Monday 21 March 2016

SMILE....308

1. டெய்லரும், பார்பரும் வெட்டி வெட்டி தான் சாம்பாதிக்கிறாங்க. அதனால அவங்களை வெட்டி வேலை செய்யறாங்கன்னு சொல்ல முடியுமோ...

2. பேப்பர் போடுறவன் பேப்பர் காரன். பால் போடுறவன் பால்காரன். தபால் போடுறவன் தபால்காரன்.... நான் கேட்கிறேன்.... அப்போ பிச்சைப் போடுறவன் பிச்சைக்காரனா?

3. என்னதான் நீங்க அகிம்சாவாதியாக இருந்தாலும், அமைதியை நேசிப்பவராக இருந்தாலும்.... சப்பாத்தியைச் “சுட்டு“தான் சாப்பிடனும்.

4. என்ன தான் “தி மு க“ காரர்கள் மாடுகளுக்குச் செல்லம் கொடுத்து ஆசை ஆசையாய் வளர்த்தாலும், அது “அம்மா“ என்று தான் கத்தும்.

5. நீங்க எவ்வளவு பெரிய கோபக்காரனாக இருந்தாலும், மகா வீரனாக இருந்தாலும், குளிர் அடிச்சாலும் கரெண்ட் அடிச்சாலும் உங்களால் திருப்பி அடிக்க முடியாது.

6. ரயில் எவ்வளவு தான் வேகமாகப் போனாலும் கடைசி பெட்டி கடைசியாகத் தான் போகும்.

7. பாம்பு எத்தனை தடவை படம் எடுத்தாலும் சரி. அது தியேட்டரில் ரிலீஸ் ஆகாது.

8. தையல் போடுறாங்க என்பதற்காக டாக்டரை எல்லாம் டைலர்கள் என்று சொல்லக்கூடாது.

9. என்னதான் நீ மாடா உழைச்சாலும் உனக்குத் தலையில கொம்பு முளைக்காது.

10. நான் கேட்கிறேன்.... கழுதை தேஞ்சி கட்டெரும்பானால், அது பேப்பர் சாப்பிடுமா? சர்க்கரை சாப்பிடுமா?

Sunday 20 March 2016

சிறுதானியம்...

சிறுதானியம்... பெரும் பலன்கள்!


றுமாதக் குழந்தை முதல் அனைவருக்கும் ஏற்ற சத்தான உணவு சிறுதானியம். ஒவ்வொரு சிறுதானியத்துக்கும் தனித்துவச் சிறப்புகள் உள்ளன. எந்தெந்த சிறுதானியத்தில் என்னென்ன சிறப்புகள் என்பதைத் தெரிந்துகொண்டால், அவற்றைப் பயன்படுத்தி உடலை வலுப்படுத்திக்கொள்ள உதவியாக இருக்கும்.
கம்பு - ஆரோக்கியமான சருமத்தைத் தரும். பார்வைத்திறன் மேம்படும். உடல் வெப்பம் தணியும். வயிற்றுப் புண்களைக் குணப்படுத்தும். பாலூட்டும் தாய்மார்களுக்கு, பால் சுரக்க உதவும்.
தினை - இதயத்தைப் பலப்படுத்தும்.நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தும். மகிழ்ச்சியான மனநிலையைத் தரும்.
சாமை - ரத்தசோகையைக் குணப்படுத்தும். சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது. மலச்சிக்கல் தீரும். விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க உதவும். உடலில் கொழுப்பு படிவதைத் தடுக்கும்.
சோளம் - உணவுக் குழாய் தொடர்பான நோய்கள் வருவது தடுக்கப்படும். ரத்த ஓட்டத்தைச் சீர்செய்யும். செரிமான சக்தி மேம்படும். வாயுத்தொல்லை நீங்கும். உடலுக்கு ஆற்றலைத் தரக்கூடியது.
கேழ்வரகு - எலும்புகளை உறுதிசெய்யும். இரும்புச்சத்து நிறைந்துள்ளது. சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். உடல் வெப்பத்தைக் குறைக்கும். மூப்படைதலைத் தாமதப்படுத்தும். சருமத்தில் பளபளப்பு உண்டாகும்.
வரகு - உடல் எடையைக் குறைக்கும். மாதவிடாய்க் கோளாறுகளைச் சரிசெய்யும். மூட்டுவலி இருப்போர் அவசியம் சாப்பிட வேண்டும். சர்க்கரை, நரம்பு தொடர்பான பிரச்னைகளுக்கு நல்லது.
குதிரைவாலி - சர்க்கரை நோய் வராமல் தடுக்கும். இதய நோய்கள் வராமல் பாதுகாக்கும். நார்ச்சத்து நிறைவாக உள்ளதால், செரிமான மண்டலத்தை சீராக்கும், மலச்சிக்கலைத் தடுக்கும்.
- நன்றி  டாக்டர் விகடன் 

