Thursday 23 January 2014

DREAMS...7

கவிதைக்கனவுகள்

- கண்ணதாசன் 



காக்கை குருவியைப்போல் 
கவலையின்றி நீயிருந்தால் 

யாக்கை கொடுத்தவனை 

யார்நினைப்பார் இவ்வுலகில் 

சட்டியிலே வேகின்ற 
சத்தெல்லாம் சரக்கானால் 
மட்டின்றிப் படித்துவந்த 
மருத்துவர்க்கு வேலையென்ன 

கடலருகே வீற்றிருந்தும் 
கடுந்தாகம் வரும்பொழுதே 
கடவுளெனும் ஒருவனது 
கைசரக்கு நினைவுவரும் 

இன்னதுதான் இப்படித்தான் 
என்பதெல்லாம் பொய்க்கணக்கு 
இறைவனிடம் உள்ளதடா 
எப்போதும் உன்வழக்கு 

எல்லாம் அவன்செயலே 
என்பதற்கு என்ன பொருள் 
உன்னால் முடிந்ததெல்லாம் 
ஓரளவே என்று பொருள்.

No comments:

Post a Comment