Wednesday 9 December 2015

சென்னை மழை....4









கடவுளை அறிந்தவர்

    பல்லவி

    அவரே கடவுளை அறிந்தவராவர்
    அனைவரும் மதித்திடத் தகுந்தவராவர் (அவரே)

    அநுபல்லவி

    துன்பப் படுவோர் துயரம் சகியோர்
    துடிதுடித் தோடி துணைசெயப் புகுவார்
    இன்பம் தனக்கென எதையும் வேண்டார்
    யாவரும் சுகப்பட சேவைகள் பூண்டார் (அவரே)

    சரணங்கள்

    பசியால் வாடின எவரையும் பார்த்துப்
    பட்டினி தமக்கெனப் பரிதபித் தார்த்து
    விசையாய் முடிந்ததை விருப்புடன் கொடுப்பார்
    வீண்உபசாரம் விளம்புதல் விடுப்பார் (அவரே)

    நோயால் வருந்திடும் யாரையும் கண்டு
    நோன்பெனச் செய்வார் எல்லாத் தொண்டும்
    தாயாம் எனவே தம்சுகம் எதையும்
    தள்ளிவைத் தருகினில் தானிருந் துதவும். (அவரே)


நாமக்கல் கவிஞர்


சென்னையில் தொண்டாற்றிவரும் 
ஆயிரமாயிரம் கடவுள்கள் 
பாதம் தொட்டு 
வணங்குகின்றோம்.

No comments:

Post a Comment