Thursday 31 January 2019

LESSONS FROM CROW

The Lessons

1. When the world mentally labeled that white is clean and pure, whereas black is dirty and dark, crows don’t care about these labels. They simply didn’t get identify with it. They accept the way they are and live the life by being themselves.
Lesson: Acceptance and detachment. When you accept yourself and detach from labels made by the mind, you get to connect with your true-self. And it is easier to be your true self without any mind label identification.
2. Have you seen any crow hidden behind the tree because she’s not as colorful as other birds? Have you seen any crow that feels so shy and hide her loud voice? Crows are one of the birds that appear in front of you with high self-esteem. One of the evidence is their appearance rather louder than silence. What are they telling us about self-esteem?
Lesson: Be loud and be bold about yourselves. Even if you feel that you are lack compare to others, even if you feel less pretty compare to others and many more of lack, accept it because it will help you increase your self-esteem.
Conclusion:
And always be proud of yourself! Expose your talents, your skills, your voice, your opinions, your knowledge about life from the world. Do it with kindness and love. What the world need right now is people who can fit the puzzle of life correctly by being themselves.Accept whoever you are because acceptance is beautiful life in making. Never hide yourself. Face the world with all the self-esteem you have. Throughout the time, it will increase and become stronger inside you.

Remember this; when the crows not trying to be others, it gives a sense of beauty in the world of birds. The world has colorful birds and also just one color bird; the black crow. This is not sacrifice. This is the acceptance of being. And YOU are unique. We are unique. Only by being yourself, you are helping others being theirs. All of it will fit the puzzle of life beautifully.
- from net
இதை படித்ததும், நமது முன்னோர்கள் காகத்திடமுள்ள ஆறு குணங்களை ஒரு வெண்பாவாக பாடியுள்ளது ஞாபகம் வந்தது. 
அதையும் கீழே தந்துள்ளேன்.




காலை எழுந்திருத்தல் காணமலே புணர்தல்
மாலை குளித்து மனை புகுதல்சால
உற்றாரோடுண்ணல் உறவாடலிவ் வாறும்
கற்றாயோ காக்கைக் குணம்

Monday 21 January 2019

எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நினைவுகள் - 29

Dr M S உதயமூர்த்தி 

ஆழியாறில் 2003ல் அருட்தந்தை நடத்திய நதி நீர் இணைப்பு கருத்தரங்கில் 
Dr M S  உதயமூர்த்தி அவர்கள் 


எனது இளமைப்பருவத்தில் எனக்கு நல்லதொரு வழிகாட்டியாக அமைந்தவர்  Dr MSU அவர்கள். எங்கள் ஊருக்கு அருகாமையில் உள்ள விளநகர் கிராமத்தில் பிறந்த இவர் மயிலாடுதுறை உயர்நிலைப்பள்ளியில் கல்வி கற்றவர். இவரின் உறவினர்கள் எங்கள் வீட்டிற்கு அருகாமையில் வசித்ததால் இவருடைய தொடர்பு என் சித்தப்பாவிற்கு கிடைத்தது. 

இவரை உயர்நிலைக்கு ஆளாக்கிய இவரது சகோதரி கணவர் அண்ணாமலைப் பல்கலைக்கழக மின்துறை பேராசிரியர் பாலசுந்தரத்திடம்தான் நான் பொறியியல் பயின்றேன். Dr MSU அமெரிக்காவிலிருந்து வரும்போதெல்லாம் சிதம்பரத்தில் பேராசிரியர் இல்லத்திற்கு வரும்போது எங்கள் வகுப்புகளுக்கும் வந்து உரையாடுவார். இவரது வளர்ச்சிக்கு உதவிய உறவினர் பேரா. சிங்காரம் அவர்களையும்  சில முறை சந்த்தித்து அறிவுரை பெற்றிருக்கின்றேன். 

அறிஞர் அண்ணா முதல்வராக இருந்தபோது யேல் பல்கலைக்கழகத்தில் விருது பெற்றபோது துணை நின்றவர் அவர். எம்ஜியார் அமெரிக்கா சென்றபோதும்  உதவியாய் இருந்தவர். 

