Wednesday 31 August 2022

தீர்ப்பு – நல்வழி



 வேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே

பாதா மூலி படருமே – மூதேவி
சென்றிருந்து வாழ்வாளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை".

வழக்கு மன்றத்தில் உண்மைபொய்களை ஆராய்ந்து நடுநிலையாகமனச்சான்றுடன் தீர்ப்பு வழங்காதவரின் வீட்டில் 
பேய்கள் குடிபுகும்எருக்கஞ்செடிகள் பூக்கும்பாதாள மூலி 
(நெருஞ்சில் / சீந்தில் கொடிபடரும்மூதேவி வீட்டிற்குள் குடியேறுவாள்பாம்புகள் விரும்பி வாழும்.

ஆட்சி - புறநானூறு

 கால் பார் கோத்து ஞாலத்து இயக்கும்



காவற் சாகாடு கைப்போன் மாணின்

ஊறு இன்றாகி ஆறு இனிது படுமே
உய்த்தல் தேற்றான் ஆயின் வைகலும்
பகைக் கூழ் அள்ளற் பட்டு
மிகப் பல் தீ நோய் தலைத்தலைத் தருமே

  - தொண்டைமான் இளந்திரையன்

உரை:
வண்டியைச் செலுத்துவோன் மாட்சிமைப்படின்  வழியில் ஒரு துன்பமும் இன்றி வண்டி இனிதாகச் செல்லும் திறனற்றவன் வண்டி ஓட்டினால் அது பகையாகிய செறிந்த சேற்றிலே சிக்கி மிகப் பல தீய துன்பங்களை மேலும் மேலும் உண்டாக்கும்.
( அரசன் திறம்பட ஆட்சி நடத்தாவிடின் உட்பகை, புறப் பகையாகிய சேற்றில் அழுந்தித் துன்புறுவான், நாடும் சீர் கேடு அடையும்).

Tuesday 30 August 2022

திருமூலர் திருமந்திரத்தில் சொல்லியுள்ள விளக்கங்கள்


                              

                                 ஞேயத்தை ஞானத்தை ஞாதுரு வத்தினை              

                                         மாயத்தை, மாமாயை தன்னில் வரும்பரை 
                                        ஆயத்தை, அச்சிவம் தன்னை யாகோசர 
                                        வீயத்தை முற்றும் விளக்கி யிட்டேனே. 

     அறியப்படும் பொருளையும், அறியும் அறிவையும், அறிபவனையும், மாயையின் விவரங்களையும், சுத்த மாயையில் விளங்கும் பரை, ஆதி, இச்சை, ஞானம், கிரியை என்கின்ற சத்தியின் கூட்டத்தையும், அச்சத்திகளில் விளங்கும் சிவத்தையும், சொரூப சிவத்தின் பிரபாவத்தையும் இவையாவற்றையும் இத்திருமந்திரத்தில் நான் விளக்கியுள்ளேன்.  
   
     விளக்கம் : ஞேயம் - அறியப்படும் பொருள். ஞானம் - அறிவு. ஞாதுரு - ஞாதுருவத்து - ஞாதுரு அத்து; அத்து - சாரியை; அறிபவன். மாயை - அசுத்த மாயை. மாமாயை - சுத்த மாயை. பரை ஆயம் - சத்திகளின் கூட்டம். அகோசரவீயம் - கண்ணுக்குப் புலப்படாமல் நின்ற விதை போன்ற பொருள். சொரூபசிவன் - பற்றப்படாதது. வீயம் - பீஜம் என்பதன் திரிபு; வித்து.    

தீரன் சின்னமலை

மாவீரன் தீரன் சின்னமலை ஓர் வரலாற்று காவியம் ; தீரன் சின்னமலை 1756 ல் பழைய கோட்டை பட்டக்காரர் மரபில் பிறந்தார். தீரன் சின்னமலை யின் இயற்பெயர் தீர்த்தகிரி கி.பி 18 நூற்றாண்டில் பிற்பகுதியில் ஈரோடு மாவட்டத்தின் சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஓடாநிலைப்பகுதிகளில் வாழ்ந்து வந்தார்.

ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக்கிடந்த இந்தியாவை மீட்க போராடிய சுதந்திர போராட்ட வீரர்களில் தமிழ் நாட்டில் தீரன் சின்னமலையின் பங்கு மகத்தானது.

வெள்ளையர்களை விரட்ட மைசூர் மன்னன் திப்பு சுல்தான் உடன் இணைந்து போரிட்டார்.இளம் வயதிலேயே வீரம் செறிந்த வீரனாக பல தற்காப்புகலைகள் அறிந்து வலம் வந்து தம் நன்பர்களுக்கு போர்ப்பயிற்சி அளித்து ஓர் படையை திரட்டினார்.

