Thursday 1 January 2015

SMILE....230





சுஜாதா  டைரி -

புது வருஷத்துக்கு வந்த டைரிகளில் இருந்ததிலேயே பெரிசாக எடுத்துக் கொண்டு ஒண்ணாம் தேதியிலிருந்து எழுத ஆரம்பித்தேன்.
(அந்தரங்கம் – இந்த டைரியை என் அனுமதி இல்லாமல் யாரும் படிக்கக் கூடாது… மீறினால் போலீசார் வசம் ஒப்படைக்கப்படுவார்கள்.)

1-1-2003
இன்று புது வருஷம். இன்றிலிருந்து தினம் டைரி எழுதுவதாகத் தீர்மானித்தேன். அன்றாடம் கவனித்த சம்பவங்களையும், அவற்றைப் பற்றிய என் ஆத்ம விசாரங்களையும், படித்த சுவாரஸ்யமான விஷயங்களையும் ஒளிக்காமல், மறைக்காமல் அப்பட்டமாக எழுதுவது என்று தீர்மானித்தேன். இந்த டைரியை யாரும் படிக்கப் போவதில்லை என்பதால் எவ்விதத் தயக்கமும் இல்லாமல் எழுதுவது என்று தீர்மானித்தேன். பார்க்கலாம்.


2-1-2003
யாரும் படிக்கப் போவதில்லை என்றால், எதற்காக டைரி எழுத வேண்டும் என்ற கேள்வி இன்று எழுந்தது. யாராவது இன்றோ, என்றோ ஒரு நாள் படிக்கத்தானே போகிறார்கள். இல்லை, வருஷக் கடைசியில் இதைக் கிழித்துப் போட்டுவிடலாமா ? அது விரயம். என் ஒரு வாசகனுக்காகத் தான் இந்த டைரி என்றால், இதை எழுதுவானேன். எனவே மற்ற பேரும் படிக்கும்படியாக எழுதலாம் என்று தீர்மானித்தேன்.


3-1-2003
மற்ற பேர் படிக்கும்படியாக என்றால், எதற்கு அதை டைரியில் எழுத வேண்டும்? ‘கற்றதும் பெற்றதும்’ மில் அதைதானே செய்கிறேன் என்று யோசித்தேன், பார்க்கலாம்.


4-1-2003
இன்று மிமி லேசாக நொண்டியது. டாக்டரிடம் காண்பிக்க வேண்டும் என்று மனைவி சொன்னாள்.


5-1-2003
இன்று அடை டிபன்


6-1-2003
7-1-2003
இதன் பின் வெறும் பக்கங்கள்.

–சுஜாதா (கற்றதும் பெற்றதும் பாகம் 2)

No comments:

Post a Comment