Saturday 24 September 2016

நயாகரா நீர்வீழ்ச்சி - 1


நான்  BHELல்  இருந்தபோது US செல்லவேண்டிய official trip சில காரணங்களால் ஐரோப்பா போகும்படியாகி விட்டது.  US  சென்று வந்த  எனது நண்பர்கள் நயாகரா சென்று வந்த அனுபவங்களை சொல்லும்போது நிச்சயம் நாமும் இங்கே சென்று வந்தாக வேண்டும் என்ற எண்ணம் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பிறகு நிறைவேறியது.

செப்.11ம் தேதி காலை 8-30 மணிக்கு பிட்ஸ்பர்க்கிலிருந்து புறப்பட்டு 11-45க்கு நயாகரா வந்து சேர்ந்தோம். கையில் கொண்டுவந்திருந்த கட்டுசாதத்தை சாப்பிட்டுவிட்டு நீர்வீழ்ச்சி நோக்கி நடக்க ஆரம்பித்தோம். அருவிச் சாரல் தூவானமாக எங்களை நனைக்க ஆரம்பித்தது.



இது அருவியா, நீர் வீழ்ச்சியா, பேரருவியா - முதல் காட்சியே மலைக்க வைத்தது.

நயாகரா நீர்வீழ்ச்சி பற்றி தெரிந்த சில விவரங்களை  மறுபடியும்  இங்கே படிக்கலாம் -

உலகப் புகழ் பெற்ற இந்த பேரருவி கனடா - அமேரிக்கா எல்லையில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் குறைந்தது 1 கோடி மக்கள் இதை பார்க்க வருகின்றார்களாம். நயாகரா ஆறு இரு பிரிவாகப் பிரிந்து 85% நீர் கனடா பகுதியில் குதிரை லாட ( horse  shoe ) அருவி என்ற பெயரில் வீழ்கிறது. பாக்கி 15% தான் அமெரிக்கன் அருவியாக அமெரிக்கப் பகுதியில் வீழ்கிறது. இது தவிர பிரைடல் வெய்ல்  என்ற ஒரு சிறிய அருவியும் இருக்கின்றது . இந்த 15%  அமேரிக்கா   பக்கம்தான் நாங்கள் போயிருந்தோம்.

சாரல் அதிகமாக இருந்ததாலும், காற்றின் வேகமும் போட்டோக்கள் எடுக்கும் வாய்ப்பினை குறைத்து விட்டன. you tube ல் நீர்வீழ்ச்சி பற்றி நிறைய வீடியோ கிளிப்பிங்ஸ் உள்ளன. சாம்பிளுக்கு கீழே உள்ள linkல் கொஞ்சம் பார்க்கலாம் 

click  link 

மற்றைய விவரங்களை அடுத்த பகுதியில் எழுதுகிறேன். நயாகரா பற்றி  

கவிஞர் வைரமுத்து எழுதியது கீழே -


ஓ.. நயாகரா!

இது என்னடா இது?
அந்தப் பாறை முகடுகளில்
தண்ணீரைத் துவைத்துக்
காயப்போட்டது யார்?

இது
எழுந்து நிற்கும் நதியா?
தண்ணீரின் வீசுவரூபமா?

நக்கீரா!
இதை நீர்வீழ்ச்சி என்பது
பொருட்குற்றம் அல்லவா?

நீருக்கு இது வீழ்ச்சியல்ல
எழுச்சி!

உன் பழமொழி
பொய்யடா தமிழா!
இதோ
இங்கே நெருப்பில்லாமல்
புகைகிறதே!

இங்கென்ன
தண்ணீர் முத்துக் குளிக்கிறதா?
இது என்ன

வானுக்கும் பூமிக்கும்
வைரநெசவா?

அது என்ன
தற்கொலை புரியும் தண்ணீருக்கு
அத்தனை ஆனந்தமா?

கண்டேன்
கண்களுக்குள் மழை!

கேட்டேன்
காதுக்குள் கச்சேரி


தொட்டேன்
ஜீவனுக்குள் சில்லிப்பு

உண்டேன்
பல்லிடுக்கில்  பனிக்கட்டி

முகர்ந்தேன்
இனந்தெரியா ஈரமணம்

ஓகோ!

கண்டு கேட்டு உண்டுயிர்த்து
உற்றறியும் ஐம்புலனும்
அருவியின் கண்ணும் உள!

அருவியே! அருவியே!
அடர்ந்த அருவியே!

உன்னை எழுதும் போது
கூறியது கூறுலும்
குற்றமென்றாகாது!


அடுத்து 

மெயிட் ஆஃப் த மிஸ்ட் (Maid of the Mist) ,



கேவ் ஆப் த வின்ட்ஸ் ( Cave of the Winds ) ,



வானவில் பாலம் (Rainbow Bridge)  &


ராபர்ட் மோசஸ் (Robert Moses) மின் நிலையம்



No comments:

Post a Comment