கொங்கு நாட்டுவரியை மைசூருக்கு வசூலித்து சென்றவர்களை தடுத்தி நிறுத்தி கொங்கு நாட்டு மக்கள் யாருக்கும் அடிமையில்லை என்பதை முழக்கமிட்டு அறிவித்தார்."ஹைதர் அலியின் திவான் மீராசாகிப் கேட்டால் சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஓர் சின்னமலை பிடுங்கி விட்டான் என கூறுங்கள் " எனக் கூறி ஆங்கிலேய வீரர்களை விரட்டி அடித்தார்.


அன்று முதல் தீர்த்தகிரி எனும் பெயர் மாறி சின்னமலை என அழைக்கப்பட்டார் . இவரின் வீரம் அறிந்த திப்பு சுல்தான் தூது அனுப்பி தீரன் சின்னமலையிடம் தமக்கு படை உதவிகள் மற்றும் ஆதரவுகளை ஆங்கிலேயர்களை எதிர்க்க உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதற்கு தீரன் சின்னமலையும் கொங்கு நாட்டில் தேவையான படைபல உதவிகளை தாராளமாக கேட்குமாறு கூறினார் .

இருவரும் படைபலத்தை இணைத்தனர். தீரன் சின்னமலையுடன் கூட்டு சேர்ந்து திப்புசுல்தான் மூன்றுமுறை போரில் 2500 வீரர்களை வைத்து கொண்டு ஆங்கிலேய வீரர்கள் 10,000 பேரை விரட்டி அடித்தனர். ஆங்கிலேயருக்கு கடும் சவாலாக இருந்த தீரன் சின்னமலை திப்புவின் மரணத்திற்கு பின் கி.பி 1799ல் கர்னாடாகதை ஆட்சி செய்த மராட்டிய மன்னர் தூந்தாஜிவாக்த் என்பவருடன் பாளையக்காரர்கள் படையை இணைத்து ஆங்கிலேயருக்கு எதிராக போர் செய்ய ஒப்பந்தம் போட்டார் தீரன் சின்ன மலை .

இரண்டு வருடங்கள் கழித்து கி.பி1801ல் கர்னல் மாக்ஸ் வெல் தலைமையில் ஆங்கிலப்படையை பவானி காவிரிக்கரையில் வென்றார்.1802ல் சென்னிமலைக்கும் சிவன் மலைக்குமிடையே நடந்த போரில் சிலம்பமாடி ஆங்கிலப்படையை துரத்தியதாக வரலாறு.


அரச்சலூரில் 1803ல் கர்னல் ஹாரிஸின் ஆங்கிலப்படையை கையெறிகுண்டுகள் வீசி வெற்றிபெற்றார் இப்போரில் வெற்றி பெற்ற வெற்றிச்சின்னம் இன்றும் ஈரோடு மாவட்டம் அரச்சலூரில் உள்ளதென வரலாற்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

போரில் வீரன் சின்னமலையை வெல்ல முடியாதென அறிந்த ஆங்கிலேயர்கள் சமையல்காரன் நல்லப்பனை பணம் தந்து தந்திரமாக தந்த ஆங்கிலேயர்களுக்கு தகவல் தந்தான் நல்லப்பன். உணவருந்திக்கொண்டிருந்த தீரன் சின்னமலை அவர் சகோதரர்கள் பெரியதம்பி,கிலேதார் தளபதி கருப்ப சேர்வை ஆகியோர்களை கைது செய்த ஆங்கிலப்படை கி.பி 1805ஆம் ஆண்டு 31ஆம் தேதி சங்ககிரி கோட்டையில் தூக்கிலிட்டு 4 பேரையும் கொன்று தன் கோபத்தை ஆங்கிலப்படை தீர்த்துக்கொண்டது.

ஆனால் தீரன் சின்னமலை மறைத்தாலும் அவர் விட்டுச்சென்ற புகழும் வீரமும் கொங்கு மண்ணில் எப்போதும் நிலைத்திருக்குமாறு அவர் வழி வந்த மக்களால் ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே ஓடா நிலையில் மணிமண்டபம் கட்டி அவர்புகழ் தேயாதவாறு பாதுகாக்கப்படுகிறது.

ஈரோடு பக்கம் வந்தால் பார்த்துவிட்டு போகலாம். பவானியில் இருந்து சேலம் செல்லும் வழியில் சங்ககிரி என்னும் இடத்தில் தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்ட சங்ககிரி கோட்டையும் வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் 200 வருடங்கள் கழித்து இன்றும் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Monday 29 August 2022

ஜான் பார்ட்டீன்


அமெரிக்க விஞ்ஞானி John Bardeen (ஜான் பார்ட்டீன்). டிரான்சிஸ்டரைக் கண்டு பிடித்த மாமேதை. இந்தக் கண்டுபிடிப்புக்காக அவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது.

குடும்பத்துடன் விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கபட்டது.
தன்னுடைய மகன்கள் இருவர் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்தார்கள்.
படித்துக்கொண்டிருப்பவர்களை தொந்தரவு செய்ய இவர் விரும்பவில்லை.
அதனால் மூன்றாவது மகனை மட்டும் நோபல் பரிசு பெற விழாவுக்கு அழைத்து சென்றார்.

