Showing posts with label RAMAYAN. Show all posts
Showing posts with label RAMAYAN. Show all posts

Thursday, 2 July 2026

FROM AYODHYA TO LANKA


 

EXCELLENT INTERPRETATION OF RAMAYAN


 

WHO KILLED RAVAN...


 

RAM & RAVAN BOTH WORSHIPPED SHIVA


 

SHIVA OR VISHNU....


 

HANUMAN BEYOND THE RAMAYANA


 

VICTORY OF TRUTH


 

DATE OF EXILE OF SRI RAM


 

LIFE LESSONS FROM LORD RAMA


 

TIMELESS LESSONS FROM THE RAMAYANA


 

16 QUALITIES OF LORD RAMA


 

Sunday, 19 October 2025

இராமயணம்-மகாபாரதம் வித்தியாசங்கள்

 

*மண்ணால் போர் எனில் பாரதம்.*

*பெண்ணால் போர் எனில் ராமாயணம்.*

*சகுனி குழப்பினதால் பாரதம்.*

*கூனி குழப்பினதால் ராமாயணம்.*

*அனுமன் கொடிதனில் பறந்ததால் பாரதம்.*

*அனுமன் கடல்தாண்டி பறந்ததால் ராமாயணம்.*

*இறைவன் இப்புவி இறங்கி சாரதியானதால் பாரதம்.*

*இறைவன் இப்புவி இறங்கி சத்திரியனானதால் ராமாயணம்.*

*பகடையால் பகையெனில் பாரதம்.*

*பாவையால் பகையெனில் ராமாயணம்.*

*பிறர் மனைவியை அவமதித்ததால் பாரதம்.*

*பிறர் மனைவியை அபகரித்ததால் ராமாயணம்.*

*அவதாரம் புனிதனாய் வலம் வந்தது பாரதம்.*

*அவதாரம் மனிதனாய் வலம் வந்தது ராமாயணம்.*

*இறைவன் கீதை தந்ததால் பாரதம்.*

*இறைவன் சீதை பெற்றதால் ராமாயணம்.*

*நாயகியை தொட்டு சேலை இழுத்ததால் பாரதம்.*

*நாயகியை தொடாது சோலையில் வைத்ததால் ராமாயணம்.*

*ஐவருக்கு ஒருத்தியெனில் பாரதம்.*

*ஒருவருக்கு ஒருத்தியெனில் ராமாயணம்.*

*மறைந்திருந்து அம்பெய்து கற்றதால் பாரதம்.*

*மறைந்திருந்து அம்பெய்து கொன்றதால் ராமாயணம்.*

*வில்லால் அடித்த வீரனுக்கு விவாகமெனில் பாரதம்.*

*வில்லை ஒடித்த வீரனுக்கு விவாகமெனில் ராமாயணம்.*

*கற்புநெறிக்காக பெண் கண்ணை கட்டினதால் பாரதம்.*

*கற்புநெறிக்காக பெண் கனலில் இறங்கினதால் ராமாயணம்.*

*கதையில் குருடன் அரசன் எனில் பாரதம்.கதையை எழுதியது திருடன் எனில் ராமாயணம்.*

*அரக்கினால் ஆன அரண்மனை எரிந்ததால் பாரதம். அரக்கியின் மதி கோணலால் அரண்மனை எரிந்ததால் ராமாயணம்.*

*அரங்கனின் செய்கையால் அபலைக்கு அபயமெனில் பாரதம்.குரங்கனின் செய்தியால் அபலைக்கு அபயமெனில் ராமாயணம்.*

*மண்ணின் மயக்கத்தினால் பிளவெனில் பாரதம். மானின் மயக்கத்தினால் பிரிவெனில் ராமாயணம்.*

*உறவுக்குள் சண்டையெனில் பாரதம்.

உறவுக்காக சண்டையெனில் ராமாயணம்.*

Monday, 14 July 2025

அகரத்தில் ராமாயணம்

ஒரே எழுத்தில் ஆரம்பிக்கும் வார்த்தைகளைக் கொண்டு கதை எழுத முடியுமா?

அகரத்தில் ஓர் இராமாயணம்
இராமாயண கதை முழுதும்
'அ' என்று ஆரம்பிக்கும் வார்த்தைகளால் வடிவமைக்கப் பட்டுள்ளது.
" இதுவே தமிழின் சிறப்பு.."




