ஒருவர் : நேத்து எங்க வீட்டுல திருடன் வந்து எல்லாத்தையும் தூக்கிட்டு போயிட்டான்..
மற்றொருவர் : நீங்க தான் துப்பாக்கி வச்சிருக்கீங்களே...
ஒருவர் : நல்ல வேளை.. அத டிராவுல வச்சி பூட்டி வச்சிருந்தேன்... இல்லன்ன அதையும் எடுத்துட்டு போயிருப்பான்...
மற்றொருவர்: ????!!!!!
மச்சான் ! நம்ம சொல்றத தெளிவா கேட்டுட்டு! அதுக்கு எதிராக செய்றது இந்த நாலு பேருதான் !
யாருடா மாப்பிள்ளை அது
- கடவுள்
- டைலர்
- நான் பெத்தது
அப்புறம் நான்காவது .
வேற யாரு நான் கட்டிக்கிட்டது தான்!
மகன் - அப்பா! இனி நம்ம ஹோட்டலுக்கு தினம் பத்து கிலோ சிக்கன் வாங்கினால் போதும் அப்பா!
ஹோட்டல் முதலாளி - ஏண்டா மவனே! என்ன ஆச்சு!
மகன் - இது புரட்டாசி மாதம் அப்பா! அப்புறம் நட்டம் ஆகி விடும்!
ஹோட்டல் முதலாளி - டேய் மவனே! இனி முப்பது கிலோ சிக்கன் சொல்லு தினம்!
மகன் - என்னப்பா சொல்றீங்க!
ஹோட்டல் முதலாளி - டேய் இப்ப யாரும் அசைவம் வீட்டில் சமைக்க மாட்டாங்க! குழந்தைகளுக்கு வெளியில் தான் வாங்கி கொடுப்பாங்க அதான் சொல்றேன்! நீ எப்ப தான் இந்த வியாபார நுணுக்கத்தை கற்று கொள்ள போகிறாயோ!
No comments:
Post a Comment