ஞானவயல்
Wednesday, 9 September 2026
மாமியார்- மருமகள்
உங்க பிள்ளை கிட்டே,நான் எதை சொன்னாலும் அவபேச்சைகேட்காதேடான்னு தினமும்,மந்திரம் போல ஓதி சொல்லி அனுப்புறீங்களே…உங்களுக்கு வெக்கமாஇல்லை….
அவன் என் பிள்ளை…. என் பேச்சை தான் கேப்பான்….இதிலே என்ன வெக்கம்
சரியான அம்மா…நீங்க. வெட்கம்…மானம் ..சூடு…. சொரணை எதுவும் இல்லை உங்களுக்கு…. நான் எதை சொல்ல வாயை தொறந்தாலும் ரெண்டு காதையும் பொத்திக்கிறாரு….. எதையும் பேச முடியலே…
அடியே ரொம்ப ஓவாரா பேசறே….. ஒரு மாமியாரை பேசும் பேச்சா இது….
மாமியார்…….பெரியமாமியார்கொஞ்சம் கூட இங்கிதம்இல்லை…. படிப்பறிவு இருந்தா தானே……
அப்ப……என்னை அறிவுகெட்டவள் ன்னுசொல்றியா…. எல்லாம் நீ வேலைக்கு போற திமிரு…. இப்படி எல்லாம் பேச சொல்லுது உன்னை…..
பொண்டாட்டி சொல்லறதை கொஞ்சமாவது ஒரு ஆம்பிளை கேக்கணும்…. அது தான் குடும்பத்துக்கு அழகு…..
ஒரு நாளைக்கு கொஞ்சம் பேசுவே….. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா… பேசி தலையணை மந்திரம் ஓதி….அவனை எங்களிடமிருந்து பிரிப்பே…. இந்த காலாத்துபொட்ட புள்ளைங்க பத்தி தெரியாதா எனக்கு….
பாவி….. பாதகி மாமியார்…நீ…..இந்த குடும்பம் உருபடவே படாது….. ஒரு பொம்பளைக்கு இவ்வளவுஆணவம் இருக்க கூடாது…
நீ தாண்டி ஆணவகாரி…. அகந்தை எல்லாம் கலந்து வளர்த்தாங்க உங்க வீட்டுலே….
நீங்கமட்டும் உங்க பிள்ளை யை எப்படி வளர்த்தீங்கலாம்…. பொண்டாடடிஎன்ன சொல்ல வறா….. நல்லதா…. கெட்டதா…ன்னு காதை கொடுத்து கேக்கணும்…
என்னடி பெருசா நல்லது சொல்ல போறே……அந்த எண்ணம் கூட இருக்கா உனக்கு……
இந்தபாழடைந்தவீட்டுலேஇருபதாயிரம் வாடகை கொடுத்துக்கினேஇருங்க காலத்துக்கும்…. அதுவும் நீங்க படுக்குற கூடத்திலே இன்னைக்கோ நாளைக்கோ சுவர் இடிஞ்சி உங்க தலையிலே விழுற மாதிரி இருக்கு….
ஆமா.. நீ ஆபத்பாண்டாவ….நீ தான் காப்பாத்தபோறீயா…. அதான் நல்லவீடா பாக்கறேனே…. கிடைக்கலயே…
ஏன் வாடகை வீட்டுக்கு இனி போகணும்….. குடும்பத்தோடநாம எல்லாம் சொந்த வீட்டுக்கு போலாம் ன்னு பார்த்தா….. அவர் கிட்ட பேச விடாமே செஞ்சிட்டியே…
என்னடி சொல்றே….. சொந்த வீடா…..
ஆமா…நான் வேலை செய்யுற பாங்க்குலேஹௌசிங் மேளாநடந்தது.,. எழுபதுலட்சம்ரூபாய் வட்டியி ல்லாகடன் கொடுப்பாங்க…அதை வாங்கி சொந்தமாஒரு வீடுவாங்கலாமுன்னுஅவர் கிட்ட…..டிஸ்கசன்பண்ணலாமுன்னு., பத்து நாளா ட்ரை பண்றேன்….. அவர் என்னடான்னா.. காதை மூடிக்கிறாரு…
அய்யோ ராமா…இதை என் கிட்ட மொதலில் சொல்லியிருக்ககூடாதா செல்லம்…அவனை ஏன் கேக்குறே…. நீ வாங்கு…மருமகளே…..
