Friday 27 May 2016

PERFECTION....1


In some workplaces Perfection is a Habit, 

not an Attitude!
Apparently,the  American Computer Giant IBM decided to have some parts manufactured in Japan as a trial. In the specifications, they set standard that they will accept only three defective pieces per 10,000 pieces.
When the delivery came to IBM there was a letter accompanying it.

"We, Japanese people, had a hard time understanding North American business practices. But the three defective parts per 10,000 pieces have been separately manufactured and have been included in the consignment in a separate package mentioned -- 'Defective pieces as required; not for use.' Hope this meets your requirement.

Thursday 26 May 2016

STORY WITH MORAL....125


A Man Reached 70 Years Of Age
And He Faced A Disease ;
He Could Not Urinate.
The Doctors informed Him
That He Was in Need Of An Operation
To Cure This Disease.
He Agreed To Have The Operation
Done As The Problem Was Giving Him
Much Pain For Days.
When The Operation Was Completed,
His Doctor Gave Him The Bill
Which Covered All The Costs.
The Old Man Looked At The Bill
And Started To Cry.
Upon Seeing This The Doctor Told Him
That if The Cost Was Too High
Then They Could Make Some Other Arrangements.
The Old Man Said
 I Am Not Crying Because Of The Money

But I Am Crying

Because The Lord Let Me Urinate

For 70 Years And He Never Sent Me A Bill

TIPS....to survive the hard times

 Real Tips to Survive the Hard Times in Business (and Life)


Having dreams, goals and being an ambitious business woman is both exciting and also one of the hardest things you will ever encounter. And you'll learn some of the hardest truths along the way.

You start off in your career or small business assuming those also on the same journey will support you. It won't be long until you realize they don't.
You will be faced with barriers, rejection, fakers, bullies and downright devious creatures. They are often disguised as friends, colleagues, CEOs, politicians… it isn't industry-specific.
They are everywhere.
Still want to succeed? Then you must have the attitude that no matter what happens to you, the SHOW GOES ON.

This is YOUR show too. No-one else's. If you are blessed, you may have a handful of family and/or close friends that look after you through it all. But when it comes to the crunch you need to learn strategies on how to keep the show going.

Here are some strategies to help you get through the hard times:


1. Keep your routine

As hard as it is sometimes, it is best to keep your routine as much as possible. Get up at the same time, workout at the same time. If you don't, you may find yourself in a whirlwind you can't escape. Sticking to your routine will help ground you when crises arise.


2. Exercise & eat well

Keep moving and eat the best you can. Often we want to crawl into bed or start eating comfort foods when going through a tough time. Don't. Set yourself one day to let loose and then get back to eating well and moving the next day. Strong body = strong mind.


3. Schedule in 'do nothing' time

When we go through trials or we have experienced a shock in business (and life) sometimes we need to remove ourselves from everything and everyone. So schedule in some alone time where you can do nothing 'guilt-free'. But make sure you are using that time to relax, and not 'churning' thoughts about the issues.


4. Take a new risk

When at your lowest, it is the best time to take a risk. You have nothing more to lose. This is the time when you are forced to make those tough decisions you have avoided up until now. Be wise, but be brave and dive in.


5. Persist and chip away at it

No matter what your goal and no matter who is trying to destroy it, don't give up. Keep moving forward (in silence when needed) and when you come out on top you will surprise even your most avid hater.


6. Stay diplomatic

This is so important. Regardless of how people have treated you or what you are going through right this second, don't breathe a bad word to anyone about it. Stay diplomatic. It is better to be the one who is silent while others are looking like fools trying to put you down.


7. Ice people out

This is how you deal with anyone you decide should no longer be a part of your journey. Don't tell them. Just start removing them from your life. Some need to be blocked immediately as they are toxic and others can be gradual. You also don't need to give an explanation. This is your life and you can do what you want.


8. Buy yourself something new

This will turn any mood around. Buy yourself something that you know will make you happy and something that will add value to your brand and where you are headed. See it as a motivation gift to yourself.


9. Take yourself away for a night or two (pamper yourself)

go away for a weekend. This is great for the soul and also allows you to unwind enough to come up with great ideas about how you are going to tackle your situation. Use the time to tap into freeform 'open sky' thinking about your career and business.


10. Remind yourself of the big picture

No matter what you have been put through or going through, never forget the big picture. You are just passing through this level and onto the next.

This article was originally published on  The Business Woman Media

Wednesday 25 May 2016

ENCOURAGEMENT....8


We all need a bit of encouragement and inspiration sometimes.  In my therapy practice, some of the most common problems I see are clients being hard on themselves, getting caught up in negative thought cycles, not speaking up for themselves, avoiding doing the healthy things, or being scared to feel.  It is important to learn to be a good coach and a good parent to yourself.  If you never had a good parent who understood and encouraged you, you may not know where to start.  Here are some encouraging words you can use.  Pick your favorite ones and pin them on an inspiration board, put stickies on your fridge, or make a flashcard to carry with you so you can use it in times of stress.

  1. You're doing the best you can
  2. Life isn't always fair
  3. Just get started
  4. It's OK to take a break
  5. We don't always get what we want
  6. This too will pass
  7. Today is a new day
  8. It's a bad day, not a bad life
  9. Other people have their issues too
  10. Stick to your healthy routine
  11. Keep your eyes on the goal
  12. You can't control what you think, but you can control what you do
  13. Be kind 
  14. Allow yourself to feel others' opinions even if they are wrong
  15. Express your dissatisfaction constructively
  16. You can't control what other people say or do
  17. Be authentic
  18.  It's OK to set boundaries and stick to them
  19. You don't have to please everybody
  20. Don't listen to your judging mind
  21. Avoidance makes things worse
  22. It takes courage to face your own weaknesses
  23. Treat yourself with compassion
  24. Surround yourself with healthy people
  25. You can get through this
  26. You don't have to be perfect, you just have to try your best
  27. You can learn and grow from your mistakes
  28. Learn from the past, but don't get stuck in it
  29. If your old ways aren't working, try something new
  30. Some things are worth being uncomfortable for
  31. You don't have to tolerate abusive behavior
  32. Don't let anyone or anything control you
  33. Find your own voice
  34. It's OK to feel
  35. Vulnerability can be strength
  36. Take care of your inner child
  37. Tell your inner critic to get lost
  38. Look for love in healthy ways
  39. Stay grounded
  40. Don't compare your insides to someone else's outsides
  41. You can learn to keep yourself safe
  42. Let your values guide you
  43. Ask for support when you need it
  44. Walk your own path but make room for others
  45. Follow your passions. 
  46. Get up again when you fall
  47. Don't judge anybody without understanding their circumstances
  48. Everybody messes up sometimes
  49. Learn to forgive yourself
  50. Respect yourself and others

MIDWEEK INSPIRATION

Slow Failure and Fast Failure - Slow Success and Fast Success


Everything that you do, personally or professionally, will fall into one of four buckets: Slow Success, Fast Success, Slow Failure, or Fast Failure.  (Spoiler alert: if you do nothing else, avoid Slow Failure as much as possible).



