Tuesday, 23 June 2026

விதி வலியது

 


மருத நாட்டு மன்னன் விக்கிரமனுக்கு நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லை. அவனும் அவன் மனைவி ராணி சம்யுக்தாவுக்கும் மிகப்பெரிய மன அழுத்தம். அவர்கள் செய்யாத பூஜைகள் இல்லை.

அன்று காலை, விக்கிரமன் தூங்கி எழுந்த உடனேயே தளபதி சேகரன் மூலம் ஒரு நற்செய்தி வந்தது.

நாட்டின் தலைநகருக்கு மிகப்பெரிய சோதிட வித்தகர் ராம சாஸ்திரிகள் வந்துள்ளதாக தளபதி மன்னனிடம் சொன்னான். உடனே மன்னன் ராம சாஸ்திரிகளை ராஜ மரியாதையுடன் அரண்மனைக்கு அழைத்து வர ஆணையிட்டான்.

ராம சாஸ்திரி அரண்மனை வந்தடைந்தார். மன்னனும் ராணியும் அவரிடம் ஆசிர்வாதம் பெற்றனர். பிறகு தங்களது குழந்தை பாக்கிய குறையை அவரிடம் நிவர்த்தி செய்ய வேண்டினர்.

சாஸ்திரியும் சில பரிகாரங்களை சொல்லி, அவற்றை செய்தால் பெண் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று சொல்லி பிறகு தயங்கினார்.

மன்னனும் அவரிடம் எதுவாக இருந்தாலும் கூறுங்கள் என கூறினான்.

அந்த சாஸ்திரி "அந்த குழந்தைக்கு ஒரு விலங்கால் உயிர் ஆபத்து ஏற்படும். அதை சோதிடத்தால் தடுக்க முடியாது. இறை வழிபாட்டின் மூலம் தடுக்க முயலுங்கள்" என கூறி விட்டு விடை பெற்றார்.

சில மாதங்களில் ராணி கருவுற்றாள். அவளுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது.

அந்த பெண்ணுக்கு காவேரி என பெயரிட்டனர். அந்த குழந்தை உயிருக்கு ஆபத்தென்பதால் வெளியே எங்கேயும் அழைத்து செல்வதில்லை. அரண்மனை தோட்டத்தில் கூட எந்த நச்சு உயிரினங்களும் இல்லாமல் பராமரிக்கப்பட்டது.

நாட்கள் நகர்ந்தன. அந்த விபரீத நாள் வந்தது. அன்று காலையில் ஒரு கரு நாகத்தை வேட்டையாடி தன் கால்களில் பற்றிய கழுகு, அந்த தோட்டத்தின் வழியே பறந்தது. தோட்டத்தின் மேல் பறக்கும் போது பிடி நழுவி அந்த நாகம் தோட்டத்தில் விழுந்தது.

சிறிது நேரத்தில் காவேரி தோட்டத்துக்கு தன் நண்பிகளுடன் விளையாட வந்தாள். அவள் பிறவி வினை, அவளை அந்த கரு நாகத்தை நோக்கி அவளை அறியாமல் நடக்க வைத்தது. அவளை கரு நாகம் தீண்டியது. காவேரி உயிரிழந்தாள்.

நீதி: விதி வலியது. ஆனால், விதிக்கு பயந்து வாழும் நாட்களை தொலைக்காதே

No comments:

Post a Comment