Wednesday 2 May 2018

ஏழாம் சுவை - நகைச்சுவை - 5

 - அறு(சு)வையா​னந்தா


'ஜி'யை சந்திக்கச் சென்றிருந்தபோது அவரை காண வந்திருந்த இரு உயரதிகாரிகளை சந்தித்தோம். அவர்கள் 'ஜி'யின் கீழ் பணிபுரிந்தவர்களாம். அவர்களிடமிருந்து
 தெரிந்துகொண்ட  விஷயங்கள்  -


* எவ்வளவு டென்ஷனாக வேலை இருந்தாலும் தன்  நகைச்சுவை உணர்வால் அந்த வேலையை எளிதாக்கி, சீக்கிரமாகவும், சிறப்பாகவும் செய்து முடிக்க ஜி உதவுவார்.

* ஜி யுடன்  வேலை செய்பவர்கள் குழு மனப்பான்மையுடன் உற்பத்தி திறனை அதிகப் படுத்துவார்கள்.

* இதனால் ஜி யுடன் ஏற்பட்ட அன்புபிணைப்பால்தான் அவரை அடிக்கடி காண வருகின்றோம்.

அந்த அதிகாரிகள் ஜி யுடன் பேசிவிட்டு சென்ற பிறகு நாங்கள் இன்றைய அலுவலகம் மற்றும் வேலை செய்யும் இடங்கள், வேலை பளு இவற்றைப் பற்றி பேசினோம்.

" இன்றைய அவசர யுகத்தில், போட்டிகளும், சவால்களும் நிறைந்த சூழ்நிலையில், 12 மணி நேரத்திற்கு மேல் வேலை பார்க்க வேண்டிய கட்டாயத்தில் அனைவருக்குமே  எப்போதும் டென்ஷன்தான். கொஞ்சம் குரலை உயர்த்தி ஆணையிட்டால்கூட ஊழியர்கள் உணர்ச்சி வசப்பட்டு பிரச்சனைகளை உண்டாக்கிவிடுகின்றார்கள். இந்த மாதிரி நேரத்தில் சிரிக்கபேசி, அவர்களை புதிய கோணத்தில் சிந்திக்க உதவுவேன். வேலைகள் சிறப்பாக முடியும் " என்றார் ஜி.

" எங்களுக்கு சில சுவையான சம்பவங்கள் கூறமுடியுமா? " எனக் கேட்டோம்.

" நிறைய சொல்லலாம். முப்பது ஆண்டுகளுக்குமுன் நான் பணிபுரிந்த இடத்தில் ஆண்டு ஆய்வுக்காக உயரதிகாரி வருவதாக செய்தி வந்தது. அந்த அதிகாரி மிகவும் கண்டிப்பானவர், மிகவும் சிடுசிடு என இருப்பார் என்பதால் எல்லோருக்கும் பயம். அவர் வருவது பற்றி ஒரு தந்தி வந்தது. அதைப் படித்ததும் எல்லோருக்கும் ஒரே சிரிப்பு  - அதில் ' coming by morning 5 O ' clock train . send office keep ' என இருந்தது. தந்தியில் jeep என்பது keep என இருந்ததால் அர்த்தமே மாறிவிட்டது. அந்த அதிகாரி ஆய்வுக்கு வந்தபோது அந்த தந்தியைக் காட்டினோம். அதைப் பார்த்துவிட்டு அவர் சிரித்த சிரிப்பில் எங்களுக்கு எல்லா பயமும் போய்விட்டது.

" இப்போது வந்து சென்றார்களே, அவர்கள் என்ன புலம்பினார்கள் தெரியுமா..அவர்களுடைய boss விரட்டி, விரட்டி வேலை வாங்குகிறாராம்.கேட்டால் தனக்கு மேலே இருக்கும் மூன்று முட்டாள் அதிகாரிகள் உடனடியாக விவரங்கள் கேட்டு தன்னை விரட்டுகிறார்கள் என்கிறாராம். நான் சொன்னேன் - ' நீங்கள் உங்கள் bossஸிடம் என்ன சொல்லியிருக்கவேண்டும் - உங்களுக்குமேல் மூன்று முட்டாள்கள்தான். ஆனால் எங்களுக்கு மேல்   நான்கு முட்டாள்கள் இருக்கிறார்களே  என்று'.     இப்படி சொல்ல முடியாவிட்டாலும் கொஞ்சம் இப்படியெல்லாம் சிந்தித்து, சிரித்து அழுத்தத்தைக் குறைத்துக் கொள்ளலாம்" என்றார் ஜி.

மேலும் சொல்லுங்கள் ஜி " என வேண்டினோம்.

" Humour at Workplace "  என பல பத்திரிகைகளில் உண்மை நகைச்சுவை நிகழ்சிகள் வெளிவருகின்றன.  இன்றைக்கு நகைச்சுவை உணர்வு உள்ள அதிகாரிகளையும், சக ஊழியர்களையும்தான் எல்லோரும் விரும்புகிறார்கள்.  பேச்சாளர்களில்கூட  நம்மை அதிகம் சிரிக்க வைப்பவர்களைத்தான் நாம் விரும்புகிறோம் அல்லவா....எனவே முதலில் நம்மை வைத்தே நாம் காமெடி செய்துகொள்வது  நம்மை பாபுலராக்கிவிடும்" என்கிறார்  ஜி.

" என்னைவச்சு யாரும் காமெடி, கீமெடி பண்ணுலையே ... அப்படின்னு கேக்காம நம்மகிட்ட இல்லாத விஷயத்தை உணர்ந்து நம்மை நாமே கமெண்ட் அடித்துக் கொண்டு நாமே சிரிக்கணும் என்று சொல்கிறீர்கள் , இல்லையா ஜி " என நாம் கேட்க

" ஆமாம். ஈகோ இல்லாத ஆள் என்ற இமேஜ் நம் மீது விழுந்து நம் மேல் மரியாதை கூடும் " என்கிறார் ஜி.

  எங்கள் உரையாடலின்போது ஜி சொன்ன சில அலுவலக ஜோக்குகள் -

*******************************
 “இன்னைக்கு நான் ஆபீஸ்ல பட்டினி கிடந்து
வேலை செஞ்சேன்”


“அவ்வளவு பிசி ஒர்க்கா?”



“இல்ல; சாப்பாட்டு நேரத்தில என்னை யாரும்
எழுப்பிவிடலை”


********************************************

"உங்க ஆபீஸ்ல எல்லாரும் எப்படி இருக்காங்க?"

 "படுத்த   படுக்கையா!"  


**************************


இன்னைக்கு வெயில் ரொம்ப அதிகமா இருக்கு... நீங்க ஆபீஸ் போக வேண்டாங்க!"

"என்னை நம்பு செல்லம்... சத்தியமா எனக்கு வத்தல் போடத் தெரியாது!"



********************************

நானும் என் மனைவியும் ஒரே ஆபீஸ்ல வேலை செய்யுறோம்..."

அப்ப ஆபீஸ்லகூட உங்களால நிம்மதியா தூங்கமுடியாதுன்னு சொல்லுங்க..


No comments:

Post a Comment