Wednesday, 1 July 2026

MEMES OF THE DAY ( 01-07-2026 )







DAUGHTER OF TEA MASTER





 

WELCOME JULY



6 MONTHS OF 2026 OVER

 

Manmadhan - KUDIMIYANMALAI - SILPI


 

எண்ணங்கள்

ஒரு மாதமாக வெளியூர் சென்றிருந்த பெரியவர் ஒருவர் ஊருக்குத் திரும்பினார். அப்போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆசையாக அவர் கட்டிய வீட்டில் தீ பற்றி எரிந்தது. இந்த வீட்டை பலமடங்கு தொகைக்கு பலரும் விலைக்கு கேட்டும் விற்க மறுத்து விட்டார். இப்போது கண் முன்னே வீடு பற்றி எரிய மக்கள் வேடிக்கை பார்த்தனர். அணைக்க முயற்சி செய்தும் பலனில்லை. அத்தனையும் எரிந்துபோனது. சோகத்துடன் நின்ற பெரியவரின் காதில் அவரது மூத்த மகன் கிசுகிசுத்தான். ''வருத்தம் வேண்டாம் அப்பா! வீட்டை அதிக விலைக்கு ஒருவர் கேட்டதால் நேற்றே விற்று விட்டேன். இப்போது வீடு நம்முடையது இல்லை. விற்கும் முன்பு உங்களிடம் கேட்க நேரம் இல்லை. மன்னியுங்க'' என்றான்.

''அப்படா...அப்போ வீடு நம்முடையது இல்லை. தப்பிச்சோம்' என மகிழ்ந்தார். நொடிப்பொழுதில் வேடிக்கை பார்ப்பவர்களில் ஒருவராக மாறினார். அதே வீடு...அதே சம்பவம்! சில நிமிடங்களுக்கு முன்பு வரை வீட்டின் உரிமையாளராக அதைப் பார்த்தார். இப்போது வேடிக்கை பார்ப்பவராக இருக்கிறார். சில நிமிடம் சென்றது. அவரது இரண்டாவது மகன் ஓடி வந்து, ''அப்பா...வேடிக்கை பார்க்கிறீர்களே! இது நம்ம வீடு... தீப்பற்றி எரியுதேப்பா'' எனக் கதறினான்.
''இல்லப்பா...உனக்கு தெரியாதா. உங்க அண்ணன் நேத்தே வித்துட்டான்''
''அப்பா...அட்வான்ஸ் தான் வாங்கிருக்கோம். தீப்பிடித்த வீட்டை எப்படி இனி வாங்கப் போறாங்கன்னு சந்தேகமா இருக்கு''
நொடியில் பெரியவர் முகம் வெளிறியது. பதட்டம் அதிகரித்தது. வேடிக்கை பார்ப்பவராக இருந்தவர் மீண்டும் வீட்டு உரிமையாளரானார். அடுத்து மூன்றாவது மகன் வந்தான். 'வீட்டை வாங்குவதாக அட்வான்ஸ் கொடுத்தவர் ரொம்ப நாணயமானவர். அவரை பார்த்திட்டுத்தான் வரேன். பேசியபடி வாங்கிக்கிறேன். அட்வான்ஸ் போக மீதி தொகையை தர்றேன். தீப்பிடிச்சதுக்கு நீங்க காரணம் இல்லையேன்னும் சொன்னாருப்பா' என்றான். மீண்டும் மகிழ்ந்து வேடிக்கை பார்க்கும் கும்பலில் ஒருவரானார் பெரியவர்.
'இந்த வீடு எனக்கு சொந்தம்; இதன் உரிமையாளர் நான்' என கருதுவதே அத்தனை பிரச்னைக்கும் காரணம். 'தீப்பற்றிய வீடு தனக்கு சொந்தம்' என்னும் போது மனம் வருந்துகிறது. அது இன்னொருவருக்கு சொந்தம் என்னும் போது மனம் பற்றில்லாமல் மகிழ்கிறது. எல்லாவற்றிற்கும் காரணம் எண்ணமே.
எண்ணங்கள் உங்களுக்கு சொந்தமானவை அல்ல. பெற்றோர், ஆசிரியர், நண்பர்கள், நாளிதழ், புத்தகம் வாயிலாக உங்களிடம் வந்து சேர்ந்தவை. சற்று நிதானமாக யோசியுங்கள். சுயமாக ஏற்பட்ட எண்ணம் எதுவும் உங்களிடம் இருக்காது. மற்றவர்கள் திணித்திருக்கலாம். அல்லது நீங்களே உங்களுக்குள் மடத்தனமாக திணித்ததாக இருக்கலாம்.
நல்ல எண்ணத்தை விதைத்தால் நல்ல செயல் அறுவடையாகும்.
நல்ல செயலை விதைத்தால் நல்ல பழக்கம் அறுவடையாகும்.
நல்ல பழக்கத்தை விதைத்தால் நல்ல பண்பு அறுவடையாகும்
நல்ல பண்பை விதைத்தால் தெய்வீகத்தை உணர்வீர்கள்
!