Fast Success
There are no shortcuts to any place worth going." - Beverly Sills
You do not and cannot plan for Fast Success. If you do, you will not achieve it. It's foolish to assume it will happen because 99.99 percent of the time, it doesn't (and won't). On the exceedingly rare occasion it does, you're an outlier, a lottery winner, you were struck by lightning and this post isn't meant for you (congratulations!). Think Instagram, which Facebook snapped up for a cool $1B a mere 19 months after it started and YouTube, which saw its first video go up in April of 2005 and then - 19 months later - pulled in $1.65B in its sale to Google.  

Fast Failure
"Failure should be our teacher, not our undertaker. Failure is delay, not defeat. It is a temporary detour, not a dead end. Failure is something we can avoid only by saying nothing, doing nothing, and being nothing." - Denis Waitley
Anything substantive and worth having professionally typically comes after lots and lots of failures, both large and small. Fast failure is a perfectly reasonable and normal outcome of effort. Call it the growing pains of professional success, where the real learning takes place. In fact, you could take it one step further and look at fast failure as success. Failing quickly - whether it's a relationship, an experiment, a role, a company or a product idea - is ultimately a blessing. You're killing it at understanding what will not work - and consequently, you'll be more attuned to what success really looks like.

Slow Success
"Perseverance is the hard work you do after you get tired of doing the hard work you already did." - Newt Gingrich
Almost anything worth doing is in this category.  You work hard over an extended period of time and make steady progress against whatever the particular goal is that you are trying to achieve. Each day you're slightly better than the last and the sum of your incremental gains becomes something great, something you can call a success. Like the tortoise in the fable, slow and steady will win out: the general trend will be measured, consistent, and up and to the right.
Uber and Facebook are classic examples of slow success, though they're often mistaken as meteoric in their respective rises. Yes, in the world of multi-billion dollar companies, both achieved incredibly high value relatively early on. But it wasn't overnight and both had years of fast failures to find the right fit before becoming the large and successful companies they are today.

Slow Failure
"Stagnation is a slow death." - Ellen Hopkins
Slow failure happens when we're scared to face the truth because doing so will force us to make a move. If you've been complaining about your boss or job for years, nothing's going to change. If you've been waiting for that friend in your life to finally start treating you with the respect you deserve, it's unlikely to happen. Time is your most precious commodity. Cut your losses now. Don't get caught in the trap of slow failure.
You'll find one of two things will happen. You'll either make a change (pivot, build a new product, hire a new person) and the anticipated outcome will change. Or you'll call it a day and take another path that will likely lead to slow success.
Ultimately, fail fast and succeed slow but be brave enough to reject slow failure at all costs. This is really, at its core, about your life - the only one you have - and it's damn short. Take heart, take courage and inspiration from those whose paths you admire - and don't be deterred by fast failure. Learn, adjust and win.

Sunday 22 May 2016

SMILE.....309

‘என்னங்க’ - வார்த்தை இல்லை எமோஷன்!


டைனோசர்கள் உயிரோடு இருந்ததாகச் சொல்லப்பட்ட காலத்தில் நம்ம மாதர் குலத்தோர் தங்களோட கணவர்களை ‘என்னங்க’னுதான் கூப்பிடுவாங்களாம். என்னங்கனா என்னன்னு மட்டும் அர்த்தம் கிடையாது. அதுக்குப் பல அர்த்தங்கள் இருக்கு.

 பாத்ரூம்லேர்ந்து என்னங்கன்னு கூப்பிட்டா பல்லி, கரப்பான்பூச்சி ஓட்டணும்னு அர்த்தம்.

 ஜவுளிக்கடையில கூப்பிட்டா புடவை காஸ்ட்லியா இருக்கு. ஏ.டி.எம் போய்ட்டு வாங்கனு அர்த்தம்.

 கிச்சன்லேர்ந்து என்னங்கனு சத்தமா கூப்பிட்டா சோறு ரெடி ஆகிடுச்சு. ஆறிப் போறதுக்குள்ள வந்து கொட்டிக்கோன்னு அர்த்தம். அதே மெதுவா கூப்பிட்டா உளுத்தம்பருப்பு தீர்ந்து போச்சு. போயி வாங்கிட்டு வாங்கனு அர்த்தம்.

 வீட்டு வாசல்ல ஃப்ரெண்ட்ஸ்கூட பேசிக்கிட்டு இருக்கும்போது என்னங்கனு கூப்பிட்டா, ‘உங்களுக்கெல்லாம் வேற வேலையே இல்லையாடா’னு உங்க நட்பு வட்டாரத்துக்கு அர்ச்சனை நடக்குதுனு அர்த்தம்.

 பீரோ கண்ணாடி முன்னாடி நின்னுக்கிட்டு என்னங்கனு கூப்பிட்டா ‘உன்னாலதான் புடவையே அழகா இருக்குடி செல்லம்’னு நீங்க பிட்டு போடணும்னு அர்த்தம்.

 விசேஷ வீட்டுல என்னங்கனு கூப்பிட்டா ‘என் சொந்தக்காரங்க வந்துருக்காங்க. வந்து பார்த்துட்டு உன் மானத்தைக் காப்பாத்திக்கோ’னு அர்த்தம்.
 நைட்டு சாப்பாட்டுக்கு அப்புறம் என்னங்கனு கூப்பிட்டா ‘அந்த மொக்க கிரிக்கெட் மேட்சை மூடி வெச்சுட்டு வந்து பாத்திரம் கழுவ ஹெல்ப் பண்ணு’னு அர்த்தம்.