1972ல் இவர் இந்தியா வந்திருந்தபோது மயிலாடுதுறையில் என் சித்தப்பா கடைக்கு வந்திருந்தார். அந்த ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்து 25ம் ஆண்டு வெள்ளிவிழா கண்டிருந்தது. இந்தியாவின் குறிப்பாக தமிழ்நாட்டின் நிலை கண்டு மனம் வெதும்பி 
" தமிழ்நாடு எங்கே போகிறது? " என விகடனில் பல கட்டுரைகள் எழுதினர்.

நான் பொறியியல்துறை மாணவனாக படித்தபோது அவரின் " எண்ணங்கள் " கட்டுரைகளினால் ஈர்க்கப்பட்டு அவருக்கு கடிதம் எழுதி பேரா. பாலசுந்தரத்தின் மாணவன் எனக் குறிப்பிட்டு எனது கருத்துகளைத் தெரிவித்திருந்தேன். தவத்திரு சித்பவானந்தரின் " தினசரி தியானம் " சிறு நூலினைப் பற்றி என் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன். இந்த நூலினைப் பற்றி சிலாகித்து அவர் தன்  அடுத்த நூலான "மனம், பிரார்த்தனை, மந்திரம் " என்ற தனது நூலினால் குறிப்பிட்டிருக்கின்றார்.

அருட்தந்தை மகரிஷி அவர்களின் மனவளக்கலை அவருக்குப் பிடித்திருந்தது. சென்னை தூர்தர்ஷனில்  மகரிஷி அவர்களை  Dr MSUபேட்டி நிகழ்ச்சி சிறப்பாக அமைந்தது.

இவரின் " வாழ்க்கையை அமைக்கும் எண்ணங்கள் ( ஜேம்ஸ் ஆலன் புத்தகத்தைத் தழுவியது ) " புத்தகத்தை நானும். மாலாவும் எங்கள் நண்பர்களுக்குப் பரிசளித்திருக்கின்றோம்.

2003ல் Dr MSUஆழியார் வந்திருந்தபோது மாலா அவரிடம் வெகுநேரம் உரையாடினாள். அவரது மருமகள்பெயரும் மாலாதான் ( பேரா. பாலசுந்தரத்தின் மகள் ) என்று சொல்லி மாலாவிற்கு " வாழ்க்கயை அமைக்கும் எண்ணங்கள் " புத்தகத்தில் வாழ்த்துக்கூறி எழுதிக் கொடுத்தது எங்களால் மறக்கமுடியாத ஒன்று.

இன்று அவரது நினைவு தினம் ( மறைந்து ஆறு ஆண்டுகளாகி விட்டது ).

இன்று எனது நட்சத்திர பிறந்ததினம் ( தைப்பூசம் ). இந்நாளில் அவரை  நினைவு கூர்ந்து சில விஷயங்களை பகிர்ந்து அவருக்கு அஞ்சலி செய்கின்றேன். வாழ்க Dr MSU புகழ்!

**************************************************

2012ம் ஆண்டு தைப்பூசத்தில் " எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நினைவுகள் ' எழுத ஆரம்பித்தேன். ஆயிரக்கணக்கான தலைப்புகளில் நினைவுகளை எழுத ஆர்வம் கொண்டிருந்தேன். பல்வேறு வேலைகள் காரணமாகவும், Facebook , Twitter  மற்றும் Whats App வந்து blog படிப்பவர்கள் மிகவும் குறைந்துவிட்ட காரணத்தினாலும் மிகக் குறைவாகத்தான் எழுதியுள்ளேன். இனி நிறைய எழுதுவேன்.

எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நினைவுகள் -1 படிக்க இங்கே click செய்யவும்.

எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நினைவுகள் - 2  படிக்க இங்கே click செய்யவும்.

Tuesday 15 January 2019

எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நினைவுகள் - 28

பொங்கலோ பொங்கல் !
பொங்கல் வாழ்த்து அட்டைகள், மடல்கள் 


இரண்டு நாட்களாக whats app லும், முகநூலிலும் எண்ணற்ற பொங்கல் வாழ்த்துக்களைக் கண்டபோது பொங்கல் மலரும் நினைவுகளாய்  பொங்கலன்று பொங்கல் வாழ்த்து மடல்களைக் கொண்டுவரும் தபால்காரருக்காகத் தவம் இருந்ததுதான் முதலில் ஞாபகம் வருகின்றது.

