அடியே ! சாம்பார், ரசம், கூட்டு, பொரியல் எல்லாம் பிரமாதம் என்ன ருசி என்ன ருசி!
போதும் உங்க தற்பெருமை! நீங்க என்னை விட நல்லா சமைக்கிறீங்க என்று ஒத்துக் கொள்கிறேன்! பேசாம சாப்பிடுங்க!
அடியே ! சாம்பார், ரசம், கூட்டு, பொரியல் எல்லாம் பிரமாதம் என்ன ருசி என்ன ருசி!
போதும் உங்க தற்பெருமை! நீங்க என்னை விட நல்லா சமைக்கிறீங்க என்று ஒத்துக் கொள்கிறேன்! பேசாம சாப்பிடுங்க!
ஓர் இளைஞன் தன் தந்தையை பார்த்து கேட்டான்."*_
🔅#செல்போன்,
🔅#டி வி,
🔅#கம்ப்யூட்டர்,
🔅#இண்டர்நெட்
🔅#ஏசி,
🔅#வாஷிங்_மெஷின்,
🔅#கேஸ்_கனெக்ஷன்,
🔅#மிக்ஸி,
🔅#கிரைன்டர்,
*_இவை எல்லாம் இல்லாமல் உங்களால் எப்படி வாழ முடிந்தது?_*
*_தந்தை பதில் கூறினார்,_*
👌#மரியாதை,
👌#மானம்,
👌#மதிப்பு,
👌#வெட்கம்,
👌#உண்மை,
👌#நற்குணம்,
👌#நன்னடத்தை,
👌#நேர்மை,
👌#தெய்வபக்தி,
👌#தர்மம்,
👌#ஒழுக்கம்
*_இவை அனைத்தும் இல்லாமல் இப்போது நீங்கள் எப்படி வாழப்பழகி விட்டீர்களோ, அப்படித்தான்,_*
*_ஆம், 1940-1990 க்குள் பிறந்த நாங்கள் உண்மையாகவே வரம் பெற்றவர்கள்,_*
*_👍#நாங்கள்_சைக்கிள்_ஓட்டினோம்,_*
*_👍#ஹெல்மெட் அணியவில்லை,_*
*_👍பள்ளி முடிந்ததும் தோழர்களுடன் பொழுது சாயும் வரை விளையாடினோம்._*
*_👍டி வி யின் முன் உட்கார்ந்ததில்லை,_*
*_👍உயிருள்ள தோழர்களுடன் விளையாடினோம்._*
*_👍இண்டெர் நெட்டில் அல்ல,_*
*_👍தாகம் எடுக்கும் போது குழாய் தண்ணீர் குடித்தோம்,_*
*_👍#மினரல்_வாட்டர் அல்ல,_*
*_👍ஒரே தம்ளர் ஜூஸை மாற்றி, மாற்றி நான்கு நண்பர்களும் குடிப்போம். எந்த தொற்று நோயும் வந்ததில்லை,_*
*_👍தினமும் #அரிசி_சாதம் தின்போம். ஆனாலும் எடை கூடியதில்லை, சர்க்கரை நோய் வந்ததில்லை._*
*_👍எங்கு போனாலும் வெறுங்காலுடன் நடப்போம், எந்த பாதிப்பும் வந்ததில்லை,_*
*_👍எங்கள் பெற்றோர் எந்த ஊட்ட சத்து உணவும் தந்ததில்லை, ஆனாலும் ஆரோக்கியமாகவே இருந்தோம்,_*
*_👍எங்கள் பெற்றோர்கள் பணக்காரர்கள் அல்ல, ஆனாலும் அன்புக்கும் பாசத்துக்கும் பஞ்சம் இல்லை,_*
*_👍பெற்றோர்களோடு படுத்து உறங்கினோம், ஹாஸ்டல் அறைகளில் அல்ல,_*
*_👍உறவினர்கள், மற்றும் நண்பர்கள் வீட்டிற்கு, முன்னறிவிப்பின்றி போவோம். வரவேற்பிற்கும், விருந்திற்கும் குறை இருந்ததில்லை,_*
*_👍எங்களின் போட்டோக்கள் எல்லாம் கருப்பு வெள்ளை தான். ஆனால் எங்களின் நினைவுகளோ வண்ண மயமானவைகள்,_*
*_👍எங்களின் குடும்பங்கள் எல்லாம் அன்பை கொட்டும் கூட்டுக் குடும்பங்கள், உங்களைப் போன்று தனிக்குடித்தனம் அல்ல,_*
*_👍எங்கள் தலைமுறையினர் எல்லோரும் பெற்றோர்களின் கட்டளைக்கு கட்டுப்பட்டு வளர்ந்தோம்._*
*_👍பெற்றோர்களும் பிள்ளைகளின் உணர்வுக்கு மிகுந்த மதிப்பளித்தார்கள்,_*
ஆலயம் சென்றோம்
மன அமைதியோடு மருத்துமனை செல்லாமல்
ஆரோக்கியமாக வாழ்ந்தோம்
*_👍சுருக்கமாக சொன்னால்,_*
*_⚘WE ARE THE LIMITED EDITIONS.⚘_*
*_👍ஆகவே எங்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள்._*
*_👍#அன்பாக_இருங்கள்,_*
#மனமே_அமைதி_கொள்
வெண்பா விதிமுறைகள்
இந்த அறுவர் தான் தமிழ் செய்யுட்களுக்குத் தலையாய தலைவர்கள். வெண்பாவிலும் இவர்கள் ஆதிக்கம் தான்.
எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை
இவர்களைப் பற்றி சுருக்கமாக:
அசை இரு வகைப்படும்.
- நேரசை = ஒரு குறிலோ, ஒரு நெடிலோ, ஒற்றுகள் எத்தனை வேண்டுமானாலும்.
- நிரையசை = இரு குறிலோ, ஓர் குறிலோடு ஒரு நெடிலோ, ஒற்றுகள் எத்தனை வேண்டுமானாலும்.
விதிகளுக்குள் நுழைவோம்.
விதி #1
விதி #2
விதி #3
விதி #4
விதி #5
விதி #6
இவற்றில் ஏதேனும் ஒரு முறையில் அமைதல் வேண்டும்.
-
உதாரணம் 1:
இரண்டு அடிகள் கொண்ட, வள்ளுவ நாயனாரின் ஒரு குறள் வெண்பா
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
-
அசை பிரித்து
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு.
-
விதி #1: இரண்டு அடிகள்
விதி #2: முதல் அடி நான்கு சீர்கள், இரண்டாவது அடி மூன்று சீர்கள்
விதி #3: ‘/’ கொண்டு அசைகள் பிரிக்கப்பட்டுள்ளது
விதி #4: உலகு = ‘பிறப்பு’ வாய்பாடு
விதி #5: NA
விதி #6: 2. இரண்டாம் எழுத்து ஒன்றி வருதல் = எதுகை
-
உதாரணம் 2:
நான்கு அடிகள் கொண்ட, ஔவைப் பாட்டியின் ஒரு வெண்பா
கருங்காலிக் கட்டைக்கு நாணாக்கோ டாரி
இருங்கதலித் தண்டுக்கு நாணும் பெருங்கானிற்
காரெருமை மேய்க்கின்ற காளைக்கு நான்தோற்ற
தீரிரவு துஞ்சாதென் கண்.
-
அசை பிரித்து
கருங்/கா/லிக் கட்/டைக்/கு நா/ணாக்/கோ டா/ரி
இருங்/கதலி/த் தண்/டுக்/கு நா/ணும் பெருங்/கானிற்
கா/ரெரு/மை மேய்க்/கின்/ற கா/ளைக்/கு நான்/தோற்/ற
தீ/ரிர/வு துஞ்/சா/தென் கண்.
-
விதி #1: நான்கு அடிகள்
விதி #2: இறுதி அடி மூன்று சீர்கள், ஏனைய மூன்று அடிகளில் தலா நான்கு சீர்கள்
விதி #3: ‘/’ கொண்டு அசைகள் பிரிக்கப்பட்டுள்ளது
விதி #4: கண் = ‘நாள்’ வாய்பாடு
விதி #5: ‘ரு' எழுத்து ஒன்றி வருவது.
விதி #6: அடிகள் (1&2), (3&4) - இரண்டாம் எழுத்து ஒன்றி வருதல் = எதுகை
-
இது போக ஒரு சீர் நேரசையில் முடிந்தால் அடுத்து வரும் சீர், நிரையசையில் தொடங்க வேண்டும். ஒரு சீர் ‘மா’வில் முடிந்தால், அடுத்த சீர் ‘நிரையில்’ தொடங்க வேண்டும். காயிலும் விளத்திலும் முடிந்தால், அடுத்தது நேரில் தொடங்கவேண்டும்.
‘தளை தட்டுது’, ‘சுவையே இல்லை’ போன்ற பதங்கள் செய்யுட்களில், அதுவும் வெண்பாக்களில் மிகப் பிரபலம். இன்னும் இதைப் பிரித்துப் போட்டு பல நாட்கள் பேசற அளவிற்கு நம் முன்னோர்கள் ஆய்ந்திருக்கிறார்கள். இப்போதைக்கு இது போதும், பிறகொரு பதிவில் மேலும் வெண்பா பற்றிப் பார்க்கலாம்.
ஒரு சமயம் ஸ்ரீகிருஷ்ணர், அவரது சகோதரர் பலராமர், அர்ஜுனன் இம்மூவரும் ஒரு அடர்ந்த வனத்தின் வழியாகச் சென்றனர். இரவாகி விட்டது. மூவரும் ஒரிடத்தில் தங்கிவிட்டு விடிந்ததும் செல்லலாம் என்று எண்ணினர்.
வனத்தில் துஷ்ட மிருகங்கள் இருக்கும் என்பதால் மூவரும் ஒரு சேரத் தூங்கக்கூடாது என்றும், ஜாமத்திற்கு ஒருவராகத் காவல் இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்தனர்.
