ஞானவயல்
Friday, 17 July 2026
நேர்மறையாக சிந்திக்கணுமா.....
நேர்மறையாக சிந்திக்கணுமா..? இதை மட்டும் மறக்காம தினமும் படிங்க..!
நேர்மறையான எண்ணங்களோடே எப்பவும் இருக்கணும்னு எல்லாருக்கும் ஆசை தான். ஆனாலும் சில சமயம் சூழ்நிலைகள் நம்மை நிலைகுலையச் செய்து விடுகின்றன. உதாரணத்துக்கு உடலில் நோய் ஏதும் வந்து விட்டால், இனி அவ்ளோதானா.... நம்ம கதை முடிஞ்சுதான்னு பயம் வரும். அதே போல பெரிய சிக்கலில் மாட்டிக்கிட்டாலும் இனி தப்பிக்கவே முடியாதா என்ற எண்ணம் வரும்.
இதில் இருந்து மீள என்னதான் வழி. நேர்மறை எண்ணம் ஒன்றே வழி. நீங்கள் எப்போதும் இதே சிந்தனையுடன் இருக்கும்போது உங்களுக்குள் ஆற்றல் பெருகும். தன்னம்பிக்கை வளரும். அதன்மூலம் உங்களுக்குத் தேவையானவற்றை நீங்களே பூர்த்தி செய்யும் வல்லமை உங்களுக்கு வந்து விடும். அப்புறம் எந்த பெரிய பிரச்சனை ஆனாலும் சரி. தூசு மாதிரி ஊதித்தள்ளி விட்டுப் போய்விடுவீர்கள். அதெல்லாம் சரி. அந்த ஒண்ணுதானே இடிக்குது. எப்படி பாசிடிவ் எண்ணங்களுடனே இருப்பது?
அதுக்கு ஏதாவது டிரிக் இருக்கா? வழி இருந்தா சொல்லுங்களேன் என்று உங்கள் மனது கேட்பது புரிகிறது. அதற்கு தான் இந்த பிரத்யேக டயலாக்குகள். தினமும் இதை உங்களுக்குள் ஒருமுறையாவது சொல்லிப் பாருங்கள். அப்புறம் என்ன ஆட்டோமேட்டிக் மெஷின் மாதிரி நீங்கள் எப்பவும் நேர்மறை எண்ணங்களுடனேயே இருக்கத் தொடங்கி விடுவீர்கள். என்ன ரெடியா? வாங்க அந்த சூப்பர்ஹிட் டயலாக்குகளைப் பார்ப்போம்.
என் வழியில் வரும் எதையும் கையாளும் திறன் எனக்கு உண்டு. சரியான முடிவுகளை எடுப்பேன் என்று என் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. நான் கடந்து வந்த தூரத்தை நினைத்து பெருமைப்படுகிறேன். நான் என்னால் முடிந்த சிறந்ததைச் செய்கிறேன். அதுவே போதுமானது. என் வாழ்வில் உள்ள நல்ல விஷயங்களில் கவனம் செலுத்த நான் விரும்புகிறேன். என் கதையை மாற்றும் சக்தி எனக்கு உண்டு.
நான் ஒவ்வொரு நாளும் கற்றுக்கொண்டும் வளர்ந்துகொண்டும் இருக்கிறேன். என் சந்தேகங்களை விட நான் வலிமையானவன். வெற்றி பெறும் என் திறனை நான் நம்புகிறேன். நான் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் இருக்கத் தகுதியானவன். என் எண்ணங்களை நான் கட்டுப்படுத்துகிறேன், அவை என்னைக் கட்டுப்படுத்துவதில்லை. ஒவ்வொரு நாளும் நான் மேலும் சிறந்தவனாக மாறிக்கொண்டிருக்கிறேன்.
வாழ்க்கை என் மீது எதை எறிந்தாலும் என்னால் கையாள முடியும். இன்று நான் எப்படி உணர்கிறேன் என்பது என் கையில்தான் உள்ளது. நான் எல்லா சந்தேகங்களையும் கைவிட்டு, நம்பிக்கையைத் தழுவுகிறேன். நான் இருக்கும் விதத்திலேயே போதுமானவன். நான் மாறிவரும் இந்த மனிதனுக்காக நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நான் முழுமையின் மீது அல்ல, முன்னேற்றத்தின் மீது கவனம் செலுத்துகிறேன். மீண்டும் தொடங்குவதற்கு நான் அஞ்சுவதில்லை. நான் ஆற்றலாலும் நோக்கத்தாலும் நிரம்பியிருக்கிறேன்.




















