச்சுவை 
அறு(சு)வையானந்தா 


" ஜி, உங்கள் ஏழாம் சுவையைப் படித்த நிறைய அன்பர்கள்  நகைச்சுவையை நன்கு அனுபவித்தோம் என்று தெரிவித்திருக்கின்றார்கள். அதில் ஒர்  அன்பர் ஏழாம் சுவையில் ' அசைவம் ' உண்டா என்று கேட்டிருக்கின்றார்  "என்றதும்

" உணவுக்காக உயிர்கொலை கூடாது என்று ஐந்தொழுக்கப் பண்பாட்டில் வாழும் நாம் நகைச்சுவையிலும் அசைவம் தவிர்ப்பது மிக நல்லது " என்ற ஜி,

" ஒரு முறை மகரிஷி அவர்கள் கருவாட்டினைப் பற்றி நகைச்சுவையாகச் சொன்னார்கள் - " என்று ஒரு சம்பவத்தினை ஜி சொல்ல ஆரம்பிக்கின்றார்.

" 1980ம் ஆண்டு மகரிஷி முதன்முறையாக திருச்சி வந்திருந்தார்கள். கூடவே அழியாரில் அருள் அரங்கு கட்டுவதற்கு உதவிய திருமதி இந்திரா குப்தா  அவர்களும், அமெரிக்க அருள்நிதி  டோனி சதானந்  மற்றும் மகரிஷிக்கு உதவியாக  திருமதி ஓமனா அவர்களும் வந்திருந்தார்கள். திருச்சி மத்தியப் பேரூந்து நிலையம் அருகே உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்தார்கள். ஒருநாள் மாலையில் எல்லோருமாக பேரூந்து நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது சைக்கிளில் வந்த ஓர் இளைஞன் அந்த பகுதியில் இருந்த திரைப்பட கவர்ச்சிப் படத்தைப் பார்த்துக்கொண்டே அங்கிருந்த போலீஸ்காரர் மீது மோதிவிட்டான். அன்றிரவு  மகரிஷியிடம் இந்த கவர்ச்சி பற்றி பேசிக்கொண்டிருந்தபோது மகரிஷி அவர்கள்  ' கவர்ச்சி என்பது எல்லா பொருள்களிலும் இருக்கிறது. எந்த புலனை அது அதிகம் கவர்கிறது என்பதில்தான் நாம் விழிப்புடன் இருக்கவேண்டும். உதாரணமாக கருவாடு இருக்கிறதே அது பார்ப்பதற்கு அழகாகவா இருக்கிறது? அதன் நாற்றமும் நமக்கு பிடிப்பதில்லை. ஆனால் கருவாடு சாப்பிடுபவர்களிடம் அதன் சுவையை கேளுங்களேன். சப்புகொட்டிக்கொண்டு அதன் சுவையைப் பற்றி பேசுவார்கள். எனவே கருவாட்டின் கவர்ச்சி அதன் சுவையிலே'. என்று மிக  எளிமையாக  நகைச்சுவையுடன் கவர்ச்சி பற்றி விளக்கியது என்றுமே மறக்க முடியாது" என்கிறார் ஜி.

" ஜி, மகரிஷி சொன்ன நகைச்சுவைகள் பற்றி மேலும் சொல்லுங்கள் " என்று நாம் கேட்க

" முதன்முறையாக ஆழியார் அறிவுத்திருக்கோவிலில் கம்ப்யூட்டர் இணைத்தபோது  மகரிஷி எல்லாவற்றையும் ஆர்வமாக கவனித்து, எப்படி இயக்குவது என்பதையெல்லாம் கேட்டு தெரிந்துகொண்டார். ' இதுதான் சாமி, மவுஸ்'. என்றதும் உடனே மகரிஷி அவர்கள் ' ஒ! அதுதான் கம்ப்யூட்டருக்கு மவுஸ் கூடிகிட்டேபோவுது!' என்று நகைச்சுவையுடன் சொன்னதும் ஞாபகத்திற்கு வருகின்றது" என்கிறார் ஜி.