அதன்படி ஸ்ரீகிருஷ்ணரும், பலராமரும் தூங்கச்செல்ல, அர்ஜுனன் காவல் இருந்தான். அப்போது திடீரென புகை மண்டலம் சூழ்ந்தது. அதிலிருந்து ஒரு பயங்கர உருவம் வெளிப்பட்டது.
அகன்ற நாசியும், தூக்கிய பற்களும், முட்டைக் கண்களுமாக இருந்தது அவ்வுருவம். மரத்தடியில் இருவர் தூங்குவதையும், ஒருவன் காவல் இருப்பதையும் கண்ட அவ்வுருவம் தூங்கும் இருவரின் அருகில் சென்றது. அதைக்கண்ட அர்ஜுனன் கோபத்துடன் அதைத் தடுத்தான்.
அப்போது அவ்வுருவம் அவ்விருவரையும் தான் கொல்லப்போவதாகவும் அதற்கு அர்ஜுனன் துணை செய்ய வேண்டும் என்றும் கேட்டது. அதைக்கேட்டு கோபம் மிகக்கொண்டு அவ்வுருவத்தைத் தாக்கினான்.
அர்ஜுனனின் கோபம் அதிகமாக அதிகமாக அவ்வுருவத்தில் பலமும் அதன் வடிவமும் பெருகியது.அர்ஜுனன் ஆக்ரோஷத்தோடு அதனுடன் போரிட அது பூதாகாரமாய் விளங்கியது. அர்ஜுனனை பலமாகத் தாக்கிவிட்டு மறைந்தது.
இரண்டாம் ஜாமம் தொடங்கவும் பலராமரை எழுப்பிவிட்டு அர்ஜூனன் தூங்கச் சென்றான். பலராமர் காவல் இருந்தார். அப்போது மீண்டும் அவ்வுருவம் அங்கு தோன்றி அர்ஜுனனிடம் கூறியதுபோல பலராமரிடமும் கூறியது. அதைக்கேட்டு கோபம் கொண்ட பலராமர் அதனுடன் சண்டையிட்டார். அவ்வுருவம் அடிபணிவதாய் இல்லை.
பலராமரின் கோபம் அதிகமாக அதிகமாக அவ்வுருவத்தின் பலமும் அதன் வடிவமும் பெரிதானது. பின் பலராமரையும் பலமாகத் தாக்கிவிட்டு அவ்வுருவம் மறைந்துவிட்டது.
மூன்றாம் ஜாமம் தொடங்கவும் பலராமர் கிருஷ்ணரை காவலுக்கு எழுப்பிவிட்டு படுக்கச் சென்றார். அப்போதும் அப்பொல்லாத உருவம் தோன்றியது. அதைப்பார்த்த கிருஷ்ணர் கடகடவெனச் சிரித்தார். ஏன் சிரிக்கிறாய்? என்றது அவ்வுருவம்.
உனது தூக்கிய பற்களும், அழகான முட்டைக் கண்களையும் கண்டுதான், என்றார் சிரிப்பை அடக்க முடியாமல். அவர் தன்னைக் கேலி செய்வதைக் கண்டு ஆக்ரோஷத்துடன் அது சண்டை போட்டது.
கிருஷ்ணரோ புன்னகையை மாற்றாமலே, சண்டை போட்டார். கிருஷ்ணர் சிரிக்கச் சிரிக்க அவ்வுருவத்தின் பலமும் அதன் வடிவமும் குறைந்துகொண்டே வந்தது. கடைசியில் அவ்வுருவம் சின்னஞ்சிறு புழுவாக மாறி தரையில் நெளிந்தது. ஸ்ரீகிருஷ்ணர் அப்புழுவை எடுத்து ஒரு துணியில் முடிந்து வைத்தார்.
பொழுது விடிந்தது. பலராமரும், அர்ஜுனனும் எழுந்தனர். இருவரும் இரவில் ஒரு பயங்கர உருவம் வந்ததும், அவர்களைத் தாக்கியதும் அவ்வுருவம் வளர்ந்து வளர்ந்து பெரிதாகியது பற்றியும் பேசினர்.
அப்போது கிருஷ்ணர் துணியில் முடிந்திருந்த புழுவைக் காட்டி, நீங்கள் இருவரும் சண்டை போட்ட உருவம் இதுதான். நீங்கள் அதனுடன் சண்டை போடும் போது கடுமையாகக் கோபப்பட்டீர்கள். உங்கள் கோபம் அதிகரிக்க அதிகரிக்க அதன் பலமும் வடிவமும் அதிகரித்தது.
நான் சிரித்துக்கொண்டே சண்டை போட்டதால் இதன் பலமும் வடிவமும் குறைந்து கொண்டே வந்து புழுவாக மாறிவிட்டது.
*வம்பு சண்டைக்கு வருபவனை விட்டு புன்னகையோடு வெளியேறி விட்டால், அவன் புழுவுக்கு சமமாகி விடுவான். கோபத்தைக் குறைப்பவனே ஞானி, என்றார்.*