புத்தகத்தின் பெயர்:Happier: Learn the Secrets to Daily Joy and Lasting Fulfillment
ஆசிரியர்: Tal Ben-Shahar
பதிப்பகம்:McGraw-Hill Education
மகிழ்ச்சியாக வாழக்கையை வாழ வேண்டும் என்பதுதானே நம் அனைவருடைய விருப்பமும்?! அந்த வாழ்க்கையைப் பற்றிய ஆழமான தேடலையும், அதற்கான அறிவியல் பூர்வமான தீர்வுகளையும் முன்வைக்கிறது ‘Happier: Learn the Secrets to Daily Joy and Lasting Fulfillment’ என்ற புத்தகம். வெறும் மேலோட்டமான அறிவுரைகளை வழங்கும் சுயமுன்னேற்றப் புத்தகம் அல்ல இது. மாறாக, நேர்மறை உளவியலின் (Positive Psychology) கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு, நமது அன்றாட வாழ்க்கை யில் மகிழ்ச்சியை எவ்வாறு ஒரு நிலையான பழக்கமாக மாற்றிக் கொள்ளலாம் என்பதை விளக்கும் ஒரு வழிகாட்டி.
3 பெரும்பிரிவுகளாக பிரித்து மொத்தம் 15 அத்தியாயங்களாக எழுதப்பட்டுள்ள இந்த புத்தகம், மகிழ்ச்சியான வாழ்க்கையைக் கட்டமைத்துக்கொள்ள நடைமுறை வாழ்க்கையில் வழிகாட்டுகிறது.
1. தொடர்ச்சியான பயணம்!
முதல் அத்தியாயத்தில் (The Question of Happiness), மகிழ்ச்சியைப் பற்றிய கேள்விகளை எழுப்புவதுடன், மகிழ்ச்சி என்பது ஒரு குறிப்பிட்ட புள்ளியில் முடிவடையும் இலக்கு அல்ல, அது ஒரு தொடர்ச்சி யான பயணம் என்று வலியுறுத்துகிது இந்தப் புத்தகம். ‘நான் மகிழ்ச்சியாக இருக்கிறேனா?’ என்று கேட்பதை விட, ‘நான் எப்படி இன்னும் மகிழ்ச்சியாக மாற முடியும்?’ என்று கேட்பதே சரியானது என்கிறது.
எப்போதும் மகிழ்ச்சியாக வாழ இந்த 15 விஷயங்கள் போதும்!
book review Happier: Learn the Secrets to Daily Joy and Lasting Fulfillment
புத்தகத்தின் பெயர்:Happier: Learn the Secrets to Daily Joy and Lasting Fulfillment
ஆசிரியர்: Tal Ben-Shahar
பதிப்பகம்:McGraw-Hill Education
மகிழ்ச்சியாக வாழக்கையை வாழ வேண்டும் என்பதுதானே நம் அனைவருடைய விருப்பமும்?! அந்த வாழ்க்கையைப் பற்றிய ஆழமான தேடலையும், அதற்கான அறிவியல் பூர்வமான தீர்வுகளையும் முன்வைக்கிறது ‘Happier: Learn the Secrets to Daily Joy and Lasting Fulfillment’ என்ற புத்தகம். வெறும் மேலோட்டமான அறிவுரைகளை வழங்கும் சுயமுன்னேற்றப் புத்தகம் அல்ல இது. மாறாக, நேர்மறை உளவியலின் (Positive Psychology) கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு, நமது அன்றாட வாழ்க்கை யில் மகிழ்ச்சியை எவ்வாறு ஒரு நிலையான பழக்கமாக மாற்றிக் கொள்ளலாம் என்பதை விளக்கும் ஒரு வழிகாட்டி.
3 பெரும்பிரிவுகளாக பிரித்து மொத்தம் 15 அத்தியாயங்களாக எழுதப்பட்டுள்ள இந்த புத்தகம், மகிழ்ச்சியான வாழ்க்கையைக் கட்டமைத்துக்கொள்ள நடைமுறை வாழ்க்கையில் வழிகாட்டுகிறது.