" ஜி, இன்னொன்று சொல்லுங்கள் " என்று நாம் கேட்க

" ஒருமுறை திருவான்மியூர் தலைமை மன்றத்தில் மகரிஷி அவர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தபோது ஜென் புத்திஸம்  பற்றி பேச்சு வந்தது. நான் ஒரு குறிப்பிட்ட ஞானி பற்றியும், அவர் ஜென் கதைகள்  மூலமாக  புத்திஸம் பற்றி எளிதாக விளக்குகிறார் என்பதைப் பற்றியும் சொன்னதும்   மகரிஷி அவர்கள் ' புத்திஸம் நல்லதுதான். ஆனால் நீங்கள் சொல்பவர் அதில் புத்தியில்லா இசத்தையும் கலந்துவிடுகிறாரே!' என்று  உடனே சொன்னது  மகரிஷியின் நகைச்சுவையுணர்வினை மேலும், மேலும் வியக்க வைத்தது"  என்கிறார் ஜி.

" இன்னொன்று சொல்லுங்கள், ஜி!"  என்று நாம் கேட்க அவரோ

" தென்கச்சி சுவாமிநாதன் அவர்கள் தொகுத்துள்ள ' மகரிஷியின் நகைச்சுவையுணர்வு' புத்தகத்தில் படித்துக்கொள்ளுங்கள் "  என்று சொல்லி " இன்றைக்கு இவ்வளவு போதும் " என்று 
முடித்துக் கொள்கிறார்  ஜி.




 "  The World of Peace

Like stars in the sky

and flowers in the field

Let us spread beautiful world

Like light, rain, and air that give life ti all creatures.


Let us be a flower

Let us be scent of the world

and make the beautiful world

the World of Peace

Let us make it together  "



Tuesday 2 August 2016

எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நினைவுகள் - 27

ஐம்பத்திநான்கு  ஆண்டுகளுக்கு முன் என்னுடன் படித்த கூறைநாட்டுத் தோழன் பாஸ்கரை சென்ற சனிக்கிழமை இரவு அட்லாண்டாவில் சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியைத் தந்தது.

மாயூரம் கூறைநாடு நகராட்சிப் பள்ளியில் ஆறாவது,  ஏழாவது மற்றும் எட்டாவது வகுப்புகளில் ஒன்றாகப் படித்தோம்.

பாஸ்கர் அப்போதே கால்பந்து, கபடி மற்றும் ஓட்டப் பந்தயங்களில் மாவட்ட அளவில் வீரன். பள்ளி கால்பந்து அணியின் கோல்கீப்பர்.

இவன் மூலம்தான் எனக்கு இம்மாதிரி போட்டிகளில் ஆர்வம் ஏற்பட்டு பிறகு இவன் அண்ணன்  மூலமாக கிரிக்கெட் அறிமுகமானது, பாஸ்கர் வீட்டிற்குச் சென்று ரேடியோவில் கமென்டரி கேட்டு கிரிக்கெட் அறிவினை வளர்த்துக் கொண்டேன்,

பாஸ்கர் தயவால் பள்ளி கபடி மேட்ச்சில் கலந்து கொண்டு எங்கள் அணி ரன்னராக வந்தது. எனக்கும் சான்றிதழ் கிடைத்தது, விளையாட்டில் நான் பெற்ற ஒரே சான்றிதழ், இன்னும் பத்திரமாக வைத்துள்ளேன்.

இப்போது சந்தித்தபோது  இரண்டு மணி நேரம் பல்வேறு மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டோம். நாங்கள் அடித்த லூட்டிகள் , வகுப்பு எடுத்த ஆசிரியர்கள் மற்றும் வகுப்புத் தோழர்கள் என பல்வேறு நினைவுகள் ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னோக்கி  எங்களை அழைத்துச் சென்று விட்டது.

கீழே உள்ளது இப்போது எடுத்த போட்டோக்கள் -





நாங்கள் இருவருமே தீவிர சிவாஜி கணேசன் ரசிகர்கள். கூறைநாடு கடைத்தெருவில் சிவாஜி ரசிகர் மன்றம் இயங்கி வந்தது. எல்லா வார, மாத பத்திரிகைகள் அங்கு இருக்கும். சிவாஜி நடித்த 100 வது  படம் நவராத்திரி வந்தபோது அதை நாங்கள் சிறப்பாக கொண்டாடினோம். MGR  ரசிகர்களை வெறுப்பேற்றினோம்( அப்போது MGR 100 படம் நடித்து முடிக்கவில்லை).

சிவாஜியின் 100 படங்கள் பற்றிய பட்டியல் தயாரித்தது போன்ற விஷயங்கள் இன்னும் ஞாபகம் உள்ளது,