எந்த வயதிலும் மீண்டும் தொடங்குவது....

உங்களுக்குப் பிடித்ததைச் செய்யுங்கள், அப்பா!" வேலையிழந்த தனது 44 வயது தந்தையை ஒரு ஸ்டார்ட்அப் தொடங்க மகள் எப்படித் தூண்டினார்?

ஒரு நிறுவனர் தனது 'பணிநீக்க ஆண்டுவிழாவை' LinkedInல் கொண்டாடி, தனது மகளின் வார்த்தைகள் ஒரு ஸ்டார்ட்அப்பைத் தொடங்க தன்னை எவ்வாறு தூண்டின என்பதைப் பகிர்ந்துகொண்டார்.


ஒரு தொழில்முனைவோர் தனது "வேலையிழப்பு ஆண்டுவிழாவை" மறைப்பதற்குப் பதிலாக வெளிப்படையாகக் கொண்டாட முடிவு செய்ததைத் தொடர்ந்து, அவரது சக்திவாய்ந்த LinkedIn பதிவு ஒன்று வைரலாகியுள்ளது. தனது தொழில் வாழ்க்கையின் மிகவும் கடினமான ஆண்டை நினைவுகூர்ந்த அந்த நிறுவனர், தனது தொழில் வாழ்க்கைப் பாதையை முற்றிலுமாக மாற்றியமைத்த தனது மகளுடனான ஒரு நெகிழ்ச்சியான உரையாடல் உட்பட ,வாழ்க்கைப் பாடங்களை விவரித்துள்ளார். பெருநிறுவன நிராகரிப்பை தொழில்முறை சுதந்திரமாக மாற்றுவதில் அவரது குடும்பத்தின் அசைக்க முடியாத ஆதரவைப் பாராட்டி, சமூக ஊடகங்கள் அந்தப் பதிவை பாராட்டுக்களால் நிரப்பியுள்ளன.


அவர் பதிவிட்டதாவது, “ஓராண்டுக்கு முன்பு, நான் பணிநீக்கம் செய்யப்பட்டேன். அந்த நேரத்தில், அது ஒரு கடினமான அத்தியாயமாக, ஒருவேளை எனது தொழில் வாழ்க்கையின் மிகக் கடினமான தருணங்களில் ஒன்றாகக்கூடத் தோன்றியது. ஆனால் இன்று, நான் திரும்பிப் பார்க்கும்போது, ​​இது என் வாழ்க்கையின்

மிகச் சிறந்த ஓராண்டு என்று என்னால் நேர்மையாகச் சொல்ல முடியும்.”
எந்த வயதிலும் மீண்டும் தொடங்குவது தவறில்லை என்பதை வாழ்க்கை தனக்குக் கற்றுக் கொடுத்ததாக
அவர் தொடர்ந்தார். “வேலையிழப்பு என்பது முடிவல்ல. தொழில் வாழ்க்கையில் ஏற்படும் பின்னடைவு உங்கள் இறுதி அடையாளம் அல்ல. சில நேரங்களில், நீங்கள் வாழ வேண்டிய வாழ்க்கையை இறுதியாகக் கட்டமைப்பதற்காக, "வாழ்க்கை உங்களை வசதியான நிலையிலிருந்து வெளியே தள்ளுகிறது.”