விழாவிற்கு தன்னுடைய ஒரு மகனை மட்டும் அழைத்து வந்ததால்,
 "குடும்பத்துடன் வரவில்லையா?"
 என சுவீடன் நாட்டு மன்னர் குவோஸ்டா ஜான்பார்டினை அன்பாக கடிந்து கொண்டார்.

"அடுத்த முறை விழாவுக்கு வரும்போது நிச்சயம் அவர்களை அழைத்துவருகிறேன். இப்போது அவர்கள் படித்துக் கொண்டு இருப்பதால் தொந்தரவு செய்ய வேண்டாம் என அழைத்து வரவில்லை" என்றார் ஜான்பார்டீன்.

மன்னருக்கோ ஆச்சர்யம்.. ஒரு முறை நோபல் பரிசு பெறுவதே மிகப்பெரிய சாதனை.. கடினமாக உழைக்க வேண்டும். இவர் மீண்டும் வருகிறேன் என்கிறாரே.. என்று ஆச்சர்யப்பட்டார்.

1972 ம் வருடம். மீண்டும் அதே நோபல் பரிசு கொடுக்கும் விழா.. ஜான்பார்டன் தனது மகன்களுடன் விழாவில் கலந்துகொண்டார்.. நோபல் பரிசு வழங்கப்பட்டது..
யாருக்கு? நம் ஜான்பார்டன் விஞ்ஞானிக்குத்தான். இரண்டாம் முறை மீண்டும் நோபல் பரிசு பெறுகிறார்.
எதற்கு?
மின்சாரக் கடத்திகளைப் பற்றிய உண்மைகளை இவர் கண்டுப்பிடித்திருந்தார். விழாவில் மன்னர் திக்குமுக்காடிப் போனார்.
சொன்ன சொல்லை நிறைவேற்றுவதற்கு அவர் எடுத்துக்கொண்ட காலம் பதினைந்து வருடங்கள்..எப்படி இது இவருக்கு மட்டும் சாத்தியம் ஆகியது?

தளராத தன்னம்பிக்கை. மன உறுதி.. எடுத்துக்கொண்ட செயலில் முழு கவனம். வெற்றிப் பெற்றே தீருவேன் என்ற உறுதிதான்.....

ஆம்., நண்பர்களே..,
கடினமான உழைப்புக்கு என்றுமே தோல்வி கிடையாது.
இவ்வாறு நீங்கள் விரும்பும் துறை எதுவாயினும் அதற்குத் தேவையான, முறையான பயிற்சி மற்றும்விடா முயற்சி, எடுத்த செயலை செயல்படுத்துதல் ஆகிய இம்மூன்றும் தேவை.
இவைகளை தொடர்ச்சியாக பின்பற்றும்போது, நிச்சயம் உங்கள் குறிக்கோளில் வெற்றிப்பெறுவது திண்ணம்.
நீங்கள் நினைப்பது எதுவாக இருப்பினும் உங்களை வெற்றி தேடிவரும்.

அதிர்ஷ்டமா.....நம்பிக்கையா

அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள்தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக் காசின் நடுவில் துளை இருந்தது. துளையிட்ட காசு கிடைப்பது அதிர்ஷ்டம் என்று ஒரு நம்பிக்கை. அதனால், 'அதிர்ஷ்டம் என்னைத் தேடி வரும்பணக்காரனாகிவிடுவேன்’ என்று நினைத்தான். அந்தக் காசைத் தன் கோட்டுப் பையில் போட்டுக் கொண்டான்.


அன்றுஅவனுக்கு மற்ற நாளைவிட அதிக வருமானம் கிடைத்தது. 'எல்லாம் காசு கிடைத்த நேரம்’ என நினைத்தான். அன்றிலிருந்து அவன் தினமும் கோட்டுப் பையில் இருக்கும் காசை தொட்டுப் பார்த்துக்கொள்வான். வெளியே எடுக்கமாட்டான். சில ஆண்டுகளில் பணம்பதவி அனைத்தும் வந்து சேர்ந்தன.

பல வருடங்களுக்குப் பின்ஒரு நாள் தன் மனைவியிடம், ''அந்தக் காசைப் பார்க்கவேண்டும் போலுள்ளது'' என்றவாறு கோட்டுப் பையில் இருந்து எடுத்தவனுக்கு அதிர்ச்சி!

அந்தக் காசில் துளையே இல்லை. 'என்ன ஆயிற்று?’ என்று குழப்பத்துடன் பார்த்தான். அவன் மனைவி சொன்னாள், ''என்னை மன்னியுங்கள். உங்கள் கோட்டு தூசியாக இருக்கிறதே என்று வெளியே உதறினேன். காசு தெருவில் விழுந்துவிட்டது. எவ்வளவோ தேடியும் கிடைக்கவில்லை. நான்தான் வேறு காசைப் போட்டு வைத்தேன்'' என்றாள்.

