Thursday 28 March 2024

மகரிஷி அவர்களுடன்........17

 வேதாத்திரிய  வேள்வி  தினம் 

  

அருள்தந்தை அவர்களின் மஹாசமாதி தினமான இன்று மாலாவும், நானும் ஆழியார் வந்துள்ளோம்.  1990 தொடங்கி 2005   வரை மாலா ஒவ்வொரு மாதமும் ஆழியார் சென்று    மகரிஷி அவர்களை சந்த்தித்துவிட்டு வருவாள். என்னால் அப்படி செல்லமுடியவில்லை - அலுவலக வேலைகள் காரணமாக.     மகரிஷி அவர்களோடு உரையாடும்போது கிடைத்த அரிய தகவல்கள் ஏராளம்.

மகரிஷி அவர்களின் நகைச்சுவை உணர்வு நம்மை வாய்விட்டு சிரிக்க வைத்துவிடும். நாங்கள் அனுபவித்த சிலவற்றை                     " அருட்குரல் " மாத இதழ் ஒன்றில் ஏழாம் சுவை - நகைச்சுவை என்ற தலைப்பில் அறு(சு)வையானந்தா என்ற புனைபெயரில் கொடுத்துள்ளேன். அதனுடைய link கீழே -

click  here

 "ஞானமே ஆனாலும் குடும்ப அமைதியை இழந்து பெறுவதற்கு ஒன்றுமில்லை " என குடும்ப அமைதிக்கு முன்னுரிமை கொடுத்தவர் அருள்தந்தை அவர்கள். அவர்கள் சொன்ன கருத்துக்களோடு நகைச்சுவை சேர்த்து நான் ' அருட்குரலில் ' எழுதிய கட்டுரை படிக்க கீழே link உள்ளது

click  here 

எங்களது 25வது திருமண நாளினை ஆழியாரில் கொண்டாடினோம். அப்போது அருள்தந்தையின் ஆசிகள் பெற்றதை " ஞானவயலில் " பதிவு செய்துள்ளேன். அதனை படிக்க link கீழே -

click  here








No comments:

Post a Comment