Friday 27 June 2014

நட்பு...22

  இருவர் ஒன்றாகக் கலந்து நட்புக் கொண்டு வரும்போது அந்த நட்பில் பிரிவு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் பிரிவு ஏற்பட்டபின் மீண்டும் நட்புக் கொண்டாலும் அந்த நட்பில் பழைய உறுதிநிலை இருக்காது என்று நன்னெறி தெரிவித்துள்ளது.

நீக்கம் அறும்இருவர் நீங்கிப் புணர்ந்தாலும்
நோக்கின் அவர்பெருமை நொய்தாகும் - பூக்குழலாய்
நெல்லின் உமிசிறிது நீங்கிப் பழமைபோல்
புல்லினும் திண்மைநிலை போம் 

(நீக்கம் = விலகுதல், நொய்து = இழிவு, புல்லினும் = சேர்ந்தாலும், திண்மை = உறுதி)

என்னும் பாடலில் நட்பில் பிரிவு கூடாது என்பதை விளக்குவதற்கு ஓர் உவமையை அவர் தெரிவித்துள்ளார்.


நெல்லின் உட்பகுதியில் அரிசி இருக்கும். அதன் வெளிப்பகுதியில் அரிசிக்குப் பாதுகாப்பாய் உமி இருக்கும். அந்த உமியில் பிளவு ஏற்பட்டு அரிசி வெளியே வந்தபிறகு மீண்டும் அந்த உமியைப் பொருத்தி அரிசிக்குப் பாதுகாப்பைக் கொடுக்க இயலாது. அதுபோல இருவரது நட்பில் பிரிவு ஏற்பட்டால் மீண்டும் அந்த நட்பில் பழைய உறுதிநிலை இருக்காது என்று சிவப்பிரகாசர் உணர்த்தியுள்ளார். எனவே நண்பர்கள் தங்களுக்குள் பிரிவு ஏற்படாமல் நட்பைக் காத்துக்கொள்ள வேண்டும். 

2 comments:

  1. sorry, i don't agree... :)

    ReplyDelete
  2. ....its only ego that stands in the way...
    haven't you heard of the saying... நட்புக்குள் தன்னலம் இருக்காது ??

    ReplyDelete