''
இது எப்போது நடந்தது?'' என்று கேட்டான். ''அந்தக் காசு கிடைத்த மறுநாளே'' என்றாள். அவன் அமைதியாக சிந்தித்தான். 'உண்மையில் அதிர்ஷ்டத்தைக் கொடுத்தது அந்த நாணயம் இல்லை. என்னுடைய நம்பிக்கைதான்.’ என நினைத்தான். முன்பைவிட உற்சாகத்துடன் தனது பணியைத் தொடர்ந்தான்...

Sunday 28 August 2022

கலாச்சாரம் என்றால் என்ன

 


அவலட்சணமான கலாச்சாரம் என்றால் என்ன தெரியுமா?

*அவன் என்னை விருந்துக்கு அழைக்காவிட்டால் நானும் அழைக்கமாட்டேன்.

*அவன் எனக்கு அன்பளிப்புக்கள் கொடுக்காவிட்டால் நானும் கொடுக்கமாட்டேன். 

*அவன் என் வீட்டுக்கு வராவிட்டால் நானும் போகமாட்டேன்.

*அவன் எனக்கு தொலைபேசியில் தொடர்பு கொள்ளாவிட்டால் நானும் தொடர்பு கொள்ளமாட்டேன்.

*அவன் ஸலாம் சொல்லாவிட்டால் நானும் ஸலாம் சொல்ல மாட்டேன்.

*எந்த அளவுக்கென்றால் அவன் எங்கள் வீட்டு மரணத்துக்கு ஆறுதல் சொல்ல வராவிட்டால் நானும் அவன் வீட்டு மரணத்துக்கு போகமாட்டேன். 

மனித மனங்களை, உணர்வுகளை கொடுக்கல் வாங்கல் அடிப்படையில் நடத்தாதீர்கள்!

லாப நஷ்டம் என்ற அளவுகோலில் பார்க்காதீர்கள்!


❤பெருந்தன்மையோடும், 

தாராளமனதோடும் நடந்து கொள்ளுங்கள்!

உன்னை விருந்துக்கு அழைக்காதவனை நீ அழைத்துப் பார்!

உனக்கு அன்பளிப்பு தராதவனுக்கு நீ கொடுத்துப் பார்.

❤நாங்கள் இந்த பூமியில் ஒருமுறைதான் வாழப்போகிறோம். 

தவறு செய்தால், மன்னிப்பு கேளுங்கள், சுடுமூஞ்சுடன் இருக்காதீர்கள். 

❤உன்னை காண்போர் எல்லாம் உன்னைப் போன்று இருக்க ஆசைப்படும் அளவுக்கு நீ நடந்துகொள். 

❤உன்னை தெரிந்தவர்கள் எல்லாம் உனக்காக நல்லது நடக்க வேண்டும் என்று பிரார்த்திக்கும் நிலைக்கு உன்னை நீ ஆக்கிக்கொள். 

❤உன்னை கேள்விப்படுவோர் உன்னை கண்டு சந்திக்க விரும்பும் நிலைக்கு ஆக்கிக்கொள். 

❤நன்னடத்தை என்ற நறுமணத்தை நீ பூசிக்கொண்டால் மண்ணுக்கு அடியில் நீ சென்றாலும் உன் வாசம் வீசுவதை யாராலும் தடுக்க முடியாது. 

 - அலி அல்-தந்தாவி  

அன்பு

கடவுள் அன்பே வடிவானவர். அவர் எல்லாவற்றிலும் மறைந்திருக்கிறார். ஆனால் ஒவ்வொன்றிலும் தெளிவாகப் பார்க்கக் கூடியவராகவும் இருக்கிறார். நாம் தெரிந்தோ தெரியாமலோ அவரிடம் இழுக்கப்படுகிறோம். ஒரு பெண் தன் கணவனிடம் அன்பு செலுத்தினால் அவனிடமுள்ள கடவுளாகிய மகத்தான இழுப்பாற்றலே அவளை அன்பு செலுத்தத் தூண்டுகிறது. நாம் வழிபட வேண்டியது கடவுளாகிய இந்த அன்பு ஒன்றையே.


நாம் அவரை இந்த உலகைப் படைத்தவராகவும், காப்பவராகவும் நினைத்துக் கொண்டிருக்கும் வரையில் புறவழிப்பாட்டை மட்டுமே செய்ய முடியும். ஆனால் அவற்றை எல்லாம் கடந்து சென்று, அவரை அன்பின் உருவாகாக் கொண்டு எல்லாவற்றிலும் அவரையும், அவரில் எல்லாவற்றையும் காணுவதே பக்தி.

அன்பின் வகைகள்

அன்பில் பல வகை உண்டு. இடம் மாறி செலுத்தப்பட்ட அன்பே துயரங்களுக்குக் காரணம். அன்பில்லாமல் எந்த உருவாக்கமும் இல்லை. நமது பிறப்பும் கூட அன்பைச் சார்ந்ததே.

அன்பில் 12 வகைகள் உண்டு.