தமிழ் சினிமா



எழுத்தாளர் சுஜாதா தமிழ் பத்திரிகை உலகில் நீங்கா இடம் பிடித்தவர். சுவாரஸ்யமான எழுத்துக்கு சொந்தக்காரர். இவரது சில நாவல்கள் திரைப்படமாக்கப்பட்டன. மேலும், சில திரைப்படங்களில் இவர் வசனகர்த்தாவாகவும் பணிபுரிந்துள்ளார். தமிழ் சினிமாவில் சில ஃபார்முலாக்கள் எப்போதும் கடைபிடிக்கப்படும். காலத்திற்கேற்ப சினிமா ரசிகரின் ரசனை மாறுபடும். ஆனால், தமிழ் சினிமாவில் சில விஷயங்கள் பழைய கருப்பு வெள்ளை திரைப்படங்கள் தொடங்கி, தற்கால டிஜிட்டல் திரைப்படங்கள் வரை தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன.

சினிமா துறையில் இவர் பணியாற்றி இருந்தாலும், தமிழ் சினிமாவின் மாறாத விஷயங்கள் என்று எழுத்தாளர் சுஜாதா நகைச்சுவையாகக் கூறிய 20 சுவாரஸ்யமான நையாண்டி விஷயங்களை இந்தப் பதிவில் காண்போம்.

1.இரட்டை வேடத்தில் எப்போதுமே ஒருவர் கெட்டவர்.

2. பாம் வெடிப்பதைத் தடுக்க ஹீரோ எந்த ஒயரை வேண்டுமானாலும் கட் பண்ணலாம். வெடிக்காது.

3. எத்தனை பேர் ஹீரோவைத் தாக்க வந்தாலும், ஒரு ஒருவராக வந்துதான் உதைபடுவார்கள்.

4. இரவு நேரத்தில் எல்லா விளக்குகளையும் அணைத்த பின்பும் வீடு முழுதும் ஊதா கலரில் தெரியும்.

5. நேர்மையான போலீஸ் அதிகாரியைக் காட்டினால் நிச்சயமாக அவர் கொல்லப்படுவார்.

6. வில்லன் ஹீரோவை நேராக சுட்டோ, கத்தியால் குத்தியோ கொல்ல மாட்டார். ஹீரோ தப்பிக்க முப்பது நிமிடமாவது இருக்கும்படி சுற்றி வளைத்துதான் கொல்ல முயற்சிப்பான்.

7. ஹீரோ வில்லனிடம் செமயாக அடி வாங்கும்போது வலிக்கவே வலிக்காது. ஆனால், ஹீரோயின் பஞ்சு ஒத்தடம் கொடுக்கும்போது மட்டும் ஸ்.... ஸ்… ஆ என்பான்.

ஒரு பெரிய கட்டடத்தின் ஜன்னல் கண்ணாடியைக் காட்டினால் அதை உடைத்துக் கொண்டு யாராவது விழுவார்.

9. ஹீரோவோ ஹீரோயினோ ரோட்டில் நடனமாடத் துவங்கினால் தெருவில் போகும் அனைவரும் அதே தாளத்தில் ஒரே மாதிரி நடனமாடுவார்கள்.

10. போலீஸ் உயர் அதிகாரி நல்லவர் என்றால் கீழே இருக்கும் போலீஸ்காரர்கள் கெட்டவர்களாக இருப்பர். உயர் அதிகாரி கெட்டவர் என்றால் இவர்கள் நல்லவர்கள்

11.உணர்ச்சி வசப்படும் காட்சிகளில் திடீரென மின்னல் வெட்டி மழை வந்தே ஆக வேண்டும்.

12. பாடல் காட்சிகளில் ஒரு வரி மயிலாப்பூரிலும், அடுத்த வரி ஐரோப்பாவிலும், அடுத்த வரி மலேசியாவிலும் பாடப்படும்.

13. ஒரே பாட்டு பாடிக்கொண்டிருக்கையில் உடை மாறும், உடையின் நிறம் மாறும்.

14. சட்டென்று எல்லா மியூசிக்கும் நின்று விட்டால் யாரோ செத்துப் போய்விட்டார்கள் என்று அர்த்தம்.

15. கோர்ட்டில் யார் வேண்டுமானாலும் வழக்கின் எந்தக் கட்டத்திலும் நுழைந்து, உடனே சாட்சி சொல்லலாம். கோர்ட் வாசற்படியில் நின்றுகூட சாட்சி சொல்லலாம்.