1. தொடர்ச்சியான பயணம்!
முதல் அத்தியாயத்தில் (The Question of Happiness), மகிழ்ச்சியைப் பற்றிய கேள்விகளை எழுப்புவதுடன், மகிழ்ச்சி என்பது ஒரு குறிப்பிட்ட புள்ளியில் முடிவடையும் இலக்கு அல்ல, அது ஒரு தொடர்ச்சி யான பயணம் என்று வலியுறுத்துகிது இந்தப் புத்தகம். ‘நான் மகிழ்ச்சியாக இருக்கிறேனா?’ என்று கேட்பதை விட, ‘நான் எப்படி இன்னும் மகிழ்ச்சியாக மாற முடியும்?’ என்று கேட்பதே சரியானது என்கிறது.

2. நான்கு வகையான வாழ்க்கை முறைகள்!
இரண்டாவது அத்தியாயத்தில் ‘ஹாம்பர்கர் மாடல்’ (The Hamburger Model) என்ற சுவாரஸ்யமான கருத்தை அறிமுகப்படுத்தும் இந்தப் புத்தகம், நான்கு வகையான வாழ்க்கை முறை களை நான்கு வகை ஹாம்பர்கர்களுடன் ஒப்பிடுகிறது. முதலாவது, சுவையான ஆனால் ஆரோக்கியமற்ற ‘ஜங்க் ஃபுட்’ (Junk-food) ஹாம்பர்கர். இது தற்காலிக இன்பத்தை அளிக்கும், ஆனால் எதிர்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். இது உடனடி இன்பத்தை நாடும் வாழ்க்கை முறை.
இரண்டாவது, ஆரோக்கியமான ஆனால் சுவையற்ற ஹாம்பர்கர். இது எதிர்கால நன்மைக்காக தற்போதைய இன்பத்தைத் தியாகம் செய்யும், வெற்றியைத் துரத்திக்கொண்டே இருக்கும் வாழ்க்கை முறை. மூன்றாவது, சுவை, ஆரோக்கியம் அற்ற ஹாம்பர்கர். இது வாழ்க்கையில் தற்போதைய இன்பமும் எதிர்கால நோக்கமும் இல்லாத வாழ்க்கைக்கு அர்த்தமில்லை எனும் வாதத்தை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கை முறை. நான்காவது, சுவையான மற்றும் ஆரோக்கியமான ஹாம்பர்கர். இதுவே உண்மையான மகிழ்ச்சி. ஏனென்றால், இதில் தற்போதைய மகிழ்ச்சியும், எதிர்கால அர்த்தமும் இணைந்து இருக்கிறது.
3. ஒட்டுமொத்த அனுபவம்!
மூன்றாவது அத்தியாயம் (Happiness Explained), மகிழ்ச்சி என்பது இன்பம் மற்றும் அர்த்தத்தின் ஒட்டுமொத்த அனுபவம் என்கிறது. இங்கு இன்பம் என்பது தற்காலிக உணர்ச்சிகளைக் குறிப்பது; அர்த்தம் என்பது நம் செயல்களுக்கு ஒரு நோக்கம் இருப்பதை உணர்த்து வது. ஒரு நபர் தனது வாழ்வில் கஷ்டங்களைச் சந்தித்தாலும், ஒட்டுமொத்தமாக அவர் அர்த்தமுள்ள மற்றும் இன்பமான செயல்களில் ஈடுபடும்போது மகிழ்ச்சியானவராகக் கருதப்படுகிறார்.
உணர்ச்சிகள் நம்மைச் செயல்படத் தூண்டும் சக்தியாக இருக்கின்றன. அதே சமயம் அர்த்தம் என்பது நம் ஆன்மாவுக்குத் தேவையான ஆழமான திருப்தியை வழங்குகிறது.
4. உயர்ந்த மதிப்பீடு!
