தீபாவளி முடிஞ்சு ரெண்டு நாள் ஆகியும் வெடிச்சத்தம் நிக்கல பாருங்க தம்பி,
அது வெடி இல்ல இடி மழைல பார்த்து வண்டி ஓட்டு..!
~ தீபாவளிக்கு 3 இல்ல 4 புது டிரஸ் எடுக்கலாம் சொன்னா எங்க கேட்கிறீங்க…!
~ தீபாவளிக்கு அப்பறம் எப்படியும் மழை வரும் துணி துவைத்து காயவைக்க முடியலானாலும் புது டிரஸ் போட்டு சமாளிச்சுகளாம்…!!
மழை காலத்தில் ஸ்கூல் லீவு விட்டால் பெற்றோர்கள் இரண்டு விஷயங்களை சமாளிக்க வேண்டும்.
ஒண்ணு மழை
இன்னொன்று மழலை!
கொடுக்கிற சம்பளத்தை விட அதிகமாக வேலை வாங்கிவிட நினைக்கும் முதலாளியின் கடையில் , அன்லிமிடெட் சாப்பாட்டுக்கு கொடுக்கிற காசை விட அதிகமாக சாப்பிட வேண்டும் என்று கஸ்டமர் நினைக்கிறார்.
பள்ளிகளுக்கு லீவு விடுறதை தவிர மழையை நிறுத்த வேற வழி தெரியலை ஆத்தா..
இன்னிக்கு யாரை நீங்க கல் நெஞ்சக்காரன்னு சொல்றீங்களோ.. நினைக்கிறீங்களோ..
அவங்கதான் ஒருகாலத்தில் இளகிய மனசோட இருந்தவங்க!
மழை பெய்யும்
என்று சொன்னீர்கள்
குடையோடு சுற்றிக்கொண்டிருந்தோம் .
மழை பெய்யாது என்று சொன்ன நாளில் ,
கொட்டிய மழையில் நனைந்தோம்.
எதேனும் ஒருநாளில்
நீங்கள் பெய்யும் எனும்போது
பெய்கிறது மழை.











No comments:
Post a Comment