மன்னித்தல்
இறைபண்பு.
ஆனால், நம்மால் அத்தனை சுலபமாக யாரையும் மன்னித்து விட முடியாது,,,,
உங்களுக்கு என்ன தெரியும் எனக்கு எவ்வளவு பெரிய துரோகம் செய்திருக்கான் அவன் தெரியுமா?
மோசடிக்காரன், பணம் வாங்கி விட்டு இல்லை என்றான்.ஏமாற்றுக்காரன்
என்னை ஏமாற்றினான்.
இப்படி நித்தம் நம்மை ஏமாற்றியவர்களை யாரையேனும் நாம் மனதிற்குள்ளே, வெளியிலோ யாரையாவது துரோகி, கொள்ளைக்காரன், மோசடிக்காரன், நயவஞ்சகன், கெட்ட எண்ணப்பிடித்தவன், என திட்டிக் கொண்டே இருக்கின்றோம்.
காரணம், அவர்கள் செய்த செயல்கள் இன்னும் நம் மனதில் பதிவுகளாகி இப்படிப் பண்ணிட்டாங்களே என்ற எண்ணத்தோடு உட்கார்ந்து உள்ளது தான்.
ஆனால், காலம் போயிருச்சு.ஆனாலும், கடந்து போன விசயத்தை இழுத்து வைத்து குப்பை தொட்டியையே கொண்டே உட்கார்ந்திருப்போம்,,
குப்பைத்தொட்டியை கிளறி பார்ப்பது, எதிரிகளோ, துரோகிகளோ, வேண்டாதவர்களோ செய்த செயல்களை எண்ணி, எண்ணி நினைப்பது போல.
குப்பைத்தொட்டியை கிளறினால் என்ன வரும்!!! வேண்டாத வாடைதான் வரும். அதுபோலத் தான் நாம் தேவையற்றதை மனதில் கொண்டு அலைகின்றோம்.
பொருமி, விம்மி, அழுது, புலம்பி, தவியாய் தவித்து, மனம் கெட்டு, புத்தி கெட்டு, உடல்கெட்டு, நிம்மதி கெட்டு அலைவோம்.
கடவுளுக்கு உண்மை தெரியும். அவர் பார்த்து கொள்வார் என நினைத்துக் கொண்டு கடக்கத் தெரிய பழகணும். அவர்களை மன்னிக்கப் பழக வேண்டும்.
மன்னிப்பு எதிரிகளுக்காக அல்ல !!!
நம்ம வாழ்க்கையில நம்ம நிம்மதி, ஆனந்தமா, ஆரோக்கியமா வாழ்றதுக்காக மட்டுமே எனும் சுயநலமும் மறைந்து இருக்கிறது.
மன்னித்தல் உண்மையிலேயே
தெய்வ குணம் என்பது நமக்கு
நன்கு தெரியும்.
ஆனால், மன்னித்தல் தான் நமக்குவரமாட்டேன் என்கிறது.
நாம் எது செய்தாலும் மன்னிக்கப்பட வேண்டும் என நினைக்கின்றோம். இறைவனிடம் மன்றாடுகின்றோம்.
நான் இதுவரை செய்த தவறுகளுக்கும், பாவங்களும் மன்னிப்புத் வாருங்கள் இறைவா!! என பிரார்த்தனை செய்கின்றோம்.
நாம் செய்த தவறுகளையும், பாவங்களையும் இறைவன் மன்னிக்க வேண்டுமாயின், பிறரது தவறுகளை நாம் மன்னிக்க
பழக ஆரம்பிக்க வேண்டும்.
அதுதானே முடியலை என்கிறோம் என்றால் நமக்கான மன்னித்தலும் தள்ளிப்போகிக் கொண்டே தான் இருக்கும் என்பதே நிதர்சனம்.
நாம் மன்னிக்கப்பட வேண்டுமாயின், முதலில் மன்னிப்புவழங்க நாம் தயாராக இருக்க வேண்டும்.
மன்னிக்கத் தெரிந்த மனிதனின் இதயம் நிச்சயம் இறைவன் தங்கும் கோவில் தான்.
அறிவின் களங்கம் நீங்கும் இதயகோவில்.
அதில் இறைவன் நிச்சயம் அன்பும் கருணையோடு வெளிப்படுவார்.
மனவளக்கலையில்,தியான முடிவில்,
நமக்கு இன்னல் செய்வோர், எதிரிகளாக நினைப்போர் அனைவரும் மனம் திருந்தி
வாழ கருணையோடு வாழ்த்துவோம் என்று
அருட்தந்தை கூறுவார்!

No comments:
Post a Comment