ஞானவயல்
Friday, 12 June 2026
உப்புமா ஜோக்
இப்படி உருட்டி உருட்டி வாழ்க்கையை சிறப்பாக்கி கொள்ளனும்!
திருமணம் ஆகி முதல் நாள் மனைவி சமையலை கணவன் சாப்பிட்ட பின் !
கணவன் : ஏய் சத்தியமா சொல்லுடி.... இதான் முதல் தடவை சமைக்கிறாயா...😳❤
மனைவி : ஏ லூசு நம்புடா Promise ah...😏
கணவன் : அப்புறம் எப்பிட்றி இவ்ளோ செம டேஸ்டா பண்ற நம்பவே முடில...பொய் சொல்லாத...😒
மனைவி : ஏய் ஆமாண்டா...ரியலா இதுக்கு முன்னாடி சமைக்க வில்லை ஆனா எவ்ளோ வீடியோ பாக்குறோம்...அப்புறம் எதிர்வீட்டுல புதுசா கல்யாணமாகி வந்தாங்கள்ல அந்த அக்கா நேற்று கூட இதை சமைத்தாங்க ..அதை பாத்துதான்
நானும் பண்ணேன்...😏
கணவன் : ஏய் எவ்ளோ வீடியோ பாத்தாலும் இதுலாம் முதல் தடவை சமைக்கும் போது யாருக்கும் இவ்ளோ சூப்பரா சமைக்க வராதுடி..😌ஆனாலும் நீ சூப்பர்டி இதே மாதிரி இன்னொரு தடவை...😬 ஏன் தினமும் இதை பண்ணிக் கொடுத்தாலும் மூன்று வேளை சாப்பிடுவேன்!
மனைவி : அய்யய்யோ என்னால முடியாதுப்பா...இதை மூனு தடவை சமைத்தால் நான் டயர்டா ஆகி விடுவேன்!😑
கணவன் : அதுலாம் ஒன்னும் டயர்டா ஆகாதுடி... சரி இதே மாதிரி ராத்திரிக்கு சமைத்து விடு😬
மனைவி : சரி வெளியே போய்ட்டு வரும்போது மறக்காம ரவை வாங்கிட்டு வாங்க! உங்களுக்கு உப்புமா பிடிக்காது என்று எங்க அம்மா கால் கிலோ தான் கொடுத்து அனுப்பினாங்க !
( அட சண்டாளன்! இந்த உப்புமாவுக்கு தான் இவ்வளவு அக்கப் போரா! முடியலைடா ! முடியலை! )
உப்புமா ஜோக்
நம்ம குமாரு பெண் பார்க்க போய் இருந்தான்! டயட் கண்ட்ரோல்ல இருந்ததால் லைட்டா டிஃபன் செய்ய சொல்லி இருந்தான்!
பெண்ணை குமாருக்கு ரொம்ப பிடித்து இருந்தது. டிஃபன் வந்தது. கல்யாண பெண் சமைத்தது என்று ஆசையாக சொன்னார்கள்!
நம்ம ஆளும் சூப்பர் ! சூப்பர்! அட என்ன ருசி என்று சப்புகொட்டி சாப்பிட்டு முடித்தான்!.
திருமணம் முடிந்தது. திருமணம் முடிந்து முதல் நாள் ஆஃபீஸ், ப்ரேக் பாஸ்ட் எடுத்து வைக்க சொன்னான்!
நிச்சயதார்த்தம் அன்று அவள் சமைத்த அதே உணவு! அதே ருசி என்று பாராட்டி சாப்பிட்டான்!
ஆபீஸ் சென்றவன் மதியம் லஞ்ச் பாக்ஸ் திறக்க காலையில் சாப்பிட்ட அதே உணவு! மகிழ்ச்சியுடன் சாப்பிட்டான்.
வேலை முடிந்து வீட்டுக்கு வந்தான் இரவும் அதே உணவு! சற்று சோர்ந்து போனான்! சரி மீதம் ஆகி இருக்கும் என்று நினைத்து சாப்பிட்டு உறங்கி போனான்!
காலையில் பசியில் எழுந்த அவனுக்கு ஒரே அதிர்ச்சி அதே உணவு!
