Friday 5 August 2022

அசரீரி

 உயிர்கள் அனைத்திற்கும் உடம்பு உண்டு. உடம்பை சமஸ்கிருதத்தில்"சரீரம்' என்பர். சரீரத்தைப் பெற்றிருப்பதால் உயிர்களுக்கு "சரீரி' என்று பெயர். இதைப் போல தேவதைகளுக்கும் உருவம் உண்டு. அவற்றை காணும் சக்தி நமக்குக் கிடையாது. இருந்தாலும், பக்தர்களை ஆட்கொள்ளும் விதத்தில் சப்த வடிவில் நம்மோடு தொடர்பு கொள்வதாக சாஸ்திரம் கூறுகிறது. சுயவடிவமான சரீரத்தைக் காட்டாமல் வெறும் ஒலி வடிவில் கேட்பதை "அசரீரி' என்று குறிப்பிடுகிறோம்

கர்மசாக்ஷியாக அந்தர லோகத்திலே நிற்கின்ற ஒரு சக்தி. 
இந்த அசரீரி ஒலிவடிவாய் இருந்து ஆபத்து வேளையிலே சான்றுரை பகர்வது. 
திருவள்ளுவர் தமது நூலை அரங்கேற்றிய காலத்தும், சீதையினது கற்பை ராமர் ஐயுறும்போதும், பிறநேரங்களிலும் இந்த அசரீரி வாக்கு யாவராலும் கேட்கப்பட்டது.

No comments:

Post a Comment