Saturday 19 March 2016

STORY WITH MORAL....124

ஞானத்தின் முதல்படி


மன்னர் அசோகர் வந்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு எதிரில் வந்து கொண்டிருந்த ஒரு வயோதிக புத்த பிட்சு, மன்னரும் அவரது ஆட்களும் செல்ல வழிவிட்டு, ஓரமாக ஒதுங்கி நின்றார்.
அசோக சக்கரவர்த்தி அவரைப் பார்த்து விட்டார். உடனே தமது ரதத்தை நிறுத்திவிட்டு, இறங்கிச் சென்று புத்த பிட்சுவின் காலில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்தார். அவரது சிரம் துறவியின் காலில் பட்டது. துறவி தமது கைகளை உயர்த்தி மன்னனை ஆசிர்வதித்தார்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த அமைச்சர் சங்கடப்பட்டார். ஒரு மண்டலாதிபதி ஒரு பரதேசியின் காலில் விழுவதா? அரச பாரம்பாரியக் கவுரவம் என்னாவது? என்ற எண்ணம் அவரை அலைக்கழித்தது. அரண்மனைக்கு சென்றதும் அரசரிடம் தமது வருத்தத்தை வெளிப்படுத்தினார். அமைச்சரின் பேச்சைக் கேட்ட அசோக மன்னர் சிரித்தார். அமைச்சரின் கேள்விக்குப் பதிலளிக்காமல், ஒரு விசித்திர கட்டளையைப் பிறப்பித்தார்.

ஒரு ஆட்டுத் தலை, ஒரு புலித்தலை, ஒரு மனிதத் தலை மூன்றும் உடனே வேண்டும். ஏற்பாடு செய்யுங்கள் என்று அமைச்சருக்கு உத்தரவிட்டார். மன்னரின் கட்டளை அமைச்சரைத் திகைக்க வைத்தது. எனினும் அரச கட்டளையாயிற்றே! அதை நிறைவேற்ற ஏவலர்கள் நாலாபக்கமும் பறந்தனர்.

ஆட்டுத்தலை கிடைப்பதற்கு அதிகச் சிரமம் இருக்கவில்லை. ஓர் இறைச்சிக் கடையில் அது கிடைத்து விட்டது. புலித் தலைக்கு அலைந்தனர். அது ஒரு வேட்டைக்காரனிடம் கிடைத்தது.அன்றுதான் அவன் ஒரு புலியை வேட்டையாடியிருந்தான்.

மனிதத் தலைக்கு எங்கே போவது? கடைசியில் சுடுகாட்டிற்குச் சென்று ஒரு பிணத்தின் தலையை எடுத்துக் கொண்டு வந்து சேர்ந்தனர்.

மூன்றையும் பார்த்த அசோக மன்னர் தன் அமைச்சரிடம், அந்த மூன்று தலைகளையும் சந்தைக்குச் சென்று விற்றுவிட்டு வரச்சொன்னார். மன்னரின் கட்டளைப்படி சந்தைக்குச் சென்றவன் திணறினான்.