வேறென்ன " உப்புமா " தான் !
கோபத்துடன் மனைவியை பார்த்து என்னடி இது என்று கேட்க!
மனைவி சிரித்து கொண்டே உங்களுக்கு பிடித்த உணவு அதான் செய்தேன் என்றாள்!
அடியே பிடிக்கும் அதற்கு தினமும் மூன்று வேளையும் உப்புமா! என்றால்!
இல்லைங்க பெண் பார்க்க வரும்போது என் அம்மா செஞ்ச உப்புமாவை நீங்கள் ரொம்ப ரசித்து பாராட்டி சாப்பிட்டீர்கள் அதான் அந்த ஒரு டிஷ் மட்டும் சமைக்க கற்றுக்கொண்டேன் என்றான்.
நம்ம குமாரு இப்ப மயங்கி விழுந்தான்
மொக்க ஜோக்ஸ்
ஒவ்வொரு மனைவியும் யூடியூபில் தவறாமல் தினமும் பார்ப்பது பிரியாணி எப்படி செய்வது!!!!
ஆனா போங்க எல்லாரும் சொல்லி வச்ச மாதிரி செய்வது அந்த ரவை உப்புமா தாங்க!!!
என்ன கொடுமை சார் !!! இது !!
கணக்கு புத்தகம் ஏன் ரொம்ப சோகமா இருக்கு தெரியுமா?
தெரியலையே!
ஏன்னா! அதுக்கு நிறைய “பிராப்ளம்ஸ்” இருக்கு இல்ல, அதனால தான்.
😊 😄😊 😄😊
மறைக்காம என்கிட்டே சொல்லுங்க ...என் வீட்டு வாசல்லே எதுக்கு பூவா ,தலையா போட்டு பார்த்துக்கிட்டு இருக்கீங்க ?''
''உங்க பொண்ணு தலையிலே ரோஜாப்பூ இன்னைக்கி இருக்குமான்னு எங்களுக்குள் ஒரு பந்தயம் ...அதான் ...!''
😊 😄😊 😄😊
ஆயில் புல்லிங் செய்யும் போது
அழகாய் தெரிகிறாள் மனைவி ...
வாயை மூடிக் கொண்டிருப்பதால் !
அந்தக் காலம்
ஒரு காலம் இருந்தது...
சைக்கிளிலோ பேருந்திலோ கொண்டு போய் விடுவது என்ற வழக்கம் இல்லாததால், நாங்கள் நாங்களாகவே பள்ளிக்குச் செல்ல வேண்டியிருந்தது. எங்களைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு, அங்கே என்ன நல்லது கெட்டது நடக்குமோ என்று எங்கள் பெற்றோர் ஒருபோதும் கவலைப் பட்டதில்லை...
அவர்கள் எதற்கும் பயந்ததும் இல்லை,
🤪 பாஸ் அல்லது ஃபெயில் — அவ்வளவுதான் எங்களுக்குத் தெரியும். சதவிகிதங்களைப் பற்றி எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை...
😛 டியூஷனுக்குப் போவதாக ஒப்புக்கொள்வது அவமானமாக இருந்தது, ஏனென்றால் எங்களை முட்டாள்கள் என்று நினைத்து விடுவார்கள்...
🤣🤣🤣
புத்தகங்களில் அரச இலைகளையோ, படிப்பு இலைகளையோ, மயில் இறகுகளையோ வைத்தால் புத்திசாலியாகிவிடுவோம் என்று நம்பினோம்...
☺️☺️ துணிப் பைகளில்... தோள்பைகளில்... பிறகு அலுமினியப் பெட்டிகளில்...
எங்கள் புத்தகங்களையும் நோட்டுகளையும் நேர்த்தியாக அடுக்கி வைப்பதில் நாங்கள் வல்லவர்கள்...
😁 ஒவ்வொரு ஆண்டும், புதிய வகுப்பு தொடங்குவதற்கு முன்பு, எங்கள் புத்தகங்களுக்கும் நோட்டுகளுக்கும் பழுப்பு நிறத் தாள் போட்டு அட்டை போடுவோம் — அது ஒரு வருடாந்திர கொண்டாட்டம் அல்லது திருவிழாவிற்குச் சற்றும் குறைவானதல்ல...