 காலையில காப்பி கொடுக்கும்போது என்னங்கனு பாசமா கூப்பிட்டா, பையனுக்கு ஸ்கூல்ல பேரன்ட்ஸ் மீட்டிங். அங்கே போயிட்டு ஆபீஸ் போங்கனு அர்த்தம்.

 நீங்க வெளியில எங்கேயாவது வேலைக்குப் போயிருக்கும்போது போன் பண்ணி என்னங்கனு இழுத்தா, வீட்டுக்கு மளிகைக் கடையை இழுத்துட்டு வரணும்னு அர்த்தம்.

 மனைவி வெளியில போயிருக்கும்போது போன் பண்ணி என்னங்கனு இழுத்தா, நீங்க ஒரு அரை மணி நேரத்துக்கு டிரைவர் அவதாரம் எடுக்கணும்னு அர்த்தம்.

 கார், பைக் ஓட்டும்போது என்னங்கனு பாசமா கூப்பிட்டா, பூக்கடை வருதுனு அர்த்தம். அதுவே ரொம்பப் பாசமா கூப்பிட்டா, மனைவியோட சொந்தக்காரங்க வீடு வருதுனு அர்த்தம்!
தா. நந்திதா                                                              நன்றி  -  டைம்பாஸ் விகடன் 

மௌனம்.....12

மவுனமாய் இருத்தல் நன்று

சைதன்யா

                                                                                                                                                  நன்றி  - தி ஹிந்து - தமிழ் 
  


மவுனம் சர்வார்த்த சாதகம் என்று சொல்லப்படுகிறது. பேசாமலிருந்தால் பல காரியங்களும் அனுகூலமாக முடியும் என்று இதற்குப் பொருள். ‘மௌனே ச கலஹோ நாஸ்தி’ என்கிறது சாணக்ய நீதி. மவுனம் இருக்குமிடத்தில் கலகம் விளையாது என்று பொருள்.
மவுனம் என்பது பொதுவாக விரும்பப்படுகிறது. பேசாமல் இருந்தால் பிரச்சினை குறைவாக இருக்கும் என்று பொதுவாக நம்பப்படுகிறது. மனிதர்களுக்கிடையேயான பல பிரச்சினைகளையும் கிளறிவிடுவது, தூபம் போட்டு வளர்ப்பது பேச்சுதான். சாதாரணப் பேச்சுக்கள், பல விதமான பலன்களைத் தரும் உரையாடல்கள், ஆழமான உரையாடல்கள் ஆகியவை நமது அன்றாட வாழ்வுக்கும் அறிவின் விகாசத்துக்கும் உதவும் என்றாலும் மவுனம் பெரிதும் விரும்பப்படுகிறது. இதற்குக் காரணம் என்ன?

அகத்தில் அமைதி

பேச்சு எனபது வெளிமுகமான செயல். உள்முகமாகத் திரும்ப விரும்புபவர்கள் முதலில் பேச்சைக் குறைக்க நினைக்கிறார்கள். இறையாற்றலோடு இரண்டறக் கலக்கும் இலக்கைக் கொண்டவர்கள் அகத்தில் அமைதி காண வேண்டும். கொந்தளிக்கும் கடலில் படகு சீராகச் செல்ல முடியாது. அகத்தில் அமைதி காண்பதற்கான முதல் படி புறத்தில் ஏற்படும் அமைதி.
பேசாமல் இருந்தால் மவுனம் கிட்டிவிடுமா? வாய் பேசாத நிலையிலும் மனம் பேசிக்கொண்டுதான் இருக்கிறது. சொல்லப்போனால் கூடுதலாகப் பேசிக்கொண்டிருக்கிறது.
உண்ணாவிரதம் இருப்பவன் உணவைத் துறந்துவிடுகிறான். உணவு பற்றிய எண்ணத்தைத் துறப்பதில்லை. அந்த எண்ணத்தையும் துறப்பதுதான் உண்ணாவிரதம் என்று கீதையில் ஒரு வரி வரும். மவுனமும் அப்படித்தான். வெளியில் மட்டுமல்ல, உள்ளேயும் அமைதி நிலவும்போதுதான் அது உண்மையான மவுனம். அகத்தில் பக்குவம் கூடி, அதன் விளைவாக மவுனம் கூட வேண்டும். பேச்சை மட்டும் பலவந்தமாக நிறுத்துவது செயற்கையானது. அது உள்ளுக்குள் பல மடங்காகப் பேச்சை வளர்த்துவிடும். பேச்சினால் உள்ளம் குமுறிக்கொண்டிருக்கும்போது வாய் மட்டும் பேசாமல் இருப்பதை மவுனம் என்று சொல்லிவிட முடியாது.

பேச்சு எங்கிருந்து வருகிறது

“யோகம் என்பது சித்தத்தில் எழும் சலனங்களை நிறுத்துதல்” என்று யோக சாஸ்திரம் கூறுவது இதைத்தான். பேச்சு எங்கிருந்து வருகிறது என்பதைக் கவனிக்க வேண்டும். ஏன் வருகிறது என்பதைக் கவனிக்க வேண்டும். பேச்சை அதன் வேர்வரையிலும் போய் ஆராய வேண்டும். பேச்சின் உண்மையான காரணம் என்ன, உண்மையான தேவை அல்லது பலன் என்ன என்பதையெல்லாம் ஆராய்ந்து அறிய வேண்டும். இவற்றையெல்லாம் அறிய அறிய, நமது அகச்சலனங்கள் அடங்கும். அகத்தில் அமைதி கிட்டும். வாய் மொழி தானாகவே மட்டுப்படும்.
மவுன விரதம் இருப்பவர் மனதுக்குள் பேசாதிருத்தல் வேண்டும். நமக்குள் உரையாடாமல், உள்ளே தன்னிச்சையாக நிகழும் சலனங்களை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். கருத்து எதுவும் சொல்லாமல், எதிர்வினை ஆற்றாமல் கவனிக்க வேண்டும். அப்படி கவனித்துக்கொண்டே இருந்தால் ஒரு கட்டத்தில் உள்ளே மலரும் மவுனத்தை உணரலாம். இதுவும் ஒருவகை தியானம்தான்.

Friday 20 May 2016

’2026’ கதை

உப்பு...புளி... மிளகாய் கொண்டு வந்தா உனக்கும் எனக்கும் கல்யாணம் - இது ’2026’ கதை பாஸ்!                   

