Wednesday 14 August 2013

உலக அமைதி தினம் ( மகரிஷி பிறந்த நாள் )



குருவே சரணம்! குருவே சரணம்! 
குருவே சரணம்! குருவே சரணம்! 



1. ஒரு நாட்டுக்கு நாடு அரசியல் முறை வேறுபட்டிருக்கும் வரைக்கும்;

2. இயற்கையின் மூலதனமான பூமியைத் தனி மனிதனோ அல்லது குழுவினரோ தங்களுக்குச் சொந்தம் என்று எல்லைக் கட்டிக் கொண்டிருக்கும் வரைக்கும்;

3. ஒரு மனிதன் முயற்சியினால் விளைவிக்கும் எந்தப் பொருள் எனினும் அது அவனுக்கோ, அவனுடைய வாரிசுகள் எனப்பட்ட குறிப்பிட்ட நபர்களுக்கோ தான் உரிமையானது என்ற கற்பனை முறை நீடித்திருக்கும் வரைக்கும்;

4. குழந்தை வளர்ப்பு, முதியோர் பராமரிப்பு என்ற இருவகையும் பெற்றோர்கள், மக்கள் இவர்கள் பொறுப்பிலிருந்து விடுபட்டுச் சமுதாயப் பொதுவாக நடைபெறும் காலம் வரைக்கும்;

5. வாலிபப் பருவமும், உடல் வலிவும் உடைய அனைவருக்கும் அறிவிற்கும், உடலுக்கும் தகுந்தபடி ஆக்கத் தொழில் புரியும் வாய்ப்பு சமுதாயத்தில் கிடைக்கும் ஒரு அமைப்பு ஏற்படும் வரைக்கும்;

6. உலகில் ஒரு மனிதனேனும் உணவு கிடைக்கவில்லை என்ற காரணத்தால் பட்டினி கிடக்க நேரிடும் முறையில் நிர்வாகம் நடைபெறும் வரைக்கும்;

7. உணவிற்காக வேறு ஒரு ஜீவனைக் கொல்லும் பழக்கமும், அவசியமும் மனிதனுக்கு இருக்கும் வரைக்கும்.

உலக மக்கள் வாழ்வில் நிரந்தரமாக அமைதி என்பது ஏற்பட முடியுமா?

                                                            -- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

No comments:

Post a Comment