Tuesday 24 September 2024

மகரிஷி அவர்களுடன்........23

2004

" மகரிஷி அவர்களுடன் ...." தொடர் இடையில் எழுத முடியாமல் போய்விட்டது. PhD  நேர்முகத் தேர்வும் ஒரு காரணம். மேலும் சான்றுகளுடன் விஷயங்களை எழுதினால்தான் சிறப்பாக இருக்கும் என எண்ணி என்னிடம் உள்ள மகரிஷி தொடர்பான விஷயங்களைத் தேடியபோது மேலே உள்ள படம் கிடைத்தது.
2004ம் ஆண்டு ஆழியாரில் மூத்த பேராசிரியர்களுக்கான  பயிற்சிகளை மகரிஷி வழங்கினார்கள். 

அச்சமயம் மு.பே. K G சாமி மற்றும் மனவளக்கலை உலகமெங்கும் குறிப்பாக ஒரிஸ்ஸா மற்றும் டெல்லியில் பரவ ஆழமாக அடித்தளம் அமைத்த போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் உயர்திரு தீனதயாளன் இருவருக்கும் பாராட்டு  விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கும் பொறுப்பினை எனக்குத் தந்திருந்தார்கள்.

இந்நிகழ்ச்சி தொடர்பான ஒலிநாடாக்கள், போட்டோக்கள் ஆழியார் 
archives ல் இருக்கலாம். 

இந்த அளவிலே இப்பதிவினை நிறைவு செய்கின்றேன்.
அடுத்த பதிவு விரிவாக இருக்கும்.

இந்த பதிவு ஞானவயலின் 2024ம் ஆண்டின் 5555வது பதிவு.
இதுவரை  பலர்   4,57,000     முறை  ஞானவயல் பதிவுகளை படித்திருக்கின்றார்கள்.
இப்பதிவு ஞானவயலின் 12622வது பதிவு. 

ANJEL  NO 5555

 

No comments:

Post a Comment