ஆட்டுத் தலை அதிகச் சிரமமின்றி விலை போனது. புலியின் தலையைக் கொஞ்சம் தாமதமாக வேட்டைப்பிரியர் ஒருவர் அபூர்வப் பொருள் சேகரிப்புக்காக வாங்கிக்கொண்டார். மீதமிருந்தது மனிதத் தலைதான். ஒரு காசுக்கு கூட அதை வாங்க யாரும் முன்வரவில்லை. அரண்மனை திரும்பிய அமைச்சர் ஆட்டுத் தலையும், புலித் தலையும் விலைபோனதையும், மனிதத் தலையை வாங்க ஆளில்லை என்பதையும் தெரிவித்தார்.

சரிதான்! இலவசமாகக் கொடுத்துவிடுங்கள் என்றார் அசோகர்.

இலவசமாகக் கூட அதனை வாங்கிக் கொள்ள யாருமே முன்வரவில்லை.

“பார்த்தீரா அமைச்சரே! மனிதனின் உயிர் போய்விட்டால், இந்த உடம்பு கால் காசு கூடப் பெறாது. இலவசமாகக் கூட இதனை யாரும் தொடமாட்டார்கள். இருந்தும் இந்த உடம்பு உயிர் உள்ள போது எத்தனை ஆட்டம் ஆடுகிறது! செத்த பின்பு நமக்கு மதிப்பில்லை என்பது நமக்குத் தெரியும். ஆனால், உடலில் உயிர் இருக்கும்போது, தம்மிடம் எதுவும் இல்லை என்று உணர்ந்தவர்கள் தான் ஞானிகள். அத்தகைய ஞானிகளை விழுந்து வணங்குவதில் என்ன தவறு? சொல்லப்போனால் அதுதான் ஞான வாயிலின் முதல் படி!''என்றார் அசோகர்.

மனிதனின் உயிர் போய்விட்டால், இந்த உடம்பு கால் காசு கூடப் பெறாது. இலவசமாகக்கூட இதனை யாரும் தொடமாட்டார்கள். இருந்தும் இந்த உடம்பு உயிர் உள்ளபோது எத்தனை ஆட்டம் ஆடுகிறது!

Friday 18 March 2016

SMILE....307

1 stone is enough to break a glass.
1sentence is enough to break a heart.
1sec is enough to fall in love.
But y d hell 1chapter is not enough to pass in exam...???

A boy's eye is
Faster than Google in searching a
Beautiful girl in crowd...
:
But
...:
A boy's heart is slower than
Governments bus while
Proposing a Girl whom he truly
Loves.


My Teacher pointed at me with a Ruler & said:
“At the End of this Ruler is an Idiot” I still don’t get why I got rusticated.
I only asked him, “Which End Sir?”


Professor: What’s attention deficit hyperactive disorder?
Student: jimbalakadi bamba.
Professor: Sorry, I don’t undrstnd what u said?
Student: Same here sir!

Father to son: why don't u just go and study?
Son: what for?
Father: U'll get good marks...
Son: then?
Father: U'll get good job.
......Son: then?
Father: U'll have big house, new car.
Son: so what after that?
Father: after that U'll relax.
Son: so what do u think I m doing right now???


Announcement in University:

"The students who have parked their cars on the driveway, please move them"
Another announcement after 20 minutes:
''The 200 students who went to move 9 cars please return to their respective classes"


In Bed,
It's 6AM,
You Close Your Eyes for 5 mins...
...& it's 7:45

But in Office,
It's 9:30am
You Close Your Eyes for 5 mins...
& It's Still 9:31



Sunday 13 March 2016

சிரிப்பு ஞானம்....107



ஹோட்டலில் சாப்பிடுவதற்கும், வீட்டில் சாப்பிடுவதற்கும் என்ன வித்தியாசம்? 

 ஹோட்டலில் சாப்பிட்ட பின் மாவு ஆட்டுவோம். வீட்டில் மாவு ஆட்டியபின் சாப்பிடுவோம்.


ஊருக்கு போய் சேர்ந்ததும் லெட்டர் போடு கமலா?
 ஏங்க?
அப்பதான் எனக்கு முழு சுதந்திரமே கிடைச்சமாதிரி.


