Monday 30 October 2017

ஏழாம் சுவை - நகைச்சுவை - 3

ஏழாம் சுவை - நகைச்சுவை

                                        - அறு(சு)வையானந்தா


" ஜி , உங்கள் ஏழாம் சுவையை ருசித்துப் படித்த நிறைய பேர் உங்களை தரிசிக்க வேண்டும் என கேட்டிருக்கின்றார்கள் " என்றதும்

" நிச்சயமாகப் பார்க்கலாம். அதுவும் அருட்குரலுக்கு குறைந்தது 25 சந்தா தாரர்கள்  சேர்ப்பவர்களை  நானே சென்று பார்ப்பேன் "  என்ற ஜி

" சிரிப்பு,
இதன் சிறப்பை சீர்தூக்கிப் பார்ப்பதே
நமது பொறுப்பு
துன்ப வாழ்விலும் இன்பம் காணும்
விந்தை புரிவது சிரிப்பு - இதைத்
துணையாய்க் கொள்ளும் மக்கள் மனதில்
துலங்கிடும் தனி செழிப்பு " 


என்ற கலைவாணரின் பாடலைப் பாட ஆரம்பித்துவிட்டார். பிறகு 
" எந்த சப்ஜெக்ட்லியும் ஜோக் சொல்லலாம். மாமியார்-மருமகள் ஜோக்குகள் நிறைய கேட்டிருப்பீர்கள். இதுல புதுமையா ரெண்டு சொல்றேன் -

உலகிலேயே மிகவும் அதிர்ஷ்டக்கார பெண்மணி யார் தெரியுமா ?
என ஜி கேட்க, நாங்கள் விழிக்க 

ஏவாள்எப்படி தெரியுமா?
அவளுக்குத்தான்   மாமியாரே  கிடையாதே..! "  
என ஜி சொல்ல ஒரே சிரிப்பலைகள்.

" இராமாயணத்திலே ராமன் காட்டுக்குப் போனப்ப சீதையும் உடன்சென்றாள்ஏன் தெரியுமா ? " 


என ஜி கேட்க " நீங்களே சொல்லுங்கள் " என நாம் சொல்ல 


" தசரதனுக்கு பட்டத்து ராணிகள் மூணு பேருஇது தவிர அறுபதாயிரம்னைவிகள்ஒரு மாமியாரையே தாக்கு பிடிக்க முடியாது..இதுல 
60003  பேரா...
காடுதான் பெட்டர்ன்னு  சீதை  முடிவு பண்ணிட்டா!" 

என ஜி முடிக்க எல்லோரும் விழுந்து, விழுந்து சிரிக்கின்றார்கள்.


" கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க.. தசரதன் தன் 60003 மனைவியர்களுடன் 

நகர்வலம் போனால் எப்படி இருக்கும்? மகளிர் பேரணிக்கு தலைமை வகித்து நடத்தி செல்வது போல் அல்லவா இருக்கும்!" 

என மேலும்  கலகலப்பு மூட்டுகின்றார் ஜி.


" இராமாயணத்திலிருந்து வேறு ஏதேனும் ஜோக் சொல்ல முடியுமா?"

 என நாம் கேட்க 

" இராமாயணத்தில் ஒரு முக்கியமான உணர்ச்சிகரமான கட்டம்.....இராவணனைக் கொன்றுவிட்டு இராமர் அசோகவனத்தில் இருக்கும் சீதையைக் காண வருகின்றார். இராவணன் தூக்கிச் சென்று பிறகு வெகுநாள் கழித்து  இருவரும் சந்திக்கின்றனர். சீதை இராமரிடம் முதலில் என்ன பேசியிருப்பாள்?"


என ஜி கேட்க 


" நல்லாயிருக்கீங்களா? எனக் கேட்டு இராமர் காலில் விழுந்து வணங்குவாள் " என நாம் சொல்ல 


" இதுல எங்க ஜோக் வருது? கொஞ்சம் இந்த காலத்து பெண்கள் மனோநிலையில் யோசித்துத்தான் சொல்லுங்களேன்" என்கிறார் ஜி.


நமக்கு ஒன்றும் தோன்றவில்லை. ஜி யைப் பார்க்க அவர் சொல்கிறார் -


" மானைப் பிடிக்கச் சென்றீர்களே! பத்திரமாக பிடித்து வைத்திருக்கின்றீர்கள் அல்லவா? - என்றுதானே கேட்டிருப்பாள்  "


சிரித்து, சிரித்து நமக்கு வயிற்று வலியே வந்து விடுகின்றது.

1 comment:

  1. நகைக்க வைக்கும் பதிவு குட்

    ReplyDelete