இப்ப முடியாது…. டைம் பார் ஆயிடிச்சி…. இனி அடுத்த வருஷ ஹௌசிங் மேளா தான்….
நான்.. பாவிடி,தங்கமே….. உன் நல்ல எண்ணத்தை புரிஞ்சிக்காமே….. என்னென்னமோ செய்துட்டேன்…. பேசிட்டேன்…..
அட விடுங்க அத்தை…. அடுத்த வருஷம் லோன் வாங்கி வீடு வாங்கினா போகுது
மதிப்பு
ஒரு ஊரில் ஒரு பெரிய தத்துவஞானி வசித்து வந்தார். அவரிடம் நூற்றுக்கணக்கான சீடர்கள் கல்வி கற்று வந்தனர். சீடர்களுக்குப் பாடம் நடத்துவதோடு நின்றுவிடாமல், அவர்களின் சிந்தனையைத் தூண்டும் விதமாக அடிக்கடி சில சோதனைகளையும் வைப்பது வழக்கம்.
ஒரு நாள், தன் சீடர்களை அழைத்து ஒரு சிறிய சோதனை வைத்தார் ஞானி.
குரு தன் கையில் ஒரு சிறிய கல்லை எடுத்துக் கொண்டு சீடர்களிடம் காட்டினார்.
"இந்தக் கல்லை எடுத்துச் சென்று சந்தைக்குச் செல்லுங்கள். முதலில் இதைக் காய்கறி விற்கும் வியாபாரியிடம் காட்டுங்கள். அவர் என்ன விலை தருகிறார் என்று கேளுங்கள். பிறகு, அதைத் துணி வியாபாரியிடம் காட்டுங்கள்; இறுதியாக ஒரு நகைக் கடைக்காரரிடம் காட்டுங்கள். ஆனால், எந்தக் காரணத்தைக் கொண்டும் இந்தக் கல்லை யாரிடமும் விற்றுவிடாதீர்கள்; விலையைக் மட்டும் கேட்டு வாருங்கள்" என்றார்.
சீடர்களில் ஒருவன் அந்தக் கல்லை வாங்கிச் கொண்டு சந்தைக்குச் சென்றான்.
காய்கறி வியாபாரி: கல்லைக் கண்ட வியாபாரி, "இது விசித்திரமாக இருக்கிறதே, ஒரு கிலோ தக்காளிக்கு ஈடாக இதைத் தருகிறாயா?" என்றார்.
துணி வியாபாரி: அந்தச் சீடன் அடுத்ததாகத் துணி வியாபாரியிடம் சென்றான். அவர் கல்லைப் பார்த்துக் கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு, "இது ஒரு சாதாரண கூழாங்கல் போல் தெரிகிறது. இதற்கு ஈடாக இரண்டு முழம் துணி தருகிறேன்" என்றார்.
நகை வியாபாரி: கடைசியாகச் சீடன் ஒரு பெரிய தங்க நகைக்கடைக்குச் சென்றான். நகைக்கடைக்காரர் அந்தக் கல்லைக் கையில் எடுத்ததும் வியப்பால் கண்கள் விரிந்தன.
உடனே தன் முதலாளியைக் கூப்பிட்டார். இருவரும் பல கோணங்களில் லென்ஸ் கொண்டு பரிசோதித்தனர்.
கடைசியாக நகைக்கடைக்காரர் நடுங்கும் குரலில், "தம்பி, இது சாதாரணக் கல்லல்ல; விலைமதிப்பற்ற அபூர்வமான மாணிக்கக் கல்! என் வாழ்நாளில் நான் இவ்வளவு பெரிய மாணிக்கத்தைப் பார்த்ததில்லை. என் மொத்த சொத்தையும் விற்றாலும் இதன் விலையைக் கொடுக்க முடியாது. இதை எங்கிருந்து எடுத்தாய்?" என்றார்.
சீடன் கல்லை விற்காமல், வியப்புடன் ஓடிவந்து குருவிடம் நடந்ததைக் கூறினான்.
குரு புன்னகையுடன் சீடர்களைப் பார்த்துச் சொன்னார்:
"வாழ்க்கையும் இதைப் போன்றதுதான் மக்களே! நீ உன்னை எங்கு வைத்துப் பார்க்கிறாய், யாருடன் பழகுகிறாய் என்பதைப் பொறுத்துத்தான் உன் மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது."
