Tuesday 19 August 2014

கல்வி...2

கல்வியா செல்வமா வீரமா? அன்னையா தந்தையா தெய்வமா?
கல்வியா செல்வமா வீரமா? அன்னையா தந்தையா தெய்வமா?
ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா? - இதில்
உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா?
ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா? - இதில்
உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா?

கல்வியா செல்வமா வீரமா?

படித்தவன் கருத்தெல்லாம் சபையேறுமா? - பொருள்
படைத்தவன் கருத்தானால் சபை மீறுமா?
படித்தவன் கருத்தெல்லாம் சபையேறுமா? - பொருள்
படைத்தவன் கருத்தானால் சபை மீறுமா?
படித்தவன் படைத்தவன் யாராயினும்
படித்தவன் படைத்தவன் யாராயினும் - பலம்
படைத்திருந்தால் அவனுக்கிணையாகுமா? - பலம்
படைத்திருந்தால் அவனுக்கிணையாகுமா?

கல்வியா செல்வமா வீரமா?

ஒன்றுக்குள் ஒன்றாகக் கருவானது - அது
ஒன்றினில் ஒன்றாகப் பொருளானது
ஒன்றுக்குள் ஒன்றாகக் கருவானது - அது
ஒன்றினில் ஒன்றாகப் பொருளானது
ஒன்றை ஒன்று பகைத்தால் உயர்வேது?
ஒன்றை ஒன்று பகைத்தால் உயர்வேது? - மூன்றும்
ஓரிடத்தில் இருந்தால் நிகரேது? - மூன்றும்
ஓரிடத்தில் இருந்தால் நிகரேது?

கல்வியா செல்வமா வீரமா?

மூன்று தலைமுறைக்கும் நிதி வேண்டுமா? - காலம்
முற்றும் புகழ் வளர்க்கும் மதி வேண்டுமா?
மூன்று தலைமுறைக்கும் நிதி வேண்டுமா? - காலம்
முற்றும் புகழ் வளர்க்கும் மதி வேண்டுமா?
தோன்றும் பகை நடுங்கும் பலம் வேண்டுமா?
தோன்றும் பகை நடுங்கும் பலம் வேண்டுமா? - இவை
மூன்றும் துணை இருக்கும் நலம் வேண்டுமா? - இவை
மூன்றும் துணை இருக்கும் நலம் வேண்டுமா?

கல்வியா செல்வமா வீரமா?

No comments:

Post a Comment