மனைவி~ இன்னைக்கு வெள்ளி கிழமை என்னங்க சமைக்க..??
கணவன் : பிரியாணி இருக்குல்ல சூடு பண்ணிருடா...
மனைவி ~ ஆமா...ஆமாங்க ஃப்ரிஜ்ல இருக்க பிரியாணிய முதல்ல தீக்கனும்...முட்டைய வேகப்போட்டு பிரியாணியே சூடு பண்ணிட்றேன்.
கணவன் : வேணாம்...வேணாம்மா பேசாம மதியம் ரசம் சாதம் கூட வச்சிடு... பிரியாணி அளவாதான இருக்கு நைட்டு கூட சூடு பண்ணிக்கலாம்.
மனைவி ~ சரிங்க அப்போ ஒரே வேலையா உங்களுக்கு அரிம்பருப்பு சாதம் பண்ணிட்றேன்..
கணவன் : டேய்... போன செவ்வாயோ திங்களோ தான அத பண்ணின. ஏற்க்கனவே நெஞ்செரிச்சலா இருக்கு.. நீ ரசம் சாதம் பண்ணிடு மிளகு கொஞ்சம் தூக்களா போட்டு.
கணவன் ~ சரிப்பா..
மனைவி - அப்பன்னா மிளக நிறைய்ய போட்டு ரசம் வச்சிட்றேன்....
கணவன் : ஏன்மா இன்னொரு யோசனையாருகக்கு...
வெள்ளி கிழமை அதுமா ரசமா.?!
மனைவி ~ ஷ்ஷ்ஷ்ஷபா சரி விடுங்கங்க..
பிரியாணியே எடுத்து சூடு பண்ணி,முட்டைய வேகப்போட்டு,
கூட தயிர்பச்சிடி பண்ணிட்றேன்...
கணவன் : அப்டியா...சரிமா...சரிமா..
உன் விருப்பம்...
மனைவி - இல்லன்னா ரசமும் சாதமும் அப்பளமும் செய்யாட்டா..??
கணவன் ~ 🥺🥺🤧
No comments:
Post a Comment