நான்காவது அத்தியாயத்தில் (The Ultimate Currency) ‘உயர்ந்த மதிப்பீட்டு அளவுகோல்’ என்று மகிழ்ச்சியைப் பணத்துடன் ஒப்பிடுகிறது இந்தப் புத்தகம். வணிக உலகில் பணம் எப்படி ஒரு நிறுவனத்தின் மதிப்பைத் தீர்மானிக்கிறதோ, அதுபோல மனித வாழ்க்கையில் மகிழ்ச்சியே இறுதி நாணயமாக இருக்க வேண்டும். செல்வம் மற்றும் புகழ் ஆகியவை மகிழ்ச்சிக்கு வழிவகுக்கும் கருவிகளே தவிர, அவையே வாழ்க்கையின் நோக்கமாகிவிடக் கூடாது.
மேலும், இந்த அத்தியாத்தில் ‘உணர்ச்சி ரீதியான திவாலான நிலை’ (Emotional Bankruptcy) பற்றி எச்சரிக்கப்படுகிறது. ஒரு நபர் எவ்வளவுதான் பொருள் செல்வம் பெற்றிருந்தாலும், அவர் மகிழ்ச்சியை உணரவில்லை என்றால், அவர் உணர்ச்சிரீதியாக திவாலானவர் என்றே கருதப்படுவார். இன்றைய உலகில் மனச்சோர்வு (Depression) மற்றும் பதற்றம் அதிகரிப்பதற்குப் பொருள் சார்ந்த வாழ்க்கையில் நாம் காட்டும் அதிகப்படியான மோகமே காரணம்.
5. இலக்குகளை நிர்ணயிப்பது!
ஐந்தாவது அத்தியாயம் (Setting Goals), இலக்குகளை நிர்ணயிப்பதன் முக்கியத்துவத்தைப் பேசுகிறது. இலக்குகள் நம் வாழ்க்கைக்கு ஒரு திசையைத் தருகின்றன. ஆனால், அந்த இலக்கை அடைவது மட்டுமே மகிழ்ச்சியைத் தந்துவிடாது. மாறாக, ஒரு சரியான இலக்கை நோக்கிப் பயணம் செய்வதே மகிழ்ச்சியை அளிக்கிறது.
மற்றவர்களைக் கவரவோ அல்லது கடமைக்காகவோ அல்லாமல், நமது ஆழ்மனதுக்குப் பிடித்த மற்றும் நமக்கு அர்த்தமுள்ள இலக்குகளை நாம் தேர்வு செய்ய வேண்டும். இதுவே நம் வாழ்க்கையில் ‘இருக்க வேண்டும்’ (Have-to) என்ற நிலையிலிருந்து ‘விரும்புகிறேன்’ (Want-to) என்ற நிலைக்கு நம்மை மாற்றும்.
6. கல்வித் துறையில் மகிழ்ச்சி!
ஆறாவது அத்தியாயமான (Happiness in Education), கல்வித் துறையில் மகிழ்ச்சியைப் பற்றிப் பேசுகிறது. பல மாணவர்கள் கல்வியை ஒரு பெரும் சுமையாகவும், ‘மூழ்கும் நிலை’ (Drowning model) போன்ற அனுபவமாகவும் கருதுகின்றனர். தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு அவர்கள் உணர்வது மகிழ்ச்சி அல்ல, அது வெறும் நிம்மதி மட்டுமே.
இதற்கு மாறாக, கற்றலை ஓர் இன்பமான அனுபவமாக மாற்ற ‘முழுமையான ஈடுபாடு தரும் நிலை’ என்ற கருத்தை அறிமுகப்படுத்துகிறது இந்தப் புத்த்கம். ஒரு செயல் சவாலாகவும் அதே சமயம் நமது திறமைக்கு ஏற்றவாறும் இருக்கும்போது நாம் அந்தச் செயலில் முழுமையாக மூழ்கிவிடுகிறோம். இதுவே கற்றலில் மகிழ்ச்சியைத் தரும்.
7. பணியிடத்தில் மகிழ்ச்சி!
