Tuesday 16 December 2014

பிரார்த்தனை....31

பணத்தினை வாயால் வைது ,உள்ளத்தில் பூஜை செய்து
வனப்பினைப் பழித்துப் பேசி,முகங்களைத் தொடர்ந்து நோக்கி
புலன்களை வேசி என்றும்,உயிரினைப் பகல் கனவென்றும்,
மலங்களின் மகன் என்றும் உதட்டினால் வீரம் பேசி,
நெய்யோடு பழ வகையும் தின்று மிக ஏப்பம் இட்டு
பையாகப் பொன்னும் பொருளும் சிவன் பெயரை சொல்லிச் சேர்த்து
மடங்களைக் கட்டுவித்து மனதில் இடம்பம் கொண்டு
அடங்கலும் சிவனுக்கென்று ,ராஜஸம்  பொலியப் பழகி
வில்வமும் விளக்கும் சேர்த்துப் பூசனை முழக்கம் கூட்டி
கல்வமும் மருந்தும் காட்டிச் சித்தனின் சீடனென்று
பொய் வார்த்தை சொல்லாததாலே பித்தனென்று பெயரைப் பெற்றேன்.
பித்தனாயிருக்க அருள்வாய்,பித்தரே,பித்தர் குருவே.



                                 --ந..பிச்சமூர்த்தி.

கவிதை 'பிரார்த்தனை'யிலிருந்து  

No comments:

Post a Comment