அனந்தனே
அசுரர்களை
அழித்து,
அன்பர்களுக்கு
அருள
அயோத்தி
அரசனாக
அவதரித்தான்.
அப்போது
அரிக்கு
அரணாக
அரசனின்
அம்சமாக
அனுமனும்
அவதரித்ததாக
அறிகிறோம்.
அன்று
அஞ்சனை
அவனிக்கு
அளித்த
அன்பளிப்பு
அல்லவா
அனுமன்?
அவனே
அறிவழகன்,
அன்பழகன்,
அன்பர்களை
அரவணைத்து
அருளும்
அருட்செல்வன்!
அயோத்தி
அடலேறு,
அம்மிதிலை
அரசவையில்
அரசனின்
அரியவில்லை
அடக்கி,
அன்பும்
அடக்கமும்
அங்கங்களாக
அமைந்த
அழகியை
அடைந்தான் .
அரியணையில்
அமரும்
அருகதை
அண்ணனாகிய
அனந்தராமனுக்கே!
அப்படியிருக்க
அந்தோ !
அக்கைகேயி
அசூயையால்
அயோத்தி
அரசனுக்கும்
அடங்காமல்
அநியாயமாக
அவனை
அரண்யத்துக்கு
அனுப்பினாள்.
அங்கேயும்
அபாயம்!
அரக்கர்களின்
அரசன் ,
அன்னையின்
அழகால்
அறிவிழந்து
அபலையை
அபகரித்தான்
அங்கேயும்
அபாயம்!
அரக்கர்களின்
அரசன் ,
அன்னையின்
அழகால்
அறிவிழந்து
அபலையை
அபகரித்தான்
அந்த
அடியார்களில்
அருகதையுள்ள
அன்பனை
அரசனாக
அரியணையில்
அமர்த்தினர்.
அடுத்து
அன்னைக்காக
அவ்வானரர்
அனைவரும்
அவனியில்
அங்குமிங்கும்
அலைந்தனர்,
அலசினர்.
அனுமன்,
அலைகடலை
அலட்சியமாக
அடியெடுத்து
அளந்து
அக்கரையை
அடைந்தான்.
அசோகமரத்தின்
அடியில் ,
அரக்கிகள்
அயர்ந்திருக்க
அன்னையை
அடிபணிந்து
அண்ணலின்
அடையாளமாகிய
அக்கணையாழியை
அவளிடம்
அளித்தான்
அன்னை
அனுபவித்த
அளவற்ற
அவதிகள்
அநேகமாக
அணைந்தன.
அன்னையின்
அன்பையும்
அருளாசியையும்
அக்கணமே
அடைந்தான்
அனுமன்.
அடுத்து,
அரக்கர்களை
அலறடித்து ,
அவர்களின்
அரண்களை ,
அகந்தைகளை
அடியோடு
அக்கினியால்
அழித்த
அனுமனின்
அட்டகாசம் ,
அசாத்தியமான
அதிசாகசம்.
அனந்தராமன்
அலைகடலின்
அதிபதியை
அடக்கி ,
அதிசயமான
அணையை
அமைத்து,
அக்கரையை
அடைந்தான்.
அரக்கன்
அத்தசமுகனை
அமரில்
அயனின்
அஸ்திரத்தால்
அழித்தான்.
அக்கினியில்
அயராமல்
அர்பணித்த
அன்னை
அவள்
அதி
அற்புதமாய்
அண்ணலை
அடைந்தாள்.
அன்னையுடன்
அயோத்தியை
அடைந்து
அரியணையில்
அமர்ந்து
அருளினான்
அண்ணல் .
அனந்தராமனின்
அவதார
அருங்கதை
அகரத்திலேய
அடுக்கடுக்காக
அமைந்ததும்
அனுமனின்
அருளாலே.


இந்த அற்புத படைப்பின் எழுதியவர் யாரென்ற தெரியவில்லை. WhatsAppல் வந்ததை பதிவிட்டுள்ளேன். இந்த

அழகிய
அற்புத படைப்பினை
அளித்துள்ள
அறிஞர்
அவர்களுக்கு
அருட்பேராற்றல்
(அஞ்சு கரத்தான்,
அறுபடையானன் மற்றும்
அனுமன் 
அனைவரும்)
அனைத்து வளங்களையும்
அருள்வாராக!
வாழ்க வளமுடன்!
!



