உங்கள் கணவர் இதில் எந்த வகை..
1: பேச்சிலர் கணவர்
மனைவியைக் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக காரியங்களைச் செய்பவர். மனைவியை விட தன் நண்பர்களுடன் அதிகம் பழகுவார். திருமண வாழ்க்கைக்கு முக்கித்துவம் தராதவர்.
2: அமிலக் கணவர்
எப்பொழுதும் அமிலம் போல் கொதித்துக்கொண்டே இருப்பவர். எப்போதும் கோபமாக இருப்பவர். வன்முறை மனநிலை, ஆதிக்க மனப்பான்மை உள்ளவர். ஆபத்தானவர்.
3: அடிமை கணவர்
ராஜாவைப் போல தான் நடத்தப்பட வேண்டும் என நினைப்பவர், ஆனால் மனைவியை அடிமையாக நடத்துகிறவர். பழைய பஞ்சாங்கத்தில் ஊறி போனவர்.
4: சராசரி கணவர்
பெரும்பாலான பெண்ணுக்கும் அமையும் கணவர் இவர். மனைவியை விட தோழிகளை அதிகம் நேசிப்பவர். அவர்கள் மேல் ஆர்வம் காட்டுபவர். பெண் தோழிகளுக்கு செலவு செய்வது பிடிக்கும் மேலும் பெண் நண்பர்களும் இவர்களுக்கு அதிகம்.
5: உலர் கணவர்
மிகவும் உலர்ந்த மனநிலை மற்றும் கஞ்சத்தனம் மிக்கவர். மனைவியின் உணர்ச்சிகளைக் கருத்தில் கொள்ளாதவர். உறவை சுவாரஸ்யமாக்குவதில்லை. ஊடல் இல்லை. நகைச்சுவை உணர்வு சுத்தமாக இல்லாதவர்.
6: சந்தர்ப்ப கணவர்
மனைவியை பிரச்சனை தீர்பவராகப் பயன்படுத்துகிறார், அவரிடமிருந்து ஏதாவது தேவைப்படும்போது மட்டுமே மனைவியை நேசிப்பார். புத்திசாலி மனைவியின் பலவீனங்களை அறிந்தவர். மனைவியிடமிருந்து வேண்டியதை பெற மனைவின் பலவீனங்களை பயன்படுத்துவார்.
7: ஒட்டுண்ணி கணவன்.
சோம்பேறி மற்றும் பணத்திற்காக மனைவியை மட்டுமே நேசிப்பவர். மனைவியின் பணத்தை காதலிகளுக்காக பயன்படுத்துபவர். எந்த ஆக்கபூர்வமான முன்முயற்சியும் இல்லை மற்றும் வீட்டுப் பொறுப்புகளில் கூட மனைவிக்கு உதவுவதில்லை.
8: குழந்தை கணவர்
பொறுப்பற்ற மற்றும் குழந்தைத்தனமானவர். அவரது தாய், உடன் பிறந்தவர்கள் அல்லது உறவினர்களை கேட்காமல் சொந்தமாக முடிவுகளை எடுக்க தெரியாது; மனைவியை உறவினர்களுடன் ஒப்பிட்டு, ஏதாவது தவறு நடந்தால் எப்போதும் உறவினர்களிடமோ, தாயிடமோ, உடன் பிறந்தவர்களிடமோ ஓடிவிடுவார்.
9: வருகை பதிவேடு கணவர்:
பெரும்பாலும் வீட்டில் இருப்பதில்லை, பார்வையாளர் போல வருவார், போவார். குடும்பத்திற்கு அனைத்து பொருள்களையும் வழங்குவார். ஆனால் குடும்பத்திற்கு நேரம் ஒதுக்காதவர்.
10: அக்கறையுள்ள கணவர்
அக்கறையும் அன்பும் கொண்டவர். உங்கள் உணர்ச்சிகளை சரியாக கையாள்பவர். குடும்பத்திற்கு நேரத்தை ஒதுக்குபவர். குடும்ப உறுப்பினர்களுக்கு சரியான வழிகாட்டியாக இருப்பவர். மிகவும் பொறுப்பான மற்றும் மனைவியை துணையாகவும், உதவியாளராகவும் கருதுபவர்.
No comments:
Post a Comment