உன்னை அறியாதவர்களிடம் சென்றால், உன்னை ஒரு காய்கறிக்கல்லாக அல்லது மதிப்பற்ற பொருளாக நினைத்து விலை பேசுவார்கள்.
உன்னை ஓரளவு புரிந்து கொண்டவர்களிடம் சென்றால், உனக்கு ஒரு சாதாரண துணி அளவிற்கான மதிப்பைத் தருவார்கள்.
ஆனால், உன்னுடைய உண்மையான குணத்தையும் திறமையையும் அறிந்தவர்களிடம் நீ செல்லும்போது, உன் மதிப்பு விலைமதிப்பற்றதாக மாறும்!
எனவே, உன்னை யார் எப்படி மதிக்கிறார்கள் என்று கவலைப்படாதே. உன் உண்மையான மதிப்பை உன்னைக் கவனிப்பவர்கள்தான் அறிவார்கள்
விளக்கு
ஒரு பெரிய குருவிடம் ஒரு சீடன் கல்வி கற்று வந்தான். அவனுக்குத் தன் மீது ரொம்பவும் பெருமை; தான் எல்லாப் புத்தகங்களையும் கற்றுவிட்டதாகவும், உலகில் தனக்குத் தெரியாத விஷயங்களே இல்லை என்றும் நினைத்து அகந்தையுடன் திரிந்தான்.
ஒரு அமாவாசை இரவு. சுற்றிலும் இருள் சூழ்ந்திருந்தது. குரு தன் சீடனிடம், "இந்த இருட்டில் நான் வெளியே சென்றுவிட்டு வருவதற்கு எனக்கு ஒரு விளக்கு வேண்டும். போய் ஒரு விளக்கை எடுத்து வா," என்றார்.
சீடனும் ஓடிப்போய் ஒரு சிறிய களிமண் விளக்கில் எண்ணெய் ஊற்றி, திரி போட்டு, அதை எரியச் செய்து குருவிடம் கொண்டு வந்து நீட்டினான்.
குரு அந்த விள்ககை வாங்கிக் கொண்டு சீடனைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார்:
"இந்த விளக்கு எரியத் தொடங்குவதற்கு முன்பு எங்கிருந்து வந்தது? இப்போது ஒளிந்திருக்கும் இந்த வெளிச்சம், விளக்கு எரிவதற்கு முன்பு எங்கே இருந்தது?"
சீடன் திகைத்துப் போனான். சற்று யோசித்துவிட்டு, "தெரியவில்லை குருவே. விளக்கு இல்லாதபோது வெளிச்சம் எப்படி இருந்திருக்க முடியும்?" என்றான்.
புன்னகைத்த குரு விளக்கைத் தன் கையில் ஏந்தியவாறு சொன்னார்:
"பார் மகனே! இந்த வெளிச்சம் எங்கேயோ தூரத்தில் இருந்து வரவில்லை. இந்த விளக்குக்குள் ஊற்றப்பட்ட எண்ணெய், போடப்பட்ட திரி, அதை எரியச் செய்த தீப்பொறி—இவை அனைத்துமே இந்தச் சின்ன விளக்குக்குள் ஏற்கனவே மறைந்திருந்தன. நாம் ஒரு சிறிய தீயைக் கொண்டுவந்தபோதுதான், அதற்குள் இருந்த வெளிச்சம் வெளியே வெளிப்பட்டது.
மனிதனின் ஆன்மாவும் அப்படித்தான். ஞானம், அன்பு, அமைதி எல்லாமே மனிதனுக்குள்தான் ஏற்கனவே இருக்கின்றன. உலகப் படிப்புகளும் அனுபவங்களும் அந்தத் தீப்பொறியைப் போல, அவனுக்குள் உறங்கிக் கிடக்கும் பேராற்றலை வெளிக்கொணர்கின்றனவே தவிர, வெளியிலிருந்து எதையும் புகட்டுவதில்லை."
வெளிச்சம் என்பது விளக்குக்கு வெளியேயிருந்து வருவதில்லை; அது விளக்குக்குள் இருக்கும் எண்ணெயும் திரியும் சேரும்போது இயல்பாக உருவாவது.
அதுபோலவே, மகிழ்ச்சியும் அமைதியும் நமக்குள் தான் இருக்கின்றன. அதை வெளியே தேடுவதை விட, நமக்குள்ளேயே தேட வேண்டும்.
