மகரிஷி அவர்களுடன்.... 16ல் திருச்சியில் நடைபெற்ற ஒரு நிகழ்வு காரணமாக மகரிஷி அவர்கள் சிறிது வேதனைப்பட்டார்கள் எனக் குறிப்பிட்டிருந்தேன்.
அந்த நிகழ்வு பற்றி அறிந்துகொள்ள பலர் என்னிடம் தொடர்பு கொண்டனர். அதனைப் பற்றி இங்கே பதிவிடுகின்றேன் -
திருச்சியில் ஓர் அமைப்பினர் பழம்பெரும் தமிழ் நூல் பற்றிய இருநாள் கருத்தரங்கம் ஏற்பாடு செய்து மகரிஷி அவர்களை சிறப்பு சொற்பழிவாற்ற அழைத்திருந்தனர். அந்நிகழ்வில் கலந்துகொள்ள தன் உதவியாளர்களுடன் மகரிஷி அவர்கள் திருச்சி வந்து விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தார்கள்.
கருத்தரங்கம் துவங்குமுன் அமைப்பாளர்கள் மகரிஷி அவர்களிடம் தங்களின் சில பிரச்சனைகளைச் சொல்லி " தயவு செய்து தாங்கள் இந்த கருத்தரங்கில் கலந்துகொள்ள வேண்டாம் " என வேண்டிக்கொண்டார்களாம். மகரிஷி அவர்களும் அவர்களின் வேண்டுகோளினை ஏற்று விருந்தினர் மாளிகையிலேயே தாங்கிவிட்டார்கள். முதல்நாள் மாலையில் மகரிஷி அவர்களை சந்தித்தபோதுதான் இந்த விஷயம் எங்களுக்குத் தெரியவந்தது.
வருத்தத்தோடு இருந்த மகரிஷி அவர்களிடம் " நாளை நாங்கள் ஒரு சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்கின்றோம். தாங்கள் வந்திருந்து நல்லதொரு தலைப்பில் உரை நிகழ்த்தி, கலந்துரையாடல் செய்தால் மிகவும் மகிழ்ச்சியடைவோம். தங்களுக்கும் நிறைவு கிடைக்கும் " என வேண்டினோம்.
அதற்கு மகரிஷி அவர்கள் " நான் இங்கு இந்த அமைப்பாளர்களின் அழைப்பினை ஏற்று இங்கு வந்துள்ளேன். என்னை பயன்படுத்துவதும், பயன்படுத்தாமலிருப்பதுவும் அவர்கள் உரிமை. அவர்கள் விருப்பப்படி நடப்பதுதான் என் கடமை " என சொல்லிவிட்டார்கள்.
அடுத்தநாள் மதியம் ஒரு மகிழ்வான செய்தி எங்களுக்கு வந்தது -
அந்த அமைப்பாளர்கள் திருச்சியில் உள்ள ஒரு பள்ளியில் மாணவர்கள் மத்தியில் மகரிஷி அவர்கள் உரையாற்ற ஏற்பாடு செய்து மனவளக்கலை அன்பர்களும் அதில் கலந்துகொள்ளலாம் என அறிவித்திருந்தனர்.
மாலை 4-30 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்த நிகழ்ச்சி பற்றி திருச்சி பகுதியில் உள்ள அனைத்து அன்பர்களுக்கும் செய்தி தெரிவிக்கப்பட்டது.
கிட்டத்தட்ட இருநூறு அன்பர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி பள்ளியில் இருந்த பிள்ளையார்கோவில் முன்புறம் இருந்த மேடையில் அமைக்கப்பட்டிருந்தது. ஒரு சிறுமி பிள்ளையார் பாடலை இறைவணக்கமாகப் பாட நிகழ்ச்சி தொடங்கியது. நம் அன்பர் ஒருவரின் மகரிஷி அவர்களின் இறைவணக்கப் பாடல் மற்றும் குரு வணக்க பாடல்களுடன் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.
உடனே மகரிஷி அவர்கள் ஆழியார் திரும்பிவிட்டார்கள்.
அடுத்த பத்து நாட்களிலேயே ஆழியாரில் மகரிஷியை சந்திக்கும் நல்வாய்ப்பு கிடைத்தது. மகரிஷி அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது திருச்சியில் தனது இருநாட்கள் வீணாகிப்போனது பற்றியும், அமைப்பாளர்கள் தன்னை பயன்படுத்திக்கொள்ளாதது பற்றிய வேதனையையும், அமைப்பாளர்கள் பள்ளி நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தாலும் அது தனக்கு நிறைவினைத் தரவில்லை என்றும் ஆனால் மனவளக்கலை அன்பர்களை பெருமளவில் பார்த்தது நிறைவினைத் தந்தது எனக் கூறினார்கள்.
அப்போது மகரிஷி அவர்களிடம் " அடுத்த ஆண்டு நாங்கள் மிகப் பெரிய அளவில் காந்த தத்துவ கருத்தரங்கம் ஏற்பாடு செய்கின்றோம். தாங்கள் மூன்று நாட்கள் எங்களுக்காக ஒதுக்கித்தர வேண்டும் " என நான் வேண்டியபோது " வந்துட்டாப்போச்சு. நீங்க திட்டமிடுங்க " என உற்சாகத்தோடு உறுதி அளித்தார்கள்.
அது தொடர்பான கடிதங்களைத்தான் முந்தையப் பதிவில் சொல்லியுள்ளேன். அதனைப் படிக்க Click here .
கருமையத்தூய்மை பற்றி விளக்குகின்றார்கள் |
பிள்ளையார்கோவில் வாசலில் நிகழ்ச்சி |
No comments:
Post a Comment