ஒரு பொண்ணு போட்டோவுல

தேவதைமாதிரி இருந்தாலும்
நெகடிவ்லபிசாசு மாதிரிதான் இருப்பா

அப்பா அடிச்சா வலிக்கும்
அம்மா அடிச்சா வலிக்கும்
ஆனால் சைட் அடிச்சா வலிக்காது

உன்னை யாரவது
லூசுன்னு சொன்னா
கவலை படாதே !
வருத்த படாதே !
ஃபீல் பண்ணாதே !
உங்களுக்கு எப்படி
தெரியும்ன்னு கேள் !


காதல் ஒரு மழை மாதிரி ,
நனையும் போது சந்தோஷம் .
நனைந்த பின்பு ஜலதோஷம் .





Friday 11 March 2016

PRAYER....13



 உலகின் மிகப்பெரிய சமயங்கள் அனைத்திலுமே கடவுளைத் தொடர்பு கொள்ள மனிதர்கள் கைவசமிருக்கும் ஒரே கருவி பிரார்த்தனை. யூத மற்றும் கிறிஸ்தவக் கலாச்சாரத்தில் அதை ‘ஜெபம்’ என்ற சொல்லால் அழைக்கிறார்கள். அதேபோல் வீட்டிலிருந்து கடவுளிடம் ஜெபம் செய்வதற்கும் ஆலயம் தேடிச் சென்று அவரிடம் ஜெபிப்பதற்கும் இடையிலான வேறுபாட்டை மனிதர்கள் நன்கு உணர்ந்தேயிருக்கிறார்கள். யூதர்கள் காலை, மதியம், மாலை என மூன்றுவேளைகள் ஜெபம் செய்யும் வழக்கம் கொண்டவர்கள்.

குறிப்பாக ஆலயத்துக்கு வந்து ஜெபிப்பது சிறந்த பலனைக்கொடுக்கும் என்பதை அவர்கள் நன்கு அறிந்து வைத்திருந்தனர். இதனால் ஜெபிக்க ஆலயத்தில் குவிந்துவிடுவது அவர்களது கலாச்சாரமாக இருந்தது. ஆண்டிற்கு ஒருமுறை வரும் பாவக்கழுவாய் தினத்தில் அனைவரும் நோன்பிருக்க வேண்டும் என யூதச்சட்டம் அறிவுறுத்தியது. ஆனால், கடவுளின் அருளை சிறப்பாகப் பெறுவதற்காக பலர் வாரநாட்களில் திங்கள், வியாழன் ஆகிய இரண்டு தினங்கள் நோன்பிருந்தனர். இந்த இரண்டு நாட்களும் எருசலேமில், மக்கள் பொருட்களை வாங்கச் சந்தைகளில் முண்டியடிப்பார்கள்.

அதேபோல, விளைச்சலில் பத்தில் ஒரு பங்கை ‘தசம பாகமாக’ ஆலயத் துக்குக் கொடுக்க வேண்டுமென்று யூதர்களின் இணைச்சட்டம்(14:22), கூறுகிறது. இதன் அடிப்படையில், யூதர்கள் இதைப்பின்பற்றி வந்தனர். ஆனால் இதுபோன்ற பாரம்பரிய முறைகளை ஏழைகளும் மற்றவர்களும் பார்க்க வேண்டும் என்பதற்காக விளம்பரம் தேடிக்கொள்ளும் நோக்கத்துடன் பிரார்த்தனை செய்வது, தசமபாகம் தருவது பலிசெலுத்துவது ஆகியவற்றை ஆலயத்துக்கு வந்து படாடோபமாக செய்து ஆலயத்தின் அமைதியைக் கெடுத்து வந்தார்கள்.

தாங்கள் நோன்பிருப்பது தெரியவேண்டும் என்பதற்காக, தங்கள் முகத்தை வெள்ளையாக்கிக்கொண்டு சந்தை வெளிகளில் நடந்தார்கள், அதேபோல கொடுக்கத்தேவையில்லாத விளைபொருட்களிலும் பத்திலொரு பங்கைக்கொடுத்தார்கள். கடவுள் காரியத்திலும் விளம்பரப் பிரியர்களாக இருந்த பரிசேயர்களை முன்வைத்து இயேசு கூறிய உவமை; நாம் ஜெபம் என்ற கருவியை எத்தனை கவனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று எடுத்துக்காட்டியது.