1.இரக்கம் - எளியவர் மேல் காட்டுகிற அன்பு.

2.கருணை - அறிவு பலமும், உடல் பலமும் இல்லாத மனிதர்கள் மீது காட்டப்படுகிற அன்பு.

3.ஜீவகாருண்யம்- எல்லா உயிர்களிடத்திடமும் அன்பு.

4.பந்தம் - உறவினர்களிடத்து நாம் செலுத்தும் அன்பு.

5.பட்சம் - முதலாளி, வேலைக்காரரிடம் செலுத்தும் அன்பு.

6.விசுவாசம் - வேலை செய்பவர் தன் முதலாளியிடம் செலுத்தும் அன்பு.

7.பாசம் - தாய், குழந்தைகளுக்கிடையே உள்ள அன்பு.

8.நேசம் - தன்னையொத்த நண்பர்களிடையே நிலவும் அன்பு.

9.காதல் - கணவன், மனைவிக்கிடையே உள்ள அன்பு.

10.பக்தி - கடவுள் மேல் பக்தன் செலுத்தும் அன்பு.

11.அருள் -பக்தன் மேல் கடவுள் செலுத்தும் அன்பு.

12.அபிமானம் - ஒரு தேசம் அல்லது சமுதாயத்தின் மீது செலுத்தப்படுகிற அன்பு.

அன்பை நிலை மாறிச் செலுத்தினால் சிக்கல், துயரம், நிலை உணர்ந்து செலுத்தப்படும் அன்பு நன்மை தரும்.




Saturday 27 August 2022

சேமிப்பு - முதலீடு

நிதியியல் திட்டமீட்டாளர்கள், நிதி ஆலோசகர்கள் மற்றும் பரஸ்பர நிதி நிறுவனங்கள் 'சேமிப்பு' மற்றும் 'முதலீடு' போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை நாம் அடிக்கடிக் கேட்கிறோம்.


ஆனால் சேமிப்பும் முதலீடும் இரண்டு முற்றிலும் வேறுபட்ட கருத்துக்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?

சம்பளம் அல்லது வருவாய்
ஒவ்வொரு மாதமும் நம்மில் பெரும்பாலானவர்கள் ஒரு வருமானத்தை ஈட்டுகிறோம். இது சம்பளம் அல்லது வியாபார வருவாய் என்று இரண்டில் ஏதேனும் ஒரு வடிவத்தில் இருக்கும். அதன் பிறகு, மேலும் நாம், உணவு, உடை, வாடகை, மின்சார மற்றும் தொலைப்பேசிக் கட்டணங்கள் போன்ற நமது செலவுகளைக் கொண்டிருக்கிறோம்.

சேமிப்பு
ஒருமுறை நமது வருமானத்திலிருந்து செலவுகளுக்குப் பணம் செலுத்தி விட்டால், மீதமிருக்கும் தொகையைத் தான் வழக்கமாகச் சேமிப்பு என்று அழைக்கிறோம். நிச்சயமாக, நாம் எந்த அளவுக்கு அதிகமாகச் சேமிக்கிறோமோ அவ்வளவு நல்லது.

செலவு
மேலும் நாம் எப்பொழுதும் நமது செலவுகளைக் குறைக்கும் நோக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும். ஆனாலும், வாடகை செலுத்தல் அல்லது கடன் தவணை போன்ற சில செலவுகளை நம்மால் எப்பொழுதும் தவிர்க்கவே முடியாது. உங்கள் நோக்கம் செல்வத்தை உருவாக்க வேண்டும் என்பதாக இருந்தால், சேமிப்பு மட்டுமே போதுமானதல்ல. நாம் நமது சேமிப்பைக் கொண்டு மேலும் அதை அதிகரிக்க ஏதாவது செய்ய வேண்டும்.

முதலீடு
இங்கே தான் முதலீடுகள் நம்முன் வருகின்றன. அவை காலப்போக்கில் நமது பணத்தை அதிகரிக்கச் செய்ய உதவும் நிதி திட்டங்கள் ஆகும்.

பணவீக்கம்
நாம் முதலீடு செய்ய வேண்டியது மிகவும் அவசியம், ஏனென்றால் நாம் வாழ்வதற்கான செலவுகள் ஒவ்வொரு வருடமும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அது தான் பணவீக்கம் என்றழைக்கப்படுகிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், பணத்தின் மதிப்பு குறைந்து விடுகிறது.

மதிப்பிழக்கும் பணம்
நீங்கள் தற்போது ஒவ்வொரு மாதமும் ரூ. 10,000 சேமிக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் இந்த 10,000 ரூபாயை அப்படியே விட்டுவிட்டால், சில வருடங்கள் கடந்த பின்பு அதைக் கொண்டு மிக மிகக் குறைந்த அளவு பொருட்களையே நம்மால் வாங்க முடியும். இது ஏனென்றால், காலப்போக்கில் பணம் அதன் மதிப்பை இழக்கிறது. மேலும், சரக்குகள் மற்றும் சேவைகளின் விலை உயர்கிறது. அதனால் தான் உங்கள் பணமும் வளர்ச்சியடைய வேண்டியது அவசியமாகிறது.

