Tuesday 27 February 2024

மகரிஷி அவர்களுடன்........14

THANKS TO ALL WHO CONTINUOUSLY SUPPORT ME

மகரிஷி அவர்கள் 1991ம் ஆண்டு என்னிடம் " இல்லற வாழ்வில் 10 ஆண்டுகள் அனுபவித்த பிறகு கணவன் - மனைவியாக தொண்டிற்கு வாருங்கள் " எனப் பணித்திருந்தார்கள். எட்டு ஆண்டுகளிலேயே,  1989ம் ஆண்டிலேயே மாலாவுடன் பெல் மன்றத் தொண்டில் முழு மூச்சாக ஈடுபட ஆரம்பித்தோம். மகரிஷி அவர்களைத் திருச்சிக்கு நிகழ்ச்சிகள் நடத்தித் தர வேண்டி கடிதம் எழுதினோம். அப்போது மகரிஷி அவர்கள் அமெரிக்காவில் யக்காவேலி என்ற இடத்தில் அருட்தொண்டாற்றிக்கொண்டிருந்தார்கள். அங்கிருந்து அவர்கள் எங்களுக்கு எழுதிய கடிதம் கீழே -


 
ஆழியார் அறிவுத்திருக்கோயில் பிப்ரவரி 1990ல் திறக்கப்பட்ட பிறகு 1993 ம் ஆண்டுதான் மகரிஷி அவர்களால் பெல் மன்றத்திற்கு வரமுடிந்தது.
இடையில் பலமுறை சென்னை தலைமையகத்திலும், ஆழியாரிலும் ( (1990,91 & 92 ஆசிரிய பயிற்சிகளின்போது ) மகரிஷி அவர்களோடு உரையாடிய நிகழ்வுகளை வரும் பதிவுகளில் தெரிவிக்கின்றேன்.
MAHARISHI'S PHOTO WHICH I RECEIVED DURING 1978


No comments:

Post a Comment