🤗 ஆண்டு இறுதியில், எங்கள் புத்தகங்களை விற்றுவிட்டு, அடுத்த ஆண்டுக்கு பழைய புத்தகங்களை வாங்குவோம் — ஒருபோதும் வெட்கப்பட்டதில்லை...
ஏனென்றால், அந்த நாட்களில் புத்தகங்களோ பாடத்திட்டமோ ஒவ்வொரு ஆண்டும் மாறவில்லை...
🤪 எங்கள் பெற்றோருக்கு எங்கள் படிப்பு ஒரு சுமையாக ஒருபோதும் தோன்றியதில்லை...
😞 ஒரு நண்பனை சைக்கிளின் முன்பக்க கம்பியில் உட்கார வைத்து, இன்னொருவனைப் பின் கேரியரில் உட்கார வைத்து தெருக்களில் சுற்றுவது — அதுதான் எங்கள் அன்றாட வழக்கம்...
இப்படி நாங்கள் எல்லையில்லாமல் சுற்றியிருக்க வேண்டும்...
🥸😎 கால் கட்டைவிரல்களைப் பிடித்துக்கொண்டு நிற்பதோ, காதுகள் சிவக்கும் வரை திருகப்படுவதோ எங்கள் சுயமரியாதையை ஒருபோதும் புண்படுத்தவில்லை... ஏனென்றால், உண்மையாகச் சொல்லப்போனால், சுயமரியாதை என்றால் என்னவென்றே எங்களுக்குத் தெரியாது...
🧐😝 வீட்டிலோ பள்ளியிலோ திட்டு வாங்குவது வாழ்க்கையின் ஒரு சாதாரண பகுதியாக இருந்தது.
😜 எங்கு வேண்டுமானாலும், வெறும் கால்களில், மரப்பலகைகளையும் எந்த வகையான பந்தையும் வைத்து கிரிக்கெட் விளையாடிய அந்த ஆனந்தம் எங்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று...
😁 நாங்கள் ஒருபோதும் பாக்கெட் பணம் கேட்டதில்லை, எங்கள் அப்பாவும் கொடுத்ததில்லை...
அதனால் எங்கள் தேவைகள் மிகச் சிறியதாகவே இருந்தன — வருடத்திற்கு சில முறை காரமான மிக்சர்களும் அல்லது ஒரு வெல்லப்பாகு -கல்கோனா மிட்டாயோ, கடலை மிட்டாயோ, சாப்பிடுவது ஒரு பெரிய விருந்தாகத் தோன்றும்... அதில் நாங்கள் உண்மையாகவே மகிழ்ச்சியாக இருந்தோம்...
😲 கூட்டுக் குடும்பங்களாக இருந்ததால், சிறிய தேவைகள் பொதுவாக வீட்டில் உள்ள யாராவது ஒருவரால் பூர்த்தி செய்யப்படும்...
🥱 தீபாவளியின் போது, பட்டாசு சரங்களை உடைத்து, ஒவ்வொரு பட்டாசாகக் கொளுத்துவது ஒருபோதும் வெட்கமாகத் தோன்றியதில்லை...
😁 'ஐ லவ் யூ' என்று எப்படிச் சொல்வது என்றே எங்களுக்குத் தெரியாததால், எங்கள் பெற்றோரிடம் நாங்கள் அவர்களை எவ்வளவு நேசிக்கிறோம் என்பதை எங்களால் ஒருபோதும் சொல்ல முடிந்ததில்லை...
😌 இன்று, உலகின் எண்ணற்ற அதிர்ச்சிகளையும் ஏளனங்களையும் சந்தித்த பிறகு...
😀 நாங்கள் போராடும் உலகின் ஒரு பகுதிதான்... சிலர் தாங்கள் விரும்பியதைப் பெற்றார்கள், சிலர் பெறவில்லை — யாருக்குத் தெரியும்...
