பணியை நேசி, ஆனால் உனது அலுவலகத்தை அதிகம் நேசிக்காதே!
ஏனெனில் உனது அலுவலகம் உன்னை நேசிக்காது என்பது பணியாளர்களுக்கு தெரியாது!
அலுவலகத்தை விட்டு அலுவலக நேரம் முடிந்தவுடன் வெளியேறி விடவும்.
▪️வேலை ஒருபோதும் முடிவதில்லை: வேலை எப்போதும் முடியாது. அதனால், வேலை முடிந்தவுடன் வீட்டிற்கு சென்று குடும்பத்துடன் நேரம் செலவிடுவது முக்கியம்.
▪️குடும்பம் முக்கியம்: அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் முக்கியம் என்றாலும், குடும்பம் அதைவிட முக்கியம்.
▪️வாழ்க்கையின் முக்கியத்துவம்: வாழ்க்கையில் வீழ்ந்து தவிக்கும் போது, உங்களுடைய அதிகாரியோ, நீங்கள் உதவி செய்யும் பொதுமக்களோ உங்களை கைகொடுத்து உதவ மாட்டார்கள். ஆனால் உனது குடும்பம் மற்றும் நண்பர்கள் உளக்கு உறுதுணையாக இருப்பார்கள்.
▪️வாழ்க்கை என்பது வேலை மட்டுமல்ல: வாழ்க்கை என்பது உனது பணியோ, அலுவலகமோ, பொதுமக்களோ கிடையாது. வாழ்க்கை என்பது அதற்கு மேல் உங்களுக்கு மற்ற நேரங்களில் சமூக பழக்க வழக்கங்களும், கேளிக்கைகளும், புத்துணர்வு பெறுதலும், உடற்பயிற்சியும் கண்டிப்பான தேவை.
▪️வேலை நேரத்தை மதிக்கவும்: ஒருவர் அலுவலகத்தில் நீண்ட நேரம் பணியாற்றி எல்லோரையும்விட தாமதமாக செல்லும் கடின உழைப்பாளி என்றால், அவர் முட்டாளாக இருக்கக் கூடும். காரணம், அவர் வேலையை சிறப்பாக கையாளும் தன்மை அற்றவர் எனக் கருதப்படுவார். உரிய காலக்கெடுவிற்குள் பணியை முடிக்கத் தெரியாதவர்.
▪️இயந்திரத்தை போல் வாழாதீர்கள்: இயந்திரத்தைப் போல் கடின உழைப்பு செய்யாமல், வாழ்க்கையை சுகமாகவும், சமநிலையுடனும் வாழுங்கள்.
▪️அதிகாரியின் பொறுப்பு: உன் அதிகாரி நீண்ட நேரம் வேலை கொடுத்து தாமதமாக வீட்டிற்கு அனுப்பினால், அவர் வேலை வாங்கத் தெரியாதவர். மேலும், உங்களது வாழ்க்கையை அர்த்தமற்றதாக்கிவிடுவார். இதை அந்த அதிகாரிக்கு உணரச் செய்யுங்கள்.
உரிய நேரத்தில் அலுவலகத்தை விட்டு செல்பவர்:
▪️திறமைசாலி
▪️நல்ல சமூக வாழ்க்கையில் உள்ளவர்
▪️நல்ல குடும்ப வாழ்க்கை நடத்துபவர்
தாமதமாக அலுவலகத்தை விட்டு செல்பவர்:
▪️திறமையற்றவர், தகுதியற்றவர்
▪️சமூக வாழ்க்கையற்றவர்
▪️குறைந்த குடும்ப வாழ்க்கை அனுபவிப்பவர

No comments:
Post a Comment