Thursday 13 February 2014

இன்று (கேட்டு) ரசித்த பாடல் வரிகள் - 18

தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுலே
திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நெனப்புலே

வந்து வந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேத்தபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையம்மா உள்ளதே நானும் சொன்னே பொன்னம்மா சின்ன கண்ணே


எவரும் சொல்லாமலே பூக்களும் வாசம் வீசுது
உறவும் இல்லாமலே இரு மனம் எதோ பேசுது
எவரும் சொல்லாமலே குயிலெல்லாம் தேனா பாடுது
எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பா இனிக்குது

ஓடே நீர் ஓட இந்த உலகம் அது போல
ஓடம் அது ஓடும் இந்த காலம் அது போல
நிலைய இல்லாது நினைவில் வரும் நிறங்களே

ஈரம் விழுந்தாலே நிலத்துலே எல்லாம் துளிர்க்குது
நேசம் பிறந்தாலே உடம்பெல்லாம் ஏனோ சிலுற்குது
ஆழம் விழுதாக ஆசைகள் உஞ்சல் ஆடுது
அலையும் அலை போல அழகெல்லாம் கோலம் போடுது

குயிலே குயில் இனமே அதை இசையாய் கூவுதம்மா
கிளியே கிளி இனமே அதை கதையாய் பேசுதம்மா
கதையாய் விடுகதையாய் ஆவதில்லையே அன்பு தான்

வந்து வந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேத்தபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையிலே உள்ளது என்ன என்ன வண்ணங்கள் என்ன என்ன

திரைப்படம்: அவதாரம்
பாடலாசிரியர்: கவிஞர் வாலி
இசையமைப்பாளர்: இளையராஜா
பாடகர்கள்: இளையராஜா, எஸ்.ஜானகி

No comments:

Post a Comment