Saturday 20 October 2012

மூளைக்கு வேலை - 10



1) ஒரே  மாதிரியான  இரண்டு தாள்களையும் ஒரே சமயத்தில் மேலிருந்து கீழே போட்டால், 'அ' தாள் முதலில் தரையில் விழ வேண்டும். வேறு எந்தப் பொருளையும் அவற்றோடு இணைக்கக் கூடாது. எப்படி 'அ' தாளை முதலில் தரை தொட வைப்பீர்கள்?

2) தனது படையில் உள்ள யானைகளைக் கணக்கெடுக்கச் சொன்னார் மன்னர். அதிகாரி வந்து 'சிக்ஸ்டி ஹெட்ஸ்' (60 தலைகள்) என்று சொன்னார். இன்னொரு முறை கணக்கெடுக்கும்படி வேறு ஒரு அதிகாரியை அனுப்பினார் மன்னர். அவர் வந்து 'சிக்ஸ்டி ஃபோர் ஹெட்ஸ்' என்று சொன்னார். அவையோர் புரியாமல் குழம் பினார்கள். ஆனால், மன்னர் 'இரண்டுமே சரி' என்றார். எப்படி?

3) இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல உங் களுக்கு அதிகபட்சம் இரண்டு விநாடிகள்தான் நேரம். கமான் க்விக்! டெலிபோன் அல்லது செல்போனின் டயல் பட்டன்களில் உள்ள அனைத்து எண்களையும் பெருக்கினால் (1 ஐ  2 ஐ  3 ஐ ... என்று) வரும் தொகை என்ன? ம்... முதல் நொடி முடிந்துவிட்டது!

4) 1960-ல், நமது பிரதமரின் பெயர் என்ன?

 5) நான் கடவுளை விட வலிமைமையானவன், ஏழைகளிடம் இருப்பவன், பணக்காரர்களிடம் இல்லாதவன். நான் உன்னிடம் வந்தால் நீ இறப்பாய். நான் யார்?

6) மெக்கானிக் அண்ணாமலையின் சகோதரன் தாயுமானவன் இறந்து விட்டார். ஆனால் தாயுமானவனுக்கு சகோதரனே கிடையாது. எவ்வாறு?

விடை ...இந்நேரம் கண்டு பிடிச்சிருப்பீங்களே!  

1 comment:

  1. 1. just kasakkavum...

    2 me think it's 4heads

    3 c'mon JP, it's aryabhatta

    4 Even our Manmohan singh will open his mouth to say the right answer

    .....enuff for now

    ReplyDelete