ஏழாவது அத்தியாயம் (Happiness in the Workplace), பணியிடத்தில் மகிழ்ச்சியைப் பற்றி விவாதிக்கிறது. ஒருவர் தனது வேலையை வெறும் பிழைப்புக்கான ஒரு தொழிலாக (Job), அல்லது முன்னேற்றத்துக்கான ஒரு வாழ்க்கைப் பாதையாக (Career) பார்க்காமல், அதை வாழ்க்கையின் ஒரு நோக்கமாகக் (Calling) கருத வேண்டும். இது தவிர எம்.பி.எஸ் (MPS - Meaning, Pleasure, Strengths) எனும் செயல்முறை குறித்தும் விளக்குகிறது இந்தப் புத்தகம்.
அதாவது, எதில் நமக்கு அர்த்தம் கிடைக்கிறது, எது நமக்கு இன்பத்தைத் தருகிறது, எதில் நாம் திறமையாக இருக்கிறோம் ஆகிய மூன்றிற்கும் இடையே உள்ள பொதுவான புள்ளியைக் கண்டறிந்து, அதற்கேற்ப நமது வேலையை அமைத்துக் கொள்ள வேண்டும். ஒரு சிறப்பு மருத்துவ நிபுணர் முதல் தொழிலாளி வரை அனைவரும் தங்களது வேலையை மற்றவர்களுக்கு உதவும் ஓர் அர்த்தமுள்ள பணியாகப் பார்க்கும்போது அவர்கள் அதிக மகிழ்ச்சியை உணர்கின்றனர்.
8. உறவுகளில் மகிழ்ச்சி!
எட்டாவது அத்தியாயம் (Happiness in Relationships), உறவுகளில் மகிழ்ச்சியைப் பற்றிப் பேசுகிறது. மனித மகிழ்ச்சிக்கு ஆழமான உறவுகள் மிகவும் அவசியமானவை. நிபந்தனையற்ற அன்பு (Unconditional love) என்பது ஒருவரின் புறத் தோற்றத்தையோ அல்லது சாதனை களையோ நேசிப்பது அல்ல. மாறாக அவரின் அவரின் அடிப்படை இயல்பை நேசிப்பது.
உறவுகளில் தியாகம் செய்வது என்பது எப்போதும் மகிழ்ச்சியைத் தராது. மாறாக, இருவரும் இணைந்து வளரும் ஒரு சூழலே சிறந்தது. ஒரு துணையைத் தேடுவதைவிட, இருக்கும் உறவை வளர்ப்பதும், ஒருவரை முழுமையாக அறிந்துகொள்வதும் நீண்ட கால மகிழ்ச்சிக்கு வழிவகுக்கும்.
9.சுயநலம் மற்றும் பிறருக்கு உதவுதல்!
ஒன்பதாவது அத்தியாயம் (Self-Interest and Benevolence), சுயநலம் மற்றும் பிறருக்கு உதவுதல் ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள தொடர்பை விளக்குகிறது. பிறருக்கு உதவும்போது நாம் அடையும் மகிழ்ச்சி மிகப்பெரியது. எனவே, மற்றவர்களுக்கு உதவுவது என்பது உண்மையில் நமக்கே நாம் செய்துகொள்ளும் ஓர் உதவி.
10. மகிழ்ச்சியை அதிகரிக்கும் செயல்கள்!
பத்தாவது அத்தியாயம் மகிழ்ச்சியை அதிகரிக்கும் செயல்கள் (Happiness Boosters) என்ற கருத்தை முன்வைக்கிறது. நமது வேலை சலிப்பாக இருந்தாலும், வாரத்தில் சில மணிநேரம் நமக்கு மிகவும் பிடித்தமான செயல்களில் ஈடுபடுவது நமது ஒட்டுமொத்த மகிழ்ச்சி நிலையை உயர்த்தும்.
11. மகிழ்ச்சியின் தற்காலிக மாற்றங்கள்!
பதினோராவது அத்தியாயம் மகிழ்ச்சியின் தற்காலிக மாற்றங்கள் மற்றும் நிலையான தன்மை (Beyond the Temporary High) பற்றிப் பேசுகிறது. நமது மகிழ்ச்சி ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் மாறுபடும் என்றாலும், சரியான பயிற்சிகள் மற்றும் பழக்கவழக்கங்கள் மூலம் அந்த அடிப்படை நிலையை உயர்த்த முடியும்.

