ஓணம் பண்டிகை..லீவ் … outing , sadhya lunchனு கொண்டாடுற உங்க உலகம் வேற….
இன்னுக்கு Onamனு WhatsApp status ah பாத்து தெரிஞ்சுகிற்ற எங்க உலகம் வேற..
அரிசி விலை ஏறியாச்சு..
ஓணம் பண்டிகை..லீவ் … outing , sadhya lunchனு கொண்டாடுற உங்க உலகம் வேற….
இன்னுக்கு Onamனு WhatsApp status ah பாத்து தெரிஞ்சுகிற்ற எங்க உலகம் வேற..
அரிசி விலை ஏறியாச்சு..
ஒரு காலத்தில், அடர்ந்த காட்டின் நடுவே அமைதியான ஒரு சிறிய கிராமம் இருந்தது. அந்த கிராமத்தின் மையத்தில் ஒரு பெரிய தத்துவஞானி வாழ்ந்து வந்தார். அவரிடம் தன் வாழ்க்கையின் குழப்பங்களுக்குத் தீர்வு காணப் பலரும் வந்து செல்வார்கள்.
ஒரு நாள், அந்த ஊருக்குப் ஒரு இளைஞன் வந்தான். அவன் தன்னை மிகச்சிறந்த அறிவாளியாகவும், உலகம் பற்றிய எல்லா உண்மைகளையும் அறிந்தவனாகவும் நினைத்துக் கொண்டான்.
அவனுக்குத் தத்துவஞானியின் புகழைக் கேள்விப்பட்டு, அவரை விவாதத்தில் தோற்கடிக்க வேண்டும் என்ற ஆசை எழுந்தது.
அவன் தத்துவஞானியின் குடிலுக்குச் சென்று, அவரிடம் ஒரு கேள்வி கேட்டான்:
"ஐயா, மனிதர்கள் ஏன் எப்போதும் தாங்கள் அல்லாத வேறொருவராக இருக்க முயற்சிக்கிறார்கள்?
ஏன் எல்லாரும் ஒரு முகமூடியை மாட்டிக்கொண்டு வாழ்கிறார்கள்?"
தத்துவஞானி புன்னகைத்தார். அவர் உடனே ஒரு சிறிய கண்ணாடியை எடுத்து அந்த இளைஞனிடம் கொடுத்துவிட்டுச் சொன்னார்:
"தம்பி, இந்த அறையில் சற்று சுற்றி நடந்து வா, இந்தக் கண்ணாடியைப் பார்த்தபடியே செல்."
இளைஞன் வியப்புடன் கண்ணாடியை முன்னோக்கிப் பிடித்தபடியே அந்தக் குடில் முழுவதும் நடந்தான். சிறிது நேரம் கழித்துத் திரும்பி வந்தவன், எரிச்சலுடன் கூறினான்:
"என்ன இது விசித்திரமாக இருக்கிறது? கண்ணாடியைப் பார்த்துக் கொண்டே நடந்தால், என் காலடியில் இருக்கும் கூழாங்கற்கள் தெரியவில்லை; எதிரே வரும் பொருட்களும் என் கண்களில் படவில்லை. நான் தடுமாறி விழப் பார்த்தேன். இதனால் என்ன பயன்?"
தத்துவஞானி அமைதியாக அவனுக்கு ஒரு சூட்சுமத்தைக் கூறினார்:
"அதுதான் வாழ்க்கை, தம்பி! மனிதர்கள் எப்போதும் 'மற்றவர்கள் தன்னை எப்படிப் பார்க்கிறார்கள்' என்ற கண்ணாடியை மட்டுமே உற்று நோக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
அதாவது, சமூகத்தின் எதிர்பார்ப்புகள், மற்றவர்களின் கருத்துக்கள் என்ற கண்ணாடியிலேயே தன் வாழ்வைக் கழிப்பதால், தனது உண்மையான காலடிகள் எங்கே செல்கின்றன என்பதை அவர்கள் கவனிப்பதில்லை.
தன் சொந்தப் பாதையையும் மறந்து, தடுமாறி விழுகிறார்கள்."
இளைஞனுக்குப் புரிய ஆரம்பித்தது. தத்துவஞானி தொடர்ந்து சொன்னார்:
"உன் மீதான பிம்பத்தைப் பற்றியும், மற்றவர்கள் உன்னை பற்றி என்ன நினைப்பார்கள் என்பதைப் பற்றியும் கவலைப்படுவதை விட்டுவிட்டு, உன் நிஜக் கால்களைப் பார்;
உன் நெஞ்சின் குரலைக் கேள். அப்போதுதான் நீ விழாமல், உனக்கான சரியான பாதையில் பயணிக்க முடியும்."
இளைஞன் தான் தேடிய பதிலைப் பெற்று, தலைவணங்கி விடைபெற்றான்.