இருவரில் யார் ஏற்புடையவர்?

லூக்கா எழுதிய நற்செய்தி 18-ம் அதிகாரம் 9 முதல் 14 வரையிலான இறைவசனங்கள் இவை.

“அக்காலத்தில் தாங்கள் நேர்மையானவர் என்று நம்பி மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்கும் சிலரைப் பார்த்து இயேசு இந்த உவமையைச் சொன்னார்: “இருவர் இறைவனிடம் வேண்டுவதற்காகக் கோவிலுக்குச் சென்றனர். ஒருவர் பரிசேயர், மற்றவர் வரி வசூலிப்பவர். பரிசேயர் நின்றுகொண்டு, இவ்வாறு இறைவனிடம் உரத்த குரலில் வேண்டினார்: ‘கடவுளே, நான் கொள்ளையர், நேர்மையற்றோர், பாலியல் தொழில் செய்வோர் போன்ற மற்ற மக்களைப் போலவோ இந்த வரி வாங்குபவரைப் போலவோ இல்லாதது பற்றி உமக்கு நன்றி செலுத்துகிறேன்; வாரத்தில் இருமுறை நோன்பிருக்கிறேன்; என் எல்லா வருவாயிலிருந்தும் பத்திலொரு பங்கைக் கொடுக்கிறேன்” என்று ஜெபித்தார்.
ஆனால் வரிவசூல் செய்பவர் தொலைவில் நின்றுகொண்டு, வானத்தை அண்ணாந்து பார்க்கக்கூடத் துணியாமல் தம் மார்பில் அடித்துக் கொண்டு, ‘கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்’ என்று கடவுளுக்கு மட்டுமே கேட்கும் தன் மனக்குரல் கொண்டு ஜெபித்தார். இந்த இருவரில் பரிசேயரல்ல, வரிவசூலிப்பவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார். ஏனெனில் தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப் பெறுவர்; தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார் இயேசு.

ஜெபத்திலும் உண்டு ஆபத்து

இயேசுவின் ஆன்மிக ஆழம் அவரது பூமி வாழ்வுக்கு அழகியதோர் அணியாக அமைகிறது. ஜெபம், இறைவேண்டல் என்பது எவ்வாறு இருக்கவேண்டும், எவ்வாறு இருக்கக்கூடாது என்பதைத் தெளிவாக எடுத்துக்காட்டிய இயேசு சிலுவையில் தொங்கிக்கொண்டிருக்கும்போது “ பிதாவே இவர்களை மன்னியும், ஏனெனில் இவர் செய்வது என்னவென்று அறியாமல் செய்கிறார்கள்” என்று தன் மரணத்தை விரும்பிய எதிரிகளை மன்னிக்கும்படி கடவுளாகிய பரலோகத் தந்தையிடம் கோரினார். இது எத்தனை உன்னதமான தாழ்ச்சி. ஒருவர் தம்மைத் தாழ்த்திக்கொள்ளவேண்டும் என்னும் இயேசுவின் அழைப்பு எளிதான போதனைதான்.

ஆனால், இறைப்புகழ்ச்சி, நன்றி ஜெபத்தில்கூட ஆபத்து அடங்கியிருக்கலாம் என்பது கொஞ்சம் புதிதான போதனை. கோவிலுக்குச் செல்லும் பரிசேயர் இறைவனுக்கு நன்றி ஜெபம் சொன்னார். “உமக்கு நன்றி செலுத்துகிறேன்” என்னும் வார்த்தைகளில் அவரது இறைப்புகழ்ச்சி வெளிப்படுகிறது, ஆனால், அந்தப் புகழ்ச்சி, நன்றியின் அடிநாதமாகத் தற்பெருமையும், தாழ்ச்சியற்ற தன்மையும் அடங்கியிருந்தது. எனவே, அவரது ஜெபம் ஏற்கப்படவில்லை என அடித்துச் சொல்கிறார் ஆண்டவர் இயேசு. தாழ்ச்சியே ஜெபம்! பிறரை விமர்சிப்பது அல்ல.