12. தகுதியற்றவர்கள் என்ற எண்ணம்!
பன்னிரண்டாவது அத்தியாயம் (Letting Out Light Shine) நாம் மகிழ்ச்சியாக இருப்பதற்குத் தகுதியற்றவர்கள் என்ற எண்ணத்தை விட்டுவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறது. ஏனென்றால், நாம் பிரகாசிப்பதே மற்றவர்களையும் பிரகாசிக்கத் தூண்டும்.
13. கற்பனைப் பயிற்சி!
பதிமூன்றாவது அத்தியாயம் (Imagine), ஒரு கற்பனைப் பயிற்சியை அளிக்கிறது. 110 வயதை எட்டிய, வாழ்க்கையை முழுமையாக அனுபவித்த எதிர்கால நிலையை நம்மை நாமே கற்பனை செய்து கொண்டு, அந்த நிலையிலிருந்து இன்றைய நமக்கு என்ன அறிவுரை கூறுவோம் என்று சிந்திக்க வேண்டும். இந்தப் பயிற்சி, வாழ்க்கையில் உண்மையில் முக்கியமானவற்றை அடையாளம் கண்டு, நமது முன்னுரிமைகளை மாற்றிக்கொள்ள உதவுகிறது.
14. காலத்தின் முக்கியத்தும்!
பதினான்காவது அத்தியாயம் காலத்தின் முக்கியத்துவத்தைப் (Take Your Time) பேசுகிறது. நாம் எப்போதும் அவசரமாகச் செயல்படும்போது மகிழ்ச்சியை அனுபவிக்கத் தவறி விடுகிறோம் என்று சொல்லும் இந்தப் புத்தகம், வாழ்க்கையை எளிமை யாக்குவதும், பணிச்சுமையைக் குறைப்பதும் மகிழ்ச்சிக்கு மிகவும் அவசியம் என்கிறது.
15. அணுகுமுறை மாற்றம்!
பதினைந்தாவது அத்தியாயம் (The Happiness Revolution), மகிழ்ச்சியைப் பற்றிய ஓர்அடிப்படை அணுகுமுறை மாற்றத்துக்கு முன்மொழிகிறது.
உலகம் முழுவதும் மக்கள் மகிழ்ச்சியை மதிப்பீட்டு அளவுகோலாக (Ultimate Currency) ஏற்றுக்கொள்ளும்போது, போட்டி மற்றும் பொறாமை குறைந்து அமைதி நிலவும் என்று சொல்கிறது இந்தப் புத்தகம்.
மகிழ்ச்சி என்பது ஒரு குறுகிய வளமல்ல, ஒரு மெழுகுவர்த்தியிலிருந்து பல மெழுகுவர்த்திகளை ஏற்றுவது போல அது பகிரப்படும்போது அதிகரிக்கிறது.
இறுதியாக, மகிழ்ச்சி என்பது நாளை அடைய வேண்டிய ஓர் இலக்கு அல்ல. அது இங்கேயே இப்போதே (Here and Now) அனுபவிக்கப்பட வேண்டிய ஒன்று. வாழ்க்கையின் ஒவ்வொரு சிறிய தருணத்தையும் ரசிப்பதும், அதில் அர்த்தத்தைக் காண்பதுமே மகிழ்ச்சியான வாழ்க்கையின் ரகசியம்.
மகிழ்ச்சி என்பது தற்செயலாகக் கிடைக்கும் ஒன்றோ அல்லது எட்ட முடியாத இலக்கோ அல்ல; அதை நம் அன்றாட வாழ்க்கையில் நாம் உருவாக்கிக் கொள்ள முடியும் என்பதை விளக்கும் இந்தப் புத்தகத்தை அனைவரும் படித்துப் பயன்பெறலாம்.
