கதையின் தத்துவம்:
மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்ற பயமும், சமூகத்தின் பிம்பத்தைத் தாங்கும் முயற்சியும் நம்முடைய நிஜ வாழ்க்கையைத் தொலைத்துவிடச் செய்யும்.
வெளி உலகக் கண்ணாடியை விட, நம் மனசாட்சி என்ற கண்ணாடியைப் பார்ப்பதே ஞானம்
ஓர் இரவுக்குள் நாலு கோடி பாடல்களை எப்படிப் பாடுவது என்று அவைக்களப் புலவர்கள் திகைத்தனர். அப்போது அங்கே ஒளவையார் வந்தார்; புலவர்களின் கவலைக்கான காரணத்தைக் கேட்டு அறிந்தார். உடனே அவர் புலவர்களைப் பார்த்து, "இதற்காகவா திகைத்தீர்கள். கவலை வேண்டாம். இப்போதே நாலு கோடி பாடலைப் பாடுகிறேன்; மன்னனிடம் சென்று அதைப் பாடுங்கள்" என்று கூறிவிட்டு ஒரே ஒரு பாடலை மட்டும் பாடினார். ஒரு பாடல் எப்படி நாலு கோடி பாடலுக்கு இணையானது ஆகும்? வியப்பாக இருக்கிறதா? இதுதான் அந்த நாலு கோடி பாடல்...
"மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று
மிதியாமை கோடி பெறும்;
உண்ணீர் உண்ணீர் என்று உபசரியார் தம்மனையில்
உண்ணாமை கோடி பெறும்;
கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு
கூடுதல் கோடி பெறும்;
கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடைநாக்
கோடாமை கோடி பெறும்.
- ஒளவையார் தனிப் பாடல்:42
என்பதே அப்பாடல்.
இப்பாடலில் கோடி என்று ஒரு கோடி பொன் குறிப்பிடப் பட்டுள்ளது. இப்பாடலில் ஒவ்வொன்றும் ஒரு கோடி பொன்னுக்கு இணையானவை என்று நான்கு செயல்களை ஒளவையார் குறிப்பிட்டுள்ளார்....
(1) நல்ல பண்புகளை மதித்து நடக்காதவரை மதித்து அவரது வீட்டின் முன்பகுதியை மிதிக்காமல் இருப்பது, செல்லாமல் இருப்பது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும்.
(நம்மை மதிக்காதவரின் வீட்டுக்குச் செல்லாமல் இருப்பது கோடி பொன்னுக்கு இணையானது என்றும் பொருள் கூறுவார்கள்)
(2) உண்ணுமாறு விரும்பிக் கேட்டுக் கொள்ளாதவரின் வீட்டில் உண்ணாமல் இருப்பது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும்.
(ஒரு உண்மையான அன்னதானத்தின் மதிப்பே உபசரிப்பில் தான் உள்ளது)
(3) கோடி பொன்னைக் கொடுத்தாவது நல்ல குடும்பத்தில் பிறந்தவர்களுடன் சேர்ந்து வாழ்வது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும்.
(4) பலகோடி பொன் கிடைப்பதாக இருந்தாலும் சொன்ன சொல்லிலிருந்து தவறாமல் வாழ்வது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும்.
இப்பாடலில் முதல் இரண்டு கருத்துகளையும் எதிர்மறைப் பொருளில் பாடிய ஒளவையார் இறுதி இரண்டு கருத்துகளையும் உடன்பாட்டுப் பொருளில் பாடியுள்ளார்.
"அனுபவம் "...
அனுபவம் இல்லாதவர் வர கூடாதா என்பது இல்லை... என் கருத்து உங்களை தெரிந்து கொள்ளுங்கள்...
அதற்கு ஒரு சிறு கதை...
ஒரு கிராமத்தில் யார் அறிவாளி என்று ஒரு போட்டி!
இளைய தலைமுறை தான் அறிவாளிகள் என்று இளைஞர்கள் சொல்ல!
வயதில் பெரியவர்கள் தான் என்று பெரியவர்கள் சொல்ல!
சரி யார் அறிவாளிகள் என்று பார்க்க ஒரு இளைஞர், ஒரு முதியவர் தேர்ந்தெடுக்கப்பட்டு இருவருக்கும் ஒரு செடியை கொடுத்து ஒரு மாதம் டைம் கொடுத்து யார் இந்த செடியை நன்றாக வளர்க்கிறார்கள் என்று பார்க்கலாம் என்றார்கள்!
இளைஞன் செடியை நல்ல இடமாக தோண்டி நட்டு வைத்து தினமும் நீரும் உரமும் தெளித்து நன்றாக வளர்த்தான்!
ஆனால் பெரியவர் நட்டு வைத்ததோடு சரி! தண்ணீரும் ஊற்ற வில்லை உரமும் போட வில்லை!
ஒரு மாதம் ஓடியது இளைஞன் வைத்த செடி நன்றாக வளர்ந்து இருந்தது.
