Wednesday 31 August 2022

ஆட்சி - புறநானூறு

 கால் பார் கோத்து ஞாலத்து இயக்கும்



காவற் சாகாடு கைப்போன் மாணின்

ஊறு இன்றாகி ஆறு இனிது படுமே
உய்த்தல் தேற்றான் ஆயின் வைகலும்
பகைக் கூழ் அள்ளற் பட்டு
மிகப் பல் தீ நோய் தலைத்தலைத் தருமே

  - தொண்டைமான் இளந்திரையன்

உரை:
வண்டியைச் செலுத்துவோன் மாட்சிமைப்படின்  வழியில் ஒரு துன்பமும் இன்றி வண்டி இனிதாகச் செல்லும் திறனற்றவன் வண்டி ஓட்டினால் அது பகையாகிய செறிந்த சேற்றிலே சிக்கி மிகப் பல தீய துன்பங்களை மேலும் மேலும் உண்டாக்கும்.
( அரசன் திறம்பட ஆட்சி நடத்தாவிடின் உட்பகை, புறப் பகையாகிய சேற்றில் அழுந்தித் துன்புறுவான், நாடும் சீர் கேடு அடையும்).

No comments:

Post a Comment