Monday 21 March 2016

SMILE....308

1. டெய்லரும், பார்பரும் வெட்டி வெட்டி தான் சாம்பாதிக்கிறாங்க. அதனால அவங்களை வெட்டி வேலை செய்யறாங்கன்னு சொல்ல முடியுமோ...

2. பேப்பர் போடுறவன் பேப்பர் காரன். பால் போடுறவன் பால்காரன். தபால் போடுறவன் தபால்காரன்.... நான் கேட்கிறேன்.... அப்போ பிச்சைப் போடுறவன் பிச்சைக்காரனா?

3. என்னதான் நீங்க அகிம்சாவாதியாக இருந்தாலும், அமைதியை நேசிப்பவராக இருந்தாலும்.... சப்பாத்தியைச் “சுட்டு“தான் சாப்பிடனும்.

4. என்ன தான் “தி மு க“ காரர்கள் மாடுகளுக்குச் செல்லம் கொடுத்து ஆசை ஆசையாய் வளர்த்தாலும், அது “அம்மா“ என்று தான் கத்தும்.

5. நீங்க எவ்வளவு பெரிய கோபக்காரனாக இருந்தாலும், மகா வீரனாக இருந்தாலும், குளிர் அடிச்சாலும் கரெண்ட் அடிச்சாலும் உங்களால் திருப்பி அடிக்க முடியாது.

6. ரயில் எவ்வளவு தான் வேகமாகப் போனாலும் கடைசி பெட்டி கடைசியாகத் தான் போகும்.

7. பாம்பு எத்தனை தடவை படம் எடுத்தாலும் சரி. அது தியேட்டரில் ரிலீஸ் ஆகாது.

8. தையல் போடுறாங்க என்பதற்காக டாக்டரை எல்லாம் டைலர்கள் என்று சொல்லக்கூடாது.

9. என்னதான் நீ மாடா உழைச்சாலும் உனக்குத் தலையில கொம்பு முளைக்காது.

10. நான் கேட்கிறேன்.... கழுதை தேஞ்சி கட்டெரும்பானால், அது பேப்பர் சாப்பிடுமா? சர்க்கரை சாப்பிடுமா?

No comments:

Post a Comment