Showing posts with label உலகம். Show all posts
Showing posts with label உலகம். Show all posts
Saturday, 15 November 2025
Sunday, 14 December 2014
Saturday, 22 November 2014
உலகம் .....1
உலகக் குடும்பம்
நாம் எல்லோரும் உலகம் என்ற மண் மீது வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நமக்கிருப்பது ஒரே சூரியன் தான். நமக்கு ஏற்படும் நீர் தேவைகளை முடிப்பதற்கு
இருப்பது ஒரே கடல் தான். நாம் எல்லோரும் மூச்சு விடுவதற்கு உள்ள காற்றும்
ஒன்றுதான். இவ்வற்றில் ஒன்றைக்கூட நம்மில் எவருமே உற்பத்தி செய்தது இல்லை.
நமது முன்னோர்களும் செய்ததில்லை.
எல்லாம்
வல்லதாகிய இறைநிலை என்னும் இயற்கையானது தனது பூரணம், பேராற்றல், பேரறிவு
என்ற மூலதனத்தைக் கொண்டும் அதன் பரிணாமம், இயல்பூக்கம், கூர்தலறம் என்ற
இயக்கநியதிகளைக்கொண்டு, வான் மண்டலத்தையும், உலகையும் உருவாக்கி வாழ
வைத்திருக்கிறது. நமக்கு அன்னையாகவும், தந்தையாகவும் உள்ள அருட் பேராற்றலான
இயற்கை நாம் அனைவரும் நலமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ எல்லா வளங்களையும்
நிறைவாக அமைத்துக் கொடுத்திருக்கிறது. என்பது சந்தேகமில்லாமல் தெரிகின்றது
அல்லவா?
நமது
சிந்தனையை உயர்த்தி இவற்றையெல்லாம் நாம் உணரும் போது நாம் அனைவரும் ஒரே
குடும்பத்தைச் சேர்ந்த உடன் பிறந்தவர்கள் என்பது சந்தேகமில்லாமல்
தெரிகின்றது அல்லவா?
Subscribe to:
Posts (Atom)