Monday, 29 January 2024

INTRIGUING PARALLELS BETWEEN RAMAYAN & MAHABHARAT

The Ramayana and Mahabharata, two of the greatest epics in Hindu mythology, share intriguing parallels and coincidences that captivate the imagination. Here's an engaging exploration of the connections between these ancient tales:

Exile and Quests:

  • Both epics feature protagonists who undergo exile. Rama, in the Ramayana, spends fourteen years in the forest, while the Pandavas in the Mahabharata endure a twelve-year exile. Both periods involve numerous adventures and challenges.
  1. Divine Weapons:Rama wields the powerful bow given by Lord Shiva, and Arjuna, a key character in the Mahabharata, possesses the divine Gandiva bow. Both bows play pivotal roles in significant events, symbolizing divine strength.
  2. Monkey and Ape Allies:Hanuman, the devoted ally of Rama, and the vanara (monkey) army draw parallels with the monkey troops allied with the Pandavas in the Mahabharata. Hanuman and Bhima, both possessing immense strength, share similarities in their heroic deeds.
  3. Guiding Companions:In the Ramayana, Jatayu, the noble eagle, supports Rama's quest. In a parallel narrative, the Mahabharata introduces Vidura, a wise counselor, providing sagacious guidance to the Kauravas.
  4. Loyalty and Brotherhood:The unwavering loyalty of Lakshmana towards Rama echoes the loyalty of Arjuna and Bhima towards their eldest brother, Yudhishthira, in the Mahabharata. Brotherhood is a central theme in both epics.
  5. Kidnapping of Women:Sita's abduction by Ravana in the Ramayana and the attempted disrobing of Draupadi in the Mahabharata both involve heinous acts against virtuous women, leading to significant consequences.
  6. Cunning Strategies:The Mahabharata's Kurukshetra War and the Ramayana's battles against Ravana showcase strategic warfare and the use of clever tactics. Arjuna's role in the Kurukshetra War is often likened to Rama's battle against Ravana.
  7. Divine Intervention:Both epics involve divine beings intervening in mortal affairs. Lord Krishna, a key figure in the Mahabharata, serves as a guide to the Pandavas, while Lord Rama receives guidance from sage Vishwamitra and Lord Hanuman.
  8. Episodes of Disguise:The Mahabharata has the episode of Arjuna disguising himself as Brihannala during the Pandavas' one-year incognito exile. Similarly, Lord Rama and Lakshmana disguise themselves during their time in the forest.
  9. Mysterious Weapons:The Ramayana mentions the Brahmastra, a divine weapon used by Rama, and the Mahabharata features various celestial weapons, including the Brahmastra wielded by Arjuna.

These intriguing coincidences and parallels between the Ramayana and Mahabharata not only add depth to the narratives but also reflect the timeless themes of righteousness, duty, loyalty, and the eternal struggle between good and evil in Hindu mythology. The interconnectedness of these epics serves as a testament to the rich tapestry of stories that form the cultural and spiritual heritage of India.

Thursday, 18 January 2024

கம்ப ராமாயண பாடல்

 

எண் அரும் நலத்தினாள்
    இனையள் நின்றுழி,
கண்ணொடு கண் இணை
    கவ்வி, ஒன்றை ஒன்று
உண்ணவும், நிலை பெறாது
    உணர்வும் ஒன்றிட,
அண்ணலும் நோக்கினான்!
    அவளும் நோக்கினாள்.

அழகின் எல்லை இது தான் என்று நினைப்பதற்கும் அரிய அழகுடைய சீதை, நின்ற பொழுது, ஒருவர் கண்களோடு, மற்றொருவர் கண்கள் கவர்ந்துப் பற்றிக் கொண்டு, ஒன்றை ஒன்று கவர்ந்து உண்ணவும்,இருவரது அறிவும், நிலைப் பெற்று இருக்காமல்  ஒன்றை ஒன்று கூடி ஒன்று படவும், ராமனும், சீதையைப் பார்த்தான்.சீதையும், ராமனைப் பார்த்தாள்.