     நன்றி - விகடன்

ல்யாணத்துக்கு வரதட்சணைக் கொடுத்து பொண்ணுங்க வந்ததெல்லாம் ஒரு காலம்...இப்போவெல்லாம் பசங்கதான் வரதட்சணை கொடுக்கிற மாதிரியான நிலைமை. ஆனாலும், பல வீடுகளில் இன்னும் ’என் பொண்ணுக்கு, நான் குடுக்கறேன்’னு அண்டா, குண்டாவில் இருந்து அடகு வைக்க நகை வரை கொடுத்துதான் அனுப்பறாங்க.
ஆனால்  வரப்போற வருங்காலத்தில்,ரொம்ப வேண்டாம்...ஜஸ்ட் ஒரு 10 வருஷம் ஃபாஸ்ட்டா போய் 2026 ல் என்னவெல்லாம் வரதட்சணையா கேட்பாங்க அல்லது கொடுப்பாங்கன்னு ஓர் முன்னெச்சரிக்கைதான் இவை...
 
1. ஆக்சிஜன் சிலிண்டர்
 
போற போக்கைப் பார்த்தா காத்தே இல்லாத உலகத்தில்தான் நாம வாழ வேண்டி இருக்கும். அதனால, பையனோ, பொண்ணோ யாரா இருந்தாலும் ஒரு வருஷத்துக்கு தேவையான ஆக்சிஜன் சிலிண்டரோட வரவங்களுக்குத்தான் கல்யாணம் கன்பார்ம். 
 
2. பாஸ்வேர்ட் 
 
ஊரு, உலகமே இன்னைக்கு நிலைமைல பாஸ்வேர்டுகளால்தான் சூழப்பட்டுள்ளது. அதனால, வீடு தொறக்க பாஸ்வேர்ட், வெளில போக பாஸ்வேர்ட், கிச்சனுக்கு பாஸ்வேர்ட் அப்டினு எல்லாத்துக்கும் பாஸ்வேர்ட் கேட்கற நிலைமை வரலாம். இதனால, எண்களோ, எழுத்துக்களோ காம்பினேஷனில் மிச்சம் இல்லாம போகலாம். சோ, அவங்களுக்குனு ஒரு யூனிக் பாஸ்வேர்ட் கொண்டு வரவங்களுக்குத்தான் பொண்ணோ, பையனோ குடுப்போம்னு பெத்தவங்க டிமாண்ட் பண்ணலாம். 
 
3. ரோபோ 
 
சீனா மேட், ஜப்பான் மேட்னு வீட்டு வேலைல இருந்து, தூங்கப்போறப்போ தாலாட்டு பாடறது வரை செய்யுற ரோபோக்கள் கொண்டு வர மணமகன், மணமகள்தான் பர்ஸ்ட் சாய்ஸா இருப்பாங்க.
 
4. உப்பு..புளி..மொளகா
 
விவசாயத்தையே வேரோடு அழிக்கற காலம்  இப்போ நடந்துக்கிட்டு இருக்கு. அதனால, உயிர் வாழ, சமைச்சு சாப்பிடத் தேவையான அரிசி, பருப்பு, உப்பு, புளி, காய்கறி இதெல்லாம் யாருக்கு சொந்தமா விளையுதோ அவங்களை கல்யாணம் பண்ணிக்க உலக கோடீஸ்வரங்களே போட்டிப் போடலாம்; சொல்றதுக்கில்லை. 
 
 
5. தண்ணீர்
 
2016 ம் வருஷத்திலேயே ஒரு தண்ணீர் கேனை 30 ரூபாய் கொடுத்து வாங்கறோம். இன்னும் பத்து வருஷத்தில் தண்ணீரே இருக்குமா என்பதும் சந்தேகம்தான். அதனால், அப்போ சொந்தமா குடிதண்ணீர் குளம் யார் வச்சுருக்காங்களோ அவங்களுக்கு மட்டும்தான் டும்..டும்..டும்.
 
6. கடைசியா ஒரு சீரியஸ் பாய்ன்ட்
 
இன்னைக்கு பெண்களுக்கு நடக்கற பாலியல் வன்முறைகளால் அடுத்த நூற்றாண்டில் 10க்கு ஒரு பொண்ணு இருந்தாலே அதிகம். அதனால இதையெல்லாம் வரதட்சணையாக் கொடுக்கற நிலை பசங்களுக்கும் வரலாம்...பீ கேர் புல் பாய்ஸ்!

 -பா.விஜயலட்சுமி

     நன்றி - விகடன் 

Wednesday 18 May 2016

பெண்கள் - 11

பெண்களின் வெற்றி பயணத்துக்கு 11 பாதைகள்!

நாம் எவ்வளவுதான் வருந்தினாலும், வாதிட்டாலும், இந்த ஆண்மயமான உலகில்தான் நம் இருப்பு நிகழவேண்டும். முன்னைவிட இன்று அந்த உலகத்தில் நமக்கான எல்லைகள் விரிவுபட்டிருக்கின்றன என்றாலும், நம் வழிகளை இன்னும் சுமூகமாகவும் சிறப்பாகவும் கடந்துபோவதற்கான 10 மந்திரங்கள் இங்கே...

1.  ஆண்களின் உலகை வெல்ல, முதலில் பெண்களுக்குள் ஒற்றுமை வேண்டும். வளைகரங்கள் இணைந்து நிகழ்த்துங்கள் எந்த மாற்றங்களையும்!

2. பெண் என்பதற்காக சிறப்புச் சலுகைகள் கேட்காதீர்கள். ஆண்கள் அனுபவிக்கும் அதிக சுதந்திரம் பற்றிப் புகார் எழுப்பினாலும் பலனிருக்கப்போவதில்லை. ஆனாலும், பாலின சமத்துவம் இல்லாத இந்தச் சூழலில் நீங்கள் பெறும் வெற்றியின் மடங்கு இரண்டு என்று, வெற்றிக்குப் பின் உரக்கச் சொல்லலாம்... இப்போது ஓட்டத்தில் முந்துங்கள்!
3. பெண்களுக்காக  வகுத்துவைத்துள்ள அழகு வரையறைகளுக்குள் பொருந்த முயற்சிக்காதீர்கள். அதை விரும்பவும் செய்யாதீர்கள். உண்மையான, நீடித்த அழகு என்பது, உங்கள் தைரியமும் தன்னம்பிக்கையுமே!

4. பொருளாதாரச் சுதந்திரம்தான், ஆண்களைச் சார்ந்திருக்கத் தேவையில்லாத சுதந்திரத்தை உங்களுக்குப் பரிசளிக்கும் என்பதை, இளவயதிலேயே உணர்ந்துவிடுங்கள். நீங்கள் சம்பாதிக்கும் பணத்துக்கு நீங்களே உரிமையாளராக இருங்கள்!

5. சின்னச் சின்ன தற்காப்பு வளையங்கள் அமைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் ஆபத்தில் இருக்கும்  சமயங்களில், உங்கள் ஆண் வேறு ஏதோ ஓர் வேலையில் மும்முரமாக இருப்பார். உங்களுக்கு நீங்கள் மட்டுமே எப்போதும் பாதுகாப்புத் தர முடியும்!

6. வாழ்க்கையின் புதிய முயற்சிகளை, நீங்கள் அறிந்த பெண்கள் இதுவரை எடுத்ததில்லை என்ற காரணத்துக்காகத் தவிர்க்காதீர்கள். அவர்கள் காலம் வேறு,  உங்கள் காலம் வேறு. அவர்கள் திறமை வேறு, உங்கள் திறமை வேறு!
7. உங்கள் கவலையால்  எந்தக் காரியம் முடியப்போவதில்லை.  மகிழ்ச்சியாக இருங்கள். அது தரும் புத்துணர்வில் நிதானத்துடன் பணியை முடிக்கலாம்!

8. எடுத்துக்கொண்ட சபதத்தில் இருந்து பின்வாங்காதீர்கள். சண்டைபோட வேண்டுமென்றால், தயங்காமல் சண்டைபோடுங்கள். போராட்டத்தின் முடிவு, உங்கள் தகுதியில் உங்களை நிறுத்தியிருக்கும்!

9. பெண்கள் பலரும் தடம் மாறும் ஒரு விஷயம் இது. உங்கள் வேலைகளைப்  பற்றிய விமர்சனங்களை, உங்களைப் பற்றியதாக எடுத்துக்கொள்ளாதீர்கள். தேவைப்படும் திருத்தங்களை எந்தக் காயங்களுமின்றி  செயல்படுத்துங்கள்!

10. கற்றலில் தொடர்ந்திருங்கள். உங்களுக்கான உரிமைகள் பற்றி அறிந்திருங்கள்!

11.  பெண்ணாக இருப்பது தவம், வரம்! உணருங்கள், உங்களை நீங்களே கொண்டாடுங்கள்!
   நன்றி  -  விகடன் 

Tuesday 17 May 2016

MANTRAS....3

சமணம்: பஞ்சமந்திரம் 


ஒவ்வொரு மதத்திலும் மந்திரங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. சமண மதத்திலும் மந்திரங்கள் போற்றப்படுகின்றன.அவற்றில் தலையாயது பஞ்சமந்திரம் ஆகும்.இதனை சமணர்கள் குழந்தைகள் முதல் அனைவரும் அறிந்துள்ளனர்.

நமோ அரிஹந்தாணம்
நமோ ஸித்தாணம்
நமோ ஆஇரியாணம்
நமோ உவஜ்ஜாயாணம்
நமோ லோயே ஸவ்வஸாஹூணம்,

என்பதுதான் அம்மந்திரம்

இதனை ணமோகார மந்திரம்,பஞ்சமந்திரம்,மூல மந்திரம்,அனாதி மந்திரம்,நமஸ்கார மந்திரம் என்றெல்லாம் அழைப்பர். பிராகிருத மொழியில் உள்ள இது யாரால் எப்பொழுது ஆக்கப்பட்டது என்றுத் தெரியவில்லை.”ஷட்கண்டாகமம்” எனும் நூல்தான் முதன்முதலில் வரிவடிவம் பெற்றதாகும்.அதில் இந்த பஞ்ச மந்திரம் கடவுள் வாழ்த்தாக அமைந்துள்ளது

அருகதையோருக்கு வணக்கம்,சித்தர்களுக்கு வணக்கம், ஆசாரியர்களுக்கு வணக்கம்,ஆசிரியர்களுக்கு வணக்கம்,உலக சாதுக்களுக்கு வணக்கம் என்பதுதான் இம்மந்திரத்தின் பொருளாகும்.

இதில் எந்தவொரு மதக்கடவுளின் பெயரும் குறிப்பிடவில்லை.பொதுவாகவே உள்ளது.இதன் சிறப்பு பற்றி சீவக சிந்தாமணி நூலில் கூறப்பட்டு உள்ளது.

Tuesday 3 May 2016

சித்தர்கள்

சித்தர்கள் கண்டறிந்த வியக்கவைக்கும் மருத்துவ - விஞ்ஞான நுட்பங்கள்!


சித்தர்கள் ஆழ்ந்த ஞானம்கொண்டவர்கள். அவர்கள் நடக்கப்போகும் நிகழ்ச்சிகளைக் கண்டறிந்தவர்கள். மக்களுக்கு வரக்கூடிய வியாதிகளை அனுபவபூர்வமாகத் தெரிந்துகொண்டவர்கள். ஆகையால், அவர்களுடைய மருந்து முறை, நமது நாட்டு வானிலைக்கும் மக்கள் பண்புக்கும் ஏற்ற முறையில் அமைந்திருந்தது. தவிர மற்ற முறைகளில் இல்லாத சில தனிச் சிறப்புகளும், சித்தர்கள் கண்ட அனுபவ மருத்துவ முறைகளில் காணப்பட்டன.

இயற்கையில் நாம் காணும் நிலைகளை அவர்கள் நமது உடலிலும் உணர்ந்தார்கள். "வெளியே உலாவும் காற்று நமது உடலிலும் உலாவுகிறது. வெளியே காணும் வெப்பம் நமது உடலையும் பாதிக்கக் கூடியது. வெளியே உணரும் குளிர்ச்சி, நமது உடலிலும் கபமாகத் தோன்றக் கூடியது" என்று தத்துவங்களை எழுதி வைத்திருக்கிறார்கள்.

அவர்களுடைய முறைப்படி மனித உடல் 96 தத்துவங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அதில், ஆன்மாவின் ஆட்சியில் 24 சக்திகள் இருந்ததையும் அவர்கள் உணர்ந்திருந்தார்கள். நமது உடலை 72,000 ரத்தக் குழாய்களும், 13,000 நரம்புகளும், 10 முக்கிய தமனிகளும், 10 வாயு அமைப்புகளும் கொண்டதாக அவர்கள் சொன்னார்கள். இந்த அடிப்படையில் 96 வகைத் துடிப்புகளை உணர்ந்து, நாடி மூலம் வைத்தியம் செய்யும் வகையையும் குறிப்பிட்டிருந்தார்கள்.

சமயத்துக்கு மிகச் சிறந்த தொண்டு செய்த ஞானிகளாகிய சித்தர்கள், மனித உடலின் நலனுக்காக மிக உன்னதமான மருத்துவ முறையையும் எழுதிவைத்தார்கள். அகத்தியர், திருமூலர், சட்டநாதர், இடைக்காடர், மச்சமுனி, புலிப்பாணி, கொங்கணர் போன்ற சித்தர்கள் இவ்வாறு வகுத்துக் கொடுத்துள்ள மருத்துவ சாத்திரம் மிக அருமையானது. இன்று நாம் உபயோகிக்கும் பல்வேறு இயந்திரங்கள், கருவிகள் ஆகியவற்றின் துணை ஏதுமின்றி, அவர்கள் கண்ட மருத்துவ அடையாளங்களும், வியாதிக்கான நிவர்த்திகளும் ஆச்சர்யமானவை. தேகத்தின் சூடு, உடலின் நிறம், நாக்கின் நிறம், குரல், கண்களின் பார்வை, மலஜலம் ஆகியவற்றின் தன்மை இவற்றை நாடித் துடிப்புடன் ஒப்பிட்டு,   உன்னதமான சிகிச்சை முறைகளைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

நாடியை உணரும் முறை
நாடியை உணருவதற்குச் சுட்டுவிரல், கட்டைவிரல், மோதிர விரல் ஆகிய மூன்றும் பயன்பட்டன. வாயு, பித்தம், சளி ஆகியவை இதன் மூலம் கணிக்கப்பட்டன. கைரேகை பார்ப்பதைப் போலப் பெண்களுக்கு இடது கையும், ஆண்களுக்கு வலது கையும் ஆய்ந்து அறியப்பட்டன. பூதநாடி, குருநாடி, ஆகியவைகளே நுட்பமாகக் கண்டறிய உதவின.  மூளைக்கோளாறு, மனோவியாதி போன்றவற்றைக் கண்டறிய பூதநாடி பயன்பட்டது. சிக்கலானப் பிற வியாதிகளைக் கண்டுபிடிக்க குருநாடி பயன்படுத்தப்பட்டது. இவற்றை உபயோகிக்கத் தன்னலம் இல்லாத பண்பும், குருவின் அருளும், ஆன்மஞானமும், குருவிடம் நீண்டகாலம் சிகிச்சை முறைகளைப் பயிலும் அனுபவமும் தேவை என்பது குறிப்பிடப்பட்டது. உடலைப் பற்றியதானாலும் உள்ளத்தின் மேன்மையைச் சித்தர்கள் பெரிதும் வலியுறுத்தினார்கள் என்ற அபூர்வப் பண்புக்கு இதுவே சான்றாகும்.

சித்த மருத்துவத்தில் ஜோதிடத்தின் பங்கு
 வேத நூல்களின் முக்கியமான அங்கமாகிய ஜோதிடக் கலை,  மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்பட்டது. வெவ்வேறு கிரக நிலைகளில், வெவ்வேறு லக்கினங்களுக்கு உரியவர்களுக்கு, உடம்பின் இன்னென்ன பகுதிகள் பாதிக்கப்படும் என்ற தத்துவத்தை அவர்கள் கணக்கிட்டு, அந்த அடிப்படையில் வைத்தியம் செய்ய உலோகங்களையும், ரத்தினக்கற்களையும் பக்குவம் செய்து உபயோகித்தார்கள். ஒரு மனிதனின் ஆயுட்காலத்தை 100 ஆண்டுகள் என்றும், அவற்றில் 30 ஆண்டுகள் வாயு, 33 ஆண்டுகள் பித்தம், 37 ஆண்டுகள் கபம் என்று பிரிக்கப்பட வேண்டியவை என்றும் அவர்கள் கணக்கிட்டார்கள். இதேபோல, ஒரு நாளின் பகுதிகளும் மூன்றாகப் பிரிக்கப்பட்டன. இப்படி அவர்களுடைய வைத்திய முறை இயற்கையின் சக்திகளை ஒட்டியதாகவே அமைந்திருந்தது.
 மனித உடலில் 4448 வியாதிகள் வரக்கூடும் என்று சித்தர்கள் கூறுகிறார்கள். நுட்பமான எல்லா வியாதிகளுமே இந்தக் கணக்கில் வந்துவிடுகின்றன. வெவ்வேறு விதமான 32 களிம்புகளைத் தடவுவதன் மூலமும், 26 உள்ளுக்குச் சாப்பிடக் கூடிய மருந்து வகைகளின் மூலமாகவும் அவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டது. மிக அபூர்வமாகவே அறுவை சிகிச்சை முறை கையாளப்பட்டது. சித்தர்களின் வைத்திய முறையில் மூன்று அங்கங்கள் உண்டு. முனிவர்கள் உணர்ந்து அளித்த யோகம், பிராணாயாமம் போன்றவற்றின் மூலம் மூலிகைகளைப் பயன்படுத்திக் கட்டுப்பாடாக வாழ்வது, ஆரம்ப நிலையிலேயே உடற்குறைகளைக் கண்டறிந்து அவற்றை அறவே நீக்கும் முறைகளைப் பின்பற்றுவது, கொடிய வியாதிகளின் கடுமையை இயன்றவரையில் குறைப்பது ஆகிய மூன்றுமே அந்த முக்கியமான அம்சங்களாகும்.
சித்த மருத்துவ முறையைக் கற்றுணர்பவர்களுக்கு ரசவாதம், பௌதிகஞானம், வான்கணிதம் ஆகியவைகளும் தெரிந்திருக்க வேண்டும். இந்த முறையை பயிலுபவர்களுக்கு மனப்பக்குவமும், தொண்டு செய்யும் மனப்பாங்கும் இருக்க வேண்டும். அவர்கள் தயாரிக்கும் மருந்துகளில் மூன்றில் ஒரு பங்கு உறவினர் - நண்பர்களுக்காகவும், இரண்டாவது பங்கு ஏழை எளியவர்களுக்கு தர்ம வைத்தியம் செய்வதற்காகவும், மூன்றாவது பங்கு வியாபார முறையிலும் பயன்படுத்த வேண்டும். டானிக்குகளை உபயோகிக்குமுன் வைத்தியன், தானே அதைச் சாப்பிட்டு உணர்ந்து, பிறகு நோயாளிகளுக்குக் கொடுக்க வேண்டும். எந்த வியாதியையும் மூன்றே நாட்களில் குணப்படுத்திவிட வேண்டும்.
சித்த வைத்திய முறைகள் இயற்கையை ஒட்டியவை. உடலின் 4448 வியாதிகளுக்கு அவர்கள் 4448 வித மூலிகைகளைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். மூலிகைச் சத்து, உலோகங்களிலிருந்து ஸ்புடம் போட்டுத் தயார் செய்த பஸ்மங்கள், செந்தூரங்கள் ஆகியவை பயன்படுத்தப்பட்டன. மருந்துகளை உபயோகிக்கும்போதே, அவை உடலைப் பாதுகாத்து வளப்படுத்தும் டானிக்குகளாகவும் பயன்பட்டன. இன்று குணப்படுத்த முடியாத புற்றுநோய் போன்ற நோய்களுக்கும் சித்த வைத்திய முறையில் சிகிச்சை செய்யலாம் என்றூ சித்தர்கள் கண்டறிந்தார்கள். தேனை மட்டும் கொம்புத்தேன், புற்றுத்தேன், மாப்பொந்துத்தேன், வீட்டுத்தேன், பழையதேன், புதியதேன் என்று 60 வகைகளாக அவர்கள் பிரித்து உபயோகப்படுத்தினார்கள். மருந்துகளுடன் பழைய தேனை உபயோகிக்கக் கூடாது என்ற கட்டுப்பாடும் இருந்தது. பூஜைக்கு உரிய வில்வம், துளசி போன்றவைகளும் சித்தர்களின் மருத்துவ முறையில் பயன்படுத்தப்பட்டன. அதற்கென்றும் சில விதிமுறைகளை அவர்கள் வகுத்திருந்தனர்.

சித்த மருத்துவத்தில் மூலிகைகளின் பங்கு
பூஜைக்குப் பயன்படும் மகாவில்வ தளம், துளசிதளம் போன்றவை சிகிச்சைக்கும் மருந்தாகப் பயன்படுத்தப்பட்டன. மூலிகைகள் வளரும் மண், அவை பறிக்கப்படும் நேரம், பறிக்கும் முறை எல்லாவற்றுக்குமே விதிகள் இருந்தன. காற்றில் ஏற்படும் அசுத்தங்களை ஹோமங்கள் செய்வதன் மூலம் நீக்கலாம் என்று நம் முன்னோர்கள் கண்டறிந்திருந்தார்கள். நாயுருவி (பாதரசம்), எருக்கு ( சூரியன் ), பலாசம் ( சந்திரன் ), வன்னி ( சனி ), அருகம்புல் ( குரு - ராகு ), தர்ப்பை ( கேது ) போன்ற ஹோமத்துக்கு உரிய பொருட்கள், சிக்கலான மருத்துவ முறைகளுக்கும், உரியவை என்பது அவர்கள் கண்டறிந்த தத்துவம் ஆகும்.
உலோகங்கள், ரத்தினங்கள், மிருகங்களின் கொம்புகள் போன்ற இயற்கையான பொருட்களைக்கொண்டு பக்குவம் செய்து பஸ்மங்கள் தயார் செய்யப்பட்டன. நெருப்பில் உருக்குவது, புடம் வைப்பது, காய்ச்சுவது, வடித்தெடுப்பது ஆகிய முறைகளால் இவைகள்  தயார் செய்ய பயன்பட்டன. பலவகையான நச்சுப் பொருட்களும் மருந்து செய்ய பயன்பட்டன. இந்த அபூர்வ சிகிச்சை முறைகளை அரேபியா, சைனா, துருக்கி, எகிப்து போன்ற வெளிநாடுகள் பலவற்றுக்கும் சித்தர்களும் போகர்களும் பரப்பி இருக்கிறார்கள்.
பூஜைக்கு உரிய பசுவின் சாணம் புடம் போடவும் பயன்படுத்தப்பட்டது. பூஜை செய்யப்பட்ட பசுவின் சாணம், இளங்கன்றுக்குப் பால் கொடுக்கும் பசுவின் சாணம், சிவன் கோயிலில் வளர்க்கப்படும் பசுவின் சாணம் என்று இவை தரம் பிரிக்கப்பட்டன. இவற்றிலிருந்து சாஸ்திரீயமான முறையில் வறட்டிகள் தட்டப்பட்டு, பக்குவத்துக்கு எரிபொருளாகப் பயன்படுத்தப்பட்டன.
ரசவாதம் பணம் சம்பாதிக்கும் முறையாகப் பயன்படுத்தப்படவில்லை. உடலின் உறுப்புகளைப் புதுப்பிக்கவும், நீண்ட ஆயுளைக் கொடுக்கவும், மூப்பை நீக்கி மீண்டும் இளமையைத் தரவும் பயன்பட்டன. காயகல்பம் என்ற மருத்துவமுறை இவ்விதம் இளமையை மீட்டுத் தரவல்லது. இரும்பு போன்ற உலோகம் தங்கம் போன்ற உலோகமாக மேன்மையுறச் செய்யும் பக்குவத்தைக் கண்டறிந்து, அவர்கள் மனிதப் பண்புகளையும், மேம்படச் செய்தார்கள். அற்புதங்களை நிகழ்த்தும் மந்திர முறைகள், விஷங்களைப் போக்கவும் பயன்பட்டன.
மனித உடலில் பஞ்சபூதங்களின் விகிதாசாரம்
இயற்கையில் உள்ள பஞ்சபூதங்களான ஆகாயம், நெருப்பு, காற்று, நீர், மண் ஆகியவை நமது உடலிலும் இருக்கின்றன. ஆகாயம் உடலில் மறைபொருளாக அரைப்பங்கு இருக்கிறது. நெருப்பு, காற்று, நீர், மண் ஆகியவை ஒவ்வொன்றும் அரைக்கால் பங்கு இருக்கின்றன. இந்த ஐந்து இயற்கைப் பொருட்களும் இந்த விகிதப்படி இருந்து வர வேண்டும். மண் நிறைந்துள்ளவை - கேசம், தோல், சதை, எலும்பு, நரம்பு ஆகியவை. நீர் நிறைந்துள்ளவை - கொழுப்பு, இரத்தம், பித்தம், கழிவுநீர், ஆகியவை. நெருப்பு நிறைந்துள்ளவை - பசி, தாகம், தூக்கம், சோம்பல், மேனி அழகு ஆகிய பண்புகள். வாயு நிறைந்துள்ளவை - அசைவு, சுருக்கம், விரிவு ஆகிய தன்மைகள். ஆகாயம் நிறைந்துள்ளவை - வயிறு, இருதயம், மூளை ஆகியவற்றிலுள்ள இடைவெளிகள். இவற்றை சித்தர்களின் சாஸ்திரப்படி கண்டறிந்த முனிவர்கள், மருந்துகள் ஏதுமில்லாமலே வியாதி இன்றி வாழ முடிந்தது. உணவு உட்கொள்ளாமலே பசியும் தாகமும் இன்றி வாழ முடிந்தது. நெருப்பில் நிற்பது, நீர் மேல் நடப்பது, காற்றில் பறப்பது போன்ற அபூர்வச் சித்து வேலைகளையும் நிகழ்த்த முடிந்தது.
உடலின் உறுதியையும், உள்ளத்தின் மேன்மையையும் பாதுகாக்க, இச்சைகளை அடக்க வேண்டும் என மெய்ஞ்ஞானம் கூறுகிறது. இதையே சித்த சாஸ்திரமும் உணர்த்துகிறது. பிராணயாமம், யோகாப்பியாசம் ஆகியவற்றின் மூலம் உடலில் ஏற்படக்கூடிய அசுத்தங்களை நீக்கும் வழிமுறைகளையும் அவர்கள் கண்டறிந்தார்கள். சாவு நேரிடும் வரையில் நரம்பு தளர்ச்சி, நரை, சுருக்கம் விழுதல் ஆகியவை இன்றி வாழும் ரகசியத்தை சித்தர்கள் அறிந்திருந்தார்கள். ஆனால் அப்படிப் பாதுக்காத்த உடலின் ஆரோக்கியத்தை இறைவனை எண்ணித் தியானம் செய்யவும், இறைவன் படைத்த உயிர்களைக் காக்கவுமே பயன்படுத்தினார்கள். உடலையும், உள்ளத்தையும் காக்க உணவுக் கட்டுப்பாடுகள், விரதங்கள் ஆகியவற்றைக் கடைப்பிடித்தார்கள். ஆலயங்களை ஒட்டியும், மூலிகைகள் நிறைந்த காடுகளிலுமே, உலக பற்றின்றி உத்தமர்களாக வாழ்ந்தார்கள்.

