Sunday 28 August 2022

கலாச்சாரம் என்றால் என்ன

 


அவலட்சணமான கலாச்சாரம் என்றால் என்ன தெரியுமா?

*அவன் என்னை விருந்துக்கு அழைக்காவிட்டால் நானும் அழைக்கமாட்டேன்.

*அவன் எனக்கு அன்பளிப்புக்கள் கொடுக்காவிட்டால் நானும் கொடுக்கமாட்டேன். 

*அவன் என் வீட்டுக்கு வராவிட்டால் நானும் போகமாட்டேன்.

*அவன் எனக்கு தொலைபேசியில் தொடர்பு கொள்ளாவிட்டால் நானும் தொடர்பு கொள்ளமாட்டேன்.

*அவன் ஸலாம் சொல்லாவிட்டால் நானும் ஸலாம் சொல்ல மாட்டேன்.

*எந்த அளவுக்கென்றால் அவன் எங்கள் வீட்டு மரணத்துக்கு ஆறுதல் சொல்ல வராவிட்டால் நானும் அவன் வீட்டு மரணத்துக்கு போகமாட்டேன். 

மனித மனங்களை, உணர்வுகளை கொடுக்கல் வாங்கல் அடிப்படையில் நடத்தாதீர்கள்!

லாப நஷ்டம் என்ற அளவுகோலில் பார்க்காதீர்கள்!


❤பெருந்தன்மையோடும், 

தாராளமனதோடும் நடந்து கொள்ளுங்கள்!

உன்னை விருந்துக்கு அழைக்காதவனை நீ அழைத்துப் பார்!

உனக்கு அன்பளிப்பு தராதவனுக்கு நீ கொடுத்துப் பார்.

❤நாங்கள் இந்த பூமியில் ஒருமுறைதான் வாழப்போகிறோம். 

தவறு செய்தால், மன்னிப்பு கேளுங்கள், சுடுமூஞ்சுடன் இருக்காதீர்கள். 

❤உன்னை காண்போர் எல்லாம் உன்னைப் போன்று இருக்க ஆசைப்படும் அளவுக்கு நீ நடந்துகொள். 

❤உன்னை தெரிந்தவர்கள் எல்லாம் உனக்காக நல்லது நடக்க வேண்டும் என்று பிரார்த்திக்கும் நிலைக்கு உன்னை நீ ஆக்கிக்கொள். 

❤உன்னை கேள்விப்படுவோர் உன்னை கண்டு சந்திக்க விரும்பும் நிலைக்கு ஆக்கிக்கொள். 

❤நன்னடத்தை என்ற நறுமணத்தை நீ பூசிக்கொண்டால் மண்ணுக்கு அடியில் நீ சென்றாலும் உன் வாசம் வீசுவதை யாராலும் தடுக்க முடியாது. 

 - அலி அல்-தந்தாவி  

No comments:

Post a Comment