நன்றி - ஆனந்தஜோதி - தமிழ் ஹிந்து 


Tuesday 8 March 2016

மகளிர் தினம்

மகளிர் தின வரலாறு

மார்ச்-8, 1857 - அன்று முதல் உலகமெங்கும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் உலக மகளிர் தினம் மார்ச் மாதம் 8 -ம் தேதி கொண்டாடப்படுகிறது.

ஆனால், அது வந்த வரலாற்றை சற்று பின்னோக்கி பார்ப்போம். வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்த பெண்கள், தற்போது வானில் பறந்து கொண்டிருக்கின்றனர் என்றால், அதற்கு வித்திட்ட பல்வேறு போராட்டங்களின் வெற்றியே இந்த மகளிர் தினமாகும். இந்த உலக மகளிர் தினம் கொண்டாடுவதற்கு காரணமான‌ போராட்டத்திற்கான வெற்றிகள் அவ்வளவு எளிதாக கிட்டவில்லை. ஆணாதிக்க சமுதாயத்திலிருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள்தான் இது.

1910-ம் ஆண்டு பெண்கள் உரிமை மாநாடு நடைபெற்றது. இதில் உலகின் பல நாடுளைச் சேர்ந்த பெண்களின் அமைப்புகள் கலந்துகொண்டு தங்களது ஒற்றுமையை உலகிற்கு காட்டினார். இந்த மாநாட்டில் கலந்துகொண்ட ஜெர்மனி நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் கிளாரா செர்கினே, ஒரு தீர்மானத்தை வலியுறுத்தி சிறப்புரை ஆற்றினார். அந்த தீர்மானத்தின் முக்கிய சாரம்சமாக மார்ச் மாதம் 8-ம் தேதியை மகளிர் தினமாக கொண்டாட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஆனால், அந்த தீர்மானம் நிறைவேறாமல் போனது. இதற்கிடையில், 1920-ம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் செயிண்ட் பீட்டர்ஸ் நகரில் நடந்த பெண்களின் போராட்டத்தில் ரஷ்யாவை சேர்ந்த அலெக்ஸாண்டரா கேலன்ரா கலந்து கொண்டார். அவர்தான் உலக மகளிர் தினத்தை ஆண்டுதோறும் மார்ச் 8-ம் தேதி நடத்த வேண்டும் என்று பிரகடனம் செய்தார்.




மார்ச் 8-ம் தேதிக்கும், மகளிருக்கும் என்ன சம்பந்தம் என்று உழைக்கும் கீழ்த்தட்டு பெண் வர்க்கமே அறிந்துகொள்ளாத தினமாகத்தான் இந்த பெண்கள் தினம் இன்று இருக்கிறது. 1789-ம் ஆண்டு ஜூன் 14-ம்‌ தேதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரதிநிதித்துவம் என்ற கோரிக்கைகளை முன் வைத்து, பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிஸில் உள்ள பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர். ஆணுக்கு நிகராக பெண்கள் இந்த சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்றும், வேலைக்கு ஏற்ற ஊதியம், எட்டுமணி நேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் அடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் என்று கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர்.

1907-ல் தொடக்கம். 1909-ல் அமெரிக்காவில் நடைபெற்ற முதல் தேசிய மகளிர் தினம், 1910-ல் இரண்டாவது தேசிய பெண்கள் மாநாடு, 1911-ல் அமெரிக்க மற்றும் ஐரோப்பாவில் நடைபெற்ற தேசிய மகளிர் தினம், 1912-ல் Bread and roses வாசகம், 1914-1916-ல் ரஷ்யா பெண்களுக்கான போராட்டம், 1917-ல் ரஷ்யாவில் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்ட மகளிர் தினம், 1945 தனி பெண்ணுக்கான உரிமை,  உலக பெண்களுக்கான உரிமையாக மாற்றப்பட்ட வருடம். 1975-1977 சர்வதேச மகளிர் தினமாக அறிவிக்கப்பட்டது. 2014-ல்  100-க்கு மேற்பட்ட நாடுகளில் தேசிய மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.



