Tuesday 16 October 2012

World Food Day, 16 October 2012


Agricultural cooperatives – key to feeding the world

Agricultural cooperatives are the focus of World Food Day 2012.

The official World Food Day theme, announced each spring by the Food and Agriculture Organization of the United Nations (FAO), gives focus to World Food Day observances and raises awareness and understanding of approaches to ending hunger.

“Agricultural cooperatives – key to feeding the world” is the formal wording of the 2012 theme. It has been chosen to highlight the role of cooperatives in improving food security and contributing to the eradication of hunger.

Interest in cooperatives and rural organizations is also reflected in the decision of the UN General Assembly to designate 2012 “International Year of Cooperatives.”


2009 ம்   ஆண்டு ஐ.நா.வெளியிட்ட  செய்தி -


உலக ஏழை மக்களின் பட்டினியை போக்க ஐ.நா. சபையின் உலக உணவுத் திட்டம் உதவி வருகிறது.

இந்த திட்டத்தின் மூலம் ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள ஏழை மக்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்துக்கு நடப்பாண்டு 33 ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிதிக்கு பட்ஜெட் போடப்பட்டது. ஆனால் இந்த திட்டத்துக்கு 13 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே கிடைத்து உள்ளது. பொருளாதார பின்னடைவு காரணமாக எதிர்பார்க்கப்பட்ட நிதி உதவி கிடைக்கவில்லை. இதனால் இந்த ஆண்டு 100 கோடி பேர் பட்டினி கிடக்கும் நிலை ஏற்பட்டு இருப்பதாக ஐ.நா. சபை வேதனை அடைந்து உள்ளது.

இது தொடர்பாக ஐ.நா. உலக உணவு திட்ட அலுவலகம் கூறியிருப்பதாவது:-

நாள் ஒன்றுக்கு ரூ.50 ரூபாய்க்கும் குறைவாக வருமானம் உள்ளவர்கள் அதிகமாக இருப்பதால் மக்கள் வறுமையின் பிடியில் சிக்கி தவிக்கிறார்கள். பொருளாதார பின்னடைவு காரணமாக நிலைமை மோசமாகி உள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து இருப்பது மக்களை மேலும் அதிக அளவில் பாதித்து உள்ளது. இதற்கு இந்தியாவும், பாகிஸ்தானும் கூட விதிவிலக்கு அல்ல. வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் மக்கள் அதிகம் உள்ள நாடுகளில் இந்தியா 25 இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் இந்த பட்டியிலில் 11-வது இடத்தில் உள்ளது. இவ்வாறு ஐ.நா. சபையின் உலக உணவு திட்ட அலுவலகம் அறிவித்து உள்ளது.


இறைவன் உலகத்தைப் படைத்தானா?
ஏழ்மையை அவன்தான் படைத்தானா?
ஏழையைப் படைத்தவன் இறைவன் என்றால்
இறைவன் என்பவன் எதற்காக?


பொன்னகை அணிந்த மாளிகைகள்
புன்னகை மறந்த மண்குடிசை
பசி வர அங்கே மாத்திரைகள்
பட்டினியால் இங்கு யாத்திரைகள்    

      
இருவேறுலகம் இதுவென்றால்
இறைவன் என்பவன் எதற்காக?


உயரே பறக்கும் காற்றாடி
உதவும் ஏழை நூல்போலே
பட்டம் போலவர் பளபளப்பார்
நூல் போலே இவர் இளைத்திருப்பார்


இரு வேறியக்கம் இதுவென்றால்
இறைவன் என்பவன் எதற்காக?

No comments:

Post a Comment