Tuesday 16 October 2012

சிரிப்பு ஞானம் -14 ( பவர் கட் ஸ்பெஷல் )

Candlelight Haircut






ஆசிரியர்: ஏன் வீட்டுப்பாடம் எழுதவில்லை?

மாணவி:கரண்ட் இல்ல !


ஆசிரியர்:மெழுகுவர்த்தி வைத்து எழுத வேண்டியதுதானே?


மாணவி:தீப்பெட்டி சாமி ரூம்ல இருந்தது! எடுக்க முடியல!


ஆசிரியர் :ஏன்?


மாணவி: குளிக்கல! அதனால சாமி ரூமுக்குள்ள போக முடியல!


ஆசிரியர் :ஏன் குளிக்கவில்லை?


மாணவி : மோட்டார்  ஓடல ...தண்ணி  வரல ...

ஆசிரியர் : ஏன்  மோட்டார் ஓடல .?

மாணவி:  அதான் கரண்ட் இல்லேன்னு மொதல்லயே சொன்னனே!?


மக்கு : ஸ்பென்சர் பிளாசா போய்ட்டு வசமா மாட்டிக்கிட்டேன்.

ஜக்கு : ஏன்?

மக்கு : கரண்ட் கட் ஆயிடுச்சி "எஸ்கலேட்டர்லயே" 4 மணிநேரம் மாட்டிக்கிட்டேன். 










சூர்யா: நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி ....
அடுத்த கேள்வி ....
தமிழ்நாட்டு பவர்கட் எப்போது தீரும்? 
உங்கள் விடை .........
A. E B க்கு தெரியாது                              B.தமிழக அரசுக்கு தெரியாது
C. மத்திய அரசுக்கு தெரியாது         D.யாருக்குமே தெரியாது  



கணவன் : என் மனைவி நிறைய டி.வி பார்க்கிறா டாக்டர்.

டாக்டர் : உங்களுக்கு நல்லதுதானே? நிம்மதியா இருங்க !

கணவன் : நீங்க வேற டாக்டர். பவர் கட் ஆனாலும் டார்ச் அடிச்சு பார்க்கிறா டாக்டர்.
Current விளையாட்டு  

இருட்டுல நீ வாழ பழகு
வெளிச்சமெல்லாம் எதுக்குடா...
கருவறையில் இருந்தப்போ
கரண்ட் இல்லையே உனக்குடா...

பெட்ரோமாக்ஸ் லைட்ட  கொளுத்து
பங்சன்  மூடு கிடைக்குண்டா...
மெழுகுவர்த்திய ஏத்தி வையி
பர்த்டே போல இருக்குண்டா...

காலேஜுக்கு கட் அடிச்சுட்டு
சந்தோசமா சிரிக்கிற
கரண்ட் மட்டும் கட் அடிச்சா
ஏன்டா கண்டபடி குதிக்கிற!

பாக்டரிய இழுத்து மூடு
டெய்லி உனக்கு லீவுடா...
போர் அடிச்சா திறந்சிருக்கு
டாஸ்மாக்கு ஓடுடா...

பேனை தூக்கி போட்டுட்டு
பேரிச்சம் பழம் வாங்குடா...
வொய்ப் சீரியல் பாக்காட்டி
டைம்முக்கு கிடைக்கும் சோறுடா...

இயற்கையோட இணைந்து வாழ்ந்தா
மின்சாரம் மிச்சமடா...
கரண்ட் பில்லு கட்ட வேண்டாம்
மவனே உனக்கு உடம்பு பூரா மச்சம்டா...

ஆதிவாசி மனுசனோட
வாழ்க்கை இப்போ புரியுதா...
கல்லறைக்கு போன பிறகும்
கரண்ட் இல்ல தெரியுதா... 




நான் மின்சாரத்துறையில வேலை செய்யுறேன்”
“அப்ப வேலையே இல்லைன்னு சொல்லுங்க”





3 comments: