Sunday, 19 July 2026

MEMES OF THE DAY ( 19-07-2026 )















 

ஜோக்

 


என்னாங்க...!?

சொல்லு...!?

நைட் டின்னருக்கு என்ன பண்ணனும்...?

தோசை...!?

எத்தனை...?

ஐஞ்சு தோசை...

என்னது...!?

சரி... நாலு...!?

போதுமா...!?

நாலே ஜாஸ்த்தியா... சரி மூணு ஓகே வா...!?

45 வயசுக்கு மேல போய்ட்டா நைட் டின்னர் லைட்டாத்தான் எடுத்துக்கனும்... ஓவரா சாப்ட்டு குத்துதே குடையுதேன்னு கடந்து உருளக்கூடாது...

சரி... கடேசியா ரெண்டு தோசையாவது சுட்டுக்கொடுப்பியா... மாட்டியா...?

என்ன பதில் சொல்லாம மொறைக்கிற... விடு ஒரே ஒரு தோசையாவது கெடைக்குமா...!?

நீங்க சாப்பிட்ற ஒரே ஒரு தோசைக்கு நா அடுப்ப பத்தவச்சி மாவ கலக்கி சுட்டு அதுக்கு சட்னி செஞ்சி வைக்கணுமா...?

இப்ப என்னய என்னத்தான் பண்ண சொல்ற...!?

பொடி நடையா நடந்து போயி ரெண்டு இட்லி சாப்ட்டு வந்துடுங்க... எக்சர்சைக்கு எக்சர்சைசுமாச்சி டின்னருக்கு டின்னருமாச்சி...

அப்ப உனக்கு...!?

சாப்ட்டு வரும் போது பிரியாணி வாங்கிட்டு வந்துடுங்க...

பிரியாணியா... அது ஹெவி புட் உன்ன மட்டும் எதுவும் பண்ணாதா...!?

பண்ணாது... ஏன்னா எனக்கு இன்னும் 45 ஆகல...

ரைட்டு... !

மரணத்திற்கு_முன்_சரணம்

 .

பொதிகைத் தொலைகாட்சியில் வந்த "கண்ணபிரான் கதையமுதம்" நிகழ்ச்சியில் மிகவும் எளிமையான தத்துவம் ஒன்றை விளக்கினார் வேளுக்குடி க்ருஷ்ணன் அவர்கள்.
கீதையில் கண்ணன்
"என்னை நினைத்திரு...
மரண காலத்திலும் என்னை நினைத்திரு..

அப்படி நினைப்பவன் என்னையே வந்தடைகிறான்" என்கிறார்.
மரணத்தின் வாயிலில் நமக்கு பெருமானை நினைக்கும் பாக்கியம் கிட்டுமா என்றே தெரியவில்லை.

மரணம் என்பது எப்படி எங்கு எந்த சூழ்நிலையில் நம்மை வந்தடையும் என்பதே புதிர். அத்தருணத்தில் நாம் சிந்தனையற்று இருக்கலாம். கேளிக்கையில் திளைத்திருக்கலாம். கைகால் விழுந்து கோமாவில் இருக்கலாம். மரணபயத்தில் பீடித்து இருக்கலாம். உற்றார் உறவினரின் நினைவில் நெகிழ்ந்திருக்கலாம். பாசத்தில் கட்டுண்டு இனி இவர்களை எங்கு காண்பேன் என்று கலங்கி இருக்கலாம்.

எத்தனையோ எண்ணற்ற நினைவுகளும் பயங்களும் வந்து போகும் நேரத்தில் இறைவனை நினைக்கும் பக்குவம் சிறந்த பக்தனுக்கே வருவது குறைவு. சாமான்யனுக்கு சொல்லவும் வேண்டுமா? சதா சர்வ காலம், இறைத் தியானத்தில் இல்லாத ஒருவன் இறுதி நேரத்தில் எவ்வாறு நினைக்க முடியும். இப்படி எல்லாம் சந்தேகம் எழுகிறது. போதாத குறைக்கு, இறைவன் இருக்கிறானா இல்லையா என்ற சர்சையில் வாழ்வின் பாதி காலம் கழிந்து விடுகிறது.

நம்மை போன்றவர்களுக்காகவே ராமானுஜர், திருகச்சி நம்பிகளிடம், வரதராஜ பெருமானாக விளங்கும் ஸ்ரீமன்நாராயணனுக்கு கேள்வி அனுப்பினார். திருக்கச்சி நம்பிகளிடம் இறைவன் தினமும் பேசி உபதேசம் அளிப்பார். ராமானுஜர் அனுப்பிய ஆறு கேள்வியில் ஒன்று தான் "மரணத் தருவாயில் இறைவனை நினைப்பது அவசியமா?"

அதற்கு இறைவன்,. "உடல் நன்றாக இருக்கும் பொழுது நினைத்தாலே போதுமானது. என்னைச் சரணம் என்று பற்றியவனை அவனது இறக்கும் தருவாயில், நான் நினைத்து என்னிடம் சேர்த்துக்கொள்வென்" என்றாராம். அதாவது அவனை சரணம் என்று அடைந்துவிட்டால் நமக்காக அவனே நம்மை நினைத்து தன்னிடம் சேர்த்துக்கொள்கிறேன். என்னே கருணை!

"#எய்ப்பு_என்னை_வந்து_நலியும்_போது_அங்கு_ஏதும்_நானுன்னை_நினைக்க_மாட்டேன்
#அப்போதைக்கு_இப்போதே_சொல்லி_வைத்தேன்_அரங்கத்_தரவணைப்_பள்ளி_யானே."
என்றார் பெரியாழ்வார்.

மரணத்தருவாயில் நினைக்க மாட்டேனோ என்னவோ, இப்போதே உன்னிடம் சொல்லிவைத்தேன்.
அப்படியெனில் மானின் மேல் இறுதிநாட்களில் மட்டுமே ஆசை வைத்த ஒரே செயலுக்கு ஏன் இறைவன் ஜடபரதரை மானாய் பிறக்கச் செய்தார்? இதற்குத் தான் வேளுக்குடி அவர்கள் சொன்ன விளக்கம் பெரிதும் நெகிழச்செய்தது.

பரதர் பக்தியோகம் கொண்டு பக்திபூண்டார். தம் முயற்சியினூடே பக்தியில் திளைத்திருந்தார். பக்தியோகத்தைத் தாண்டி எவன் ஒருவன் சரணாகதி என சரணம் கொள்கிறானோ, அதாவது, என்னை இட்டுச் செல்வதும் நீயே, உன்னையே சரணம் அடைந்தேன், என்று முழுவதுமாய் சரண் அடைந்தவனை இறைவன் இறுதிகாலத்திலும் உடல் நலிந்தோ, ஆசை மேலிட்டோ அவன் நினைக்காது போயினும் கூட தாமே நினைத்துச் சேர்த்துக்கொள்கிறார்.!

நாலடியார்



 

அறிவு


 

நாடி, நரம்புகள் சந்திக்கும் புள்ளிகள்


 

HINDU CEREMONIES


 

வீடு


 

மருத்துவ தண்ணீர்


 

உபயோகமான குறிப்புகள்


 

சீரகம்


 

நேரத்தை வீணாக்கும் 9 பேர்


 

கண்களின் மொழி


 

ஒப்பிடாதீர்கள்


 

நிறைவு


 

வெற்றி ஒரு பயணம்


 

கடவுள்


 

THE FIVE APSARAS IN THE HUMAN BODY


 

THE THREE SHAKTIS


 

KUNDALINI


 

THE COMPOUND EFFECT


 

THE SCIENCE OF FOCUS


 

THE FOCUS SYSTEM


 

HOW TO IMPROVE FOCUS INSTANTLY


 

HOW TO STAY FOCUSSED FOR HOURS


 

STRUGGLING TO FOCUS....


 

WHY YOU LOSE FOCUS AFTER 30 MINUTES


 

CONSISTENCY


 

Saturday, 18 July 2026

MEMES OF THE DAY ( 18-07-2026 )








 

கிணறு

 இது கிணறு கதைங்க!

நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை. அவர்கள் எதை செய்தலும் கண்டிப்பாக அதில் ஆயிரம் நன்மைகள் இருக்கும். நமக்கு

நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு.

அந்த காலத்தில் எப்படி எந்த டெக்னாலஜியும் இல்லாம கிணறு வெட்டினாங்க??? . . .

கிணறு அமைப்பது என்பது அத்தனை எளிதான காரியமில்லை . பலர் சேர்ந்து உழைத்து உருவாக்கிட வேண்டிய ஒன்று.

ஒரு வேளை தோண்டிய கிணற்றில் தண்ணீர் வராமல் போய்விட்டால் அத்தனை உழைப்பும் வீணாகி விடும். அதே போல கோடையில் கிணற்றில் நீர் வறண்டு போகும் வாய்ப்பும்உள்ளது . ஆனால் இவற்றிற்கெல்லாம் எளிய இலகுவான தீர்வுகள் இதோ :

மனையின் குறிப்பிட்ட ஏதாவது ஒரு பகுதியில் அதிகளவு பச்சை பசேலென புற்கள் வளர்ந்திருந்தால், அந்த இடத்தில் கிணறு தோண்ட குறைந்த ஆழத்தில் நீரூற்று தோன்றும் என்கின்றனர் .

சரி நீரூற்று இருக்கும.ஆனால் நல்ல நீரூற்று என அறிவது எப்படி ?

நவதானியங்களை அரைத்து கிணறு வெட்ட வேண்டிய நிலத்தில் முதல் நாள் இரவு தூவி விடவேண்டும். அடுத்த நாள் கவனித்தால் எறும்புகள் இவற்றை சேகரித்து ஒரே இடத்தில் கொண்டுசென்று சேர்த்த அடையாளங்கள் , அதாவது தடயங்கள் இருக்குமாம் அந்த இடத்தில் கிணறு வெட்டினால் தூய சிறப்பான நன்னீர் கிடைக்கும் என்கிறார்கள் .

சரி தூய நீரும் கண்டு கொண்டாயிற்று.கோடைகாலத்திலும் வற்றாத நீர் ஊற்று எந்த இடத்தில் இருக்கிறது என்று அறிவது எப்படி ?

கிணறு வெட்ட இருக்கும் நிலப் பகுதியை நான்கு பக்கமும் அடைத்து விட்டு பால் சுரக்கும் பசுக்களை அந்த நிலத்திற்க்குள் மேய விட வேண்டும். பின்னர் அந்த பசுக்களை கவனித்தால் மேய்ந்த பின் குளிர்ச்சியான இடத்தில் படுத்து அசை போடுகின்றனவாம் .அப்படி அவை படுக்கும் இடங்களை நான்கு , ஐந்து நாட்கள் கவனித்தால் அவை ஒரே இடத்தில் தொடர்ந்து படுக்குமாம் . அந்த இடத்தில் தோண்டினால் வற்றாத நீரூற்றுக் கிடைக்குமாம்.

மகாவிஷ்ணு

உலகளந்த பெருமாளான "மகாவிஷ்ணு "உயிர்களுக்கு, தன்னை, ஐந்து நிலைகளில் வெளிப்படுத்துகிறார்! என்பது, வைஷ்ணவசம்பிரதாயம்.

1.பரத்துவ நிலை:—மிகஉயர்ந்த நிலை! இறைவன் ஒருவன்! அவன் உயர்வானவன்! பரம பதத்தில், வடிவோடு எழுந்தருளி இருப்பவன்.

2.வியூக நிலை:—பிரிந்து நிற்றல். தெய்வம், தன்னை நான்கு நிலைகளில் பிரித்து நிிற்றல்! அது "வாசுதேவன்" "சங்கர்ஷணன்" "பிரதியும்னன்" "அனிருத்தன்" என்பதாகும்.

3.விபவ அவதாரம்:— எல்லா பொருட்களிலும், வந்து தோன்றுவது," விபவம்" என்று சொல்லப்படும். தீவினை ஒருபோதும் வாழாது! நிலைக்காது! அது, தன்னைத்தானே அழித்துக் கொள்ளும்! இதற்கு உதவுவதே, "ராமன்"" கிருஷ்ணன்" போன்ற விபவ அவதாரங்கள்ஆகும்.

4.அந்தர் யாமி:—அவரவர் நெஞ்சில் உறைந்து, அவரவரை கரையேற்ற முயல்கிறான்! "பிரகலாதன்" போன்றோருக்கு, அந்தர் யாமியாய் இருக்கிறான்.

5.அர்ச்சாவதாரம்:-கோவில்களிலோ, வீடுகளிலோ, உள்ள விக்கிரகங்களில், வந்து, உறைந்து, எப்போதும் காட்சி தருவது," அச்சாவதாரம்" ஆகும்.

மனித மூளை

 

மனித மூளை பற்றிய சில விசித்திரமான உண்மைகள் என்னென்ன?

என்ன காரணத்திற்காக இப்பதிவைச் சொடுக்கி உள்ளே வந்தீர்கள்?🙂

இந்தப் புகைப்படத்தை பார்த்ததும் உங்களுக்கு என்ன தோன்றுகிறது?

முதலில் இது என்னவாக இருக்கும் என்ற ஐய்யம் எழும்?

இதை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்ப்பரிப்பு உங்களை இங்கே வர வைத்தது.

அதற்கான தூண்டுதலைக் கொடுத்தது உங்கள் மூளை தான். இதுதான் நம்முடைய மூளையின் உண்மையான தன்மை. புதிய/வித்தியாசமான தரவுகளை நோக்கிப் பயணிப்பது.


வாழ்க்கையில் ஏதேனும் சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால், முதலில் உங்கள் மூளையைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். ஏனென்றால் அதுதான் உங்கள் மொத்த உடலின் இயக்கத்திற்கான முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது.

இங்கே அனைவருமே "படித்தால் வாழ்வில் முன்னேறி விடலாம்" என்ற ஒரு குறிப்பிட்ட வரியைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இதைப் படிப்பது என்பதற்கு பதிலாக மூளைக்குத் தேவையான தரவுகளைக் கொடுப்பது என்று தான் கூற வேண்டும்.

ஏனென்றால் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும், அதைப் பற்றிய அடிப்படை அறிவு நமக்கு இருந்தால்தான், அதை நமக்கு எப்படியெல்லாம் பயன்படுத்தி கொள்ளலாம் எனும் அளவுக்கு நம் மூளை சிந்திக்க ஆரம்பிக்கும்.

ஆனால் இந்த விஷயத்தை எத்தனை பேர் சரியாக அறிந்து, நம் மூளையை சரியாகப் பயன்படுத்துகிறோம் என்பது மிகப்பெரிய கேள்விக் குறியே. நாம் அனைவருமே நாம் நினைத்துப் பார்ப்பதைவிட அளப்பரிய ஆற்றலைக் கொண்டிருக்கிறோம்.

நீங்கள் அனைவருமே அந்நியன் திரைப்படம் பார்த்திருப்பீர்கள். அத்திரைப்படத்தில் விக்ரமுக்கு Split personality disorder என்ற பிரச்சினையால் ஒரே உடலுக்குள் அந்நியன், அம்பி, ரெமோ என்ற மூன்று கதாபாத்திரம் வெளிப்படும். மூன்றுமே ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத வகையில் வித்தியாசமாகத் தன்னை வெளிப்படுத்தும்.

இந்த Split personality disorder பற்றி இன்னும் சிறப்பாக Split எனும் ஆங்கிலத் திரைப்படத்தில் கூறி இருப்பார்கள். ஒரே நபர் உடலில் 24 கதாபாத்திரங்கள் வந்து செல்லும். ஒவ்வொரு கதாபாத்திரமும் என்னவாக இருக்கிறதோ, அதற்கு ஏற்றவாறு உடலிலும் மாற்றம் ஏற்படும்.

  • ஒரு பெண்ணின் கதாபாத்திரம் வரும்போது அதற்கான நளினமும்.
  • ஒரு ஆறு வயது சிறுவன் வரும்போது அதற்குண்டான உடல் மொழியும்.
  • பீஸ்ட் என்னும் கதாபாத்திரம் வரும்போது அதற்கேற்றவாறு மூர்க்கமான தன்மையும் வெளிப்படும்.

இது எப்படி சாத்தியம் என்று நீங்கள் நினைக்கலாம். அதற்கான பதிலையும் அத்திரைப்படத்தில் சிறப்பாக கூறியிருப்பார்கள்.

அனைத்திற்கும் நம்முடைய மூளை தான் காரணம். நாம் எதுபோன்ற விஷயங்களை அதில் செலுத்தி வைத்துள்ளோமோ, அதுவாகவே நாம் வாழ்கிறோம்.

நம் மூளைக்கு நாம் எதைப் பயிற்சி அளிக்கிறோமோ அதுவாகவே அது செயல்படுகிறது.

எனவே, நாம் நினைத்தால் நம்மை எந்த நிலைக்கு வேண்டுமானாலும் கொண்டு செல்ல முடியும் என்பதை நாம் உணர்வது மிக மிக அவசியம்.

நம்மால் முடியாதது என்று எதுவுமே இருக்க வாய்ப்பில்லை. நம் வாழ்வில் நாம் செய்யும் அனைத்துமே நாம் தேர்ந்தெடுக்கும் ஒன்றாகவே இருக்கிறது.