Friday 19 August 2022

கொஞ்சம் யோசிங்க.......பாஸ்!

ஸ்டைல் சலூன், பாய்ஸ் சலூன் என அந்த ஊரில் இரண்டே சலூன்கள்தான். ராமு முடிவெட்ட வேண்டும். இரண்டு சலூன்களையும் பார்த்தான். ஸ்டைல் சலூன் சுத்தமாக இருந்தது. அதன் ஓனர் தலைமுடி, மீசை எல்லாம் அழகாக ட்ரிம் செய்யப்பட்டு பளிச் என இருந்தார். பாய்ஸ் சலூன் கொஞ்சம் அழுக்காக இருந்தது. அதன் ஓனர் கடா முடி, தாடியுடன் இருந்தார். ஆனாலும், ராமு பாய்ஸ் சலூனுக்கே சென்றான். ஏன்?

கொஞ்சம் நல்லா யோசிங்க... விடை தெரியாதவங்க, அப்படியே ஸ்க்ரோல் பண்ணுங்க...

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

விடை: ஸ்டைல் சலூன் சுத்தமாக இருந்ததால் அங்கு கூட்டமே வராது என்று நினைத்து, பாய்ஸ் சலூனுக்கு ராமு சென்றான் என்று நீங்கள் நினைத்தால் அது தப்பு. அந்த ஊரில் இரண்டே சலூன்கள்தான் இருக்கிறனஎன்றால், அந்த சலூனின் உரிமையாளர்கள் பரஸ்பரம் இன்னொரு சலூன் உரிமையாளரிடம்தான் முடிவெட்டிக்கொள்ள வேண்டும். இருவரில் ஸ்டைல் சலூன் உரிமையாளர் அழகாக டிரிம் செய்த முடியுடன் பளிச்சென்று இருந்தால், அவர் பாய்ஸ் சலூன் ஓனரிடம்தானே முடி வெட்டியிருக்க வேண்டும். அந்த லாஜிக்!

No comments:

Post a Comment