Friday 11 October 2013

திடீர் சுற்றுலா ...5

மதியம் மூணு மணிக்கு மணமேல்குடியில் மனவளக்கலை மன்றம் நடத்தும் நண்பர் அழகுராஜா வீட்டை அடைந்தோம். அங்கு சிறிது நேரம் இளைப்பாறிவிட்டு, ஜூஸ் சாப்பிட்டுவிட்டு கடற்கரைக்குச் சென்றோம்.

அலைகளே இல்லாமல் அழுக்காக இருந்த கடல் எங்களை ஏமாற்றிவிட்டது. கடலில் குளிக்க ஆவலாய் இருந்த பலபேர் வேறு வழி இல்லாமல் கொண்டு வந்திருந்த தின்பண்டங்களைத் தின்று தீர்த்தார்கள். 


குழந்தையுடன் ஷபீர் தம்பதி, JP,அழகுராஜா, முத்துகுமரேசன் தம்பதி, மாலா,
மற்றும் ஓரத்தில் சரவணன் 

என்னுடன் பணிபுரியும் நண்பர்கள் குடும்பத்துடன் 
( ராஜேஷ், கார்த்திக், ஜிபி, பாண்டி , ரகுநாத், கீர்த்தி, கவிதா )

எனக்கு எதிரே முத்துக்குமரேசன் தம்பதி  பக்கத்தில் அழகுராஜா 


எங்களின் ஏமாற்றத்தைப் போக்கும் வகையில்  நண்பர் அழகுராஜா  மணமேல்குடி கலங்கரை விளக்கத்தின் மேல் செல்ல அனுமதி வாங்கி வைத்திருந்தார்.


மணமேல்குடி லைட் ஹவுஸ் 
லைட் ஹவுஸ் இரண்டாவது தளத்திலிருந்து மாலா  

மாலை ஆறரை மணிக்கு  அழகுராஜா குடும்பத்தினருக்கு நன்றி சொல்லிவிட்டு  அங்கிருந்து கிளம்பி புதுக்கோட்டையில்  இரவு உணவு முடித்து 
வீடு வருவதற்கு 11 மணி ஆகிவிட்டது.


                                                                                              ராஜேஷ், கார்த்திக் & ஜிபி 















கவிதா &  கீர்த்தி 
லைட் ஹவுஸ் உட்புற படிகள் 

2 comments:

  1. Your way of writing is so good and handling of words and continuity also superb.. உங்களுடைய பதிவில் நானும் இடம்பெறுவதற்கு வாய்ப்பு தந்த அய்யா மற்றும் அம்மா அவர்களுக்கு நன்றி ... நல்ல மனிதர்களை அறிமுகம் செய்த இறைநிலைக்கும் இணைப்பை ஏற்படுத்திய குருவுக்கும் நன்றி ... வாழ்க வளமுடன்

    ReplyDelete