முகூர்த்தத்துக்கு நேரமாறது, பொண்ண வரச்சொல்லுங்கோ’ என சாஸ்திரிகள் அவசரப்படுத்தினால், பெண் காணாமல் போய் விட்டாள் என எதிர்பார்க்கலாம்.

17. கல்யாண காட்சியில் தாலியைக் கட்டப்போகும் சமயம், ‘நிறுத்துங்க"’ என்ற குரல் எப்படியும் ஒலித்தே தீரும்.

18. ஹீரோ ஏழை என்றால் பணக்கார பெண்ணையும், பணக்காரன் என்றால் ஏழைப் பெண்ணையுமே காதலிப்பான்.

19. வில்லன் என்றாலே நிச்சயம் ஏதாவது கள்ளக்கடத்தல் செய்வான்.

20. ஹீரோ முதல் பாதி கிராமத்திலிருந்தால் இரண்டாம் பாதி நகரத்திற்கு வருவார்.


ஜோக்

 படம் சொல்லும் பாடம்!

மேடம்! நான் கிளம்புகிறேன்!

நீ யாருன்னே தெரியாது! நீ இருந்தால் என்ன !! போனால் என்ன!

Few seconds later!!

நாலடியார்


 

சுவாமி விவேகானந்தர் சொன்ன...


 

பழமொழி நானூறு


 

பெருசுகள் (senior citizens)


 "பெருசுகள்" என்று அன்போடு அழைக்கப்படும்….… (senior citizens) "சீனியர் சிட்டிசன்களின்" நிம்மதியான வாழ்விற்கு…..

பிள்ளைகள் அனைவரையும் திருமணம் முடித்துக்கொடுத்து பணியிலிருந்து ஓய்வு பெற்ற மூத்த குடிமக்கள், கீழ்க் கண்ட பத்து விஷயங்களைப் பின்பற்றினால், வாழ்வின் கடைசி பக்கங்களை…….. மிகவும் மகிழ்ச்சியாகவும் சுவாரசியமாகவும், இனிமையாகவும் வாழலாம்!!

1- எந்த ஒரு சூழ் நிலையிலும் உங்கள் வாழ்வின் கடைசிக் காலத்தில் உங்கள் பிள்ளைகளுடன் சேர்ந்து வாழ நினைக்காதீர்கள், (உங்கள் சுதந்திரம் அனைத்தும் நிச்சயம் பறி போகும்!!)

2 - உங்கள் பேரக் குழந்தைகள் மேல் உங்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை!! என்பதை ஒருபோதும் மறக்க வேண்டாம்!! குழந்தை வளர்ப்பில் மகனுக்கோ, மகளுக்கோ எவ்வித அறிவுரையும் சொல்லாதீர்கள்!! உங்கள் அறிவுரைகள் மற்றும் அனுபவங்களை அவர்கள் மதிக்க மாட்டார்கள்.(மதிக்கவும் தெரியாது)

3 - விலகியே இருங்கள். உறவுகள் இனிமையாக இருக்கும். என் பிள்ளை என்பிள்ளை என பதறாதீர்கள். சிறகு முளைத்த பறவைகள் அவர்கள்; என்பதை நினைத்து அமைதியாய் இருங்கள்.

4 - பொருள் இல்லார்க்கு இவ்வுலகில்லை - கையில் பணம் இல்லாவிட்டால் உங்கள் பிள்ளைகளால் வீட்டில் வளர்க்கப்படும் நாய்க்கு இருக்கும் மதிப்பும் மரியாதையும் மற்றும் உரிமையும் கூட உங்களுக்கு நிச்சயம் இருக்காது!! சேமிப்பு மற்றும் உங்கள் சுய சம்பாத்திய சொத்துக்களை, உயிருடன் இருக்கும் வரை யாருக்கும் பகிர வேண்டாம்!! முழுவதும் பகிர்ந்தால் நீங்கள் நிற்க வேண்டியது நடுத் தெருவில்தான், என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்!!

5 - காலம் முழுதும் அவர்கள் உயர்வுக்காகப் பாடுபட்டு பல இழப்புகளைச் சந்தித்திருப்பீர்கள். ஒருபோதும் அவற்றைச் சொல்லிக் காட்ட வேண்டாம் உங்கள் கடமையைச் செய்தீர்கள் அவ்வளவே!!

