60 முதல் 90 வயது வரை உள்ளவர்கள், மகிழ்ச்சியாக வாழ, 44 விஷயங்கள்.
ஜப்பான் நா ட்டைச் சேர்ந்த மனநல மருத்துவர், ஹிடேகி வாடா என்பவர், 'தி 80 இயர் ஓல்ட் வால்' என்ற புத்தகத்தை சமீபத்தில் வெளியிட்டார். புத்தகம், 10 லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்று, இந்த ஆண்டு ஜப்பானில் அதிகம் விற்பனையான புத்தகம் என்ற விருதை தட்டிச் சென்றது. இந்த புத்தகத்தில், 60 முதல் 90 வயது வரை உள்ளவர்கள், மகிழ்ச்சியாக வாழ, 44 விஷயங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவை...
1. தொடர்ந்து நடைப்பயிற்சி செய்யவும்
2. கோபமாக இருக்கும் போது, மூச்சை ஆழ்ந்து இழுத்து விடுங்கள்
3. முடிந்தவரை உடற்பயிற்சி செய்யுங்கள்
4. 'ஏசி' பயன்படுத்தினால், நிறைய தண்ணீர் குடிக்கவும்
5. 'டயப்பர்களை' பயன்படுத்துவது, உடல் இய க்கங்களை எளிதாக்குகிறது
6. அடிக்கடி நடப்பது உடலையும், மூளையையும் அதிக சுறுசுறுப்பாக வைத்திருக்கும்
7. மறதி என்பது வயது முதிர்ச்சியால் வருவதல்ல; மூளையை நீண்ட நேரம் பயன்படுத்தாததால் ஏற்படுகிறது
8. அதிக மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை
9. ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவை செயற்கையாக குறைக்க வேண்டிய அவசியமில்லை
10. நேரத்தை மகிழ்ச்சியாக செலவிடுவது
11. சோம்பேறியாக இருப்பது வெட்கக்கேடானது அல்ல
12. வயதானவர்களுக்கு வாகனம் ஓட்டுவது ஆபத்தானது
13. நீங்கள் விரும்புவதை செய்யுங்கள், உங்களுக்கு பிடிக்காததை செய்யாதீர்கள்
14. வயதாகும் போதும் அனைத்து ஆசைகளும் அப்படியே இருக்கும். அதில் தவறில்லை
15. அதிக நேரம் வீட்டில் இருக்காதீர்கள்
16. நீங்கள் விரும்பியதை சாப்பிடுங்கள்
17. எல்லாவற்றையும் கவனமாக செய்யுங்கள்
18. உங்களுக்கு பிடிக்காதவர்களை தவிர்க்கவும்
19. எப்போதும், 'டிவி' அல்லது மொபைல் போன், சமூக ஊடகங்களை பார்க்காதீர்கள்
20. நோயுடன் இறுதிவரை போராடுவதை விட, அதனுடன் வாழ கற்றுக்கொள்ளுங்கள்
21. 'கார் மலையில் ஏறினாலும், பாதை கிடைக்கும்' என்ற மந்திரத்தை நினைவில் கொள்ளுங்கள்
22. புதிய பழங்கள் மற்றும் சாலட்களை சாப்பிடுங்கள்
23. பத்து நிமிடங்களில் உங்கள் குளியலை முடிக்கவும்
24. துாக்கம் வரவில்லையா? வலுக்கட்டாயமாக துாங்குவதற்கு முயற்சிக்காதீர்கள்
25. மகிழ்ச்சி தரும் விஷயங்களை செய்வது, உங்கள் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்கும்
26. அதிகமாக யோசிக்காதீர்கள்
27. அவசியம் என்றால் மட்டும், குடும்ப மருத்துவரை அணுகுங்கள்
28. மிகவும் சகிப்புத்தன்மையுடன் இருக்காதீர்கள், கொஞ்சம் கெட்ட கிழவனாக, குறும்புக்காரனாக இருக்கலாம்
29. சில நேரங்களில், பிடிவாதத்தை கைவிடுவது நல்லது
30. வாழ்க்கையின் கடைசி கட்டத்தில், பழைய நினைவுகள் மறந்து போவது கடவுளின் ஆசீர்வாதம்
31. நீங்கள் கற்றுக்கொள்வதை நிறுத்தும் போது, நீங்கள் உண்மையில் வயதாகி விடுகிறீர்கள்
32. புகழுக்கான ஆசையை விட்டுவிடுங்கள், உங்களிடம் இருப்பதே போதுமானது
33. அப்பாவித்தனம் என்பது முதியவர்களின் பாக்கியம்
34. பிரச்னைகள் அதிகமாக இருந்தால், வாழ்க்கை மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்
35. வெயிலில் அமர்ந்திருப்பதும், இயற்கையை ரசிப்பதும் மகிழ்ச்சியைத் தரும்
36. மற்றவர்களுக்கு நல்லது செய்யுங்கள்
37. இன்று அமைதியாக வாழணும் என்று நினையுங்கள்
38. ஆசையே நீண்ட ஆயுளுக்கு ஆதாரம்
39. எப்போதும் நேர்மறையாக இருங்கள்
40. சுதந்திரமாக இருக்க பாருங்கள்
41. வாழ்க்கையின் விதிகள் உங்கள் கைகளில் உள்ளன
42. எல்லாவற்றையும் அமைதியாக ஏற்றுக்கொள்ளுங்கள்
43. மகிழ்ச்சியான மக்கள் எப்போதும் நேசிக்கப்படுகின்றனர்
44. சிரிப்பு உடலுக்கு ஆரோக்கியம் தரும்.
No comments:
Post a Comment