முதலீடு ஏன் முக்கியம்
பணவீக்கத்தின் வேகத்தை விட விரைவாக வளர வேண்டும். அப்போது தான் குறைந்தபட்சம் முன்பொரு காலத்தில் நீங்கள் வாங்கிய அதே பொருட்களை வாங்கவாவது உங்களால் முடியும். இங்கே தான் நமக்கு முதலீடுகள் உதவுகின்றன.

மியூச்சுவல் ஃபண்டு
மியூச்சுவல் ஃபண்டு முதலீட்டிற்கான உன்னதமான உதாரணம். இதிலுள்ள தற்போதைய சலுகைகள் சமபங்கு நிதிகள் மற்றும் கடன் நிதிகளாகும். ஆனால் உங்களால் எந்தளவுக்குத் துணிந்து அபாயத்தை எடுக்க முடியும் என்று மதிப்பீடு செய்ய வேண்டியது அவசியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

மிக விரைவான வேகத்தில் வளரும் முதலீடுகளும் உள்ளன. மேலும் மெதுவான வேகத்தில் வளரும் முதலீடுகளும் இருக்கின்றன. ஆனால் அவை பணவீக்கத்தை விட அதிகமான வருமானத்தைக் கொடுக்கின்றன.

பிகசட் டெபாசிட் மற்றும் பிபிஎப்
நிலையான வைப்பு நிதிகள் மற்றும் பொது வருங்காலச் சேமிப்பு நிதி போன்ற சிறு சேமிப்புத் திட்டங்களும் கூடச் சேமிப்பின் வடிவங்களேயாகும். அனைத்து முதலீட்டுத் திட்டங்களும் அனைவருக்கும் பொருந்தாது. நீங்கள் மிக அதிக வரிவிதிப்பு வரம்பிற்குள் இருந்தால் நிலையான வைப்பு நிதித் திட்டம் பணவீக்கத்தை மீறிய வருவாயை உங்களுக்குத் தராது.

உங்கள் பணம் ஒரு அர்த்தமுள்ள வேகத்தில் வளருவதில்லை, எனவே அது பொதுவாக ஒரு நல்ல முதலீடு உங்கள் பணப் பெட்டிக்கு அவசியம் செய்ய வேண்டியதைச் செய்வதில்லை. ஆனால் நீங்கள் மிகக் குறைந்த வரி விதிப்பு வரம்பிற்குள் இருந்து, அபாயங்களை வெறுப்பவராக இருந்தால், அப்போது நிலையான வைப்பு நிதிகள் உங்களுக்கு நன்கு வேலை செய்யும்.

சேமிப்பு கணக்கு
பணத்தை வங்கியில் சேமிப்புக் கணக்கில் வைத்தல் ‘சேமிப்பு' என்ற பிரிவின் கீழ் வகைப்படுத்தப்படுமே அன்றி ‘முதலீடு' என்று கருதப்படாது. ஏனென்றால் வங்கி சேமிப்புக் கணக்கில் உங்கள் பணம் செயலற்று இருக்கிறது. அளவுக்கதிகமான சேமித்தாலும் மிகக் குறைந்த முதலீடு செல்வத்தை உருவாக்காது.

லிக்விட் ஃபண்டுகள்
உண்மையில், லிக்விட் ஃபண்டுகள் பல்கி பெருகும் தன்மையால் உடனடி பண மீட்பு வசதியை அவர்களில் பலர் அளிக்கத் தொடங்கியுள்ளனர். உங்கள் அதிகப்படியான சேமிப்புப் பணத்தை லிக்விட் டண்டு கணக்கிற்கு மாற்றி மேலும் உங்கள் வங்கிக் கணக்கில் மிகக் குறைந்தபட்ச நிலுவைத் தொகையாவது பராமரித்தால் உங்கள் சேமிப்பும் கூட உயரும்.

ஆனால் லிக்விட் ஃபண்டுகள் பணத்தை நிறுத்தி வைக்கும் வாகனம்; ஒரு சேமிப்பு வாகனம், அவ்வளவு தான். செல்வத்தை உருவாக்குவதற்கான முதலீடுகளில், அபாயங்களை எடுக்கத் துணியும் உங்கள் பசியைப் பொறுத்து, உங்களுக்கு ஒரு கூடை நிறைய மியூச்சுவல் ஃபண்டு கடன் நிதித் திட்டங்களும் தேவைப்படும்.

தசாவதாரம்

பரிணாமக் கோட்பாட்டின் தந்தை எனப்படுபவர் சார்லஸ் டார்வின்.

உயிரினங்கள் நீரினில் உருவாகி பல்வேறு மாற்றங்களை அடைந்து மனிதன் என்ற நிலையை அடைந்நதது என்பது டார்வினின் கோட்பாடு.
டார்வினின் கோட்பாடு வெளிவருவதற்கு முன்பே பல நுhற்றாண்டுகளுக்கு முன்பே இந்திய இலக்கியங்களில் பரிணாமக் கோட்பாடு பற்றிய விவரங்கள் காணப்படுகின்றன.