பக்க்கத்து வீடு நண்பனுக்குக்கூட தபாலில் பொங்கல் வாழ்த்து அட்டை அனுப்புவதுதான் - இருவருக்குமே மகிழ்ச்சி! ஒவ்வொரு நண்பனுக்கும் பிடித்த மாதிரி, உறவினர்களுக்குப் பிடித்த மாதிரி, ஆசிரியர்கள்/பெரியவர்களுக்குப் பிடித்த மாதிரி வாழ்த்து மடல்களைத் தேடி பிடித்து, அதில் உள்ள கவிதை வரிகளையும் சரியாகத்  தேர்ந்தெடுத்து , பிறகு அவர்களுக்குத் தெரியாமல் சஸ்பென்ஸாக அவர்கள் முகவரி கண்டு பிடித்து தபாலில் சேர்ப்பது ஓர் இன்பம்! அப்போதெல்லாம் book post ல் தபால் அனுப்புவது 8 paise மட்டுமே! post card க்கு 5 paise தான்! பொங்கலன்று தபால்காரர் கத்தை, கத்தையாக வாழ்த்து மடல்களைக் கொண்டு வருவார். அன்று அவருக்கு லீவ் இருப்பதில்லை.

வந்த மடல்கள் கவரைப் பிரித்து அதில் உள்ள படங்களை பார்ப்பது - எவ்வளவு விதவிதமான படங்கள் - சாமி படங்கள், தலைவர் படங்கள், நடிகர் / நடிகைகள் படங்கள், கரும்பு சுவைக்கும் குழந்தைகள்/சிறுவர்கள் படங்கள், ஏர் பிடிக்கும் விவசாயி படங்கள், அலங்கரிக்கப்பட்ட மாடுகள்  என எண்ணற்ற வகைகளில் வாழ்த்து மடல்கள் வரும்.


இவற்றை விற்பதற்கென்றே பொங்கலுக்கு முன் பல கடைகளில் சிறப்பாக எல்லா மாடல்களும் பார்வையில் படும்படி வைத்திருப்பார்கள். இவற்றைப் பார்ப்பதற்கென பல கடைகளுக்குச் சென்று வந்த ஞாபகம் பசுமையாக உள்ளது. எனது உயிர்த் தோழனுக்காக மூன்று நாட்கள் பல கடைகளில் வாழ்த்து மடல் தேடி மெனக்கட்ட அனுபவம் - படம் நன்றாக இருந்தால் அதில் உள்ள வாழ்த்து கவிதை நன்றாக இருக்காது - எப்படியோ கிடைத்து அனுப்பியதில் அடைந்த மகிழ்ச்சி இன்றும் ஒட்டிக்கொண்டுள்ளது.

என் நண்பன் post card ல் இங்க் spray  பண்ணி அழகாக வாழ்த்து மடல் தயாரிப்பான். அதில்  ஒன்றை வெகுகாலமாகப் பத்திரப்படுத்தி வைத்திருந்தேன் - வழக்கம்போல தொலைத்து விட்டேன். 

வாழ்த்து அனுப்பாத நண்பர்களுக்குத் தண்டனையாக ஒரு காரியம் செய்வோம் - Post Card ஐ பாதியாக வெட்டி முகவரி உள்ள பகுதியில் நண்பன் முகவரி எழுதி
 " மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள் " என எழுதி post செய்துவிடுவோம். இப்படி அனுப்பப்பட்ட card களுக்கு 10 paise due கட்டவேண்டும்.

பெரிய வகுப்பில் படிக்கும்  பசங்கள் மாணவிகளுக்கு வாழ்த்து மடல் அனுப்பி வாங்கிக்கட்டிக்கொள்ளும் நிகழ்ச்சிகளும் பொங்கலின்போது நடைபெறும்.

எதிர்பாராமல் வெகுநாட்களுக்குப் பிறகு பொங்கல் வாழ்த்து அனுப்பியதின்  மூலம் புதுப்பிக்கப்பட்ட நட்புகள்/உறவுகளும் உண்டு.

எல்லையில்லா மகிழ்ச்சியினை வாரி, வாரி வழங்கிய அந்த வாழ்த்து மடல்கள் இன்று கண்ணில் படுவதில்லை. ஏராளமான வாழ்த்துக்கள்
whats app ல் குவிந்தாலும் மனம் பழைய வாழ்த்து மடல்களுக்குதான்  ஏங்குகின்றது!