சமீப காலமாகத்தான் இந்தியாவில் மகளிர் தின கொண்டாட்டங்கள் களைக்கட்டியுள்ளது.
  நன்றி  -  விகடன் 

Sunday 6 March 2016

நீங்கள் ஒரு சமரச பேச்சாளராக திகழ சிறந்த 6 வழிகள்....

ந்நேரமும், எக்கணமும் நாம் அனைவரும் சமரசத்தை நோக்கியே நகர்கிறோம். தற்போதோ அல்லது எதிர்காலத்திலோ ஏதேனும் ஒரு கணத்தில் நாம் யாருடனாவது சமரச பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய நிலை வரும். அதற்கு நீங்கள் ஒரு பெண்ணோ, ஆணோ, இளமையானவரோ, முதுமையானவரோ நீங்கள் சரியானவரோ, தவறானவரோ என்பது ஒரு விசயமே இல்லை. ஆனால் நீங்கள் பேசும் வார்த்தை உங்களுடைய கதாபாத்திரத்தை பிரதிபலிக்கும். நாம் பேசும் வார்த்தைகள் பல்வேறு கோணங்களில் பல கருத்துக்களை உள்ளடக்கிய நோக்கில் அந்த சமரசத்தீர்வு  இருக்கவேண்டும், அதுதான் நம்முடைய எதிர்கால வளர்ச்சிக்கு தவிர்க்க முடியாத மைல்கல்லாக இருக்கும்.


ஆனால் ஓர் ஆய்வின் அடிப்படையில் தெரிய வந்த உண்மை என்னவென்றால்,  பெண்களுக்கே பல சமயங்களில் இந்த பேச்சுவார்த்தை செயல்பாடு சவாலாக அமைகிறதாம். காரணம் ஒரே மாதிரியான பாலின வகையை உள்ளடக்கிய வளர்ப்பில் இருந்து விலகி இருப்பதே இதற்கு காரணம். அதே சமயம் ஆண்களை பொறுத்தமட்டில் அவர்களின் தலைமை குணங்களை வெளிப்படுத்தும் வாய்ப்பும், சலுகையும் எளிதில் கிடைப்பதாகவும், வெற்றி பெறுவதாகவும் தன்னுள்ளேயே உறுதி செய்துகொள்கின்றனர்.



சில தருணங்களில், சில பணியிடங்களில் வளர்ச்சி மற்றும் மாற்றம் பெற நிறைய காலங்கள் ஆகலாம். ஆனால் அவை பெண்ணால் நடந்ததாக எந்த ஒரு நிரூபணமும் இல்லை. 

மாறாக நீங்கள் ஒரு நிறுவனம் நடத்துகிறீர்கள் என்றால்,  அதில் உள்ள தலைமை பதவி பல பெண்களை கவர முயற்சிக்கிறது என்றால் கீழே இடம்பெற்றுள்ள குறிப்புகள் நீங்கள் உங்கள் நிறுவனத்தை மேம்படுத்த உதவும்.

1. பொதுவான நிலையிலிருந்து மாறுபட்டு கேட்பது

ஒரு வெற்றிகரமான பேச்சுவார்த்தை அமைய, பேச்சுவார்த்தையே முதல் படியாக அமையும். பெண் வேட்பாளர்கள் பொதுவாக தங்களின் சாத்தியமான கோரிக்கைகளை முன்வைக்க தயங்குகிறார்கள். குறிப்பிட்ட சூழ்நிலை மாற்றம் கொடுக்கக்கூடியதாக இருக்கும் என்பதை பெண்கள் அங்கீகரிக்கவேண்டும். ஏனெனில் மறைமுக எதிர்ப்பின் காரணமாக ஓர் ஒற்றை நடவடிக்கை,  ஒரு முழு நிறுவனத்தின் சமத்துவத்தையும் மாற்றவல்லது.

