Friday 4 October 2013

BHEL அறிவுத்திருக்கோவில் ஆண்டு தினம்


இன்றுடன் BHEL அறிவுத்திருக்கோயில் திறக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் நிறைவு பெறுகின்றது.

2004ம் ஆண்டு நிலம் வாங்கப்பட்டு மகரிஷி அவர்கள் ஆசீர்வதித்தபடி
 ( " நீங்கள் அமைக்கப்போகும்  அறிவுத்திருக்கோயில் பன்னாட்டு மையமாகத் திகழும். உலகின் பல பாகங்களிலிருந்து அன்பர்கள் இங்கு வந்து பயிற்சி பெறுவார்கள்") நன்கு திட்டமிட்டு மூன்று தளங்களுடன் அமைக்கப்பட்டு 4-10-2009ம் தேதி திறப்பு விழா நடந்தேறியது. 


ஒரு ஏக்கருக்கும் மேலாக உள்ள நிலத்தில் சுமார் 8000 சதுர அடி பரப்பில் அறிவுத்திருக்கோயில் எழுப்பப்பட்டுள்ளது.  மூன்று தளங்களிலும் சேர்த்து 500 அன்பர்கள் ஒரே நேரத்தில் பயிற்சி பெறலாம். 

சென்ற ஆண்டு நிகழ்ந்த சிறப்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்த அன்பர்களின் வாகனங்கள் கோயில் வளாகத்தில் நிறுத்தப் பட்டிருப்பதை கீழ்கண்ட போட்டோக்களில் காணலாம்.




கோயிலுக்குஎதிரேஉள்ள35000 சதுரஅடிபரப்பளவில்ஓர்ஆழ்நிலைதியான மண்டபம், பூங்கா, நிர்வாக அலுவலகக் கட்டிடம், இலவச மருத்துவ மனை, நூலகம், சிறுவர் விளையாடுமிடம், நூறு பேர் தங்கி பயிற்சி பெறுவதற்கு ஏற்ற ஹாஸ்டல், உணவகம் என ஏகப்பட்ட எதிர்கால திட்டங்கள்  மனதில் ஓடிக்கொண்டிருக்கின்றன.

கோயில் கட்ட வாங்கப்பட்ட பல லட்ச ரூபாய் கடன் திருப்பித் தந்துவிட்ட படியால் எதிர்காலத் திட்டங்களை படிப்படியாக நிறைவேற்ற 
இன்று உறுதி எடுத்துக் கொள்கின்றோம்.

எதிர்காலத்தில் திருச்சி மலைக்கோட்டை, கல்லணை, தஞ்சை பெரியகோயில் வரிசையில் நம் அறிவுத்திருக்கோயிலும் ஓர் உன்னத 
landmarkகாக திகழும்.

இந்த நல்ல தினத்தில் தங்களின் மேலானவாழ்த்துக்களையும், ஆலோசனைகளையும் வேண்டுகிறோம்.

சென்ற ஆண்டு post  செய்ததைப் பார்க்க இங்கே செல்லவும்.

1 comment:

  1. good luck with your future endeavors!!
    Vazhga Valamudan!!

    ReplyDelete