 இன்றைய மருத்துவத்தில் சித்தர்களின் பங்களிப்பு
இன்றைய மருத்துவ விஞ்ஞானத்தின் அடிப்படையே சித்தர்களின் மருத்துவ முறையில்தான் அமைந்திருக்கிறது. அவர்களுடைய பாடல்களில் தமிழ் மொழியின் வளம் நிறைந்திருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக அவர்கள் இறைவனின் அருளை நம்பி, வேதாந்திகளாகவே வாழ்ந்தார்கள். சித்தர்களின் அபூர்வ மருத்துவ பயன்களைப் பெற விரும்பும் மக்கள், நல்லொழுக்கத்தைக் கடைப்பிடித்து, பக்திமார்க்கத்தை ஒட்டி, தூய பண்புகளுடன் வாழ்ந்தாலே முழுப் பயன்பெற முடியும்.

- எஸ்.கண்ணன்கோபாலன்                                                                                                            நன்றி - விகடன் 

Sunday 1 May 2016

WEEKEND WISDOM

புத்தர் ஒருமுறை ஜப்பானில் உள்ள ஒரு ஆலயத்துக்குப் போயிருந்தார். அங்கு இருந்த புத்த பிக்குகளில் ஒருவரின் மேலாடை கிழிந்திருந்தது. அவர் மேல் பரிதாபப்பட்ட புத்தர், அவருக்கு ஒரு மேலாடையை வாங்கிக் கொடுத்தார். மகிழ்ச்சியோடு வாங்கிக் கொண்டார் அந்த புத்த பிக்கு.
சில மாதங்கள் கழித்து, மீண்டும் புத்தர் அந்த ஆலயத்துக்குச் சென்றிருந்த போது, அந்த புத்த பிக்குவைப் பார்த்து நலம் விசாரித்துவிட்டு, முன்பு அணிந்திருந்த மேலாடையை என்ன செய்தீர்கள்? என்று கேட்டார்.
அதற்கு அந்த புத்த பிக்கு, ‘என் மெத்தைக்கு விரிப்பாக இருக்கிறது’ என்றார்.
முன்பிருந்த மெத்தை விரிப்பு?
‘என் தலையணைக்கு உறையாக இருக்கிறது’
அப்போது முன்பிருந்த தலையணை உறை? 
’என் வாசல் மிதியாக இருக்கிறது’
முன்பிருந்த வாசல் மிதி?
’என் விளக்குக்குத் திரியாக இருக்கிறது’ என்றார்
புத்தர், அந்த புத்த பிக்குவின் பதில்களைக் கேட்டு வியந்து போனார்.
பொருட்களை ரெட்யூஸ் (Reduce) , ரீயூஸ் (Reuse), ரீசைக்கிள் (Recycle) ஆகிய மூன்று வகையிலும் பயன்படுத்திய பிறகே, நாம் அதைக் குப்பையாகக் கருத வேண்டும். இப்படியான வாழ்க்கை முறையை வாழ்வது சரியான வழிமுறை. நம் வாழ்வில் நாம் பயன்படுத்தும் பொருட்கள் எதுவும் குப்பையல்ல. குப்பை என்ற நினைக்கப்படும் ஒரு பொருள், அழகு பொருளாக மாற்றப்பட்டு நம் வீட்டு வரவேற்பறையை அலங்கரிக்கும்.
இன்றைக்கு நமக்கு சவாலாக கருதப்படும் பிளாஸ்டிக் பொருட்களை எப்படி குறைப்பது? மறுசுழற்சி செய்வது? என தெரிந்து கொள்ளலாம்.
நன்றி - விகடன்