😀 பள்ளி பெஞ்சுகளில் இரண்டு அல்லது மூன்று பேர் அமர்ந்து, அரைக்கால் சட்டையுடன் பள்ளிக்கு வெளியே இருந்த சிறிய மிட்டாய்க் கடையில் மிட்டாய், மாங்காய், கொடுக்கா, இலந்த, ஐஸ் ஆகியவை நண்பர்களிடமிருந்து பெற்றதும், தந்ததும் , அந்த அன்பை நாங்கள் இன்றும் நினைவில் வைத்திருக்கிறோம்...
அந்த நண்பர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள்...
😇 இப்போது நாங்கள் உலகில் எங்கு இருந்தாலும், உண்மை என்னவென்றால், நாங்கள் நிஜ உலகில் வளர்ந்தோம், யதார்த்தத்தை உண்மையாகவே எதிர்கொண்டோம்...
🙃 துணிகளில் சுருக்கம் இல்லாமல் பார்த்துக்கொள்வதும், உறவுகளில் சம்பிரதாயங்களைக் கடைப்பிடிப்பதும் ஒருபோதும் எங்கள் வழக்கம் அல்ல...
காலை மற்றும் இரவு உணவைத் தவிர, செய்தித்தாள்களில் சுற்றப்பட்ட கலவை சாதம் எங்கள் டிஃபன் பாக்ஸில் எடுத்துச் சென்ற அந்த மகிழ்ச்சி இன்றைய குழந்தைகளுக்குப் புரியாது...
😀 நாங்கள் எங்கள் விதியை குறை கூறவில்லை — நாங்கள் என்ன வாழ்க்கை வாழ்கிறோமோ, அதை மகிழ்ச்சியுடன் வாழ்கிறோம், இந்த மனப்பான்மை எங்களைத் தொடர்ந்து முன்னேற உதவுகிறது... நாங்கள் வாழ்ந்த எளிமையான வாழ்க்கையை இன்றைய வாழ்க்கையுடன் ஒப்பிடவே முடியாது...
😌 நாங்கள் நல்லவர்களா கெட்டவர்களா என்று எங்களுக்குத் தெரியாது... ஆனால் எங்களுக்கும் ஒரு காலம் இருந்தது...
☺️😊
இதை முழுமையாகப் படிப்பவர்கள் அனைவருக்கும், தங்கள் கடந்த காலத்தின் பல அழகான தருணங்கள் நிச்சயமாக நினைவுக்கு வரும்...
😊😊😊😊😊
காலில் செருப்பில்லாமல் நடக்க கவலைப் பட்டதில்லை குடை இல்லாமல் மழையில் நனைய அசிங்கப் பட்டதில்லை
சுற்றுலா செல்லவோ ஆண்டு இறுதி புகைப்படம் எடுக்கவோ வீட்டில் பணம் கிடைக்காது என்பதை வெளிப்படையாக ஒப்புக் கொள்வதில் எந்த தயக்கமும் இருந்ததில்லை .
ஆடைகளின் ஒரு பகுதியாக ஊக்கு இருந்ததை மறைத்ததும் இல்லை.
பெருமையாகத்தான் இருக்கிறது போலித்தனம் இல்லாமல் தான் வாழ்ந்திருக்கிறோம்.
ATTITUDE IS EVERYTHING
“Everything can be taken from a man but one thing: the last of human freedoms – to choose one’s attitude in any given set of circumstances” Victor Frankl
Look at the positive side of things in life even in the worst situations. There is something good hidden in every bad – although sometimes it might take some time to discover it.
Life is a chain of moments – some happy, some sad - and it depends on you to make the best of each and every one of those moments.
“If life gives you a lemon, add sugar to it, and make lemonade out of it”. Younger readers might say that “If lifegives you a lemon, ask for some salt and Tequila”. You get the point, don’t you?
some healthy attitudes are:
• Allow yourself to make mistakes and learn from them.
• Admit that there are things you don’t know.
• Dare asking for help and let other people help you.
• Differentiate between what you have done in your life until now and what you want to do or better still, will do from now on! Action Step: Think of a negative situation and turn it around.
Note:
“😎Attitude is a little thing that makes a big difference


