பெரியவர் வைத்த செடி சிறியதாக வளர்ந்து இருந்தது.
ஒருநாள் இரவு திடீர் என்று பெரிய காற்றுடன் மழை !
இளைஞன் வைத்த செடி காற்றில் ஒடிந்து மழையில்
அடித்து செல்லப்பட்டது!
ஆனால் பெரியவர் வைத்த செடி அப்படியே மழை புயல் தாங்கி நின்றது!
மறு நாள் காலை இளைஞன் பெரியவர் கிட்ட "இது எப்படி சாத்தியம்!
நான் தினம் நீர் ஊற்றி உரம் போட்டு நன்றாக வளர்ந்து இருந்த செடி ஒடிந்து மழையில் அடித்துச் செல்லப்பட்டது!
நீங்கள் தண்ணீர் கூட ஊற்ற வில்லை ஆனால் செடி எப்படி புயல் மழையை தாங்கி நிற்கிறது" என்று கேட்க !
அதற்கு அவர் சொன்னார் !
"நீ எல்லாத்தையும் அதற்கு கொடுத்ததால், அது சுகமாக வேர் விடாமல் அப்படியே இருந்து விட்டது.
நான் வைத்த செடி நான் நீர் ஊற்றாததால் உயிர் வாழ நிலத்தில் வேர் ஊன்றி நன்கு வளர்ந்து விட்டது!
இன்றைய இளைஞர்கள் வாழ்க்கையும் அப்படித்தான்" என்றார்.
பெரியவர்கள் அனுபவத்தில் நமக்கு ஏதாவது ஒரு விஷயம் பற்றி எடுத்து சொன்னாலோ, கொஞ்சம் கஷ்டமான காரியம் செய்ய வைத்தாலோ "இந்த கிழத்துக்கு வேற வேலையில்லை சும்மா படுத்திக்கிட்டு இருக்குன்னு " சொல்லும் இளசுகள் தான் இப்போது அதிகம் இருக்கிறார்கள்.
புரிந்து கொள்ளுங்கள் உருக்கினால் தான் தங்கம் கூட தூய்மையான சொக்கத்தங்கம் ஆகும்...!
உளி தாங்கும் கற்கள் தான் சிலையாகும்...!!!
அரசியலில் நிலைத்து நிற்க என்ன வேண்டுமோ செய்யுங்கள்...
கிருபானந்த வாரியார் திருமணம் ஒன்றிற்குத் தலைமை தாங்கச் சென்றிருந்தார். அங்கே நடிகவேள் எம்.ஆர்.ராதாவும் வந்திருந்தார்.
🌹இருவரும் சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருக்க திருமண பேச்சுக்கு இடையே நடிகவேள் தனது வழக்கமான கிண்டலுடன், "சாமி. முருகனுக்கு ஆறு தலைன்றானுங்கோ, ராத்திரி தூங்கும் போது எப்படி ஒரு பக்கமா படுப்பாரு.?
🌹கூடி இருந்தவர்கள் அனைவரும் சிரிக்க.. வாரியாருடன் வந்தவர்கள் தர்மசங்கடத்துடன் நெளிந்தார்கள்.
🌹வாரியார் புன்சிரிப்புடன், திருமண ஏற்பாடுகளை பார்த்துக் கொண்டு இருந்த மணமக்களின் தந்தையரை அழைத்து அவர்களிடம் கேட்டார், “நேத்து தூங்கினீங்களா?”
🌹அவர்கள்களா "இன்னைக்குக் கல்யாணத்தை வச்சுக்கிட்டு எங்க சாமி தூங்கறது” என்றார்கள்.
🌹வாரியார், நடிகவேளைப் பார்த்துச் சொன்னார்.
🌹ஒரு குழந்தையின் வாழ்க்கையை நடத்தி வைக்க நினைச்ச இவங்களுக்கேத் தூக்கம் வரவில்லை...
🌹உலக மக்கள் அனைவரும் எம்பெருமானோட குழந்தைகள். அவருக்கு எப்படி தூக்கம் வரும்? அவருக்குத் தூங்கறதுக்கு நேரம் ஏது?" என்றார்.
🌹நடிகவேள் "அது வாஸ்தவம் தான். இப்ப எல்லா பெண்ணைப் பெற்றோர்களின் நிலையும் அப்படித்தான் இருக்கு" என்று அமைதியானார்.
A life remembered for its values, not its valuables.
Dr. A.P.J. Abdul Kalam proved that true greatness isn't measured by possessions but by purpose. Despite reaching the highest office in the country, he chose a life of simplicity, leaving behind books, ideas, and a vision that continues to inspire millions.
His real wealth was his wisdom.
His true success was the lives he touched.
His greatest gift was hope.
The richest people aren't always those with the most money-they're the ones who leave the biggest impact.
❤️Great souls leave behind inspiration, not possessions.
What kind of legacy would you like to leave behind