அந்த விவரங்கள் பக்தி இலக்கியங்களில் காணப் படுவதால் பக்தியாக மட்டுமேமத ரீதியாக மட்டுமேபார்க்கப் பட்டு விட்டதால் அதில் உள்ள உண்மைத்தன்மை இந்த உலகத்திற்கு தெரிய முடியாமல் போய் விட்டது.
டார்வினின் பரிணாமக் கோட்பாடு இந்திய இலக்கியங்களில் எவ்வாறு குறிப்பிடப்பட்டிருக்கிறது  என்பதைப் பற்றிப் பாரப்போம்.
திருமாலின் அவதாரங்கள் பத்து எனக் குறிப்பிடப்படுகின்றன்.
அவை ,
             
                      1. மச்ச அவதாரம்
                  2. கூர்ம அவதாரம்
                  3. வராக அவதாரம்
                  4. நரசிம்ம அவதாரம்
                  5. வாமன அவதாரம்
                  6. பரசுராம அவதாரம்
                  7. ராம அவதாரம்
                  8. பலராம அவதாரம்
                  9. கிருஷ்ண அவதாரம்
                  10. கல்கி அவதாரம்

1. மச்ச அவதாரம் :
(மச்சம் என்றால் மீன்)
மீன் நீரினில் வசிக்கும் உயிரினம் .
பரிணாம வளர்ச்சியில் உயிரினங்கள் முதன் முதலில் நீரில் தோன்றியது  என்பதைக் குறிப்பதே மச்ச அவதாரம் ஆகும்.

2. கூர்ம அவதாரம்  :
(கூர்மம் என்றால் ஆமை)
ஆமை நீரிலும் வாழும் நிலத்திலும் வாழக் கூடிய ஒரு உயிரினம் .
நீரில் வாழ்ந்த உயிரினங்கள நீரானது வற்றிப் போன காலங்களில் நிலத்திலும் வாழ்வதற்குரிய மாற்றங்களை உடல் அமைப்பில் பெற்று காலப்போக்கில் நீரிலும் நிலத்திலும் வாழ்வதற்குரிய தகவமைப்பைப் பெறுகிறது.
தகவமைப்பு என்பது குறிப்பிட்ட ஒரு சூழலுக்கு ஒத்துப்போகும் வண்ணம் மாற்றிக் கொள்ளுதல்.
பரிணாம வளர்ச்சியில் நீரில் வாழ்ந்த உயிரினங்கள் கால மாற்றத்திற்கு தகுந்த படி நீரிலும் நிலத்திலும் வாழ்வதற்கரிய உடல் அமைப்பைப் பெற்றன என்பதைக் குறிப்பதே கூர்ம அவதாரம்.  

3. வராக அவதாரம்  :
(வராகம் என்றால் பன்றி)
நீரிலும் நிலத்திலும் வாழ்ந்த உயிரினங்கள் நீரானது வற்றிப் போன காலங்களில நிலத்தில் மட்டுமே வாழ்வதற்குரிய தகவமைப்பைப் பெறுகிறது.
பன்றி நிலத்தில் வாழும் ஒரு உயிரினம்ஆனால் அது நீரில் வாழ்ந்த அதன் பதிவுகள் கலையாத காரணத்தினால் அதன் பதிவுகளின் துhண்டுதலினால் அடிக்கடி போய் சாக்கடையில் போய் படுத்து கொள்கிறது.
பரிணாம வளர்ச்சியில் நீரிலும் , நிலத்திலும் வாழ்ந்த உயிரினங்கள் நிலத்தில் மட்டுமே வாழ்வதற்குரிய தகவமைப்பைப் பெற்றன என்பதைக் குறிப்பதே வராக அவதாரம் ஆகும்.


4. நரசிம்ம அவதாரம்:
நரன் என்றால் மனிதன் சிம்மம் என்றால் சிங்கம்நரசிம்மம் என்றால் மனிதனும்சிங்கமும் சேர்ந்தது என்று பொருள்.
சிங்க தலையும்மனித உடலும் சேர்ந்தது தான் நரசிம்மம்பரிணாம வளர்ச்சியில் விலங்கிலிருந்து மனிதன் வரும்போது விலங்கின் உடலும்மனிதன் உடலும் சேர்ந்து தான் இருந்தது.
அதைக் குறிப்பிடுவதே சிங்க தலையும்,  மனித உடலும் ஆகும்.
 நாளடைவில் தான் முழு மனிதன் உடல் உருவானது.
பரிணாம வளர்ச்சியில் விலங்கிலிருந்து மனிதனாக மாற்றம் அடையும் போது விலங்கும்மனிதனும் சேர்ந்த நிலை தான் இருந்தது என்பதைக் குறிப்பதே நரசிம்ம அவதாரம்.