6 - கூட்டுக் குடும்ப வாழ்வு சிதைந்து போன தலைமுறையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை மறவாதீர்கள்!! தேவைப் பட்டால் வருடம் ஒருமுறை சென்று பேரன் பேத்திகளுடன் மகிழ்ச்சியாய் இருந்து விட்டு வாருங்கள். அங்கேயே அதிகம் தங்கி அவமானப்பட வேண்டாம்.

7 - எந்த நேரத்திலும் உங்கள் மருமகள் முன் உங்கள் மனைவியை / கணவனை விட்டுக்கொடுத்துப் பேசாதீர்கள், உங்கள் இருவரில் ஒருவரை யார் குறைத்து பேசினாலும் எதிர்க் குரல் கொடுங்கள். பிள்ளைகள் வீட்டிற்குச் சென்றால்…. கூடவே உங்களுக்குத் தேவையான மருந்து மாத்திரைகள், எண்ணெய், பவுடர், சீப்பு, சோப்பு போன்றவற்றை எடுத்துச் செல்லுங்கள்!!

8 - அவர்களின் ஆடம்பர வாழ்வை விமர்சிக்க வேண்டாம். சேமிப்பின் அவசியம் பற்றிச் சொல்லிப் பாருங்கள். கட்டாயப்படுத்தி அவமானப்படவேண்டாம். அவர்கள் வாழ்வது நீங்கள் வாழ்ந்ததுப் போன்ற, போராட்ட வாழ்க்கை இல்லை!! நவீன கார்ப்பரேட் வாழ்க்கை!! நீங்கள் 1000 ரூபாயை பெரிதாக நினைத்தவர்கள்!!அவர்கள் லட்சங்களை அனாயாசமாக புரட்டிப் பார்க்கும் நிலையில் இருப்பவர்கள்!! எனவே "சூரியனுக்கே டார்ச் அடித்துப் பார்க்காதீர்கள்"!!

9 - அதிக ஆசை, பாசம் வைத்தால் அது மோசம் ஆகிவிடும்!! எனவே அவர்கள் குழந்தையை அவர்கள் கவனித்துக் கொள்வார்கள்!! எனவே உங்கள் அறிவுரைளை கூடியமட்டிலும் தவிருங்கள்!!

10 - உங்களை விட அறிவிலும் திறமையிலும் அவர்கள் சிறந்தவர்கள் என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். அல்லது நீங்கள் முட்டாளாகவே (இருந்துவிடுங்கள்) நடியுங்கள்!! அப்பொழுதுதான் பிழைப்பீர்கள்!!

அதிக அறிவுரைகள் இக்காலச் சந்ததியினருக்கு அறவே பிடிக்காது!! எனவே சுவற்றில் போய் "முட்டிக்கொள்ளும்" செயலில் மட்டும் ஒருபோதும் இறங்காதீர்கள்!!

கன்பியூசியஸ் பொன்மொழிகள்


 




ஜோக்

 இது குமாருக்கு சோதனைக் காலம்!

டாக்டர் ! தூக்கத்தில் திட்டுற வியாதி இருக்குன்னு ஒரு சர்டிஃபிகேட் கொடுங்க!

டாக்டர் - எதுக்கு குமாரு!

அப்பதான் டாக்டர் என் பெண்டாட்டி தூங்கும் போது திட்டலாம்!

டாக்டர் - அது கொடுக்கலாம் குமாரு ஆனா இப்பதான் உன் பெண்டாட்டி வந்து தூக்கத்தில் தனக்கு அடிக்கும் வியாதி இருக்கு என்று சர்டிஃபிகேட் வாங்கிட்டு போய் இருக்காங்க! என்னமோ தெரியலை! பார்த்து கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க!

GAUR GOPAL DAS QUOTE



 

SUNDAR PICHAI QUOTE


 

OPRAH WINFREY QUOTE


 

STEVE JOBS QUOTE


 

WARREN BUFFET QUOTE


 

MARK ZUCKERBERG QUOTE


 

PETER DRUCKER QUOTES


 

CHANAKYA ONCE SAID.....


 

10 RARE CHANAKYA LIFE LESSONS


 

STAY AWAY FROM.... CHANAKYA


 

MONEY EXCEL..... CHANAKYA


 

HONEST PERSON..... CHANAKYA


 

10 TEACHINGS OF CHANAKYA


 

CHANAKYA's 5 RULES FOR SMART THINKING