Friday 19 August 2022

ஏழு வகை கோவில்கள் - 1




பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும்
பெருங்கோயில் எழுபதினோ டெட்டும் மற்றும்
கரக்கோவில் கடிபொழில்சூழ் ஞாழற் கோயில்
  கருப்பறியல் பொருப்பனைய கொகுடிக் கோயில்
  இருக்கோதி மறையவர்கள் வழிபட்டேத்தும்  
இளங்கோயில் மணிக்கோயில் ஆலக்கோயில்
திருக்கோயில் சிவனுறையும் கோயில் சூழ்ந்து
  தாழ்ந்திறைஞ்சத் தீவினைகள் தீரு மன்றே


என்ற அப்பர் பெருமானின் பாடல் வழியாக சங்க்காலத்து இறுதியில் வாழ்ந்த மன்னன் கோச்செங்கணான் சிவபெருமானுக்காக எழுப்பிய எழுபது கோவில்கள் பற்றியும்திருவாசக காலத்தில் இருந்த ஏழு வகை கோவில்கள் பற்றியும் அறிய முடிகிறது.

        ஆலக்கோயில்,
         இளங்கோயில்,
       கரக்கோயில்,
            ஞாழற்கோயில்,
                    கொகுடிக் கோயில்,
             மணிக்கோயில்,
            பெருங்கோயில்

என்பனவே அவ்வேழு வகை கோயில்களாகும்இவ்வேழு வகை கோவில்கள் இருந்த்து உண்மையெனிலும்அவை எவ்வாறு தோற்றமளிக்கும் என்பதில் பல வகையான கருத்துக்கள் கூறப்படுகின்றனஇவ்வகை கோயில்கள் சிற்ப சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள விஜயம்ஸ்ரீபோகம்ஸ்ரீவிசாலம்ஸ்கந்தகாந்தம்ஸ்ரீகரம்ஹஸ்திபிரிஷ்டம்கேசரம் எனும் ஏழு வகைக் கோவில்களின் தமிழ்ப் பெயர்கள் என்றும் கூறப்படுகின்றதுஎனினும் அவ்வேழு கோவில்களின் பொதுவான தோற்றங்களைக் காண்பதும் அவசியமாகும்.

No comments:

Post a Comment