5. வாமன அவதாரம் :
வாமன அவதாரம் மூன்று அடி அளவு தான் உடையது.
பரிணாம வளர்ச்சியில் விலங்கிலிருந்து மனிதனாக அதாவது முழுமையான மனிதனாக மாற்றம் அடையும் போது முதன் முதலில் குள்ளமாக மூன்றடிக்குள் தான் இருந்தான் என்பதைக் குறிப்பதே வாமன அவதாரம்.

6. பரசுராம அவதாரம் :
மனிதன் தன் தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்காக காட்டு மரங்களை வெட்டியும்,
 தன் பசியை தீர்த்துக் கொள்வதற்காக காட்டு விலங்குகளை வேட்டையாடியும் காட்டில் உயிர் வாழ்ந்தான்
பரிணாம வளர்ச்சியில் காட்டில் வாழ்ந்த மனிதன் காட்டில் உயிர் வாழ்வதற்கும்,
தன் தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்கும்,
ஏற்ற விதத்தில் கையில் கோடாரி வைத்திருந்த மனிதனாக பரசுராம அவதாரத்தை உருவகப் படுத்தி வைத்திருக்கிறார்கள் .

7. ராம அவதாரம் :
காட்டில் வாழ்ந்த மனிதன் நாட்டில் தனக்கென்று ஒரு இராச்சியத்தை உருவாக்கிக் கொண்டுஅரசாட்சி செய்தான்.
நாட்டில் வாழ்ந்த மனிதன் தன் பதிவின் காரணமாக பதிவின் பாதிப்பு காரணமாக  காட்டில் சுற்றி திரிந்தான்
நாட்டில் இருந்த ராமர் சீதையை தேடி காட்டில் அலைந்தது இதன் அடிப்படையில் தான்.
பரிணாம வளர்ச்சியில் காட்டுக்குள் வாழ்ந்த மனிதன் நாட்டில் வந்து வாழ்ந்ததைக் குறிப்பதே ராம அவதாரம் ஆகும்.

8. பலராம அவதாரம் :
நாட்டில் வாழ்ந்த மனிதன் தன் பசியின் தேவையை தீர்த்துக் கொள்வதற்காக உழுது பயிரிட்டு விவசாயம் செய்து வாழ்ந்தான் பலராமர் விவசாயம் செய்வதற்கு ஏற்ற விதத்தில் கலப்பையை கையில் வைத்திருக்கிறார்.
பரிணாம வளர்ச்சியில் நாட்டில் வாழ்ந்த மனிதன் விவசாயம் செய்து வாழ்ந்தான் என்பதைக் குறிப்பதே பலராமர் தன் தோளில் சுமக்கும் கலப்பை ஆகும்இதுவே பலராமர் அவதாரம் ஆகும்.

9. கிருஷ்ண அவதாரம் :
கிருஷ்ண அவதாரம் என்பது அறிவு முதிர்ச்சியடைந்த நிலை ஆகும்
தீமைகள் பெருகி விட்ட நிலையில் தான் வாழ பிறரையும் அழிக்கலாம் என்ற நிலை உருவாகி இருந்த நிலையில்அந்த நிலையை மாற்ற எத்தகைய நிலையை பின்பற்றலாம் என்பதைக் குறிக்கிறது.
பரிணாம வளர்ச்சியில் மனிதனின் சிந்திக்கும் திறன் எத்தகைய வழிகளில் செயல்படுகிறது என்பதைக் குறிப்பதே கிருஷ்ண அவதாரம் ஆகும்.

10. கல்கி அவதாரம் :
பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதன் சூரிய குடும்பத்தில் வேறு ஏதேனும் கிரகத்தில் வாழ முடியுமா என்று முயற்சி செய்து கொண்டிருக்கிறான்
குதிரையில் ஒரு மனிதன் உட்கார்ந்து கொண்டிருக்கிறான் குதிரையின் பின்னங்கால்கள் இரண்டும் தரையிலும் முன்னங் கால்கள் இரண்டும்
பூமியில் படாமல் மேல் நோக்கி துhக்கி இருப்பதைப் பார்க்கலாம் இது மனிதன் வேறு கிரகத்தில் சென்று வசிக்க இடம் தேடுவதைக் குறிக்கிறது.
பரிணாம வளர்ச்சியில் மனிதன் பூமியில் இருந்து வேறு கிரகத்திற்கு சென்று வசிக்க இடம் தேடுவதைக் குறிக்கிறது.
டார்வின் சொல்லும் பரிணாமக் கோட்பாட்டை நம் இலக்கியங்கள் முன்பே சொல்லி இருக்கின்ற.
 மதம் பக்தி நீக்கி பார்த்தால் ஆழ்ந்த அறிவியல் அறிவு நம் முன்னோர்களுக்கு எப்படி இருந்ததை என்பதையும்அதை புரிந்து கொள்ளும் சக்தி நமக்கு இல்லை என்பதையும் குறிக்கிறது .