நம்மிடம் உள்ள திறமைகளும் நல்ல குணங்களும் எப்போதோ மறைந்திருக்கும் ஆற்றல்கள்தான். சரியான சூழலும் முயற்சியும் அமையும்போது, அந்த அகவிளக்கு போல பிரகாசமாக எரியத் தொடங்கும்
அருவருப்பான உண்மைகள்
- ஒரு ஜீவன் கூட உண்மையாக உங்களுக்கு உதவவும் முடியாது வதைக்கவும் முடியாது! நீங்கள் - நீங்கள் மட்டுமே முக்கியமாக மனம் ..உங்கள் வாழ்க்கைக்கு முழு பொறுப்பு!
- உங்கள் செல்வம், பதவி, ஆள் பலம் குடும்ப பலம் வைத்து நீங்கள் இந்த உலகத்தில் மதிக்க படுவீர்கள் சாகும் வரையில்... இது எதுவுமே கூட வராது! அதுக்காக மட்டும் வாழணுமா ?? யோசி
- சாவின் விளிம்பை சந்தித்திருந்தால் இறைவனை ஒரு விநாடியாவது “இன்னிக்கு தேங்க்ஸ் ! “ நன்றி சொல்வீர்கள்
- கண் பிரச்சனை வந்தால் முன்பை விட உலகம் மிக அழகாக தெரியும், எல்லா ஏனோ தானோ விஷயங்களும் கரெக்ட்டா தெரியும்; perfection is a myth! Imperfections are also beautiful❤️🙏
- எதை எவ்வளவு முறை எங்கெங்கு தேடினாலும், அது கிடைத்தாலும் ...கொஞ்ச நாள் கழித்து வேறு ஒரு தேடலே வாழ்வின் இயல்பு! ஆகையால் எதுவும் யாரும் எந்த இடமும் மிக பெரியதும் இல்லை மிக சிறியதும் இல்லை! உணர்வை தாண்டி அறிவை தாண்டி அமைதி கிடைக்க மிக மிக மிக உயர்ந்ததை மட்டும் யோசிக்க வேண்டும்!
- வறுமை, பதவி விலகல், விபத்து, நோய், திடீர் திருப்பங்கள், துரோகம் இப்படி எதை எல்லாம் பார்த்து அஞ்சுகிறோமோ அது தான் உண்மையை கன்னத்தில் அறைந்து காட்டும்! எதெல்லாம் தோற்றமளித்து நல்லது செய்து கொண்டிருக்கும் மாயைகள் உண்மைகளை அழகாக மறைக்கும்! நிரந்தரம் நீ மட்டும் தான் உனக்கு என்று ஒன்னும் இல்லாமல் இறைவன் முன் நிற்பதே உண்மை!
- மனிதர்கள் வாழ்வின் காலச்சக்கரத்தின் பருவ நிலை, seasons இதனை விட மிக வேகமாக மாற கூடியவர்கள்! மனித குணம் மாறி கொண்டே இருக்கும்..! கண்டிப்பாக! தன்னை மட்டும் நம்புவது சிறந்தது
- உன் முகத்தின் முன் திடீர்னு மிகவும் புகழ்பவன் உனக்கு பின் மோசடி செய்துவிட்டு இதனை சந்தேகம் வரக்கூடாது என்று இப்படி பேசுகிறான் என்பதை முதலில் உணர்ந்துகொள்
- அவரவர் தன் பூர்வ அத்தனை வாசனைகள் சேர்ந்த மனிதர்! அவரவர் ஆன்ம நிலை முற்றிலும் வேறு.. எனக்கு புரிகிறது அவனுக்கு புரியல; எனக்கு கருணை இருக்கு அவனுக்கு இல்லை, எனக்கு மக்கு மாதிரி ஜடம் பிரைன் அவனுக்கு அப்படிப்பட்ட ஆற்றல்.. இப்படி பட்ட துரோகம் செய்தானே ?? இதெல்லாம் அடுத்த முறை தோன்றும் பொழுது .. ஆன்ம உணர்தலில் அவரவர் நிலைப்பாடு அவரவர் வாசனை அவரவர் குணத்தின் மாற்றத்தில் மிக பெரிய வேறுபாடு இருப்பது தெரிந்தால் ......பிழைத்தோம்!
- காரணமே இல்லாமல் உனக்கு கெடுதிகள் நினைப்பவர், செய்பவர், சொல்பவர்களால் உன் பாவம் போகும்! அதை கடந்து செல் ...























