Monday 5 June 2023

மகரிஷி அவர்களுடன்............2 ( 5000th POST )


 ஞானவயலில் என் 5000மாவது இப்பதிவினை 

என் உயிரினில் கலந்து என்னை இயக்கிக் கொண்டிருக்கும் 

தத்துவஞானி சுவாமி வேதாத்திரி மகரிஷி 

அவர்களுக்கு 

சமர்ப்பணம் செய்கின்றேன்.

" மகரிஷி அவர்களுடன் " என்ற தலைப்பில் முதல் பதிவினை இந்த ஆண்டு ஜனவரியில் வெளியிட்டேன். கடந்த ஐந்து மாதங்களாக குறிப்புகள் எழுதி வந்தாலும் சான்றுகள் தேடிக்கொண்டிருப்பதால் தடை பட்டுவிட்டது.

இன்று மகரிஷி கடிதம் ஒன்றினை வெளியிட்டுள்ளேன். இதில் அவர் தன் சுற்றுப்பயண  விவரங்கள் தந்துள்ளார்கள்





என்னை மகரிஷி அவர்கள் 'பிரகாஷ்' என்றுதான் கூப்பிடுவார்கள். (என் குடும்பத்தினர் தவிர மற்றவர்கள் 'ஜேபி' எனத்தான் அழைப்பார்கள்.)

பிரகாஷ் என மகரிஷி என்னைக் கூப்பிடும்போதெல்லாம் ஒரு பரவச நிலை அடைவேன். 

இக்கடிதத்திலும் Prakash Trichy என பிரதி எடுத்து அனுப்பியிருந்தார்கள்.

மகரிஷி குறிப்பிட்டிருக்கும் திருச்சி நிகழ்ச்சி மிக, மிக சிறப்பாக நடைபெற்றது. 2000 அன்பர்களுக்குமேல் கலந்துகொண்ட அந்த நிகழ்ச்சி பற்றி அடுத்த பதிவில்...

 

No comments:

Post a Comment