2. உங்கள் திறன் மற்றும் சக்தியை நினைவில் கொள்ளுங்கள்

ஒரு இரண்டு நிமிட மெனக்கிடல், பேச்சுவார்த்தையில்  உங்களின் செயல்திறனையும் நம்பிக்கையையும் மேம்படுத்துகிறது என நிரூபித்துள்ளார் ஒரு ஹார்வர்டு ஆராய்ச்சியாளர் . உங்களின் விவாதம் துவங்கும் முன் தனித்து சென்று,  நேராக நின்று கைகளை நீட்டி,  இடுப்பிலோ அல்லது சக்தி பெருகும் நிலையிலோ வைத்து நேர்மறை எண்ணம் கொண்ட பாவத்துடன் இருங்கள். அது எண்டோர்பினை ஊக்கப்படுத்தி,  நம்பிக்கையையும் பதற்றமற்ற சூழ்நிலையை வழங்குகிறது. உங்களின் கருத்துக்களை நிறைவேறும் நோக்குடனும்,  நேர்மறை தோற்றத்தையும்,  பார்வையில் ஒர் கனிவையும் கொண்டு, கலாச்சார சூழ்நிலைக்கு ஏற்றார்போல் மற்றவரிடம் பேசுங்கள். நீங்கள் உங்கள் திறமையின் மீது நம்பிக்கை வைத்தால் அது கண நேரத்தில் கைகொடுக்கும்.

3. நீங்கள் பணிபுரியும் நிறுவனம் மற்றும் சகஊழியர்களிடம் உங்கள் வெற்றியின் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள்

பேச்சுவார்த்தை, நிறுவனம் மற்றும் சக ஊழியர்களின் மீது நல்ல  நல்ல தாக்கத்தை  ஏற்படுத்தக்கூடியதாக இருப்பின்,  பெண்களும் ஒப்பந்த நோக்குடன் கலந்துரையாடுபவராக இருக்க வேண்டும் என்றும்,  அதில் சிறந்து விளங்கவேண்டும் என்றும் நினைப்பார்கள்.



4. குழு பரிந்துரை :

அறிவியலாளர்களின் ஆய்வின் அடிப்படையில், பெண்கள் ஒரு பெரிய குழுவில் வாதாடும்போது தங்களை பற்றிய சிறப்பை உணர்கிறார்கள்.  மேலும் அவர்களை பற்றிய வளர்ப்பும் அடையாளமும் ஒழுங்குபடுத்தப்படுகிறது.

5. ஒருவரை சார்ந்து நடப்பது:

பெண்கள் எப்போதும் சமூகம் சார்ந்து இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறார்கள். மேலும் அவ்வாறே வளர்கிறார்கள். இருந்தாலும் கூட அவர்களின் கவனம் தன் சுற்றத்தார் நோக்கி இருக்கையில் சுயநலமற்றவர்களாக இருக்கிறார்கள்.


6.  உறுதியான நோக்கு:

பெண்கள் பல காரணங்களுக்காக தியாகங்கள் செய்கிறார்கள். அதிகப்படியான பொறுப்பு, இழப்பீடு காரணமாக சுறுசுறுப்பை தொடர இயலாமல் போகிறார்கள். போட்டி பேச்சுவார்த்தை, முன்மொழிய, மாற்ற, முன்னெடுக்க, முன்னேற, மேம்படுத்த என ஏதேனும் ஒன்றிற்காக பேச்சுவார்த்தையை முன்னெடுக்க நினைத்தால் வாழ்த்துக்கள். எனினும் கவனமாக இருங்கள். புன்னகை, விடாமுயற்சியை மறந்துவிடாதீர்கள்!  



- நன்றி   விகடன் 

Thursday 3 March 2016

THIS TOO SHALL PASS...10

This, too, will pass. O heart, say it over and over,
Out of your deepest sorrow, out of your deepest grief,
No hurt can last forever - perhaps tomorrow
Will bring relief.

This, too, will pass. It will spend itself - its fury
Will die as the wind dies down with the setting sun
Assuaged and calm, you will rest again, forgetting
A thing that is done.

Repeat it again and again, O heart for your comfort
This, too, will pass as surely as passed before
The old forgotten pain, and the other sorrows
That once you bore.


As certain as stars at night, or dawn after darkness
Inherent as the lift of the blowing grass
Whatever your despair or your frustration --
This, too, will pass.